பாரதத்தை வல்லரசாக்க பாடுபட்டவர் வாஜ்பாய்: பொன். ராதாகிருஷ்ணன் இரங்கல்

atal bihari vajpayee - 2026

பாரதத்தின் முன்னாள் பிரதமர் வாஜ்பாய் மறைவுக்கு மத்திய நிதி மற்றும் கப்பல்துறை இணையமைச்சர் பொன். இராதாகிருஷ்ணன் இரங்கல் தெரிவித்துள்ளார்.

அதில், தான் பிறந்த நாட்டிக்காகவும், மண்ணிற்காகவும் தன் வாழ்வை முழுமையாக அர்ப்பணித்த மாபெரும் தலைவர் முன்னாள் பிரதமர் பாரத ரத்னா திரு. அடல் பிகாரி வாஜ்பாய் அவர்கள். தனது 93ஆம் வயதில் இறைவனடி சேர்ந்துள்ளார். அவர் ஆன்மா நற்கதி அடைய அன்னை சக்தியை பிரார்த்திக்கிறேன்.

முன்னாள் பிரதமர் வாஜ்பாய் அவர்கள் ஒரு சாதாரண நடுத்தரக் குடும்பத்தில் பிறந்தவர். தனது வாழ்வை நாட்டு மக்களுக்காக அர்ப்பணிக்கும் சிந்தனையில் தனது 1939 ஆம் ஆண்டு ஆர்.எஸ்.எஸ்.,  அமைப்பில் பணியைத் துவங்கினார். ஜன சங்கம் ஆரம்பித்த காலத்தில் அதில் பணிபுரிய ஆரம்பித்து 1977ஆம் ஆண்டுகளில் பாராளுமன்ற உறுப்பினர் ஆகவும், இந்திய வெளியுறவுத்துறை அமைச்சராக பிரதமர் மொரார்ஜி தேசாய் அவர்களின் ஆட்சி காலத்தில் திறம்பட பணியாற்றினார்.

1974 – 76 களில் கச்சத்தீவு இலங்கைக்கு கொடுக்கப்பட்ட போது அதை எதிர்த்து பாராளுமன்றத்தில் தமிழர்களின் உரிமைக்காக போராடினார். 1998ல் இந்திய பிரதமராக ஆன 60வது நாட்களுக்குள்ளாக மே மாதம் 11ஆம் தேதி 1998ஆம் ஆண்டு பொக்ரானில் முதல் அணு குண்டு சோதனையை வெற்றிகரமாக நடத்திக் காட்டினார். அமெரிக்கா உள்ளிட்ட வல்லரசு நாடுகள் இந்தியாவிற்கு எதிராக திரும்பிய போதும் இந்தியா எந்த நாட்டிற்கும் அடி பணியாது என்று பறைசாற்றும் விதமாக மே 13ஆம் தேதியே அடுத்த அணுகுண்டு சோதனையையும் இந்தியா வெற்றிகரமாக நடத்திக் காட்டியது.

ALSO READ:  பழங்குடியினர் சலுகைகள் - யாருக்கு?

பாகிஸ்தானுடன் நல்லுறவை பேணும் விதமாக டெல்லி, லாகூர் இடையே பேருந்து போக்குவரத்து துவக்கியதுடன் அதில் தானே பயணம் செய்து பாகிஸ்தான் சென்று இரு நாடுகளுக்கிடையே நல்லுறவை ஏற்படுத்த முயற்சி மேற்கொண்டார். ஆனால், அவரது முயற்சி தோல்வியடைந்தது.

பாகிஸ்தான் கார்கில் பகுதியில் ஊடுருவ முயற்சித்த போது அப்போது பிரதமராக இருந்த வாஜ்பாய் அவர்களின் சிறந்த ஆளுமையின் பேரில் நமது ராணுவ வீரர்கள் மூலம் அதனை திறம்பட எதிர்கொண்டு வெற்றி பெற்று நாட்டுக்கு பெருமை சேர்த்தார்.

இந்திய நாட்டை தரை, கடல், ஆகாய வழியாக போக்குவரத்தினை இணைப்பதற்கு முதல் வித்திட்டவர் திரு. அடல் பிகாரி வாஜ்பாய் அவர்கள். இவரது ஆட்சிக் காலத்தில் தான் தங்க நாற்கர சாலைகள் மூலம் நாடு இணைக்கப்பட்டது. முதல் முறையாக இந்தியாவில் ஓடும் பெரிய நதிகளை இணைக்கும் திட்டத்திற்கு முழு முயற்சியும் எடுத்தவர் என்ற பெருமை வாஜ்பாய் அவர்களையே சாரும்.

இந்தியா வல்லரசாக இப்படி பல எண்ணற்ற வளர்ச்சி திட்டங்களை செயல்படுத்துவதில் முன்னோடியாக திகழ்ந்தார். இப்படி பட்ட மாபெரும் ஒரு தேச தலைவரை இந்த நாடு இன்று (16/08/2018) இழந்துள்ளது.

ALSO READ:  மதுரை சித்திரை திருவிழா தேரோட்டம் கோலாகலம்:

வாஜ்பாய் அவர்கள் காட்டிய வழியில் நடந்து இந்த தேசத்தை உலகில் முதல்நிலை நாடாக மாற்ற நாம் அனைவரும் சேர்ந்து பணியாற்றுவதே அவருக்கு நாம் செய்யும் உண்மையான அஞ்சலியாக இருக்கும் என்று நான் கருதுகிறேன்… என்று கூறியுள்ளார்.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

பஞ்சாங்கம் – ஜூன் 3 – புதன் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், ராசிபலன்கள், ஜோதிடம், பொன்மொழிகள், திருக்குறள்,

தாமிரபரணிக் கரை ஆலயத்தில்… வழிபாட்டில் திருவள்ளுவர்!

தெய்வத் தமிழ் வளர்த்த நம் நெல்லையம்பதியில் தாமிரபரணிக் கரை சிவாலயம் ஒன்று திருவள்ளுவரை தெய்வத்தின் வரிசையில் தன்னுள் தாங்கியுள்ளது...

சோழவந்தான் ஜெனகை மாரியம்மன் வைகாசி தேரோட்டம் கோலாகலம்!

ஜெனகை மாரியம்மன் கோவில் அர்ச்சகர் சண்முகவேல் தலைமையில் அர்ச்சகர்கள் பூஜைகள் செய்தனர் வழிநெடுகிலும் பொதுமக்கள் தேங்காய் உடைத்து ஜெனகை மாரியம்மனுக்கு நேர்த்திக்கடன் செலுத்தினர்

பஞ்சாங்கம் ஜூன் 2 – செவ்வாய் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம் தகவல்கள், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய ராசி பலன்கள், திருக்குறள், சிந்தனைகள்...

அண்ணாமலையில் அரசியல் பயணம் இனி…!

அண்ணாமலை தனிக்கட்சியா என்ற கேள்வி தான் உள்ளூர் மீடியா முதல் நேஷனல் மீடியா வரை விவாதிக்கப்படுகிறது. அண்ணாமலை தனிக்கட்சி ஆரம்பிக்கப்போகிறார் என்று வதந்தி கிளம்புவது இது ஒன்றும் முதல் முறை கிடையாது.

Topics

பஞ்சாங்கம் – ஜூன் 3 – புதன் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், ராசிபலன்கள், ஜோதிடம், பொன்மொழிகள், திருக்குறள்,

தாமிரபரணிக் கரை ஆலயத்தில்… வழிபாட்டில் திருவள்ளுவர்!

தெய்வத் தமிழ் வளர்த்த நம் நெல்லையம்பதியில் தாமிரபரணிக் கரை சிவாலயம் ஒன்று திருவள்ளுவரை தெய்வத்தின் வரிசையில் தன்னுள் தாங்கியுள்ளது...

சோழவந்தான் ஜெனகை மாரியம்மன் வைகாசி தேரோட்டம் கோலாகலம்!

ஜெனகை மாரியம்மன் கோவில் அர்ச்சகர் சண்முகவேல் தலைமையில் அர்ச்சகர்கள் பூஜைகள் செய்தனர் வழிநெடுகிலும் பொதுமக்கள் தேங்காய் உடைத்து ஜெனகை மாரியம்மனுக்கு நேர்த்திக்கடன் செலுத்தினர்

பஞ்சாங்கம் ஜூன் 2 – செவ்வாய் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம் தகவல்கள், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய ராசி பலன்கள், திருக்குறள், சிந்தனைகள்...

அண்ணாமலையில் அரசியல் பயணம் இனி…!

அண்ணாமலை தனிக்கட்சியா என்ற கேள்வி தான் உள்ளூர் மீடியா முதல் நேஷனல் மீடியா வரை விவாதிக்கப்படுகிறது. அண்ணாமலை தனிக்கட்சி ஆரம்பிக்கப்போகிறார் என்று வதந்தி கிளம்புவது இது ஒன்றும் முதல் முறை கிடையாது.

பழங்குடியினர் சலுகைகள் – யாருக்கு?

பழங்குடியினரின் இந்த உணர்வுபூர்வமான கோரிக்கை கடந்த 60 ஆண்டுகளுக்கும் மேலாக கவனிக்கப்படாமல் உள்ளது. இப்போது ஜார்கண்ட் எனப்படும் பகுதியில் இருந்து 1960 இல் கார்த்திக் ஓரான் என்ற பழங்குடியின நாடாளுமன்ற உறுப்பினர் காங்கிரஸ் கட்சி சார்பில் தேர்ந்தெடுக்கப்பட்டார். அவர்தான் மதம் மாறியவர்களுக்கு சலுகை கூடாது என்ற விஷயத்தை முதன் முதலில் எழுப்பினார்.

வங்கத் தீர்ப்பு: இந்திய அரசியலில் நிலநடுக்கம்!

நேற்று எனக்கு ஒரு தகவல் கூறப்பட்டது. 'இண்டி' கூட்டணியில் உள்ள எந்தக் கட்சித் தலைவர்களும் மம்தா பானர்ஜியின் தொலைபேசி அழைப்புகளை எடுக்கவில்லை என்று கூறப்பட்டது. சில மாதங்களுக்கு முன்பு இதை நினைத்துக்கூட பார்க்க முடியாது. ஆனால் அது இனி வெளிப்படவிருக்கும் நிகழ்வுகளுக்கான ஒரு முன்னோட்டம் மட்டுமே.

முப்பெரும் ஊழல்களில் முதற் பெரும் ஊழல் துறை!

அற நிலையத்துறையைப் போன்ற சட்ட விரோதமான, சாசன விரோதமான, சமூக விரோதமான, சனாதன விரோதமான ஒரு அமைப்பு இந்த உலகில் எங்குமே இருக்கமுடியாது. உலகிலேயே சனாதன வாழ்வியல் ஆதி காலம் தொட்டு உன்னத நிலையில் இருந்துவந்த தமிழகத்தில்தான் இந்த நிலைமை என்பது மிகப் பெரிய, மிக வேதனையான நகைமுரண் தான்.

Entertainment News

Popular Categories