December 5, 2025, 8:36 PM
26.7 C
Chennai

முல்லைப் பெரியாறு அணையின் நீர்மட்டத்தை 139 அடியாக குறைக்க கேரள அரசு உச்சநீதிமன்றத்தில் முறையீடு

04 Oct18 Mullaperiyar dam - 2025

முல்லைப் பெரியாறு அணையை கண்காணிக்க தமிழக அரசு சார்பில் 10 பேர் கொண்ட துணைக்குழு அமைக்கப்பட்டுள்ளதாக தமிழக அரசிதழில் வெளியிடப்பட்டுள்ளது.

முல்லைப் பெரியாறு அணையின் முழு கொள்ளளவான 142 அடியை எட்டிய போது, பாதுகாப்பு கருதி நீர்மட்டத்தை 139 அடியாக குறைத்து தேக்கி வைக்குமாறு கேரள அரசு முறையிட்டது. இதனையடுத்து, அணையில் தேக்கி வைக்க வேண்டிய நீரின் அளவை முடிவு செய்யுமாறு பேரிடர் மேலாண்மை துறையின் துணைக் குழுவுக்கு உச்சநீதிமன்றம் உத்தரவிட்டது. இதுதொடர்பாக தமிழ்நாடு வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மைத்துறை வெளியிட்டுள்ள செய்தியில், முல்லைப் பெரியாறு அணையை கண்காணிக்க தமிழக அரசு சார்பில் 10 பேர் கொண்ட துணைக்குழு ஒன்று அமைக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த துணைக்குழுவினர், அணையின் நீர்மட்டம், நீர்வரத்து, அணை பாதுகாப்பு உள்ளிட்ட செயல்பாடுகளை தொடர்ந்து கண்காணிக்கும் என்றும் இக்குழுவின் தலைவராக பொதுப்பணித்துறையின், முதன்மை செயலாளரும், துணைத் தலைவராக தேனி மாவட்ட ஆட்சியர் இருப்பார்கள் என்றும் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.
மேலும், குழுவின் உறுப்பினர்களாக தேனி மாவட்ட வருவாய் அதிகாரி, நீர்வளத்துறை மதுரை மண்டல தலைமை பொறியாளர், காவல் கண்காணிப்பாளர், தலைமை வனத்துறை அதிகாரிகள் உள்ளிட்ட பலர் இருப்பார்கள் என உத்தரவில் கூறப்பட்டுள்ளது. வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மைத் துறையின் இந்த உத்தரவு தமிழக அரசிதழில் வெளியிடப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

பஞ்சாங்கம் டிச.05 – வெள்ளி | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய பலன்கள், திருக்குறள், நற்சிந்தனை

ராஜபாளையம் அய்யனார்கோயில் ஆற்றில் நீர்வரத்து அதிகரிப்பு; சிக்கிய பக்தர்கள் மீட்பு!

ராஜபாளையம் மேற்கு தொடர்ச்சி மலைப் பகுதியில் வியாழக்கிழமை பெய்த திடிர் மழை...

மீண்டும் இன்று… பரன்குன்று மலை உச்சி தீபத் தூணில் தீபம் ஏற்ற உத்தரவு!

திருப்பரங்குன்றத்தில் 144 தடை உத்தரவு ரத்து செய்யப்பட்டதுடன், உடனடியாக மலை உச்சியில் தீபத்தூணில் தீபம் ஏற்ற நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு பிறப்பித்திருக்கிறார்.

திருப்பரங்குன்றம் விவகாரத்தில் திமுக., அரசின் மேல்முறையீட்டு மனு தள்ளுபடி!

திருப்பரங்குன்றம் வழக்கு விவகாரத்தில் தமிழக அரசின் மேல்முறையீட்டு மனு தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது.

சட்டத்தை மதிக்காத தமிழக அரசு, அதிகாரிகள்; இந்து விரோத இந்து சமய அறநிலையத் துறை; திமுக.,!

நீதிமன்றத் தீர்ப்புக்கு எதிராக, இந்துக்களுக்கு எதிராக 144 தடை உத்தரவு பிறப்பித்து, அடக்குமுறையை கையாண்டு கலவரத்தை தூண்டியது காவல்துறை.

Topics

பஞ்சாங்கம் டிச.05 – வெள்ளி | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய பலன்கள், திருக்குறள், நற்சிந்தனை

ராஜபாளையம் அய்யனார்கோயில் ஆற்றில் நீர்வரத்து அதிகரிப்பு; சிக்கிய பக்தர்கள் மீட்பு!

ராஜபாளையம் மேற்கு தொடர்ச்சி மலைப் பகுதியில் வியாழக்கிழமை பெய்த திடிர் மழை...

மீண்டும் இன்று… பரன்குன்று மலை உச்சி தீபத் தூணில் தீபம் ஏற்ற உத்தரவு!

திருப்பரங்குன்றத்தில் 144 தடை உத்தரவு ரத்து செய்யப்பட்டதுடன், உடனடியாக மலை உச்சியில் தீபத்தூணில் தீபம் ஏற்ற நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு பிறப்பித்திருக்கிறார்.

திருப்பரங்குன்றம் விவகாரத்தில் திமுக., அரசின் மேல்முறையீட்டு மனு தள்ளுபடி!

திருப்பரங்குன்றம் வழக்கு விவகாரத்தில் தமிழக அரசின் மேல்முறையீட்டு மனு தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது.

சட்டத்தை மதிக்காத தமிழக அரசு, அதிகாரிகள்; இந்து விரோத இந்து சமய அறநிலையத் துறை; திமுக.,!

நீதிமன்றத் தீர்ப்புக்கு எதிராக, இந்துக்களுக்கு எதிராக 144 தடை உத்தரவு பிறப்பித்து, அடக்குமுறையை கையாண்டு கலவரத்தை தூண்டியது காவல்துறை.

பஞ்சாங்கம் டிச.04 – வியாழன்| இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரண்டு ராசிகளுக்கும் உள்ள இன்றைய ராசிபலன்கள், திருக்குறள், சிந்தனைகள்....

ராஜபாளையம்-கொலை வழக்கில் கைதான இருவர் குண்டர் சட்டத்தில் கைது…

ராஜபாளையம் அருகில் தேவதானம் நச்சாடை தவிர்த்தருளிய சுவாமி கோயில் காவலர்கள் இருவர்...

நீதிமன்றத் தீர்ப்பை அவமதித்த திமுக., அரசு! திருப்பரங்குன்றத்தில் பக்தர்கள் கொந்தளிப்பு!

சென்னை உயர் நீதிமன்ற மதுரை கிளை உத்தரவிட்டும் திருப்பரங்குன்றம் மலை மேலுள்ள...

Entertainment News

Popular Categories