புது தில்லி:
புது தில்லியில் எல்லைப் பாதுகாப்புப் படைக்குச் சொந்தமான விமானம் ஒன்று விழுந்து நொறுங்கி விபத்து ஏற்பட்டது. இதில் 10 பேர் பலியாயினர். சம்பவ இடத்துக்கு உள்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் விரைந்தார். விமானத்திலிருந்த 10 பேரும் பலியானதை விமான போக்குவரத்து துறை அமைச்சர் மகேஷ் சர்மா உறுதி செய்துள்ளார்.
இந்த விபத்து குறித்து தனது இரங்கலை மோடி தெரிவித்துள்ளார்.
விமான விபத்து குறித்து பிரதமர் நரேந்திர மோடி தனது ட்விட்டர் பக்கத்தில், “தில்லியில் எல்லை பாதுகாப்புப் படை விமானம் விழுந்து நொறுங்கி விபத்துக்குள்ளானதில் பலியானவர்களுக்காக வருந்துகிறேன். உயிரிழந்தவர்களின் குடும்பத்தாருக்கு எனது ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துக் கொள்கிறேன்” எனக் குறிப்பிட்டுள்ளார்.
Pained by the loss of lives in the BSF plane crash in Delhi. My thoughts are with the families of the deceased.
— Narendra Modi (@narendramodi) December 22, 2015


