தில்லி விமான விபத்து; மோடி இரங்கல்

Published:

புது தில்லி:
புது தில்லியில் எல்லைப் பாதுகாப்புப் படைக்குச் சொந்தமான விமானம் ஒன்று விழுந்து நொறுங்கி விபத்து ஏற்பட்டது. இதில் 10 பேர் பலியாயினர். சம்பவ இடத்துக்கு உள்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் விரைந்தார். விமானத்திலிருந்த 10 பேரும் பலியானதை விமான போக்குவரத்து துறை அமைச்சர் மகேஷ் சர்மா உறுதி செய்துள்ளார்.
இந்த விபத்து குறித்து தனது இரங்கலை மோடி தெரிவித்துள்ளார்.
விமான விபத்து குறித்து பிரதமர் நரேந்திர மோடி தனது ட்விட்டர் பக்கத்தில், “தில்லியில் எல்லை பாதுகாப்புப் படை விமானம் விழுந்து நொறுங்கி விபத்துக்குள்ளானதில் பலியானவர்களுக்காக வருந்துகிறேன். உயிரிழந்தவர்களின் குடும்பத்தாருக்கு எனது ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துக் கொள்கிறேன்” எனக் குறிப்பிட்டுள்ளார்.

 

ALSO READ:  தென்காசி வழியே ஓணம் சிறப்பு ரயில்கள் தேவை!
செங்கோட்டை ஸ்ரீராம்
செங்கோட்டை ஸ்ரீராம்https://www.dhinasari.com
பத்திரிகையாளர், எழுத்தாளர். | தமிழ் தினசரி இணைய நிறுவுனர், ஆசிரியர் |விஜயபாரதம் இதழில் உதவி ஆசிரியர், மஞ்சரி டைஜஸ்ட், விகடன் பிரசுரம், சக்தி விகடன், கல்கியின் தீபம் இதழ்களில் பொறுப்பாசிரியராகப் பணி புரிந்தவர். |தினமணி இணையம் (dinamani.com), Asianet News Tamil ஆகியவற்றில் செய்தி ஆசிரியராக பணியாற்றியவர். |சென்னை அகில இந்திய வானொலிக்காக, தேசியத் தலைவர்கள், சுதந்திரப் போராட்ட வீரர்கள், காஞ்சி மகா பெரியவர் தொடர்பான பல்வேறு செய்திக் கட்டுரைகளை எழுதியுள்ளார். |* வானொலி ஆர்.ஜே., பொதிகை தொலைக்காட்சியில் செய்தி அலசல் நேரலை நிகழ்ச்சி என ஊடகத் துறையின் பல்வேறு தளங்களிலும் பணியாற்றியவர். |விகடன் பிரசுரத்தின் மூலம் இவரது ஆறு நூல்கள் வெளியாகியுள்ளன. |இவரது இதழியல் பணிக்காக, கோல்கத்தா பாரதிய பாஷா பரிஷத் அமைப்பு ‘யுவ புரஸ்கார்-08 தேசிய இலக்கிய விருது’ வழங்கியுள்ளது. |

Related articles

Recent articles

spot_img