சபரிமலை கேரள அரசுக்கோ அதிகாரிகளுக்கோ உரியதல்ல… பக்தர்களுக்கு உரியது!: தடுத்த எஸ்.பி.யிடம் பதிலடி கொடுத்த பொன்.ராதாகிருஷ்ணன்

ponnar sp yatheesh - 2026பத்தனம்திட்ட: மத்திய இணை அமைச்சர் பொன் ராதாகிருஷ்ணன் சபரிமலை செல்லும் வழியில் நிலக்கல்லில் போலீசாரால் தடுத்து நிறுத்தப்பட்டார்/ அப்போது பத்தனம்திட்ட பகுதி எஸ்பி யதீஸ் சந்திராவிடம் அவர் வாக்குவாதத்தில் ஈடுபட்டார். பதிலுக்கு பதில் அவர் தெரிவித்த கருத்துகளும் கேள்விகளும் கூடியிருந்த பக்தர்களுக்கு உற்சாகமூட்டியது!

நிலக்கல்லில் இருந்து பம்பை நோக்கி சொந்த வாகனத்தில் சென்ற பொன் ராதாகிருஷ்ணன் மற்றும் அவருடன் வந்தவர்களின் வாகனங்கள் எஸ்பி யதீஷ் சந்திராவினால் தடுத்து நிறுத்தப் பட்டது. அப்போது அவர் தனியார் வாகனங்களை பம்பையில் அனுமதித்தால் அங்கே போக்குவரத்து நெரிசலும் தடையும் ஏற்படும் என்று தெரிவித்தார். அதனால் தனியார் வாகனங்களை அனுமதிக்க முடியாது என்றார் நீங்களும் உங்கள் உடன் வந்தவர்களும் பம்பா செல்லும்போது போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டால் என்ன செய்வது என்று அவர் மத்திய அமைச்சரிடம் கேள்வி எழுப்பினார்.

அதற்கு பதிலளித்த பொன் ராதாகிருஷ்ணன் இந்தக் கேள்வியை என்னிடம் ஏன் கேட்கிறீர்கள் இந்த கேள்விக்கு நான் என்ன பதில் சொல்ல முடியாது. இது உங்களுடைய அரசிடம் கேட்க வேண்டிய கேள்வி என்று பதிலளித்தார்

ALSO READ:  திருப்பரங்குன்றத்தில் வருஷாபிஷேகம்

எவருமே தனியார் வாகனங்கள் மூலம் செல்ல அனுமதிக்கப்பட மாட்டாது என்று சொன்னால், நீங்கள் முதலிலேயே கேஎஸ்ஆர்டிசி கேரள அரசு போக்குவரத்து பஸ்கள் மூலம் மட்டுமே அனைவரையும் அனுமதிப்போம் என்பதை முதலில் சொல்ல வேண்டும்… நீங்கள் இதுவரை அப்படி சொல்லி இருக்கிறீர்களா? என்று கேட்டார்!
அதற்கு பதிலளித்த எஸ்பி சரி.. தனியார் வாகனங்களை சிறிது சிறிதாக அனுப்புவதற்கு முயற்சி செய்கிறேன் என்றார். அதற்கு பதிலளித்த அமைச்சர் முயற்சி செய்யாதீர்கள் செயல்படுத்துங்கள் என்று கூறினார்

தொடர்ந்து பொன்ராதாகிருஷ்ணன் எஸ்பி யதீஷ் சந்திராவுக்கு அறிவுரை கூறிய போது சபரிமலை என்பது அரசுக்கும் அதிகாரிகளுக்கும் உரியதல்ல அது பக்தர்களுக்கு உரிய இடம் என்று பதிலளித்தார்

இதன் பின்னர் அவர் தன்னுடன் வந்தவர்களுடன் கேரள அரசுப் பேருந்தில் நிலக்கல்லில் இருந்து பம்பைக்கு சென்றார்.

இந்தச் சம்பவம் குறித்துக் கூறிய கேரள பாஜக., பொது செயலர் ஏ.பி.ராதாகிருஷ்ணன், மத்திய இணை அமைச்சர் பொன் ராதாகிருஷ்ணன் பம்பை செல்லும் வழியில் எஸ்பி யதீஷ் சந்திராவினால் தடுத்து நிறுத்தப்பட்டு அவருடன் வாக்குவாதம் மேற்கொள்ளப்பட்டது துரதிருஷ்டவசமானது. எஸ்பி அவரிடம் மிகவும் கடினமாக கொடூரமாக நடந்து கொண்டது கண்டனத்துக்குரியது என்று கூறினார்.

ALSO READ:  தமிழக முதல் அமைச்சராக நாளை பதவி ஏற்கிறார் ஜோசப் விஜய்!

nilakkal sp - 2026

முன்னதாக, பம்பையில் கேரள அரசு பஸ் நிலையத்திற்கு சென்ற பொன் ராதாகிருஷ்ணன் அங்கே பக்தர்களுக்கு வழங்கப்படும் வசதிகள் குறித்து ஆய்வு செய்தார். அப்பொழுது அமைச்சர் எஸ்பி எதிர் சந்திராவிடம் தனியார் வாகனங்களுக்கு பம்பை செல்ல அனுமதி மறுக்கப்படுவது ஏன் என்று கேட்டார்

அதற்கு பதிலளித்த எஸ்பி மிகவும் கடினமாகவும் அதிகார தோரணையுடன் பதிலளித்தபோது நீங்கள் வாகனத்தில் சென்று அங்கே போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டால் அதற்கு நீங்களே பொறுப்பாக முடியும்! அதை நீங்கள் ஏற்றுக் கொள்கிறீர்களா என்று கேட்டார்

அதற்கு பதிலளித்த பொன்ராதாகிருஷ்ணன் ஒரு மத்திய அமைச்சரின் வாகனம் செல்வதால்தான் அங்கே போக்குவரத்து நெரிசல் ஏற்படுகிறது என்று உங்களால் சொல்ல முடியுமா என்று பதில் கேள்வி கேட்டார்

அதன் பின்னர் எஸ்பி., மத்திய அமைச்சரின் வாகனம் மட்டுமே செல்வதற்கு அனுமதி அளிப்பதாக கூறினார். ஆனால் தனக்கு மட்டுமேயான சலுகையை ஏற்க மறுத்த பொன்ராதாகிருஷ்ணன் தான் கேரள அரசு பஸ்ஸிலேயே பம்பை செல்வதாக கூறினார் தன் வாகனம் மட்டும் பம்பை செல்வதற்குரிய சலுகையை தான் விரும்பவில்லை என்று கூறி உடன் வந்தவர்களுடன் கேரள அரசு பஸ் நிலையம் சென்றார், பின்னர் பம்பைக்கு நிலக்கல்லில் இருந்து அரசு பஸ்ஸிலேயே பயணம் செய்தார்.

ALSO READ:  ‘தவெக., இன்னுமொரு திமுக., தானா?’ திருப்பரங்குன்ற தீப நிலைப்பாட்டுக்கு இந்து முன்னணி கண்டனம்!

இந்நிலையில் பாஜக பொதுச் செயலாளர் ராதாகிருஷ்ணன் குறித்து பதில் அளித்த போது மத்திய அமைச்சருக்கு உரிய முறையில் சரியாக பதில் அளித்திருக்க வேண்டும்! எஸ்பி வரம்பு மீறி பேசுகிறார். வரம்பு மீறி நடந்து கொண்டிருக்கிறார் என்று கூறினார்!

இந்தச் சம்பவம் கேரளத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியிருக்கிறது.

2 COMMENTS

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

அன்புத் தம்பி அண்ணா மலைக்கு…

உயர்திரு. அண்ணாமலை அவர்களுக்கு, மனமுவந்த ஆசிகள். எனக்கு வயது 81. அந்த வயதின் உரிமையிலும் தைரியத்திலும் உங்களை வாழ்த்தி ஆசீர்வதிக்கிறேன்!

ஒருவர், தன் இந்து மதத்தை வீட்டுக்குள் வைத்து எதற்குப் பூட்ட வேண்டும்?

ஒரு விஷயத்தை வெளியில் காட்டிக் கொள்ளமாட்டேன் என்று சொன்னால் அதை வெளியில் காட்டத் தகுந்ததாக மதிக்கவில்லை என்றுதான் அர்த்தம்.

பஞ்சாங்கம் ஜூலை 13 – திங்கள் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான பலன்கள், நட்சத்திர பலன்கள், அதிர்ஷ்ட எண்கள், அதிர்ஷ்ட நிறம், திருக்குறள், சிந்தனைகள்...

பஞ்சாங்கம் ஜூலை 12 – ஞாயிறு | இன்றைய ராசி பலன்கள்!

பஞ்சாங்கம், தினசரி திதி நட்சத்திரம் நல்ல நேரம் ராகு காலம் எமகண்டம் பன்னிரு ராசிகளின் ராசிபலன்கள் தினம் ஒரு திருக்குறள்

விதிமீறல் பட்டாசு ஆலைகளின் உரிமங்களை ரத்து செய்து போலீஸார் நடவடிக்கை!

மேலும் இது போன்ற தொடர் ஆய்வுகள் நடத்தப்படும் எனவும் விதிமீறல்கள் கண்டறியப்பட்டால் உரிமைத்தை தற்காலிகமாக ரத்து செய்யும் நடவடிக்கை தொடரும் எனவும் அதிகாரிகள் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.

Topics

அன்புத் தம்பி அண்ணா மலைக்கு…

உயர்திரு. அண்ணாமலை அவர்களுக்கு, மனமுவந்த ஆசிகள். எனக்கு வயது 81. அந்த வயதின் உரிமையிலும் தைரியத்திலும் உங்களை வாழ்த்தி ஆசீர்வதிக்கிறேன்!

ஒருவர், தன் இந்து மதத்தை வீட்டுக்குள் வைத்து எதற்குப் பூட்ட வேண்டும்?

ஒரு விஷயத்தை வெளியில் காட்டிக் கொள்ளமாட்டேன் என்று சொன்னால் அதை வெளியில் காட்டத் தகுந்ததாக மதிக்கவில்லை என்றுதான் அர்த்தம்.

பஞ்சாங்கம் ஜூலை 13 – திங்கள் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான பலன்கள், நட்சத்திர பலன்கள், அதிர்ஷ்ட எண்கள், அதிர்ஷ்ட நிறம், திருக்குறள், சிந்தனைகள்...

பஞ்சாங்கம் ஜூலை 12 – ஞாயிறு | இன்றைய ராசி பலன்கள்!

பஞ்சாங்கம், தினசரி திதி நட்சத்திரம் நல்ல நேரம் ராகு காலம் எமகண்டம் பன்னிரு ராசிகளின் ராசிபலன்கள் தினம் ஒரு திருக்குறள்

விதிமீறல் பட்டாசு ஆலைகளின் உரிமங்களை ரத்து செய்து போலீஸார் நடவடிக்கை!

மேலும் இது போன்ற தொடர் ஆய்வுகள் நடத்தப்படும் எனவும் விதிமீறல்கள் கண்டறியப்பட்டால் உரிமைத்தை தற்காலிகமாக ரத்து செய்யும் நடவடிக்கை தொடரும் எனவும் அதிகாரிகள் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.

சிவகாசி அச்சக அதிபர் வீட்டில் கொள்ளை; கொள்ளையர்களுக்கு அடைக்கலம் கொடுத்த 4 பேர் கைது!

விருதுநகர் மாவட்டம், சிவகாசியில் அச்சக அதிபர் வீட்டில் 75 பவுன் நகையை கொள்ளையடித்த கொள்ளையர்களுக்கு அடைக்கலம் கொடுத்து கொள்ளைக்கு உதவியதாக 4 பேரை போலீசார் கைது செய்தனர்!

பிரபல பின்னணி பாடகி எஸ்.ஜானகி மைசூரில் காலமானார்!

பல ஆயிரக்கணக்கான பாடல்களால் ரசிகர்களைக் கவர்ந்து இழுத்த பிரபல பின்னணிப் பாடகி எஸ். ஜானகி தமது 88வது வயதில் மைசூரில் இன்று காலமானார்.

முக்கிய அரசு விழாக்களில் ‘வந்தே மாதரம்’ பாடலே முதலில் : உள்துறை அமைச்சகம்!

இந்தியாவின் தேசியப் பாடலான 'வந்தே மாதரம்'-பாடலை இசைப்பது அல்லது பாடுவது குறித்த விரிவான வழிகாட்டுதல்களை அரசு வெளியிட்டுள்ளது.

Entertainment News

Popular Categories