சூரத்தை அடுத்து கர்நாடகாவில்… திருமண பரிசுப் பொருள் வேண்டாம்; மோடிக்கு ஓட்டு போடுங்க! கலக்கிய கல்யாண தம்பதி!

marriagegift - 2026

பெங்களூர் :சூரத்தை அடுத்து கர்நாடகாவிலும் ஒரு தம்பதி, தங்களது திருமணப் பரிசாக, மோடிக்கு ஓட்டு போடுங்க என்று அழைப்பிதழில் அச்சடித்துள்ளது பெரும் வரவேற்பைப் பெற்றுள்ளது.

வரும் நாடாளுமன்றத் தேர்தலில், பிரதமர் மோடிக்கு வாக்களிப்பதே எங்களது திருமணத்திற்கு நீங்கள் அளிக்கும் பரிசு என்று கர்நாடக கல்யாண தம்பதி திருமண அழைப்பிதழில் அச்சடித்துள்ளதை வரவேற்றுள்ள சமூக வலைத்தள வாசிகள், அந்த அழைப்பிதழையும் வைரலாக்கி வருகின்றனர்.

கர்நாடக மாநிலத்திலுள்ள தேவாங்கரே பகுதியைச் சேர்ந்த நாகராஜ், ரேகா இருவருக்கும் பிப்ரவரி 8 ஆம் தேதி திருமணம் நடைபெறுகிறது. இதற்கான அழைப்பிதழை, உறவினர்கள், நண்பர்களுக்கு அவர்கள் அளித்து வருகின்றனர். ஆனால் இந்தத் திருமண அழைப்பிதழ் இப்போது சமூகத் தளங்களில் வைரலாகி, மிகப் பிரபலம் அடைந்திருக்கிறது.

marriagegift2 - 2026

வரும் நாடாளுமன்றத் தேர்தலில் பிரதமர் மோடிக்கு மீண்டும் வாக்களிப்போம் என்ற வாக்குறுதியை அளிப்பதுதான் எங்கள் திருமணத்துக்கு வந்து எங்களுக்கு ஆசிர்வாதம் வழங்குவதாகவும் பரிசுப் பொருள் கொடுப்பதாகவும் நாங்கள் கருதுகிறோம் என்று , மணமக்கள் இருவரும் அந்தத் திருமண அழைப்பிதழிலும் குறிப்பிட்டுள்ளனர். மேலும், சுவச்ச பாரத் திட்டத்தின் வாசகங்களும் விழிப்பு உணர்வூட்டும் கருத்துகளும் அதில் உள்ளன.

முன்னதாக, குஜராத் மாநிலம் சூரத்தை சேர்ந்த யுவராஜ் – சாக்சி தம்பதி, ரபேல் போர்விமானங்கள் விவகாரத்தில் மோடி அரசின் சரியான செயல்பாடு மற்றும் தேசிய ஜனநாயக கூட்டணி அரசின் சாதனைகளை, தங்களது திருமண அழைப்பிதழில் குறிப்பிட்டு விளம்பரப் படுத்தியிருந்தனர். இந்த அழைப்பிதழைக் கண்ட பிரதமர் மோடி, அந்த தம்பதியினரை பாராட்டும் வகையில் பாராட்டு கடிதம் அனுப்பிவைத்திருந்தார்.



Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

பஞ்சாங்கம் மார்ச் 14 – சனிக் கிழமை | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய தினம் நல்ல நாளாக அமைய எமது வாழ்த்துகள்.

கொல்லங்கோடு பத்ரகாளி கோவில் தூக்கத்திருவிழா துவக்கம்..

தமிழகம் கேரளா மாநிலத்தில் பிரசித்தி பெற்ற கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள கொல்லங்கோடு...

ஈரான் விவகாரத்தில்… காங்கிரஸின் ‘யு டர்ன்’!

ஐக்கிய முற்போக்கு கூட்டணி ஆட்சியில் மூன்று முறை, 2005, 2006, 2009 ஆண்டுகளில், சர்வதேச அணுசக்தி முகாமையில் ஈரானின் அணு ஆயுத தயாரிப்பை எதிர்த்து

எர்ணாகுளம் – வேளாங்கண்ணி- செங்கோட்டை ,மதுரை வழி புதிய ரயில்..

எர்ணாகுளம் - வேளாங்கண்ணி-எர்ணாகுளம் இடையே கொல்லம் செங்கோட்டை மதுரை வழி...

பங்குனி மாத பூஜைகளுக்காக சபரிமலை கோயில் நாளை நடை திறப்பு

பங்குனி மாத பூஜைகளுக்காக கேரளாவில் பிரசித்தி பெற்ற சபரிமலை சுவாமி ஐயப்பன்...

Topics

பஞ்சாங்கம் மார்ச் 14 – சனிக் கிழமை | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய தினம் நல்ல நாளாக அமைய எமது வாழ்த்துகள்.

கொல்லங்கோடு பத்ரகாளி கோவில் தூக்கத்திருவிழா துவக்கம்..

தமிழகம் கேரளா மாநிலத்தில் பிரசித்தி பெற்ற கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள கொல்லங்கோடு...

ஈரான் விவகாரத்தில்… காங்கிரஸின் ‘யு டர்ன்’!

ஐக்கிய முற்போக்கு கூட்டணி ஆட்சியில் மூன்று முறை, 2005, 2006, 2009 ஆண்டுகளில், சர்வதேச அணுசக்தி முகாமையில் ஈரானின் அணு ஆயுத தயாரிப்பை எதிர்த்து

எர்ணாகுளம் – வேளாங்கண்ணி- செங்கோட்டை ,மதுரை வழி புதிய ரயில்..

எர்ணாகுளம் - வேளாங்கண்ணி-எர்ணாகுளம் இடையே கொல்லம் செங்கோட்டை மதுரை வழி...

பங்குனி மாத பூஜைகளுக்காக சபரிமலை கோயில் நாளை நடை திறப்பு

பங்குனி மாத பூஜைகளுக்காக கேரளாவில் பிரசித்தி பெற்ற சபரிமலை சுவாமி ஐயப்பன்...

அரசியல்வாதிகள் போல் செயல்படும் அரசு அதிகாரிகள்: இந்து முன்னணி கண்டனம்!

எனவே அரசியல் சாசன சட்டத்தை மதித்து மக்கள் நலனை கருத்தில் கொண்டு அரசு அதிகாரிகள் செயல்பட வேண்டும் என்று இந்துமுன்னணி சார்பில் கேட்டுக் கொள்கிறோம்.

தமிழகத்தில் பெட்ரோல் டீசலுக்கு தட்டுப்பாடா? உண்மை என்ன?

தமிழ்நாடு முழுவதும் பெட்ரோல் மற்றும் டீசல் தடையின்றி தொடர்ந்து கிடைக்கும் என்பதை மீண்டும் உறுதி செய்கிறது.

Entertainment News

Popular Categories