ராகுலிடம் இருந்து கை நழுவும் அமேதி! ஸ்மிருதி இரானி முன்னிலை!

smriti rahul - 2026

அமேதி மக்களவைத் தொகுதியில் ஸ்மிருதி இராணி முன்னிலை பெற்று வருகிறார். காங்கிரஸ் தலைவர் ராகுல் பின்னடைவை சந்தித்து உள்ளார்

கடந்த 2014 ஆம் ஆண்டு தேர்தலின் போது ராகுலை எதிர்த்து ஸ்மிருதி இரானி அமேதி தொகுதியில் போட்டியிட்டார். இந்நிலையில் இரண்டாவது முறையாக தற்போதைய தேர்தலில் நிறுத்தி இராணி ராகுல் காந்தியை எதிர்த்து போட்டியிடுகிறார்.

மத்திய அமைச்சர் ஸ்மிருதி இரானி 2014 மக்களவைத் தேர்தலில் 3 லட்சத்திற்கும் அதிகமான வாக்குகளை பெற்று ஆச்சரியத்தில் ஆழ்த்தினார். ராகுல் காந்தியுடன் ஒப்பிடும்போது ஒரு லட்சத்திற்கும் குறைவான வாக்குகள் வித்தியாசத்தில் தோல்வியை சந்தித்தார்.

அதன் பின்னர் தொகுதிக்கு அடிக்கடி சென்று மக்களுடன் கலந்து பேசி தன் மீதான நம்பிக்கையை மக்களிடம் விதைத்தார். இந்நிலையில் இந்த தேர்தலில் தான் எப்படியும் வெற்றி பெறுவோம் என்று மிகுந்த நம்பிக்கையுடன் இருந்தார் ஸ்மிருதி இரானி.  காங்கிரஸ் அமேதி தொகுதிக்கு எதுவும் செய்யவில்லை என்பதை ஆணித்தரமாக ஒவ்வொரு முறையும் மக்களிடம் எடுத்துக் கூறி வந்தார்

இந்நிலையில் அமேதி தொகுதியில் பாஜக கடுமையாக உழைத்தது. யோகி ஆதித்யநாத் உள்ளிட்ட தலைவர்கள் அங்கே பிரச்சாரத்துக்காக சென்றனர்.

கடந்த 1977, 98 ஆகிய தேர்தல்களை தவிர மற்ற தேர்தல்களில் அமேதி தொகுதி காங்கிரஸ் வசமே இருந்து உள்ளது. இந்நிலையில் தற்போதைய தேர்தலில் ராகுல் பின்னடைவை சந்தித்து வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது!

முன்னதாக, அமேதி தொகுதியில் தாம் தோற்றுவிடுவோம் என்ற அச்சத்தில், கேரளத்தின் வயநாடு தொகுதியிலும் போட்டியிட்டார் ராகுல். வயநாடு தொகுதியில் ராகுல் தற்போது முன்னிலை பெற்று வருகிறார்.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

பஞ்சாங்கம் மார்ச் 14 – சனிக் கிழமை | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய தினம் நல்ல நாளாக அமைய எமது வாழ்த்துகள்.

கொல்லங்கோடு பத்ரகாளி கோவில் தூக்கத்திருவிழா துவக்கம்..

தமிழகம் கேரளா மாநிலத்தில் பிரசித்தி பெற்ற கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள கொல்லங்கோடு...

ஈரான் விவகாரத்தில்… காங்கிரஸின் ‘யு டர்ன்’!

ஐக்கிய முற்போக்கு கூட்டணி ஆட்சியில் மூன்று முறை, 2005, 2006, 2009 ஆண்டுகளில், சர்வதேச அணுசக்தி முகாமையில் ஈரானின் அணு ஆயுத தயாரிப்பை எதிர்த்து

எர்ணாகுளம் – வேளாங்கண்ணி- செங்கோட்டை ,மதுரை வழி புதிய ரயில்..

எர்ணாகுளம் - வேளாங்கண்ணி-எர்ணாகுளம் இடையே கொல்லம் செங்கோட்டை மதுரை வழி...

பங்குனி மாத பூஜைகளுக்காக சபரிமலை கோயில் நாளை நடை திறப்பு

பங்குனி மாத பூஜைகளுக்காக கேரளாவில் பிரசித்தி பெற்ற சபரிமலை சுவாமி ஐயப்பன்...

Topics

பஞ்சாங்கம் மார்ச் 14 – சனிக் கிழமை | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய தினம் நல்ல நாளாக அமைய எமது வாழ்த்துகள்.

கொல்லங்கோடு பத்ரகாளி கோவில் தூக்கத்திருவிழா துவக்கம்..

தமிழகம் கேரளா மாநிலத்தில் பிரசித்தி பெற்ற கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள கொல்லங்கோடு...

ஈரான் விவகாரத்தில்… காங்கிரஸின் ‘யு டர்ன்’!

ஐக்கிய முற்போக்கு கூட்டணி ஆட்சியில் மூன்று முறை, 2005, 2006, 2009 ஆண்டுகளில், சர்வதேச அணுசக்தி முகாமையில் ஈரானின் அணு ஆயுத தயாரிப்பை எதிர்த்து

எர்ணாகுளம் – வேளாங்கண்ணி- செங்கோட்டை ,மதுரை வழி புதிய ரயில்..

எர்ணாகுளம் - வேளாங்கண்ணி-எர்ணாகுளம் இடையே கொல்லம் செங்கோட்டை மதுரை வழி...

பங்குனி மாத பூஜைகளுக்காக சபரிமலை கோயில் நாளை நடை திறப்பு

பங்குனி மாத பூஜைகளுக்காக கேரளாவில் பிரசித்தி பெற்ற சபரிமலை சுவாமி ஐயப்பன்...

அரசியல்வாதிகள் போல் செயல்படும் அரசு அதிகாரிகள்: இந்து முன்னணி கண்டனம்!

எனவே அரசியல் சாசன சட்டத்தை மதித்து மக்கள் நலனை கருத்தில் கொண்டு அரசு அதிகாரிகள் செயல்பட வேண்டும் என்று இந்துமுன்னணி சார்பில் கேட்டுக் கொள்கிறோம்.

தமிழகத்தில் பெட்ரோல் டீசலுக்கு தட்டுப்பாடா? உண்மை என்ன?

தமிழ்நாடு முழுவதும் பெட்ரோல் மற்றும் டீசல் தடையின்றி தொடர்ந்து கிடைக்கும் என்பதை மீண்டும் உறுதி செய்கிறது.

Entertainment News

Popular Categories