சென்னை: ‘நண்பேன்டா’ படத்துக்கு வரி விலக்கு மறுக்கப்பட்டு இருப்பதால், நீதிமன்றத்தில் வழக்கு தொடர உதயநிதி ஸ்டாலின் முடிவு செய்துள்ளார். உதயநிதி ஸ்டாலின், நயன்தாரா, சந்தானம் உள்ளிட்ட பலர் நடித்திருக்கும் ‘நண்பேன்டா’ படம் ஏப்ரல் 2ஆம் தேதி வெளியிட திட்டமிடப்பட்டுள்ளது. இப்படத்தைப் பார்த்த சென்சார் அதிகாரிகள், படத்துக்கு ‘யு’ சான்றிதழ் அளித்துள்ளனர். ‘யு’ சான்றிதழ் கிடைத்ததைத் தொடர்ந்து வரி விலக்கு அதிகாரிகளுக்கு படம் திரையிட்டுக் காட்டப்பட்டுள்ளது. ஆனால், இந்தப் படத்துக்கு வரி விலக்கு அளிக்க முடியாது என்று அதிகாரிகள் மறுத்துவிட்டனர். படத்தில் ஆபாச காட்சிகளோ, ஆபாச வசனங்களோ இல்லாத பட்சத்தில் எதற்காக வரி விலக்கு மறுக்கிறார்கள் என வரி விலக்கு அதிகாரிகளுக்கு எதிராக வழக்கு தொடர உதயநிதி ஸ்டாலின் முடிவு செய்துள்ளார். இதே போன்ற பிரச்னை, உதயநிதியின் முந்தைய படமான ‘இது கதிர்வேலன் காதல்’ படத்துக்கும் ஏற்பட்டது. அதற்கும் உதயநிதி வழக்கு தொடர்ந்திருந்தார்.
‘நண்பேன்டா’ படத்துக்கு வரி விலக்கு இல்லை: நீதிமன்றம் செல்கிறார் உதயநிதி
Popular Categories


