திருவாரூர் விபத்து: விசாரணைக் கமிஷன் அமைக்க மார்க்சிஸ்ட் வலியுறுத்தல்

Published:

திருவாரூர் மத்திய பல்கலைக் கழகத்தில் நடந்த கட்டட விபத்து தொடர்பாக விசாரணைக் கமிஷன் அமைக்க வேண்டும் என்று மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி வலியுறுத்தியுள்ளது. அந்தக் கட்சியின் சார்பில் ஜி.ராமகிருஷ்ணன் வெளியிட அறிக்கையில், திருவாரூர் – மயிலாடுதுறை சாலையில் அமைந்துள்ள நாகக்குடி என்ற கிராமத்தில் மத்திய பல்கலைக்கழகம் கட்டப்பட்டு வருகிறது. அதன் அருகே ஊழியர்களுக்கு 4 அடுக்கு மாடி குடியிருப்புகள் புதிதாக கட்டப்பட்டு வருகிறது. இந்த கட்டிடம் தரமானதாக இல்லை என மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் திருவாரூர் மாவட்டக்குழு ஏற்கனவே எச்சரித்துள்ளது. இந்நிலையில் இன்று (29.3.2015) புதிதாக கட்டப்பட்டு வரும் ஊழியர் குடியிருப்பு கட்டிடம் முழுவதும் இடிந்து விழுந்து 5 பேர் உயிரிழந்துள்ளனர், 16 பேர் இடிபாடுகளுடன் சிக்கி படுகாயமடைந்துள்ளனர் என்ற செய்தி மிகுந்த அதிர்ச்சியையும், துயரத்தையும் ஏற்படுத்துகிறது. கட்டுமானப் பணிகளில் பாதுகாப்பு நடவடிக்கைகள் முழுமையாக கடைபிடிக்கப்படுகின்றனவா என்பதை உறுதி செய்வதற்கு உரிய வழிமுறைகளையும், ஏற்பாடுகளையும் செய்ய வேண்டுமென ஏற்கனவே கடந்த ஆண்டு நடந்த போரூர் கட்டிட விபத்தில் 61 பேர் உயிரிழந்த போதே மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி அரசை வலியுறுத்தியது. கட்டிடம் கட்டப்பட்ட இடம், மண்ணின் தன்மை உள்ளிட்டு கட்டிட கட்டுமானத்தில் கடைபிடிக்க வேண்டிய பாதுகாப்பு விதிகள் கடைபிடிக்கப்பட்டிருந்தால் இந்த விபத்து ஏற்பட்டிருக்க வாய்ப்பில்லை. எனவே இந்த விபத்திற்கான காரணங்களை கண்டறிந்து அதற்கு காரணமான கட்டிட ஒப்பந்ததாரரை கைது செய்து உரிய நடவடிக்கை எடுக்க வேண்டுமெனவும்; உயிரிழந்தவர்களின் குடும்பத்திற்கு தலா ரூ. 10 லட்சம் நிவாரணம் அளிக்க வேண்டுமெனவும்; காயமடைந்தவர்களுக்கு தரமான சிகிச்சையும், உரிய நிவாரணமும் வழங்கிட வேண்டுமெனவும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் தமிழ்நாடு மாநில செயற்குழு மத்திய, மாநில அரசுகளை வலியுறுத்துகிறது. இந்த விபத்து குறித்து விசாரிக்கவும், இதுபோன்ற விபத்துகள் நடைபெறாமல் தடுப்பதற்கும் ஆலோசனை வழங்குவதற்கும் பதவியில் உள்ள நீதிபதியை கொண்டு விசாரணைக் கமிஷன் அமைக்க வேண்டுமென மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின்தமிழ்நாடு மாநில செயற்குழு மத்திய அரசை வலியுறுத்துகிறது. – என்று கூறப்பட்டுள்ளது.

ALSO READ:  அயோத்தி ராமர் கோவில் நிதி முறைகேடு விவகாரத்தில் கடும் நடவடிக்கை தேவை: ஆர்எஸ்எஸ்.,
செங்கோட்டை ஸ்ரீராம்
செங்கோட்டை ஸ்ரீராம்https://www.dhinasari.com
பத்திரிகையாளர், எழுத்தாளர். | தமிழ் தினசரி இணைய நிறுவுனர், ஆசிரியர் |விஜயபாரதம் இதழில் உதவி ஆசிரியர், மஞ்சரி டைஜஸ்ட், விகடன் பிரசுரம், சக்தி விகடன், கல்கியின் தீபம் இதழ்களில் பொறுப்பாசிரியராகப் பணி புரிந்தவர். |தினமணி இணையம் (dinamani.com), Asianet News Tamil ஆகியவற்றில் செய்தி ஆசிரியராக பணியாற்றியவர். |சென்னை அகில இந்திய வானொலிக்காக, தேசியத் தலைவர்கள், சுதந்திரப் போராட்ட வீரர்கள், காஞ்சி மகா பெரியவர் தொடர்பான பல்வேறு செய்திக் கட்டுரைகளை எழுதியுள்ளார். |* வானொலி ஆர்.ஜே., பொதிகை தொலைக்காட்சியில் செய்தி அலசல் நேரலை நிகழ்ச்சி என ஊடகத் துறையின் பல்வேறு தளங்களிலும் பணியாற்றியவர். |விகடன் பிரசுரத்தின் மூலம் இவரது ஆறு நூல்கள் வெளியாகியுள்ளன. |இவரது இதழியல் பணிக்காக, கோல்கத்தா பாரதிய பாஷா பரிஷத் அமைப்பு ‘யுவ புரஸ்கார்-08 தேசிய இலக்கிய விருது’ வழங்கியுள்ளது. |

Related articles

Recent articles

spot_img