திருவாரூர் மத்திய பல்கலைக் கழகத்தில் நடந்த கட்டட விபத்து தொடர்பாக விசாரணைக் கமிஷன் அமைக்க வேண்டும் என்று மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி வலியுறுத்தியுள்ளது. அந்தக் கட்சியின் சார்பில் ஜி.ராமகிருஷ்ணன் வெளியிட அறிக்கையில், திருவாரூர் – மயிலாடுதுறை சாலையில் அமைந்துள்ள நாகக்குடி என்ற கிராமத்தில் மத்திய பல்கலைக்கழகம் கட்டப்பட்டு வருகிறது. அதன் அருகே ஊழியர்களுக்கு 4 அடுக்கு மாடி குடியிருப்புகள் புதிதாக கட்டப்பட்டு வருகிறது. இந்த கட்டிடம் தரமானதாக இல்லை என மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் திருவாரூர் மாவட்டக்குழு ஏற்கனவே எச்சரித்துள்ளது. இந்நிலையில் இன்று (29.3.2015) புதிதாக கட்டப்பட்டு வரும் ஊழியர் குடியிருப்பு கட்டிடம் முழுவதும் இடிந்து விழுந்து 5 பேர் உயிரிழந்துள்ளனர், 16 பேர் இடிபாடுகளுடன் சிக்கி படுகாயமடைந்துள்ளனர் என்ற செய்தி மிகுந்த அதிர்ச்சியையும், துயரத்தையும் ஏற்படுத்துகிறது. கட்டுமானப் பணிகளில் பாதுகாப்பு நடவடிக்கைகள் முழுமையாக கடைபிடிக்கப்படுகின்றனவா என்பதை உறுதி செய்வதற்கு உரிய வழிமுறைகளையும், ஏற்பாடுகளையும் செய்ய வேண்டுமென ஏற்கனவே கடந்த ஆண்டு நடந்த போரூர் கட்டிட விபத்தில் 61 பேர் உயிரிழந்த போதே மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி அரசை வலியுறுத்தியது. கட்டிடம் கட்டப்பட்ட இடம், மண்ணின் தன்மை உள்ளிட்டு கட்டிட கட்டுமானத்தில் கடைபிடிக்க வேண்டிய பாதுகாப்பு விதிகள் கடைபிடிக்கப்பட்டிருந்தால் இந்த விபத்து ஏற்பட்டிருக்க வாய்ப்பில்லை. எனவே இந்த விபத்திற்கான காரணங்களை கண்டறிந்து அதற்கு காரணமான கட்டிட ஒப்பந்ததாரரை கைது செய்து உரிய நடவடிக்கை எடுக்க வேண்டுமெனவும்; உயிரிழந்தவர்களின் குடும்பத்திற்கு தலா ரூ. 10 லட்சம் நிவாரணம் அளிக்க வேண்டுமெனவும்; காயமடைந்தவர்களுக்கு தரமான சிகிச்சையும், உரிய நிவாரணமும் வழங்கிட வேண்டுமெனவும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் தமிழ்நாடு மாநில செயற்குழு மத்திய, மாநில அரசுகளை வலியுறுத்துகிறது. இந்த விபத்து குறித்து விசாரிக்கவும், இதுபோன்ற விபத்துகள் நடைபெறாமல் தடுப்பதற்கும் ஆலோசனை வழங்குவதற்கும் பதவியில் உள்ள நீதிபதியை கொண்டு விசாரணைக் கமிஷன் அமைக்க வேண்டுமென மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின்தமிழ்நாடு மாநில செயற்குழு மத்திய அரசை வலியுறுத்துகிறது. – என்று கூறப்பட்டுள்ளது.
Hot this week
சற்றுமுன்
இந்த ரயில்கள் எல்லாம் எழும்பூர் வராது; தாம்பரத்தோடு சரி
சென்னை எழும்பூரில் நடைபெற்று வரும் மறு சீரமைப்பு பணிகள் காரணமாக இந்த மாற்றங்கள் தற்போது நீட்டிக்கப்பட்டுள்ளதாக
நெல்லை
தாம்பரம் – தென்காசி ஈஸ்டர் சிறப்பு ரயில்; இன்று முன்பதிவு தொடக்கம்!
திருச்சி மதுரை திருநெல்வேலி தென்காசி வழியாக தாம்பரம் தென்காசி/செங்கோட்டை புனித வெள்ளி...
பஞ்சாங்கம்
பஞ்சாங்கம் ஏப்ரல் 2 – வியாழன்| இன்றைய ராசி பலன்கள்!
இன்றைய பஞ்சாங்கம், பன்னிரண்டு ராசிகளுக்கும் உள்ள இன்றைய ராசிபலன்கள், திருக்குறள், சிந்தனைகள்....
சுற்றுலா
மண்ணின் மணத்தை மலர வைத்த ஒடிஷா!
இன்று ஏப்ரல் - 1, ஒடிஷா மாநிலம் தோன்றிய நாள் என்று சமூக வலைத்தளத்தில் செய்தி வந்ததும் நான் நான்கு ஆண்டுகளுக்கு முன் மூன்று நாட்கள் ஒடிஷாவில் உள்ள தாமன்ஜோடி
விளையாட்டு
IPL 2026: வெற்றிகரமான தொடக்கம்!
ஐபிஎல் 2026 மார்ச்சு 28ஆம் தேதி பெங்களூருவில் ஹைதரபாத், பெங்களூரு அணிகளுக்கிடையேயான ஆட்டத்துடன் தொடங்கியது.

Topics
சற்றுமுன்
இந்த ரயில்கள் எல்லாம் எழும்பூர் வராது; தாம்பரத்தோடு சரி
சென்னை எழும்பூரில் நடைபெற்று வரும் மறு சீரமைப்பு பணிகள் காரணமாக இந்த மாற்றங்கள் தற்போது நீட்டிக்கப்பட்டுள்ளதாக
நெல்லை
தாம்பரம் – தென்காசி ஈஸ்டர் சிறப்பு ரயில்; இன்று முன்பதிவு தொடக்கம்!
திருச்சி மதுரை திருநெல்வேலி தென்காசி வழியாக தாம்பரம் தென்காசி/செங்கோட்டை புனித வெள்ளி...
பஞ்சாங்கம்
பஞ்சாங்கம் ஏப்ரல் 2 – வியாழன்| இன்றைய ராசி பலன்கள்!
இன்றைய பஞ்சாங்கம், பன்னிரண்டு ராசிகளுக்கும் உள்ள இன்றைய ராசிபலன்கள், திருக்குறள், சிந்தனைகள்....
சுற்றுலா
மண்ணின் மணத்தை மலர வைத்த ஒடிஷா!
இன்று ஏப்ரல் - 1, ஒடிஷா மாநிலம் தோன்றிய நாள் என்று சமூக வலைத்தளத்தில் செய்தி வந்ததும் நான் நான்கு ஆண்டுகளுக்கு முன் மூன்று நாட்கள் ஒடிஷாவில் உள்ள தாமன்ஜோடி
விளையாட்டு
IPL 2026: வெற்றிகரமான தொடக்கம்!
ஐபிஎல் 2026 மார்ச்சு 28ஆம் தேதி பெங்களூருவில் ஹைதரபாத், பெங்களூரு அணிகளுக்கிடையேயான ஆட்டத்துடன் தொடங்கியது.
உரத்த சிந்தனை
கமலாலயத்துக்கும் சத்தியமூர்த்தி பவனுக்கும் வேறுபாடில்லை!
முரளி சீதாராமன்1) காலையில் நயினார் நாகேந்திரன் செய்தியாளர் சந்திப்பில்:- "ஏப்ரல் 4...
அரசியல்
அதிகாரத்தில் இல்லாததற்காக, இவர்களுக்கு நன்றிக்கடன் பட்டுள்ளேன்!
இந்த இக்கட்டான சூழ்நிலையில் ஏதாவது ஒரு விஷயத்திற்கு நாம் நன்றிக்கடன் பட்டுள்ளோம் என்றால் அது, இப்போது காங்கிரஸ் கட்சி அதிகாரத்தில் இல்லாததற்கே!
பஞ்சாங்கம்
பஞ்சாங்கம் – ஏப்ரல் 1 – புதன் | இன்றைய ராசி பலன்கள்!
இன்றைய பஞ்சாங்கம், ராசிபலன்கள், ஜோதிடம், பொன்மொழிகள், திருக்குறள்,
Entertainment News
Previous article
Next article

