திருவாரூர் மத்திய பல்கலைக் கழகத்தில் நடந்த கட்டட விபத்து தொடர்பாக விசாரணைக் கமிஷன் அமைக்க வேண்டும் என்று மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி வலியுறுத்தியுள்ளது. அந்தக் கட்சியின் சார்பில் ஜி.ராமகிருஷ்ணன் வெளியிட அறிக்கையில், திருவாரூர் – மயிலாடுதுறை சாலையில் அமைந்துள்ள நாகக்குடி என்ற கிராமத்தில் மத்திய பல்கலைக்கழகம் கட்டப்பட்டு வருகிறது. அதன் அருகே ஊழியர்களுக்கு 4 அடுக்கு மாடி குடியிருப்புகள் புதிதாக கட்டப்பட்டு வருகிறது. இந்த கட்டிடம் தரமானதாக இல்லை என மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் திருவாரூர் மாவட்டக்குழு ஏற்கனவே எச்சரித்துள்ளது. இந்நிலையில் இன்று (29.3.2015) புதிதாக கட்டப்பட்டு வரும் ஊழியர் குடியிருப்பு கட்டிடம் முழுவதும் இடிந்து விழுந்து 5 பேர் உயிரிழந்துள்ளனர், 16 பேர் இடிபாடுகளுடன் சிக்கி படுகாயமடைந்துள்ளனர் என்ற செய்தி மிகுந்த அதிர்ச்சியையும், துயரத்தையும் ஏற்படுத்துகிறது. கட்டுமானப் பணிகளில் பாதுகாப்பு நடவடிக்கைகள் முழுமையாக கடைபிடிக்கப்படுகின்றனவா என்பதை உறுதி செய்வதற்கு உரிய வழிமுறைகளையும், ஏற்பாடுகளையும் செய்ய வேண்டுமென ஏற்கனவே கடந்த ஆண்டு நடந்த போரூர் கட்டிட விபத்தில் 61 பேர் உயிரிழந்த போதே மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி அரசை வலியுறுத்தியது. கட்டிடம் கட்டப்பட்ட இடம், மண்ணின் தன்மை உள்ளிட்டு கட்டிட கட்டுமானத்தில் கடைபிடிக்க வேண்டிய பாதுகாப்பு விதிகள் கடைபிடிக்கப்பட்டிருந்தால் இந்த விபத்து ஏற்பட்டிருக்க வாய்ப்பில்லை. எனவே இந்த விபத்திற்கான காரணங்களை கண்டறிந்து அதற்கு காரணமான கட்டிட ஒப்பந்ததாரரை கைது செய்து உரிய நடவடிக்கை எடுக்க வேண்டுமெனவும்; உயிரிழந்தவர்களின் குடும்பத்திற்கு தலா ரூ. 10 லட்சம் நிவாரணம் அளிக்க வேண்டுமெனவும்; காயமடைந்தவர்களுக்கு தரமான சிகிச்சையும், உரிய நிவாரணமும் வழங்கிட வேண்டுமெனவும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் தமிழ்நாடு மாநில செயற்குழு மத்திய, மாநில அரசுகளை வலியுறுத்துகிறது. இந்த விபத்து குறித்து விசாரிக்கவும், இதுபோன்ற விபத்துகள் நடைபெறாமல் தடுப்பதற்கும் ஆலோசனை வழங்குவதற்கும் பதவியில் உள்ள நீதிபதியை கொண்டு விசாரணைக் கமிஷன் அமைக்க வேண்டுமென மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின்தமிழ்நாடு மாநில செயற்குழு மத்திய அரசை வலியுறுத்துகிறது. – என்று கூறப்பட்டுள்ளது.
Hot this week
பஞ்சாங்கம்
பஞ்சாங்கம் மே 3 – ஞாயிறு | இன்றைய ராசி பலன்கள்!
பஞ்சாங்கம், தினசரி திதி நட்சத்திரம் நல்ல நேரம் ராகு காலம் எமகண்டம் பன்னிரு ராசிகளின் ராசிபலன்கள் தினம் ஒரு திருக்குறள்
ஆன்மிகச் செய்திகள்
குருவித்துறை; வறண்ட வைகையில் இறங்கிய கள்ளழகர்! பக்தர்கள் வேதனை!
குருவித்துறையில் தண்ணீர் இன்றி வறண்ட வைகையில் இறங்கிய கள்ளழகர் அதிகாரிகளின் திட்டமிடாத செயலே காரணம் என பக்தர்கள் வேதனை!
மதுரை
தேர்தலைக் காரணம் காட்டி கொள்முதல் தாமதம்! வெயில் மழையில் சேதமாகும் நெல் மூட்டைகள்!
வாடிப்பட்டி அருகே, போடிநாயக்கன்பட்டி பகுதியில் 20 நாட்களுக்கு மேலாக கொள்முதல் செய்யாததால் 10 ஆயிரத்திற்கும் மேற்பட்ட நெல் மூட்டைகள் மழையில் நனைந்தும் வெயிலில் காய்ந்தும் சேதம்; விவசாயிகள் வேதனை!
சற்றுமுன்
இருதரப்பு மோதலில் எஸ்பி., சமரசம்; அமைதியாக நடைபெற்ற ஸ்வாமி ஊர்வலம்!
உசிலம்பட்டி அருகே எழுமலை அடுத்துள்ள ஆத்தங்கரைப்பட்டியில் சுமார் 400 ஆண்டுகள் பழமையான இந்து அறநிலையத்துறைக்கு
ஆன்மிகச் செய்திகள்
சிவசைலநாதர் பரமகல்யாணி எழுந்தருள, மீன்பிடி திருவிழா!
ஸ்ரீ சிவசைலநாதரும் ஸ்ரீ பரமகல்யாணி அம்பாளும் மீன்பிடிக்கக் கிளம்பும் திருவிழா!

Topics
பஞ்சாங்கம்
பஞ்சாங்கம் மே 3 – ஞாயிறு | இன்றைய ராசி பலன்கள்!
பஞ்சாங்கம், தினசரி திதி நட்சத்திரம் நல்ல நேரம் ராகு காலம் எமகண்டம் பன்னிரு ராசிகளின் ராசிபலன்கள் தினம் ஒரு திருக்குறள்
ஆன்மிகச் செய்திகள்
குருவித்துறை; வறண்ட வைகையில் இறங்கிய கள்ளழகர்! பக்தர்கள் வேதனை!
குருவித்துறையில் தண்ணீர் இன்றி வறண்ட வைகையில் இறங்கிய கள்ளழகர் அதிகாரிகளின் திட்டமிடாத செயலே காரணம் என பக்தர்கள் வேதனை!
மதுரை
தேர்தலைக் காரணம் காட்டி கொள்முதல் தாமதம்! வெயில் மழையில் சேதமாகும் நெல் மூட்டைகள்!
வாடிப்பட்டி அருகே, போடிநாயக்கன்பட்டி பகுதியில் 20 நாட்களுக்கு மேலாக கொள்முதல் செய்யாததால் 10 ஆயிரத்திற்கும் மேற்பட்ட நெல் மூட்டைகள் மழையில் நனைந்தும் வெயிலில் காய்ந்தும் சேதம்; விவசாயிகள் வேதனை!
சற்றுமுன்
இருதரப்பு மோதலில் எஸ்பி., சமரசம்; அமைதியாக நடைபெற்ற ஸ்வாமி ஊர்வலம்!
உசிலம்பட்டி அருகே எழுமலை அடுத்துள்ள ஆத்தங்கரைப்பட்டியில் சுமார் 400 ஆண்டுகள் பழமையான இந்து அறநிலையத்துறைக்கு
ஆன்மிகச் செய்திகள்
சிவசைலநாதர் பரமகல்யாணி எழுந்தருள, மீன்பிடி திருவிழா!
ஸ்ரீ சிவசைலநாதரும் ஸ்ரீ பரமகல்யாணி அம்பாளும் மீன்பிடிக்கக் கிளம்பும் திருவிழா!
பஞ்சாங்கம்
பஞ்சாங்கம் மே 2 – சனிக் கிழமை | இன்றைய ராசி பலன்கள்!
இன்றைய தினம் நல்ல நாளாக அமைய எமது வாழ்த்துகள்.
ஆன்மிகச் செய்திகள்
பக்தர்கள் திரளில் மதுரை – வைகை நதியில் இறங்கிய கள்ளழகர்!
மதுரையில் வைகை நதியில் கள்ளழகர் வைகை ஆற்றில் இறங்கி பக்தர்களுக்கு காட்சி அளித்தார்.
பஞ்சாங்கம்
பஞ்சாங்கம் மே 1 – வெள்ளி | இன்றைய ராசி பலன்கள்!
இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய பலன்கள், திருக்குறள், நற்சிந்தனை
Entertainment News
Previous article
Next article

