கடலோர போலீஸாருக்கான பயிற்சி மையம்: நாட்டில் முதலவதாக ராமேஸ்வரத்தில் அமைகிறது

Published:

சென்னை: கடலோர போலீசாருக்கான பயிற்சி மையம் ராமேசுவரத்தில் 237 ஏக்கர் பரப்பளவில் அமைக்கப்பட உள்ளது. இது இந்தியாவிலேயே முதலாவதாக அமையவுள்ள பயிற்சி மையம் என்பது குறிப்பிடத்தக்கது. ராமேஸ்வரம் ஒலைக்குடா தரவை பகுதியில் கடலோர போலீசாருக்கு பாதுகாப்பு குறித்த பயிற்சிகள் அளிக்க கடலோர போலீஸ் பயிற்சி மையம் கட்டப்பட உள்ளது. இதற்காக சுமார் 237 ஏக்கர் நிலம் கையகப் படுத்தப்பட்டுள்ளது. இதுதொடர்பான பணிகளை மத்திய அரசு வழிகாட்டுதலின்படி மாநில அரசு மேற்கொண்டுள்ளது. தமிழக கடலோர போலீசாரின் பாதுகாப்பு வசதிக்காக ஒலைக்குடா கடற்கரையில் சுமார் 4 ஏக்கர் பரப்பளவில் தொலைத்தொடர்பு மையம் கட்டுவதற்கும் முடிவு செய்யப்பட்டு அதற்கான இடம் ஒதுக்கப்பட்டு விட்டது. இந்தநிலையில் அங்கு கடந்த 1 மாதமாக 24 மணி நேரமும் கடலோர போலீசார் பாதுகாப்பு பணியிலும் ஈடுபடுத்தப்பட்டு வருகின்றனர். ஏற்கெனவே, ராமநாதபுரம் மாவட்ட கடல் பகுதி பாதுகாப்புக்காக உச்சிப்புளியில் 2 ரோந்து ஹெலிகாப்டர்களுடன் இந்திய கடற்படைக்கு சொந்தமான விமான தளம், மண்டபத்தில் 10-க்கும் மேற்பட்ட ரோந்து கப்பல்களை கொண்ட கடலோர காவல்படை நிலையம், இதுதவிர ராமேசுவரத்தில் 3 ரோந்து படகுகள் கொண்ட கடற்படை நிலையம் செயல்பட்டு வருகின்றன. மாவட்டத்தின் கடலோர பகுதி மற்றும் கடற்கரை பகுதி பாதுகாப்புக்காக தேவிபட்டினம், மண்டபம் என இரண்டு இடங்களில் கடலோர காவல் நிலையம் செயல்பட்டு வருகிறது. ரோந்து படகுகளிலும் கடலோர போலீசார் ரோந்து சுற்றி வருகின்றனர்.

ALSO READ:  விஜய் தரப்பு செய்த அந்த ஒரு தவறு! தள்ளாடும் தமிழகம்!
செங்கோட்டை ஸ்ரீராம்
செங்கோட்டை ஸ்ரீராம்https://www.dhinasari.com
பத்திரிகையாளர், எழுத்தாளர். | தமிழ் தினசரி இணைய நிறுவுனர், ஆசிரியர் |விஜயபாரதம் இதழில் உதவி ஆசிரியர், மஞ்சரி டைஜஸ்ட், விகடன் பிரசுரம், சக்தி விகடன், கல்கியின் தீபம் இதழ்களில் பொறுப்பாசிரியராகப் பணி புரிந்தவர். |தினமணி இணையம் (dinamani.com), Asianet News Tamil ஆகியவற்றில் செய்தி ஆசிரியராக பணியாற்றியவர். |சென்னை அகில இந்திய வானொலிக்காக, தேசியத் தலைவர்கள், சுதந்திரப் போராட்ட வீரர்கள், காஞ்சி மகா பெரியவர் தொடர்பான பல்வேறு செய்திக் கட்டுரைகளை எழுதியுள்ளார். |* வானொலி ஆர்.ஜே., பொதிகை தொலைக்காட்சியில் செய்தி அலசல் நேரலை நிகழ்ச்சி என ஊடகத் துறையின் பல்வேறு தளங்களிலும் பணியாற்றியவர். |விகடன் பிரசுரத்தின் மூலம் இவரது ஆறு நூல்கள் வெளியாகியுள்ளன. |இவரது இதழியல் பணிக்காக, கோல்கத்தா பாரதிய பாஷா பரிஷத் அமைப்பு ‘யுவ புரஸ்கார்-08 தேசிய இலக்கிய விருது’ வழங்கியுள்ளது. |

Related articles

Recent articles

spot_img