கடலோர போலீஸாருக்கான பயிற்சி மையம்: நாட்டில் முதலவதாக ராமேஸ்வரத்தில் அமைகிறது

சென்னை: கடலோர போலீசாருக்கான பயிற்சி மையம் ராமேசுவரத்தில் 237 ஏக்கர் பரப்பளவில் அமைக்கப்பட உள்ளது. இது இந்தியாவிலேயே முதலாவதாக அமையவுள்ள பயிற்சி மையம் என்பது குறிப்பிடத்தக்கது. ராமேஸ்வரம் ஒலைக்குடா தரவை பகுதியில் கடலோர போலீசாருக்கு பாதுகாப்பு குறித்த பயிற்சிகள் அளிக்க கடலோர போலீஸ் பயிற்சி மையம் கட்டப்பட உள்ளது. இதற்காக சுமார் 237 ஏக்கர் நிலம் கையகப் படுத்தப்பட்டுள்ளது. இதுதொடர்பான பணிகளை மத்திய அரசு வழிகாட்டுதலின்படி மாநில அரசு மேற்கொண்டுள்ளது. தமிழக கடலோர போலீசாரின் பாதுகாப்பு வசதிக்காக ஒலைக்குடா கடற்கரையில் சுமார் 4 ஏக்கர் பரப்பளவில் தொலைத்தொடர்பு மையம் கட்டுவதற்கும் முடிவு செய்யப்பட்டு அதற்கான இடம் ஒதுக்கப்பட்டு விட்டது. இந்தநிலையில் அங்கு கடந்த 1 மாதமாக 24 மணி நேரமும் கடலோர போலீசார் பாதுகாப்பு பணியிலும் ஈடுபடுத்தப்பட்டு வருகின்றனர். ஏற்கெனவே, ராமநாதபுரம் மாவட்ட கடல் பகுதி பாதுகாப்புக்காக உச்சிப்புளியில் 2 ரோந்து ஹெலிகாப்டர்களுடன் இந்திய கடற்படைக்கு சொந்தமான விமான தளம், மண்டபத்தில் 10-க்கும் மேற்பட்ட ரோந்து கப்பல்களை கொண்ட கடலோர காவல்படை நிலையம், இதுதவிர ராமேசுவரத்தில் 3 ரோந்து படகுகள் கொண்ட கடற்படை நிலையம் செயல்பட்டு வருகின்றன. மாவட்டத்தின் கடலோர பகுதி மற்றும் கடற்கரை பகுதி பாதுகாப்புக்காக தேவிபட்டினம், மண்டபம் என இரண்டு இடங்களில் கடலோர காவல் நிலையம் செயல்பட்டு வருகிறது. ரோந்து படகுகளிலும் கடலோர போலீசார் ரோந்து சுற்றி வருகின்றனர்.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

இந்த ரயில்கள் எல்லாம் எழும்பூர் வராது; தாம்பரத்தோடு சரி

சென்னை எழும்பூரில் நடைபெற்று வரும் மறு சீரமைப்பு பணிகள் காரணமாக இந்த மாற்றங்கள் தற்போது நீட்டிக்கப்பட்டுள்ளதாக‌

தாம்பரம் – தென்காசி ஈஸ்டர் சிறப்பு ரயில்; இன்று முன்பதிவு தொடக்கம்!

திருச்சி மதுரை திருநெல்வேலி தென்காசி வழியாக தாம்பரம் தென்காசி/செங்கோட்டை புனித வெள்ளி...

பஞ்சாங்கம் ஏப்ரல் 2 – வியாழன்| இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரண்டு ராசிகளுக்கும் உள்ள இன்றைய ராசிபலன்கள், திருக்குறள், சிந்தனைகள்....

மண்ணின் மணத்தை மலர வைத்த ஒடிஷா!

இன்று ஏப்ரல் - 1, ஒடிஷா மாநிலம் தோன்றிய நாள் என்று சமூக வலைத்தளத்தில் செய்தி வந்ததும் நான் நான்கு ஆண்டுகளுக்கு முன் மூன்று நாட்கள் ஒடிஷாவில் உள்ள தாமன்ஜோடி

IPL 2026: வெற்றிகரமான தொடக்கம்!

ஐபிஎல் 2026 மார்ச்சு 28ஆம் தேதி பெங்களூருவில் ஹைதரபாத், பெங்களூரு அணிகளுக்கிடையேயான ஆட்டத்துடன் தொடங்கியது.

Topics

இந்த ரயில்கள் எல்லாம் எழும்பூர் வராது; தாம்பரத்தோடு சரி

சென்னை எழும்பூரில் நடைபெற்று வரும் மறு சீரமைப்பு பணிகள் காரணமாக இந்த மாற்றங்கள் தற்போது நீட்டிக்கப்பட்டுள்ளதாக‌

தாம்பரம் – தென்காசி ஈஸ்டர் சிறப்பு ரயில்; இன்று முன்பதிவு தொடக்கம்!

திருச்சி மதுரை திருநெல்வேலி தென்காசி வழியாக தாம்பரம் தென்காசி/செங்கோட்டை புனித வெள்ளி...

பஞ்சாங்கம் ஏப்ரல் 2 – வியாழன்| இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரண்டு ராசிகளுக்கும் உள்ள இன்றைய ராசிபலன்கள், திருக்குறள், சிந்தனைகள்....

மண்ணின் மணத்தை மலர வைத்த ஒடிஷா!

இன்று ஏப்ரல் - 1, ஒடிஷா மாநிலம் தோன்றிய நாள் என்று சமூக வலைத்தளத்தில் செய்தி வந்ததும் நான் நான்கு ஆண்டுகளுக்கு முன் மூன்று நாட்கள் ஒடிஷாவில் உள்ள தாமன்ஜோடி

IPL 2026: வெற்றிகரமான தொடக்கம்!

ஐபிஎல் 2026 மார்ச்சு 28ஆம் தேதி பெங்களூருவில் ஹைதரபாத், பெங்களூரு அணிகளுக்கிடையேயான ஆட்டத்துடன் தொடங்கியது.

கமலாலயத்துக்கும் சத்தியமூர்த்தி பவனுக்கும் வேறுபாடில்லை!

முரளி சீதாராமன்1) காலையில் நயினார் நாகேந்திரன் செய்தியாளர் சந்திப்பில்:- "ஏப்ரல் 4...

அதிகாரத்தில் இல்லாததற்காக, இவர்களுக்கு நன்றிக்கடன் பட்டுள்ளேன்!

இந்த இக்கட்டான சூழ்நிலையில் ஏதாவது ஒரு விஷயத்திற்கு நாம் நன்றிக்கடன் பட்டுள்ளோம் என்றால் அது, இப்போது காங்கிரஸ் கட்சி அதிகாரத்தில் இல்லாததற்கே!

பஞ்சாங்கம் – ஏப்ரல் 1 – புதன் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், ராசிபலன்கள், ஜோதிடம், பொன்மொழிகள், திருக்குறள்,

Entertainment News

Popular Categories