பிரபாகரன் பிறந்தநாளுக்கு எதாவது கப்சா அடிப்பான்னு நினைச்சோம். வீண் போகலே.
இலங்கையில் நடந்த இறுதிக்கட்ட போரின் போது பிரபாகரனிடம், அவர் குண்டாக இருப்பதை சுட்டிக்காட்டி உடல் எடையை குறைக்கச் சொன்னதாக நாம் தமிழர் கட்சியின் தலைவர் சீமான், மாவீரர் நாள் பொதுக்கூட்டத்தில் பிரபாகரன் உடனான தனது அனுபவங்கள் என்ற திரைக்கதையை தன் சினிமா தயாரிப்பாளர்களான தம்பிகள் முன்னிலையில் உருக்கமாகவும் நகைச்சுவையகவும் கூறினார்.
மதுரையில் நடந்த மாவீரர் நாள் பொதுக்கூட்டத்தில் பேசிய சீமான் , வருகிற தேர்தலில் வீட்டிற்கு ஒரு கார் இலவசம் என்ற அறிவிப்பை வெளியிட உள்ளதாக தெரிவித்தார். ரஜினி மட்டுமல்லாமல் விஜயகாந்த், கமல், விஜய் போன்றோரையும் சீமான் விமர்சித்தார்.
இலங்கையில் நடந்த இறுதிப் போரின் போது பிரபாகரன் தனக்கு துப்பாக்கி சுட பயிற்சி அளித்தததை நினைவு கூர்ந்தார். கருணாநிதியை கடுமையாக விமர்சித்த சீமான், பிரபாகரனின் கோரிக்கையை சொல்ல முயன்றும் கடைசி வரை கருணாநிதி தன்னை சந்திக்க அனுமதிக்கவில்லை என்றார்.
ஒரு கட்டத்தில் தனக்கு வாக்களித்தால் தான் தமிழர்கள் வாழ முடியும்! இல்லையெனில் சாக வேண்டியதுதான் என்று அதிர்ச்சி அளித்தார் சீமான்!!
புலிகள் நல்லா சாப்பாடு போட்டாங்க என்று சொல்லுறாப்ல @SeemanOfficial சாப்பிட்டு விட்டு சண்டைக்கு போகாம இந்தியாவிற்கு எதற்கு தப்பி வந்தாறாம் ? பிரபாகரனின் உண்மையான தம்பி என்றால் அவருக்காக போரில் குண்டடி பட்டு செத்து அல்லவா இருக்கணும்!!!!!!!
இறுதிகட்ட போர்.. பிரபாவை 50 பேர் கொண்ட சிங்கள ராணுவம் சுற்றிவளைத்தது… ஒரு சிங்களவன் பிரபாவின் நெற்றியில் துப்பாக்கியை வைத்து, விரலை துப்பாக்கியின் விசையில் வைக்கிறான்..
“நில்” – பின்னேயிருந்து ஒரு குரல்..
அது அப்போதைய இலங்கை இராணுவ தளபதி பொன்சேகா.. துப்பாக்கியை நெற்றியில் வைத்த சிங்களவனை விலக்கி, பிரபாவிடம் சொல்கிறான், ஆயிரமிருந்தாலும் நீ ஒரு ராணுவத்தை கட்டியமத்த வீரன்.. உன் வீரத்திற்கு தலை வணங்குகிறேன்.. உன் கடை ஆசை என்ன என்று சொல்.. என்னால் முடிந்தால் கண்டிப்பாக நிறைவேற்றுவேன் என்கிறான் பிரபாவிடம்..
இதை கேட்டதும் ஒரு நொடி கூட யோசிக்காத பிரபா கூறினார்.. நான் இங்கு தப்பி வந்து இரண்டு நாட்கள் ஆகிறது.. இரண்டு நாட்களாக என்னை பார்க்க வந்த என் தம்பி சீமான் என்ன சாப்பிட்டான் என்று தெரியவில்லை.. நீங்க இப்போ போட்ட பொட்டோட பின் பாக்கெட்டுல சீமான் சாப்பிட்ட குறிப்பு இருக்கும்.. அதை தயவுசெஞ்சு சத்தமா படிங்க.. சாகுமுன் என் தம்பி என்னென்ன ரசிச்சு சாப்பிட்டான் என்று தெரிந்து கொள்ள விரும்புகிறேன்…இதுவே என் கடைசி ஆசை..
இதை கேட்ட சிங்கள வீரர்களின் கண்களில் கண்ணீர்.. இறக்கும் தறுவாயிலும் தம்பி என்ன சாப்பிட்டான் என்று தெரிந்து கொள்ள துடிக்கும் அண்ணன் பிரபாவை நினைத்து கதிகலங்கி போயினர்.. அங்கே கதறிய பொன்சேகா, பின்னாளில் தன் சுயசரிதையில் இதை குறிப்பிட்டுள்ளார்.. ????????????
இதிலிருந்தே தெரியும் சீமான் எதற்காக இலங்கை சென்றாரென்று.. சோத்து செத்த நாயி, திங்க போயிருக்கு..????????????????