கண்டலேறு அணையில் இருந்து தண்ணீர் திறக்க ஆந்திர முதல்வருக்கு ஓ.பன்னீர்செல்வம் கடிதம்

Published:

சென்னை: சென்னைக்குக் குடிநீர் வழங்க, கண்டலேறு அணையில் இருந்து தண்ணீர் திறந்துவிடும்படி ஆந்திர முதல்வருக்கு தமிழக முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் கடிதம் எழுதியுள்ளார். ஆந்திர முதல்வர் சந்திரபாபு நாயுடுவுக்கு ஓ.பன்னீர்செல்வம் எழுதியுள்ள கடிதத்தில் … சென்னைக்கு குடிநீர் வழங்க கிருஷ்ணா நதி நீரை உடனடியாக திறக்க வேண்டும். சென்னைக்கு குடிநீர் வழங்கும் நீர்த்தேக்கங்களில் நீர்மட்டம் மிகவும் குறைந்து விட்டதால், கண்டலேறு நீர்த்தேக்கத்தில் இருந்து உடனடியாக குறைந்தபட்சம் 2 டிஎம்சி தண்ணீரை திறந்துவிட உத்தரவிட வேண்டும். இந்த ஆண்டு பிப்ரவரி, மார்ச் மாதங்களுக்கு 3 டிஎம்சி தண்ணீர் தரவேண்டும் என 43-வது ஆலோசனைக் கூட்டத்தின்போது தமிழகம் கோரிக்கை விடுத்தது. அதனை ஆந்திர அரசும் ஏற்றுக்கொண்டது. ஆனால், 1.34 டிஎம்சி தண்ணீர் மட்டுமே தமிழகத்திற்கு வந்துள்ளது. ஜனவரி முதல் ஏப்ரல் வரையிலான காலகட்டத்துக்கு நிர்ணயிக்கப்பட்ட அளவான 4 டிஎம்சி-யில் இதுவரை 1.74 டிஎம்சி தண்ணீர் மட்டுமே தமிழகத்திற்கு வந்துள்ளது. எனவே, கண்டலேறு நீர்த்தேக்கத்தில் இருந்து குறைந்தது 2 டிஎம்சி தண்ணீரை திறந்துவிட தாங்கள் உடனடியாக உத்தரவிடவேண்டும். தெலுங்கு கங்கை திட்டத்துக்கு தமிழகத்தின் பங்களிப்பாக ஏற்கெனவே ரூ. 25 கோடி வழங்கப்பட்டது. அடுத்த தவணை ரூ. 25 கோடி ரூபாய் வழங்கப்படும்… என்று அவர் அதில் கூறியுள்ளார்.

ALSO READ:  திரை இயக்குனர் கே.பாக்யராஜ் காலமானார்!
செங்கோட்டை ஸ்ரீராம்
செங்கோட்டை ஸ்ரீராம்https://www.dhinasari.com
பத்திரிகையாளர், எழுத்தாளர். | தமிழ் தினசரி இணைய நிறுவுனர், ஆசிரியர் |விஜயபாரதம் இதழில் உதவி ஆசிரியர், மஞ்சரி டைஜஸ்ட், விகடன் பிரசுரம், சக்தி விகடன், கல்கியின் தீபம் இதழ்களில் பொறுப்பாசிரியராகப் பணி புரிந்தவர். |தினமணி இணையம் (dinamani.com), Asianet News Tamil ஆகியவற்றில் செய்தி ஆசிரியராக பணியாற்றியவர். |சென்னை அகில இந்திய வானொலிக்காக, தேசியத் தலைவர்கள், சுதந்திரப் போராட்ட வீரர்கள், காஞ்சி மகா பெரியவர் தொடர்பான பல்வேறு செய்திக் கட்டுரைகளை எழுதியுள்ளார். |* வானொலி ஆர்.ஜே., பொதிகை தொலைக்காட்சியில் செய்தி அலசல் நேரலை நிகழ்ச்சி என ஊடகத் துறையின் பல்வேறு தளங்களிலும் பணியாற்றியவர். |விகடன் பிரசுரத்தின் மூலம் இவரது ஆறு நூல்கள் வெளியாகியுள்ளன. |இவரது இதழியல் பணிக்காக, கோல்கத்தா பாரதிய பாஷா பரிஷத் அமைப்பு ‘யுவ புரஸ்கார்-08 தேசிய இலக்கிய விருது’ வழங்கியுள்ளது. |

Related articles

Recent articles

spot_img