கண்ணன் வரவுக்காக ஏக்கம்!

குலசேகராழ்வாரின் பெருமாள் திருமொழியில் (ஆறாம் திருமொழி) வரும் பாசுரம் இது. இதில், கண்ணன் ஒரு சிறுமியை நோக்கி, “நீ யமுனையாற்றின் மணற்குன்றிலே போய் நில், நான் அங்கே வருகிறேன்’ என்று சொன்னான். அவ்வாறே அவளும் அங்கே போய் விடியுமளவும் நின்றாள். ஆனால் கண்ணன் வரவில்லை. அதனால், வருத்தம் மிகக் கொண்டு திரும்பினாள். மற்றொரு நாள் அவனைக் கண்ட போது தன் ஏமாற்றத்தை வெளிப்படுத்தினாள் இவ்வாறு. “அநியாயமாய் உன் பொய்யைக் கேட்டு மோசம் போனேன். கனவிலும் பொய் சொல்லி அறியாத வஸýதேவர் வயிற்றில் பிறந்த நீயும் உன் தந்தையைப் போல் இருப்பாய் என்று நம்பிக் கெட்டேனே’ என்றவாறு கண்ணனிடம் கூறினாளாம். ஏர் மலர்ப் பூங்குழல் ஆயர் மாதர் எனைப் பலர் உள்ள இவ் ஊரில் உன்தன் மார்வு தழுவுதற்கு ஆசையின்மை அறிந்தறிந்தே உன்தன் பொய்யைக் கேட்டு கூர் மழை போல் பனிக் கூதல் எய்திக் கூசி நடுங்கி யமுனை யாற்றில் வார் மணற் குன்றிற் புலர நின்றேன் வாசுதேவா உன் வரவு பார்த்தே. கண்ணபிரானே அழகிய பூக்களை அணிந்த வாசனை மிக்க கூந்தலையுடைய இடைப் பெண்கள் எத்தனையோ பேர் இருக்கின்ற இந்தத் திருவாய்ப்பாடியில் உன் மார்புடன் அணைவதற்கு ஆசையில்லாமல் இருக்கின்றேன். இருந்தும் உன் பொய்யான வார்த்தைகளைக் கேட்டு, அவற்றை மெய்யென மயங்கினேன். அதனால்தான், மழை போல் பெய்யும் பனியால் உருவான குளிரில் நடுங்கி, யாரும் பார்த்து விடுவார்களோ என்று கூச்சமடைந்து நின்றேன். அதுவும், யமுனை நதியில் ஒரு மணற் குன்றிலே உன் வரவை எதிர்பார்த்துக் கொண்டு பொழுது விடியும் வரை நான் அங்கேயே காத்து நின்றேனே… என்று தன் ஏமாற்றத்தைச் சொல்கிறாள் இந்த ஆயர் சிறுமி.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

பஞ்சாங்கம் மே 4 – திங்கள் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான பலன்கள், நட்சத்திர பலன்கள், அதிர்ஷ்ட எண்கள், அதிர்ஷ்ட நிறம், திருக்குறள், சிந்தனைகள்...

பஞ்சாங்கம் மே 3 – ஞாயிறு | இன்றைய ராசி பலன்கள்!

பஞ்சாங்கம், தினசரி திதி நட்சத்திரம் நல்ல நேரம் ராகு காலம் எமகண்டம் பன்னிரு ராசிகளின் ராசிபலன்கள் தினம் ஒரு திருக்குறள்

குருவித்துறை; வறண்ட வைகையில் இறங்கிய கள்ளழகர்! பக்தர்கள் வேதனை!

குருவித்துறையில் தண்ணீர் இன்றி வறண்ட வைகையில் இறங்கிய கள்ளழகர் அதிகாரிகளின் திட்டமிடாத செயலே காரணம் என பக்தர்கள் வேதனை!

தேர்தலைக் காரணம் காட்டி கொள்முதல் தாமதம்! வெயில் மழையில் சேதமாகும் நெல் மூட்டைகள்!

வாடிப்பட்டி அருகே, போடிநாயக்கன்பட்டி பகுதியில் 20 நாட்களுக்கு மேலாக கொள்முதல் செய்யாததால் 10 ஆயிரத்திற்கும் மேற்பட்ட நெல் மூட்டைகள் மழையில் நனைந்தும் வெயிலில் காய்ந்தும் சேதம்; விவசாயிகள் வேதனை!

இருதரப்பு மோதலில் எஸ்பி., சமரசம்; அமைதியாக நடைபெற்ற ஸ்வாமி ஊர்வலம்!

உசிலம்பட்டி அருகே எழுமலை அடுத்துள்ள ஆத்தங்கரைப்பட்டியில் சுமார் 400 ஆண்டுகள் பழமையான இந்து அறநிலையத்துறைக்கு

Topics

பஞ்சாங்கம் மே 4 – திங்கள் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான பலன்கள், நட்சத்திர பலன்கள், அதிர்ஷ்ட எண்கள், அதிர்ஷ்ட நிறம், திருக்குறள், சிந்தனைகள்...

பஞ்சாங்கம் மே 3 – ஞாயிறு | இன்றைய ராசி பலன்கள்!

பஞ்சாங்கம், தினசரி திதி நட்சத்திரம் நல்ல நேரம் ராகு காலம் எமகண்டம் பன்னிரு ராசிகளின் ராசிபலன்கள் தினம் ஒரு திருக்குறள்

குருவித்துறை; வறண்ட வைகையில் இறங்கிய கள்ளழகர்! பக்தர்கள் வேதனை!

குருவித்துறையில் தண்ணீர் இன்றி வறண்ட வைகையில் இறங்கிய கள்ளழகர் அதிகாரிகளின் திட்டமிடாத செயலே காரணம் என பக்தர்கள் வேதனை!

தேர்தலைக் காரணம் காட்டி கொள்முதல் தாமதம்! வெயில் மழையில் சேதமாகும் நெல் மூட்டைகள்!

வாடிப்பட்டி அருகே, போடிநாயக்கன்பட்டி பகுதியில் 20 நாட்களுக்கு மேலாக கொள்முதல் செய்யாததால் 10 ஆயிரத்திற்கும் மேற்பட்ட நெல் மூட்டைகள் மழையில் நனைந்தும் வெயிலில் காய்ந்தும் சேதம்; விவசாயிகள் வேதனை!

இருதரப்பு மோதலில் எஸ்பி., சமரசம்; அமைதியாக நடைபெற்ற ஸ்வாமி ஊர்வலம்!

உசிலம்பட்டி அருகே எழுமலை அடுத்துள்ள ஆத்தங்கரைப்பட்டியில் சுமார் 400 ஆண்டுகள் பழமையான இந்து அறநிலையத்துறைக்கு

சிவசைலநாதர் பரமகல்யாணி எழுந்தருள, மீன்பிடி திருவிழா!

ஸ்ரீ சிவசைலநாதரும் ஸ்ரீ பரமகல்யாணி அம்பாளும் மீன்பிடிக்கக் கிளம்பும் திருவிழா!

பஞ்சாங்கம் மே 2 – சனிக் கிழமை | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய தினம் நல்ல நாளாக அமைய எமது வாழ்த்துகள்.

பக்தர்கள் திரளில் மதுரை – வைகை நதியில் இறங்கிய கள்ளழகர்!

மதுரையில் வைகை நதியில் கள்ளழகர் வைகை ஆற்றில் இறங்கி பக்தர்களுக்கு காட்சி அளித்தார்.

Entertainment News

Popular Categories