தி.க.வின் தாலியறுக்கும் நிகழ்வை தடுத்து நிறுத்த முதல்வருக்கு இந்து முன்னணி கோரிக்கை

சென்னை: திராவிடர் கழகம் ஏற்பாடு செய்துள்ள தாலியறுக்கும் நிகழ்வை தடுத்து நிறுத்த, காவல் துறையைக் கட்டுப்பாட்டில் வைத்துள்ள முதல்வர் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று இந்து முன்னணி கேட்டுக் கொண்டுள்ளது. அந்த அமைப்பின் மாநிலப் பொதுச் செயலாளர் நா. முருகானந்தம் வெளியிட்ட அறிக்கையில், புனிதமான நாளில் இந்துக்களின் மனதைப் புண்படுத்தும் தி.க.விற்கு பாடம் புகட்டுவோம்.. தமிழ்ப் புத்தாண்டு இந்துக்களுக்கு புனிதமான நாள். உலகின் தலைசிறந்த பாரம்பரியத்தைக் கொண்ட இந்து தர்ம வாழ்க்கையின் அடையாளமாக விளங்கும் தாலியை அறுத்து, இந்துக்களிடையே வெறுப்புணர்வை ஏற்படுத்தி மதக் கலவரத்தைத் தூண்ட நினைக்கும் திராவிடர் கழகத்தை இந்து முன்னணி வன்மையாகக் கண்டிக்கிறது. ஒருவரின் நம்பிக்கை என்பது அவரது தனிப்பட்ட விருப்பமாகும். அதனை கொச்சைப்படுத்த யாருக்கும் உரிமையில்லை. திராவிடர் கழகமானது இந்துக்களின் நம்பிக்கையை கொச்சைப்படுத்துவதை தமிழக அரசு தடுத்து நிறுத்த வேண்டும். அதேபோல் மாட்டிறைச்சி பிரியாணி விருந்து என அறிவித்திருப்பதையும் கண்டிக்கிறோம். ஏப்ரல் 14 சட்ட மேதை அண்ணல் அம்பேத்கர் பிறந்த நாள். இந்த நாளில் சமுதாய ஒற்றுமைக்கும், ஒருமைப்பாட்டையும் வலியுறுத்தும் நிகழ்ச்சிகள் நாட்டில் நடந்து வரும் வேளையில், மக்களிடையே பகையை வளர்க்கவும், தங்களை விளம்பரப்படுத்த கீழ்த்தரமான காரியத்தை திராவிடர் கழகம் அறிவித்துள்ளது. இது தடுக்கப்பட வேண்டும். ஜனநாயக ரீதியில் எமது எதிர்ப்பைத் தெரிவிக்க இந்து மதத்தின் மீதும், புனிதமான தாலியின் மீதும் நம்பிக்கையுள்ள ஒவ்வொரு இந்துக்களும் தங்கள் வீடுகளில் ஈ.வெ.ராவின் படத்தை கிழித்து தக்க மரியாதை செய்து தங்களது எதிர்ப்பைக் காட்ட வேண்டும் என்று இந்து முன்னணி அறைகூவல் விடுகிறது. கோவையில் 8.4.2015 அன்று நடைபெற இருந்த மாட்டுக்கறி பிரியாணி விருந்துக்கு, இந்து முன்னணியின் எதிர்ப்பை அடுத்து காவல்துறை அனுமதி மறுத்துள்ளது. இதனை வரவேற்கிறோம். இதுபோல திராவிடர் கழகத் திடலில் நடைபெறும் நிகழ்வும் தடுத்து நிறுத்திட காவல்துறையை தன் கட்டுப்பாட்டில் வைத்துள்ள தமிழக முதல்வர் விரைந்து நடவடிக்கை எடுக்க இந்து முன்னணி கேட்டுக்கொள்கிறது.

  • என்று அவர் கூறியுள்ளார்.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

பஞ்சாங்கம் ஏப்ரல் 19 – ஞாயிறு | இன்றைய ராசி பலன்கள்!

பஞ்சாங்கம், தினசரி திதி நட்சத்திரம் நல்ல நேரம் ராகு காலம் எமகண்டம் பன்னிரு ராசிகளின் ராசிபலன்கள் தினம் ஒரு திருக்குறள்

நல்ல வாய்ப்பை வீணடித்து விட்டார்கள் இண்டி கூட்டணியினர்!

2026 மக்கள் தொகைக் கணக்கெடுப்பு வந்தால், தெற்கின் நிலைமை இன்னும் மோசமாக இருக்கும்; குடும்பக் கட்டுப்பாடு விஷயங்களில் ஒழுக்கமாக இருப்பதற்காக அது மேலும் தண்டிக்கப்படும்.

‘மகளிருக்கும் தமிழருக்கும்’ கொடுத்தார் மோடி; கெடுத்தார் ஸ்டாலின்! 

இதில் இருந்தே, இந்த மசோதாவை எதிர்ப்பதில் திமுக., எவ்வளவு தீயாய் வேகம் காட்டியிருக்கிறது என்பது தெளிவாகத் தெரியவரும்.

பஞ்சாங்கம் ஏப்ரல் 18 – சனிக் கிழமை | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய தினம் நல்ல நாளாக அமைய எமது வாழ்த்துகள்.

தேர்தலில் வாக்களிக்க… சிறப்பு ரயில்கள் இயக்கம்; விவரம் இதோ!

தமிழ் நாடு சட்டமன்ற தேர்தலுக்காக தாம்பரம் - செங்கோட்டை & செங்கோட்டை- சென்னை பீச் மற்றும் கன்னியாகுமரி, போத்தனூர் ஆகிய ஊர்களுக்கு இடையே சிறப்பு ரயில்களை தெற்கு ரயில்வே இயக்குகிறது.

Topics

பஞ்சாங்கம் ஏப்ரல் 19 – ஞாயிறு | இன்றைய ராசி பலன்கள்!

பஞ்சாங்கம், தினசரி திதி நட்சத்திரம் நல்ல நேரம் ராகு காலம் எமகண்டம் பன்னிரு ராசிகளின் ராசிபலன்கள் தினம் ஒரு திருக்குறள்

நல்ல வாய்ப்பை வீணடித்து விட்டார்கள் இண்டி கூட்டணியினர்!

2026 மக்கள் தொகைக் கணக்கெடுப்பு வந்தால், தெற்கின் நிலைமை இன்னும் மோசமாக இருக்கும்; குடும்பக் கட்டுப்பாடு விஷயங்களில் ஒழுக்கமாக இருப்பதற்காக அது மேலும் தண்டிக்கப்படும்.

‘மகளிருக்கும் தமிழருக்கும்’ கொடுத்தார் மோடி; கெடுத்தார் ஸ்டாலின்! 

இதில் இருந்தே, இந்த மசோதாவை எதிர்ப்பதில் திமுக., எவ்வளவு தீயாய் வேகம் காட்டியிருக்கிறது என்பது தெளிவாகத் தெரியவரும்.

பஞ்சாங்கம் ஏப்ரல் 18 – சனிக் கிழமை | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய தினம் நல்ல நாளாக அமைய எமது வாழ்த்துகள்.

தேர்தலில் வாக்களிக்க… சிறப்பு ரயில்கள் இயக்கம்; விவரம் இதோ!

தமிழ் நாடு சட்டமன்ற தேர்தலுக்காக தாம்பரம் - செங்கோட்டை & செங்கோட்டை- சென்னை பீச் மற்றும் கன்னியாகுமரி, போத்தனூர் ஆகிய ஊர்களுக்கு இடையே சிறப்பு ரயில்களை தெற்கு ரயில்வே இயக்குகிறது.

பராபவ – பெயர் எப்படி இருந்தாலும், நன்மை பயக்கட்டும்!

பராபவ என்ற வடமொழிச்சொல்லுக்கு ‘அவமானம்’ ‘தோல்வி’ என்பதெல்லாம் பொருள். ஆனால் இதெல்லாம் யாருக்கு ஏற்படும் என்றறிந்து கொள்வது முக்கியம்.

நாட்டை உலுக்கிய நாசிக் ‘கார்ப்பரேட் ஜிகாத்’: டிசிஎஸ்.,ஸை தொடர்ந்து மேலும் புகார்கள்!

'முறையற்ற தொடுதல், ஆபாசப் பேச்சு, பாலியல் ரீதியான சீண்டல்கள் ஆகியவை நான்கு ஆண்டுகளாக அரங்கேறின.' ஹிந்து தெய்வங்களை அவதூறாகப் பேசுவது, நமாஸ் செய்ய கட்டாயப்படுத்துவது, மாட்டிறைச்சி உண்ண வற்புறுத்துவது

ஐபிஎல் 2026: இதுவரை… புள்ளிப் பட்டியலில் பஞ்சாப் முதலிடம்!

புள்ளிப்பட்டியலில் பஞ்சாப் அணி 9 புள்ளிகளுடன் முதலிடத்தில் உள்ளது. பெங்களூரு (8 புள்ளிகள்) இரண்டாமிடம். ராஜஸ்தான் (8 புள்ளிகள்) மூன்றாம் இடம், ஹைதரபாத் (4 புள்ளிகள்) நான்காம் இடம்.

Entertainment News

Popular Categories