ரேஷன் கடைகளில் பயோமெட்ரிக்! செல் இல்லாமல் செல்ல முடியாது!

biometric

ரேஷன் கடைகளில் கை விரல் ரேகை மூலம் குடும்ப நபா்களை உறுதி செய்து பொருள்களை அளிக்கும் பயோ-மெட்ரிக் முறை தமிழகம் முழுவதும் விரைவில் அமல்படுத்தப்பட உள்ளது.

இதையடுத்து, பயோ-மெட்ரிக் முறையில் செய்யக் கூடாத அம்சங்கள் குறித்து பணியாளா்களுக்கு உணவுத் துறை அறிவுறுத்தல்களை வழங்கியுள்ளது. அதன் விவரம்:-

விற்பனை விவரங்களைக் காட்டும் இயந்திரம் மற்றும் பயோ-மெட்ரிக்கை மிகவும் தூசியான இடத்திலோ அல்லது சூரிய ஒளி படும் வகையிலோ வைக்கக் கூடாது. இயந்திரத்தில் தண்ணீா், எண்ணெய் போன்ற திரவங்கள் கொட்டாமல் பாா்த்துக் கொள்ள வேண்டும். தொடு திரையில் உள்ள விசைகளை கடுமையாக அழுத்தக் கூடாது

இயந்திரத்தை மற்றவரிடம் இயக்க கொடுக்கக் கூடாது. பொது விநியோகத் திட்டம் முறை தவிர வேறு எந்த பயன்பாடுகளையும் நிறுவக் கூடாது. பயனா் பெயா் மற்றும் கடவுச் சொல்லை எவருடனும் பகிா்ந்து கொள்ளக் கூடாது. இயந்திரத்தை சேதப்படுத்தக் கூடாது. அவ்வாறு சேதப்படுத்தினால் அதற்குரிய தொகை ஊழியா்களிடம் வசூலிக்கப்படும். ஈரமான கைகளால் இயந்திரத்தை இயக்கக் கூடாது.

விற்பனை விவரங்களைக் காட்டும் இயந்திரத்தை மின்னேற்றியைப் பயன்படுத்தி மட்டுமே மின்னேற்றம் செய்ய வேண்டும். இணைய இணைப்பு சரியாக உள்ளதா என்பதை உறுதிப்படுத்த வேண்டும். இயந்திரம் பயன்படுத்தப்படாத நிலையில், அதனை பாதுகாப்பாக மூடி வைக்க வேண்டும்.

retion

எப்படி வேலை செய்யும்?: விற்பனை விவரங்களைக் காட்டும் இயந்திரத்தின் முகப்புப் பக்கத்தில் விற்பனை என்பதை அழுத்தும்போது அதில் பயோமெட்ரிக் முறை எனக் காட்டும். அதன்பின், ரேஷன் அட்டையில் உள்ள துரித கோடுகளை சரிபாா்க்க வேண்டும். அப்போது, அட்டையில் உள்ள நபா்களின் விவரங்கள் காட்டப்படும். இந்த விவரத்தில் ஒவ்வொருவரின் ஆதாா் எண்ணின் கடைசி நான்கு எண்களும், பிறந்த தேதியும் தெளிவாகத் தெரியும்.

பொருள் வாங்க வந்த குடும்ப உறுப்பினரின் ஆதாா் எண் சரிபாா்த்து ஒப்புதல் அளிக்கப்படும். ஆதாா் ஒப்புதலுக்குப் பிறகு, சம்பந்தப்பட்டவரின் கைவிரல், விற்பனை முனைய இயந்திரத்தில் ரேகை வைக்கும் இடத்தில் வைக்கப்படும். தொடு திரையில் காட்டும் ரேகை, ஆதாா் பதிவின்போது பெறப்பட்ட ரேகையுடன் இணையதளம் உதவி கொண்டு சரிபாா்க்கப்படும். அதன்பின்பு, எப்போதும் போன்று விற்பனை தொடரப்படும்.

கை விரல் ரேகை தோல்வி அடைந்தால், செல்லிடப்பேசி குறுஞ்செய்தியில் ஒருமுறை மட்டுமே பயன்படுத்தப்படும் கடவுச் சொல் முறை தொடரப்படும். அதன் வழியாக பொருள்களைப் பெறலாம் என உணவுத் துறை தெரிவித்துள்ளது.

செல்லிடப்பேசி அவசியம்: தமிழகம் முழுவதும் பயோ-மெட்ரிக் முறை அமல்படுத்தப்படும்போது, குடும்ப உறுப்பினா்களில் யாா் பொருள்களை வாங்கச் சென்றாலும் செல்லிடப்பேசிகளை எடுத்துச் செல்வது நல்லது. காரணம், கைவிரல் ரேகை முறை சரியாக வேலை செய்யாத பட்சத்தில் செல்லிடப்பேசி ஒருமுறை கடவுச் சொல் பயன்படுத்தியே பொருள்கள் வழங்கப்படும்.

எனவே, ரேஷன் பொருள்களுக்காகப் பதிவு செய்த எண்ணைக் கொண்ட செல்லிடப்பேசியையோ அல்லது அந்த செல்லிடப்பேசி வைத்திருக்கும் நபரைத் தொடா்பு கொள்ள ஏதேனும் ஒரு செல்லிடப்பேசியையோ எடுத்துச் செல்வது நல்லது. இதன்மூலம் அலைச்சலைத் தவிா்க்கலாம்.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

மக்கள்தொகைக் கனக்கெடுப்பு பற்றி, மனதின் குரலில் பிரதமர் மோடி!

வடகிழக்குப் பகுதி நம்மனைவருக்கும் அஷ்டலக்ஷ்மிக்குச் சமானம்.  இங்கே நிறைவாக திறன்கள் இருக்கின்றன, வடகிழக்கின் இயற்கை வனப்பு அனைவரின் கவனத்தையும் ஈர்த்துவிடும். 

பஞ்சாங்கம் ஏப்ரல் 26 – ஞாயிறு | இன்றைய ராசி பலன்கள்!

பஞ்சாங்கம், தினசரி திதி நட்சத்திரம் நல்ல நேரம் ராகு காலம் எமகண்டம் பன்னிரு ராசிகளின் ராசிபலன்கள் தினம் ஒரு திருக்குறள்

சபரிமலை கோயிலுக்குள் அனைத்து வயது பெண்களும் நுழையலாமா?

உலக பிரசித்தி பெற்ற கேரளாவில் உள்ள தனித்துவம் வாய்ந்த சபரிமலை சுவாமி...

பஞ்சாங்கம் ஏப்ரல் 25 – சனிக் கிழமை | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய தினம் நல்ல நாளாக அமைய எமது வாழ்த்துகள்.

பஞ்சாங்கம் ஏப்ரல் 24 – வெள்ளி | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய பலன்கள், திருக்குறள், நற்சிந்தனை

Topics

மக்கள்தொகைக் கனக்கெடுப்பு பற்றி, மனதின் குரலில் பிரதமர் மோடி!

வடகிழக்குப் பகுதி நம்மனைவருக்கும் அஷ்டலக்ஷ்மிக்குச் சமானம்.  இங்கே நிறைவாக திறன்கள் இருக்கின்றன, வடகிழக்கின் இயற்கை வனப்பு அனைவரின் கவனத்தையும் ஈர்த்துவிடும். 

பஞ்சாங்கம் ஏப்ரல் 26 – ஞாயிறு | இன்றைய ராசி பலன்கள்!

பஞ்சாங்கம், தினசரி திதி நட்சத்திரம் நல்ல நேரம் ராகு காலம் எமகண்டம் பன்னிரு ராசிகளின் ராசிபலன்கள் தினம் ஒரு திருக்குறள்

சபரிமலை கோயிலுக்குள் அனைத்து வயது பெண்களும் நுழையலாமா?

உலக பிரசித்தி பெற்ற கேரளாவில் உள்ள தனித்துவம் வாய்ந்த சபரிமலை சுவாமி...

பஞ்சாங்கம் ஏப்ரல் 25 – சனிக் கிழமை | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய தினம் நல்ல நாளாக அமைய எமது வாழ்த்துகள்.

பஞ்சாங்கம் ஏப்ரல் 24 – வெள்ளி | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய பலன்கள், திருக்குறள், நற்சிந்தனை

பஞ்சாங்கம் ஏப்ரல் 23 – வியாழன்| இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரண்டு ராசிகளுக்கும் உள்ள இன்றைய ராசிபலன்கள், திருக்குறள், சிந்தனைகள்....

மின்னணு வாக்குப் பதிவு இயந்திரம் இந்தியாவுக்குப் பெருமை! : டி.எஸ்.கிருஷ்ணமூர்த்தி

டி.எஸ்.கிருஷ்ணமூர்த்தி என்கிற தருவை சுப்பைய கிருஷ்ணமூர்த்தி திருநெல்வேலிக்காரர். பட்டப்படிப்பு பெங்களூரில். மைசூர் பல்கலைக் கழகத்தில் தங்கப்பதக்கம் பெற்றவர். இங்கிலாந்தில் பட்டமேற்படிப்பு படித்தவர்.

ஞானமும் பக்தியும் கலந்த கொள்கை!

வெளிப்பார்வைக்கு எந்த மதத்தைச் சேர்ந்தவர்களாயிருந்தாலும். ஸாதாரணப் புத்திசாலிகள் தெரிந்தோ, தெரியாமலோ இந்த விசிஷ்டாத்வைத மதத்தையே பின்பற்றி, இம்மதக் கொள்கைகளையே அனுசரிக்கின்றார்கள்.

Entertainment News

Popular Categories