என் கணவருக்கு என்ன நடந்தது; உண்மையைச் சொல்லுங்கள்: உரக்கக் கதறும் பெரியபாண்டியன் மனைவி!

திருநெல்வேலி:

சென்னை, மதுரவாயல் காவல் நிலைய ஆய்வாளர் பெரியபாண்டியன், சென்னை கொளத்தூரில் நகைக்கடை ஒன்றில் நடைபெற்ற கொள்ளைச் சம்பவம் தொடர்பான விசாரணையில், கொள்ளையர்களைக் கைது செய்ய ராஜஸ்தான் சென்ற போது கொள்ளையர்களால் சுடப்பட்டு உயிரிழந்ததாகத் தெரிவிக்கப் பட்டது.

இந்நிலையில், தகவல்கள் முன்னுக்குப் பின் முரணாக வெளிவருவதால், ராஜஸ்தானில் கொள்ளையர்களைத் தேடிச் சென்றபோது என்ன நடந்தது என்பதை மனசாட்சிப்படி விசாரித்து உண்மைத் தன்மையை வெளியிடவேண்டும் என உயிரிழந்த ஆய்வாளர் பெரியபாண்டியனின் மனைவி பானுரேகா கதறியுள்ளார்.

ராஜஸ்தான் மாநிலம் பாலி மாவட்டத்தில் பதுங்கியிருந்த கொள்ளையர்களைக் கண்டறிந்து கைது செய்யச் சென்றபோது, கொள்ளையர்களால் சுடப்பட்டதாக முதலில் அறிவிக்கப்பட்டு, பின்னர், உடன் சென்ற ஆய்வாளர் முனிசேகரின் துப்பாக்கியால் தவறுதலாக சுடப்பட்டு அவர் இறந்ததாக ராஜஸ்தான் போலீஸார் கூறியுள்ளனர். இதுதொடர்பாக முனிசேகர் மீது ராஜஸ்தான் போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.

இந்நிலையில், இந்தச் சம்பவம் குறித்து பெரியபாண்டியனின் மனைவி பானுரேகா செய்தியாளர்களிடம் பேசுகையில், எனது கணவருக்கும் ஆய்வாளர் முனிசேகருக்கும் எந்த கருத்து வேறுபாடும் கிடையாது. அந்தத் தேடுதல் குழுவில் உள்ள அதிகாரிகள் மற்றும் போலீசாரை தேர்வு செய்ததே என் கணவர்தான் என்று நான் கேள்விப்பட்டேன். எனவே, அவரது இறப்பில் நானும் என் மகன்களும், குடும்பத்தினர் மட்டுமின்றி ஒட்டுமொத்த தமிழர்களும் கொந்தளித்துப் போயுள்ளனர். எனவே அங்கு என்ன நடந்தது என்பது குறித்து அதிகாரிகள் விசாரித்து உண்மைத் தன்மையை தெளிவுபடுத்த வேண்டும். குற்றவாளிகள் மீது நடவடிக்கை எடுக்கவேண்டும் என்று கேட்டுக் கொண்டார் பானுரேகா.

இதனிடையே, ராஜஸ்தான் மாநிலத்தில் கொள்ளையன் நாதுராமின் மனைவி கைது செய்யப்பட்டார். பெரியபாண்டியன் கொலை வழக்கு ராஜஸ்தானில் பதிவு செய்யப்பட்டு விசாரணை நடத்தப்பட்டு வருகிறது. இச்சம்பவத்தில் நாதுராமிற்கு உதவி செய்ததாக அவனுடைய மனைவி மஞ்சுவை ராஜஸ்தான் போலீசார் கைது செய்துள்ளர்.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

மின்னணு வாக்குப் பதிவு இயந்திரம் இந்தியாவுக்குப் பெருமை! : டி.எஸ்.கிருஷ்ணமூர்த்தி

டி.எஸ்.கிருஷ்ணமூர்த்தி என்கிற தருவை சுப்பைய கிருஷ்ணமூர்த்தி திருநெல்வேலிக்காரர். பட்டப்படிப்பு பெங்களூரில். மைசூர் பல்கலைக் கழகத்தில் தங்கப்பதக்கம் பெற்றவர். இங்கிலாந்தில் பட்டமேற்படிப்பு படித்தவர்.

ஞானமும் பக்தியும் கலந்த கொள்கை!

வெளிப்பார்வைக்கு எந்த மதத்தைச் சேர்ந்தவர்களாயிருந்தாலும். ஸாதாரணப் புத்திசாலிகள் தெரிந்தோ, தெரியாமலோ இந்த விசிஷ்டாத்வைத மதத்தையே பின்பற்றி, இம்மதக் கொள்கைகளையே அனுசரிக்கின்றார்கள்.

பஞ்சாங்கம் – ஏப்ரல் 22 – புதன் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், ராசிபலன்கள், ஜோதிடம், பொன்மொழிகள், திருக்குறள்,

ராஜபாளையம் பெரிய மாரியம்மன் கோயில் சித்திரை திருவிழா துவக்கம்

ராஜபாளையம் தென்காசி சாலையில் உள்ள புதுப்பாளையம் பெரிய மாரியம்மன் கோயிலில் ஆண்டுதோறும்...

ஹிந்து விரோதிகளைத் தோற்கடிக்க… நமக்கான ஆளுமைகளைத் தேர்ந்தெடுப்போம்!

ஜனநாயக கடமையை ஆற்றுவோம்.. 100% வாக்களிப்போம். தமிழகத்தில் நமக்கான ஆளுமையை நாம்...

Topics

மின்னணு வாக்குப் பதிவு இயந்திரம் இந்தியாவுக்குப் பெருமை! : டி.எஸ்.கிருஷ்ணமூர்த்தி

டி.எஸ்.கிருஷ்ணமூர்த்தி என்கிற தருவை சுப்பைய கிருஷ்ணமூர்த்தி திருநெல்வேலிக்காரர். பட்டப்படிப்பு பெங்களூரில். மைசூர் பல்கலைக் கழகத்தில் தங்கப்பதக்கம் பெற்றவர். இங்கிலாந்தில் பட்டமேற்படிப்பு படித்தவர்.

ஞானமும் பக்தியும் கலந்த கொள்கை!

வெளிப்பார்வைக்கு எந்த மதத்தைச் சேர்ந்தவர்களாயிருந்தாலும். ஸாதாரணப் புத்திசாலிகள் தெரிந்தோ, தெரியாமலோ இந்த விசிஷ்டாத்வைத மதத்தையே பின்பற்றி, இம்மதக் கொள்கைகளையே அனுசரிக்கின்றார்கள்.

பஞ்சாங்கம் – ஏப்ரல் 22 – புதன் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், ராசிபலன்கள், ஜோதிடம், பொன்மொழிகள், திருக்குறள்,

ராஜபாளையம் பெரிய மாரியம்மன் கோயில் சித்திரை திருவிழா துவக்கம்

ராஜபாளையம் தென்காசி சாலையில் உள்ள புதுப்பாளையம் பெரிய மாரியம்மன் கோயிலில் ஆண்டுதோறும்...

ஹிந்து விரோதிகளைத் தோற்கடிக்க… நமக்கான ஆளுமைகளைத் தேர்ந்தெடுப்போம்!

ஜனநாயக கடமையை ஆற்றுவோம்.. 100% வாக்களிப்போம். தமிழகத்தில் நமக்கான ஆளுமையை நாம்...

ஆதிசங்கரரின் சதச்லோகி – எளிய விளக்கம்!

காசியில் ஸ்ரீ பகவத்பாதர் தம் 9 - 12 வயதுக்குள் ப்ரஸ்தானத்ரய பாஷ்யங்களை இயற்றினார். அவற்றில் சொல்லப்பட்ட விஷயங்களை மக்கள் எளிதில் புரிந்து கொள்ள 100 சுலோகங்களில் ஆன சதச்லோகியை இயற்றினார்.

ஆதிசங்கர பகவத்பாதரின் ‘நிர்வாண ஷட்கம்’!

ஆதி சங்கர பகவத் பாதர் இயற்றிய நிர்வாண ஷடகம் மிகவும் பிரபலமான ஒன்று. நிர்வாண எனில் உருவமற்ற. ஷட் எனில் ஆறு என்ற எண்ணிக்கை.

அட்சய திருதியை: கும்பகோணத்தில் 12 கருட சேவை கோலாகலம்!

கும்பகோணத்தில் ஆண்டுதோறும் அட்சய திருதியை அன்று மிகச் சிறப்பாக நடைபெறும் திருவிழா 12 கருட சேவை ஆகும்.

Entertainment News

Popular Categories