தமிழக பட்ஜெட் தாக்கல்: வழக்கம் போல் அம்மா புகழ்; திமுக வெளிநடப்பு!

assembly-budget-2015-16 சென்னை: முதல்வரும் நிதியமைச்சருமான ஓ.பன்னீர்செல்வம் தமிழக பட்ஜெட் தாக்கல் செய்தார். தமிழக சட்டப்பேரவையில் பட்ஜெட் கூட்டத்தொடர் இன்று காலை கூடியது. முதல்வரும் நிதியமைச்சருமான ஓ. பன்னீர் செல்லவம் 2015 – 2016ம் ஆண்டுக்கான நிதிநிலையறிக்கை உரையை தொடங்கினார். எதிர்க்கட்சிகள் அமளி: திமுக உறுப்பினர்கள் பல்வேறு பிரச்னைகள் குறித்து விவாதிக்க அனுமதி கேட்டு அமளியில் ஈடுபட்டு வெளிநடப்பு செய்தனர். மேலும் இடை நீக்கம் செய்யப்பட்டுள்ள தேமுதிக உறுப்பினர்கள் சட்டப்பேரவை வளாகத்தில் கருப்பு சட்டை அணிந்து தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர். எல்லாம் அம்மா மயம்! தமிழக சட்டப்பேரவையில் இன்று பட்ஜெட் உரையாற்றியபோது, முதல்வர் பன்னீர்செல்வம் அதிமுக பொதுச்செயலாளரும் முன்னாள் முதல்வருமான ஜெயலலிதாவை ஒவ்வொரு திட்டங்களின் போதும் பாராட்டிப் பேசினார். அம்மா அவர்களின் அரசு என்ற வார்த்தை அதில் கட்டாயம் இடம்பெற்றது. அவ்வாறு அவர் பாராட்டிப் பேசிய போது எட்டாம் அதிசயம்… ஒன்பதாம் வள்ளல் எங்கள் அம்மா என்றார். கடந்து வந்த பாதை: 2015 -16 ம் ஆண்டுக்கான நிதி நிலை அறிக்கையை ஓ.பன்னீர்செல்வம் இன்று தமிழக சட்டசபையில் தாக்கல் செய்தார். இது நடப்பு அதிமுக அரசில் நிதியமைச்சராக ஓ.பன்னீர் செல்வம் தாக்கல் செய்துள்ள 5வது பட்ஜெட்டாகும். அதேசமயம், 2வது முறையாக முதல்வராகியுள்ள அவர் தாக்கல் செய்துள்ள முதல் பட்ஜெட். ஜெயலலிதா தலைமையில் அதிமுக அரசு, கடந்த 2011ம் ஆண்டு மே மாதம் பொறுப்பேற்றது. 2011 – 12ம் ஆண்டுக்கான முழு பட்ஜெட் 2011ம் ஆண்டு ஆகஸ்டு மாதம் தாக்கல் செய்யப்பட்டது. 2012- 13, 2013- 14 ம் ஆண்டுகளுக்கான பட்ஜெட்களும் அந்தந்த ஆண்டுகளில் தாக்கல் செய்யப்பட்டன. 2014- 15ம் ஆண்டுக்கான பட்ஜெட் கடந்த ஆண்டு பிப்ரவரி 13ம் தேதி தாக்கல் செய்யப்பட்டது. 4 பட்ஜெட்டுகளையும் நிதியமைச்சராக ஓ.பன்னீர்செல்வம் தாக்கல் செய்தார். இந்த ஆண்டுக்கான பட்ஜெட்டை அவர் நிதியமைச்சர் மற்றும் முதல்வர் பொறுப்பில் இருந்து தாக்கல் செய்தார். முதல்வர் ஒருவர் தமிழகத்தில் பட்ஜெட்டைத் தாக்கல் செய்வது 2000மாவது ஆண்டுக்குப் பிறகு இதுவே முதல் முறையாகும். 2000- 2001ம் ஆண்டுக்கான பட்ஜெட்டை அப்போதைய முதல்வர் கருணாநிதி தாக்கல் செய்தார். 14 ஆண்டுகளுக்கு பிறகு இப்போது முதல்வராக இருக்கும் ஓ.பன்னீர் செல்வம் தாக்கல் செய்துள்ளார்.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

மதுரையில் கள்ளழகர் தங்கக் குதிரையில் எழுந்தருளல்!

இதை தொடர்ந்து ராமராயர் மண்டகப்படியில் கள்ளழகரை மனம் குளிர்விக்கும் தீர்த்தவாரி நிகழ்வும் நடைபெறவுள்ளது. இதனை முன்னிட்டு மதுரை மாநகரே விழாக்கோலாம் பூண்டுள்ளது.

பஞ்சாங்கம் ஏப்ரல் 30 – வியாழன்| இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரண்டு ராசிகளுக்கும் உள்ள இன்றைய ராசிபலன்கள், திருக்குறள், சிந்தனைகள்....

நாளை, விடுமுறை கால சிறப்பு ரயில்கள்! தவற விட்டுடாதீங்க!

பள்ளி மாணவர்கள் கோடைகால விடுமுறை மற்றும் மே தினம் தொடர் விடுமுறை முன்னிட்டு சிறப்பு ரயில்கள் இயக்கப்படுவதாக தென்னக ரயில்வே அறிவித்துள்ளது

ஆண்டாள் சூடிய மாலை கள்ளழகருக்குச் சாற்ற, புறப்பாடு!

இன்று மதியம் ஸ்ரீ வில்லிபுத்தூர் ஸ்ரீ ஆண்டாள் நாச்சியார் சூடிய மாலை கள்ளழகர்க்குச் சாற்ற புறப்பாடு கண்டருளியது.

10, ப்ளஸ் 2 தேர்வு முடிவுகள் எப்போ வருது தெரியுமா?

தமிழ்நாட்டில், 12-ம் வகுப்பு அரசு பொதுத்தேர்வு முடிவுகள் வரும் மே மாதம் 8-ம் தேதி காலை 9:30 மணியளவில் வெளியிட முடிவு செய்யப்பட்டுள்ளது.

Topics

மதுரையில் கள்ளழகர் தங்கக் குதிரையில் எழுந்தருளல்!

இதை தொடர்ந்து ராமராயர் மண்டகப்படியில் கள்ளழகரை மனம் குளிர்விக்கும் தீர்த்தவாரி நிகழ்வும் நடைபெறவுள்ளது. இதனை முன்னிட்டு மதுரை மாநகரே விழாக்கோலாம் பூண்டுள்ளது.

பஞ்சாங்கம் ஏப்ரல் 30 – வியாழன்| இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரண்டு ராசிகளுக்கும் உள்ள இன்றைய ராசிபலன்கள், திருக்குறள், சிந்தனைகள்....

நாளை, விடுமுறை கால சிறப்பு ரயில்கள்! தவற விட்டுடாதீங்க!

பள்ளி மாணவர்கள் கோடைகால விடுமுறை மற்றும் மே தினம் தொடர் விடுமுறை முன்னிட்டு சிறப்பு ரயில்கள் இயக்கப்படுவதாக தென்னக ரயில்வே அறிவித்துள்ளது

ஆண்டாள் சூடிய மாலை கள்ளழகருக்குச் சாற்ற, புறப்பாடு!

இன்று மதியம் ஸ்ரீ வில்லிபுத்தூர் ஸ்ரீ ஆண்டாள் நாச்சியார் சூடிய மாலை கள்ளழகர்க்குச் சாற்ற புறப்பாடு கண்டருளியது.

10, ப்ளஸ் 2 தேர்வு முடிவுகள் எப்போ வருது தெரியுமா?

தமிழ்நாட்டில், 12-ம் வகுப்பு அரசு பொதுத்தேர்வு முடிவுகள் வரும் மே மாதம் 8-ம் தேதி காலை 9:30 மணியளவில் வெளியிட முடிவு செய்யப்பட்டுள்ளது.

பிறரிடம் இருக்கும் அர்ப்பணிப்பு நம்மிடம் ஏன் இல்லை?

பிற மதத்தவரோடு ஒப்பிட்டால் இளைய தலைமுறையைச் சேர்ந்த ஹிந்துக்களிடம் ஹிந்து மதம் பற்றிய ஞானமும், அவற்றைக் கடைப்பிடிப்பதில் ஆர்வமும் குறைந்து காணப்படுகிறது.

மதுரை சித்திரை திருவிழா தேரோட்டம் கோலாகலம்:

மதுரை சித்திரை திருவிழா தேரோட்டம் கோலாகலமாக இன்று புதன்கிழமை நடைபெற்றது.மாசி வீதிகளில்...

பஞ்சாங்கம் – ஏப்ரல் 29 – புதன் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், ராசிபலன்கள், ஜோதிடம், பொன்மொழிகள், திருக்குறள்,

Entertainment News

Popular Categories