வேலூர் சாலைவிபத்தில் இளைஞர் பலியான சம்பவம்: துரை முருகன் மீதான வழக்கை திரும்பப் பெற கருணாநிதி கோரிக்கை

சென்னை: வேலூர் சாலை விபத்தில் இளைஞர் மரணமடைந்த சம்பவத்தில், தவறுக்கு நியாயம் கேட்டவர்கள் மீதே வழக்கா? என்று திமுக தலைவர் கருணாநிதி கண்டனம் தெரிவித்துள்ளார். இது குறித்து அவர் வெளியிட்ட அறிக்கையில், வேலூர் மாவட்டம், காட்பாடி சட்டமன்றத் தொகுதிக்கு உட்பட்ட கார்ணாம்பட்டைச் சேர்ந்த ராஜ்குமார் மற்றும் உதயசூரியன் ஆகிய இருவரும் இரண்டு நாட்களுக்கு முன்பு இரண்டு சக்கர வாகனத்தில் சென்ற போது, வேலூர் மாவட்ட ஆட்சியரின் கார், காட்பாடி – திருவலம் நான்கு வழிச் சாலையில் கோரந்தாங்கல் என்ற இடத்தில், அவர்கள் மீது மோதியதில், 25 வயதே ஆன ராஜ்குமார் என்பவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்திருக்கிறார். உதயசூரியன் என்பவர் கை, கால் உடைந்து மருத்துவ மனையிலே அனுமதிக்கப்பட்டுள்ளார். விபத்தில் சம்பந்தப்பட்ட காரிலே பயணம் செய்த வேலூர் மாவட்ட ஆட்சியர் உடனடியாக அந்த இடத்தை விட்டு விரைந்து சென்றுவிட்டதோடு, விபத்து நடந்ததற்கான தடயங்களை அழித்திடும் நோக்கில் விபத்தே நடைபெறாதது போன்றதொரு தோற்றத்தையும் காவல் துறையினரின் துணையோடு செயற்கையாக ஏற்படுத்தியிருக்கிறார். இந்தச் சாலை விபத்து – மரணம் – படுகாயம் -நடந்த சம்பவத்தைக் கண்டித்து, அந்தத் தொகுதியின் சட்டப் பேரவை உறுப்பினரும், தலைமைக் கழக முதன்மைச் செயலாளருமான துரைமுருகன், மாவட்டக் கழகச் செயலாளர்கள் ஆர். காந்தி, ஏ.பி. நந்தகுமார், மாவட்ட அவைத் தலைவர், தி.அ. முகமது சகி, மாநகரக் கழகச் செயலாளர் ப. கார்த்திகேயன் மற்றும் கழகத்தினர் விபத்துக்குக் காரணமான மாவட்ட ஆட்சித் தலைவரைக் கைது செய்யக் கோரி சாலை மறியலில் ஈடுபட்டிருக்கிறார்கள். சம்பந்தப்பட்டவர்கள் மீது இரண்டு நாட்களில் நடவடிக்கை எடுப்பதாக காவல் துறையினர் உறுதி அளித்ததன் பேரில் அவர்கள் அனைவரும் மறியலை கைவிட்டுக் கலைந்து சென்றிருக்கிறார்கள். அந்தக் காரை மாவட்ட ஆட்சித் தலைவரே விபத்து நடந்த போது ஓட்டி வந்ததாகவும், ஆனால் விபத்து நேர்ந்து ஒருவர் மரணமும், மற்றொருவர் படுகாயங்களும் அடைந்த நிகழ்வுகளுக்குப் பிறகு அந்தப் பழியை தன்னுடைய ஓட்டுனர் மீது சுமத்தியிருப்பதாகவும், அந்த நேரத்தில் கலெக்டர் விபத்து நடந்த இடத்திற்கு பக்கத்திலே உள்ள “கிளப்” ஒன்றுக்குச் சென்றுவிட்டு வந்ததாகவும், ஆனால் அவற்றையெல்லாம் மறைப்பதற்கான முயற்சிகள் வெகுவேகமாக நடைபெற்று வருவதாகவும் செய்திகள் வருகின்றன. விபத்துக்குக் காரணமாக இருந்த காரை ஓட்டி வந்தவர் மீது வழக்கே பதிவு செய்யப்படவில்லை என்பதிலிருந்தே ஓரளவு உண்மை தெரிகிறது. உண்மையில் என்ன நடந்தது என்பதைத் தீர விசாரித்து அறிவித்திட வேண்டிய பொறுப்பும் கடமையும் அரசுக்குத்தான் உண்டு. சம்பந்தப்பட்டவர்கள் மீது இரண்டு நாட்களில் நடவடிக்கை எடுப்பதாக உறுதி கூறிய காவல் துறையினர் தற்போது, நடவடிக்கை கோரி சாலை மறியலில் ஈடுபட்டு துரைமுருகன் உள்ளிட்ட 179 பேர் மீது வழக்கு பதிவு செய்திருக்கிறார்கள்; காவல் துறையினரின் இந்த நடவடிக்கை யாரும் எதிர்பாராததாகும். ஒரு கோர விபத்து நடந்து, அதிலே ஒருவர் சம்பவ இடத்திலேயே இறந்து, மற்றொருவர் படுகாயமடைந்து கிடக்கும்போது, மாவட்ட ஆட்சியர் உடனே காரிலிருந்து இறங்கி, அவர்களுக்கு முதலுதவி செய்திட வேண்டிய பொறுப்பையும், கடமையையும் மறந்து நடந்து கொண்டிருக்கிறார். இதுபற்றித் தொகுதியின் சட்டப் பேரவை உறுப்பினர் துரைமுருகன் மாவட்ட ஆட்சியரைத் தொலைபேசியில் தொடர்பு கொண்டு கேட்ட போது, “அது ஒரு சாதாரண விபத்து” என்று அலட்சியமாகக் கூறியிருக்கிறார். 25 வயதான ஒரு வாலிபன் உயிரிழந்தது மாவட்ட ஆட்சித் தலைவருக்கு சாதாரண விபத்தாகத் தோன்றியிருக்கிறது. எனவே எப்போதும் போல அ.தி.மு.க. அரசு அலட்சியமாக இல்லாமல், மாவட்ட ஆட்சியர் மீதே குற்றம் சாட்டப்பட்டிருப்பதால் அவரை உடனடியாக மாறுதல் செய்து, அவர் மீது வழக்குப் பதிவு செய்து விசாரணைக்கு உட்படுத்தி, மாவட்ட ஆட்சித் தலைவர் தவறு செய்திருந்தால் அவர் மீது சட்டப்படி உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும். நடவடிக்கை கோரி சம்பவத்தைக் கண்டித்தும், நியாயம் கேட்டும் அமைதியாக மறியல் செய்தவர்கள் மீது பழிவாங்கும் மனப்பான்மையோடு வழக்கு தொடுத்திருப்பதைத் திரும்பப் பெற வேண்டும்! – என்று கூறியிருக்கிறார்.

ALSO READ:  திருப்பரங்குன்றம் கோயிலில் பங்குனி பெருவிழா கொடியேற்றத்துடன் தொடக்கம்!

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

பஞ்சாங்கம் ஜூன் 16 – செவ்வாய் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம் தகவல்கள், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய ராசி பலன்கள், திருக்குறள், சிந்தனைகள்...

ஆனி மாத பூஜை; சபரிமலை கோயில் நடை திறப்பு!

கேரளாவில் தென்மேற்கு பருவமழை துவங்கி பெய்து வருகிறது பத்தனம்திட்டா மாவட்டம் கோட்டை மாவட்டத்தில் வனப்பகுதிகளில் கனமழையில் பெய்து வருகிறது இதனால் பம்பை நதியில் தண்ணீர் ஆர்ப்பரித்து செல்கிறது பம்பை நதியில் பக்தர்கள் கவனமாக நீராட

பஞ்சாங்கம் ஜூன் 15 – திங்கள் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான பலன்கள், நட்சத்திர பலன்கள், அதிர்ஷ்ட எண்கள், அதிர்ஷ்ட நிறம், திருக்குறள், சிந்தனைகள்...

அதிர்ச்சி… அபாயம்..! பெண்களின் பயங்கரவாதப் படை!

ஹாரிஸ் 2016 ல் காஷ்மீருக்குள் நுழைந்தான் . ஆயுத வன்முறை செயல்களால் தன்னை தற்கொலை படையென அறிவித்துக் கொண்டான். ஆனால் மறைமுகமாக ஒரு வலை பின்னலை ஏற்படுத்தினான் .

பஞ்சாங்கம் ஜூன் 14 – ஞாயிறு | இன்றைய ராசி பலன்கள்!

பஞ்சாங்கம், தினசரி திதி நட்சத்திரம் நல்ல நேரம் ராகு காலம் எமகண்டம் பன்னிரு ராசிகளின் ராசிபலன்கள் தினம் ஒரு திருக்குறள்

Topics

பஞ்சாங்கம் ஜூன் 16 – செவ்வாய் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம் தகவல்கள், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய ராசி பலன்கள், திருக்குறள், சிந்தனைகள்...

ஆனி மாத பூஜை; சபரிமலை கோயில் நடை திறப்பு!

கேரளாவில் தென்மேற்கு பருவமழை துவங்கி பெய்து வருகிறது பத்தனம்திட்டா மாவட்டம் கோட்டை மாவட்டத்தில் வனப்பகுதிகளில் கனமழையில் பெய்து வருகிறது இதனால் பம்பை நதியில் தண்ணீர் ஆர்ப்பரித்து செல்கிறது பம்பை நதியில் பக்தர்கள் கவனமாக நீராட

பஞ்சாங்கம் ஜூன் 15 – திங்கள் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான பலன்கள், நட்சத்திர பலன்கள், அதிர்ஷ்ட எண்கள், அதிர்ஷ்ட நிறம், திருக்குறள், சிந்தனைகள்...

அதிர்ச்சி… அபாயம்..! பெண்களின் பயங்கரவாதப் படை!

ஹாரிஸ் 2016 ல் காஷ்மீருக்குள் நுழைந்தான் . ஆயுத வன்முறை செயல்களால் தன்னை தற்கொலை படையென அறிவித்துக் கொண்டான். ஆனால் மறைமுகமாக ஒரு வலை பின்னலை ஏற்படுத்தினான் .

பஞ்சாங்கம் ஜூன் 14 – ஞாயிறு | இன்றைய ராசி பலன்கள்!

பஞ்சாங்கம், தினசரி திதி நட்சத்திரம் நல்ல நேரம் ராகு காலம் எமகண்டம் பன்னிரு ராசிகளின் ராசிபலன்கள் தினம் ஒரு திருக்குறள்

FIFA உலகக்கோப்பை 2026 சிறப்புகள்!

          ஜூன் 11, 2026 அன்று முதலிரண்டு போட்டிகள் மெக்சிகோவில் நடைபெற்றன. முதல் பொட்டியில் நெக்சிகோ தெ ஆப்பிரிக்கா அணியை 2-0 என்ற கோல் கணக்கில் வென்றது. இரண்டாவது போட்டியில் தென் கொரிய அனி செக் குடியரசு அணியை 2-1 என்ற கோல் கணக்கில் வென்றது.

பஞ்சாங்கம் ஜூன் 13 – சனிக் கிழமை | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய தினம் நல்ல நாளாக அமைய எமது வாழ்த்துகள்.

பஞ்சாங்கம் ஜூன் 12 – வெள்ளி | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய பலன்கள், திருக்குறள், நற்சிந்தனை

Entertainment News

Popular Categories