சென்னை: இலங்கை அகதிகளுக்கு குடியுரிமை அளிக்க தமிழக அரசு பரிந்துரைத்தால், அதுகுறித்து மத்திய அரசு பரிசீலிக்கும் என கும்மிடிப்பூண்டி வந்த மத்திய இணை அமைச்சர் கிரண் ரிஜிஜூ கூறியுள்ளார். கும்மிடிப்பூண்டி பெத்திக்குப்ப இலங்கை அகதிகள் முகாமை மத்திய உள்விவகாரங்களுக்கான இணை அமைச்சர் கிரண் ரிஜிஜூ நேற்று காலை பார்வையிட்டு ஆய்வு செய்தார். அவரிடம் முகாம் தலைவர் சிவகுமார் கோரிக்கை மனு ஒன்றை அளித்தார். அந்த மனுவில், இலங்கை தமிழ்ப் பகுதியில் 13 வது சட்டத்திருத்தம் கொண்டு வர வேண்டும். அகதி முகாம்களில் உள்ள உயர் கல்வி மாணவர் களுக்கு அரசு கல்வி கட்டணம் அளிக்க வேண்டும், கல்வி பயின்றவர்களுக்கு வேலை வாய்ப்பு அளிக்க வேண்டும். கடவுச் சீட்டு, விசா வழங்க வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகள் வலியுறுத்தப்பட்டுள்ளன. பிறகு, அகதிகள் மத்தியில் அமைச்சர் பேசும்போது, ‘தமிழக அரசு, அகதிகளுக்கு அடிப்படை வசதிகள் மட்டுமல்லாமல், அரசின் பல்வேறு திட்டங்கள் மூலம் உதவிகளை செய்து வருகிறது. முகாமில் எவ்வளவு காலம் அகதிகள் வசிக்க விரும்புகிறார்களோ, அவ்வளவு காலம் வரை, அவர்களுக்கு தேவையான கல்வி, வேலை வாய்ப்பு தொடர்பான அனைத்து உதவிகளையும் அரசு செய்யும். அகதிகளுக்கான பாஸ்போர்ட், விசா தொடர்பான அகதிகளின் கோரிக்கைகள் குறித்து, வெளியுறவுத் துறை அமைச்சகம்தான் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றார். பின்னர் செய்தியாளர்களிடம் பேசியபோது, ‘இலங்கை அகதிகளுக்கு குடியுரிமை அளிக்க தமிழக அரசு பரிந்துரைத்தால், அதுகுறித்து மத்திய அரசு பரிசீலிக்கும். ஐ.நா.சபையில் அகதிகள் தொடர்பான எந்த ஒப்பந்தத்திலும் இந்தியா கையெழுத்திடவில்லை. இருப்பினும், நாடு முழுவதும் உள்ள அகதிகள் முகாமில் வசிக்கும் அகதிகள் நலனில் மிகுந்த அக்கறை செலுத்தப்படுகிறது. மேலும், அகதிகளுக்கான கொள்கை குறித்து தேவைப்பட்டால் விவாதித்து அரசு முடிவெடுக்கும் என்றார்.
Hot this week
மதுரை
மதுரையில் கள்ளழகர் தங்கக் குதிரையில் எழுந்தருளல்!
இதை தொடர்ந்து ராமராயர் மண்டகப்படியில் கள்ளழகரை மனம் குளிர்விக்கும் தீர்த்தவாரி நிகழ்வும் நடைபெறவுள்ளது. இதனை முன்னிட்டு மதுரை மாநகரே விழாக்கோலாம் பூண்டுள்ளது.
பஞ்சாங்கம்
பஞ்சாங்கம் ஏப்ரல் 30 – வியாழன்| இன்றைய ராசி பலன்கள்!
இன்றைய பஞ்சாங்கம், பன்னிரண்டு ராசிகளுக்கும் உள்ள இன்றைய ராசிபலன்கள், திருக்குறள், சிந்தனைகள்....
நெல்லை
நாளை, விடுமுறை கால சிறப்பு ரயில்கள்! தவற விட்டுடாதீங்க!
பள்ளி மாணவர்கள் கோடைகால விடுமுறை மற்றும் மே தினம் தொடர் விடுமுறை முன்னிட்டு சிறப்பு ரயில்கள் இயக்கப்படுவதாக தென்னக ரயில்வே அறிவித்துள்ளது
சற்றுமுன்
ஆண்டாள் சூடிய மாலை கள்ளழகருக்குச் சாற்ற, புறப்பாடு!
இன்று மதியம் ஸ்ரீ வில்லிபுத்தூர் ஸ்ரீ ஆண்டாள் நாச்சியார் சூடிய மாலை கள்ளழகர்க்குச் சாற்ற புறப்பாடு கண்டருளியது.
சற்றுமுன்
10, ப்ளஸ் 2 தேர்வு முடிவுகள் எப்போ வருது தெரியுமா?
தமிழ்நாட்டில், 12-ம் வகுப்பு அரசு பொதுத்தேர்வு முடிவுகள் வரும் மே மாதம் 8-ம் தேதி காலை 9:30 மணியளவில் வெளியிட முடிவு செய்யப்பட்டுள்ளது.

Topics
மதுரை
மதுரையில் கள்ளழகர் தங்கக் குதிரையில் எழுந்தருளல்!
இதை தொடர்ந்து ராமராயர் மண்டகப்படியில் கள்ளழகரை மனம் குளிர்விக்கும் தீர்த்தவாரி நிகழ்வும் நடைபெறவுள்ளது. இதனை முன்னிட்டு மதுரை மாநகரே விழாக்கோலாம் பூண்டுள்ளது.
பஞ்சாங்கம்
பஞ்சாங்கம் ஏப்ரல் 30 – வியாழன்| இன்றைய ராசி பலன்கள்!
இன்றைய பஞ்சாங்கம், பன்னிரண்டு ராசிகளுக்கும் உள்ள இன்றைய ராசிபலன்கள், திருக்குறள், சிந்தனைகள்....
நெல்லை
நாளை, விடுமுறை கால சிறப்பு ரயில்கள்! தவற விட்டுடாதீங்க!
பள்ளி மாணவர்கள் கோடைகால விடுமுறை மற்றும் மே தினம் தொடர் விடுமுறை முன்னிட்டு சிறப்பு ரயில்கள் இயக்கப்படுவதாக தென்னக ரயில்வே அறிவித்துள்ளது
சற்றுமுன்
ஆண்டாள் சூடிய மாலை கள்ளழகருக்குச் சாற்ற, புறப்பாடு!
இன்று மதியம் ஸ்ரீ வில்லிபுத்தூர் ஸ்ரீ ஆண்டாள் நாச்சியார் சூடிய மாலை கள்ளழகர்க்குச் சாற்ற புறப்பாடு கண்டருளியது.
சற்றுமுன்
10, ப்ளஸ் 2 தேர்வு முடிவுகள் எப்போ வருது தெரியுமா?
தமிழ்நாட்டில், 12-ம் வகுப்பு அரசு பொதுத்தேர்வு முடிவுகள் வரும் மே மாதம் 8-ம் தேதி காலை 9:30 மணியளவில் வெளியிட முடிவு செய்யப்பட்டுள்ளது.
கட்டுரைகள்
பிறரிடம் இருக்கும் அர்ப்பணிப்பு நம்மிடம் ஏன் இல்லை?
பிற மதத்தவரோடு ஒப்பிட்டால் இளைய தலைமுறையைச் சேர்ந்த ஹிந்துக்களிடம் ஹிந்து மதம் பற்றிய ஞானமும், அவற்றைக் கடைப்பிடிப்பதில் ஆர்வமும் குறைந்து காணப்படுகிறது.
சற்றுமுன்
மதுரை சித்திரை திருவிழா தேரோட்டம் கோலாகலம்:
மதுரை சித்திரை திருவிழா தேரோட்டம் கோலாகலமாக இன்று புதன்கிழமை நடைபெற்றது.மாசி வீதிகளில்...
பஞ்சாங்கம்
பஞ்சாங்கம் – ஏப்ரல் 29 – புதன் | இன்றைய ராசி பலன்கள்!
இன்றைய பஞ்சாங்கம், ராசிபலன்கள், ஜோதிடம், பொன்மொழிகள், திருக்குறள்,

