சென்னை: வேளாண் துறை ஊழல்கள் குறித்து விசாரணை நடத்த ஆணையம் அமைக்க வேண்டும் என்று பாமக நிறுவுனர் ராமதாஸ் அறிக்கை ஒன்றில் கேட்டுக் கொண்டுள்ளார். இன்று அவர் வெளியிட்ட அறிக்கை: மக்கள் உயிர் வாழத் தேவையான உணவு தானியங்களை விளைவிக்கும் வேளாண்மையை நிர்வாகம் செய்யும் வேளாண்துறை ஊழல்களை விளைவிக்கும் துறையாக மாறிவிட்டதோ என்று எண்ணும் அளவுக்கு அத்துறையில் ஊழல்கள் அதிகரித்து விட்டன. விதையில் தொடங்கி உரம் வரை அனைத்து பொருட்களையும் கொள்முதல் செய்வதில் ஊழல் தலைவிரித்தாடுவதாக குற்றச்சாற்றுகள் எழுந்துள்ளன. விவசாயம் செழிக்க வேண்டும், விளைச்சல் பெருக வேண்டும் என்றால் அதற்கான முதன்மைத் தேவை தரமான விதைகள் ஆகும். ஆனால், விதைகளை கொள்முதல் செய்வதில் தான் பெருமளவில் ஊழல் நடைபெறுகிறது. உதாரணமாக தமிழகத்திற்கு ஆண்டுக்கு 3 லட்சம் டன் தானிய விதைகள் தேவைப்படுகின்றன. நெல், பயறு வகைகள் ஆகியவற்றின் விதைகளை தமிழகத்திலேயே உற்பத்தி செய்ய முடியும். ஆனால், திட்டமிட்டே தமிழகத்தில் விதை உற்பத்தியை ஆட்சியாளர்கள் ஊக்குவிக்க வில்லை. இதனால் தமிழகத்தில் 91,000 டன் மட்டுமே விதைகள் உற்பத்தி செய்யப்படும் நிலையில், மீதமுள்ள 2,09,000 டன் விதைகள் கர்நாடகம் மற்றும் ஆந்திராவிலிருந்து கொள்முதல் செய்யப்படுகின்றன. இந்த வகையில் ஆண்டுக்கு ரூ.100 கோடிக்கு மேல் ஊழல் நடப்பதாக குற்றச்சாற்றுகள் எழுந்துள்ளன. தமிழக விவசாயிகளுக்கு ஆண்டுக்கு 65 ஆயிரம் டன் ஜிப்சம் தேவைப்படுகிறது. இந்த உரத்தை உற்பத்தி செய்யும் நிறுவனங்களிடமிருந்து குறைந்த விலையில் கொள்முதல் செய்ய இயலும். ஆனால், இந்த நிறுவனங்களிடமிருந்து கொள்முதல் செய்யாமல், இந்த உரங்களை வாங்கி விற்கும் ஐ.சி.எம்.சி (ICMC) என்ற நிறுவனத்திடமிருந்து அதிக விலை கொடுத்து வாங்கியதால் அரசுக்கு பெருமளவில் கூடுதல் செலவு ஏற்பட்டிருக்கிறது. அதேபோல், தமிழகத்தில் உள்ள 150க்கும் மேற்பட்ட வேளாண்மை ஆய்வுக் கூடங்களுக்குத் தேவையான வேதிப் பொருட்களை முன்னணி நிறுவனங்களிடமிருந்து கொள்முதல் செய்யாமல், ஐ.சி.எம்.சி நிறுவனத்திடமிருந்து தரமற்ற வேதிப் பொருட்கள் வாங்கப்பட்டதிலும் பெருமளவில் ஊழல் நடந்திருப்பதாக கூறப்படுகிறது. வேளாண்துறைக்கான உரங்களை முன்னணி உர நிறுவனங்கள் அல்லது கூட்டுறவு சங்கங்களில் இருந்து தான் கொள்முதல் செய்ய வேண்டும் என்ற விதி இருந்தும், தரமில்லாத நீரில் கரையும் தண்மை கொண்ட உரங்கள் ரூ.45 கோடி மதிப்பில் வாங்கப்பட்டதால் அரசுக்கு பெருமளவில் இழப்பு ஏற்பட்டிருக்கிறது. இதற்குக் காரணமும் ஊழல் தான். மாநிலத்திலுள்ள 15 நுண்ணுயிர் உரத்தயாரிப்பு மையங்களில் தயாரிக்கப்படும் அசோஸ்பைரில்லம், பாஸ்போ பாக்டீரியா ஆகியவையும், நோய்த் தடுப்பு நுண்ணுயிரிகளான சூடோமோனாஸ் போன்றவையும் தரம் குறைந்தவையாக உள்ளன. இவற்றைத் தயாரிக்கப் பயன்படுத்தப்படும் மூலப்பொருட்கள் தரம் குறைந்தவையாக இருப்பதே இதற்குக் காரணம் ஆகும். இம்மூலப்பொருட்களை கொள்முதல் செய்வதில் பெருமளவில் ஊழல் நடந்திருப்பதாகக் கூறப்படுகிறது. கடந்த 2010 ஆம் ஆண்டில் பவானி, அவிநாசி, பாலக்கோடு, தென்காசி, போளூர், காட்டான்கொளத்தூர், உத்தமபாளையம் உள்ளிட்ட 9 இடங்களில் தொடங்கப்பட்ட நுண்ணுயிர் தயாரிப்பு நிறுவனங்களுக்கு கருவிகள் வாங்கியதில் ரூ. 6 கோடி அளவுக்கு ஊழல் நடந்ததாக கூறப்பட்ட குற்றச்சாற்றுகள் குறித்து விசாரணை நடத்திய குழு அதன் அறிக்கையை தாக்கல் செய்து பல ஆண்டுகள் ஆகியும் அதன் மீது இன்று வரை நடவடிக்கை எடுக்கப்படவில்லை. வேளாண்மைப் பொறியியல் துறையில் தலைமைப் பொறியாளர் பதவி 4 ஆண்டுகளுக்கும் மேலாக நிரப்பப்படாமல் உள்ளது. அப்பதவிக்கு தகுதியற்ற செந்தில் என்பவர் பொறுப்பு தலைமைப் பொறியாளராக நீடித்து வருகிறார். இவரை விட அதிக அனுபவமும், திறமையும் கொண்ட மூத்த அதிகாரிகள் 9 பேர் இருக்கும் நிலையில், அவர்களுக்கு மேலாக செந்திலை நியமித்திருப்பதன் காரணமே ஆட்சியாளர்களின் தவறுகளுக்கும் உதவியாக இருக்கிறார் என்பது தான் என்று கூறப்படுகிறது. முத்துக்குமாரசாமி தற்கொலை செய்து கொண்டதன் பின்னணியில் இவரும் இருப்பதாக குற்றச்சாற்றுகள் எழுந்துள்ளன. வேளாண்துறை ஊழல்கள் உடனடியாக கட்டுப்படுத்தப்படாவிட்டால், ஊழல்வாதிகளின் மிரட்டலைத் தாங்க முடியாமல் முத்துக்குமாரசாமி போன்ற நேர்மையான அதிகாரிகள் தற்கொலை செய்வது அதிகரித்து விடும். அதுமட்டுமின்றி, ஊழல்வாதிகளை அடையாளம் கண்டு அவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டியதும் அவசியமாகும். எனவே வேளாண் துறையில் நடைபெற்ற ஊழல்கள் குறித்து விசாரணை ஆணையம் அமைத்து விசாரணை நடத்தவும், ஊழலுக்கு காரணமானவர்கள் எவ்வளவு உயர்பதவியில் இருந்தாலும் அவர்கள் மீது சட்டப்படி நடவடிக்கை மேற்கொள்ளவும் தமிழக அரசு முன்வர வேண்டும்.
Hot this week
பஞ்சாங்கம்
பஞ்சாங்கம் மே 1 – வெள்ளி | இன்றைய ராசி பலன்கள்!
இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய பலன்கள், திருக்குறள், நற்சிந்தனை
மதுரை
மதுரையில் கள்ளழகர் தங்கக் குதிரையில் எழுந்தருளல்!
இதை தொடர்ந்து ராமராயர் மண்டகப்படியில் கள்ளழகரை மனம் குளிர்விக்கும் தீர்த்தவாரி நிகழ்வும் நடைபெறவுள்ளது. இதனை முன்னிட்டு மதுரை மாநகரே விழாக்கோலாம் பூண்டுள்ளது.
பஞ்சாங்கம்
பஞ்சாங்கம் ஏப்ரல் 30 – வியாழன்| இன்றைய ராசி பலன்கள்!
இன்றைய பஞ்சாங்கம், பன்னிரண்டு ராசிகளுக்கும் உள்ள இன்றைய ராசிபலன்கள், திருக்குறள், சிந்தனைகள்....
நெல்லை
நாளை, விடுமுறை கால சிறப்பு ரயில்கள்! தவற விட்டுடாதீங்க!
பள்ளி மாணவர்கள் கோடைகால விடுமுறை மற்றும் மே தினம் தொடர் விடுமுறை முன்னிட்டு சிறப்பு ரயில்கள் இயக்கப்படுவதாக தென்னக ரயில்வே அறிவித்துள்ளது
சற்றுமுன்
ஆண்டாள் சூடிய மாலை கள்ளழகருக்குச் சாற்ற, புறப்பாடு!
இன்று மதியம் ஸ்ரீ வில்லிபுத்தூர் ஸ்ரீ ஆண்டாள் நாச்சியார் சூடிய மாலை கள்ளழகர்க்குச் சாற்ற புறப்பாடு கண்டருளியது.

Topics
பஞ்சாங்கம்
பஞ்சாங்கம் மே 1 – வெள்ளி | இன்றைய ராசி பலன்கள்!
இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய பலன்கள், திருக்குறள், நற்சிந்தனை
மதுரை
மதுரையில் கள்ளழகர் தங்கக் குதிரையில் எழுந்தருளல்!
இதை தொடர்ந்து ராமராயர் மண்டகப்படியில் கள்ளழகரை மனம் குளிர்விக்கும் தீர்த்தவாரி நிகழ்வும் நடைபெறவுள்ளது. இதனை முன்னிட்டு மதுரை மாநகரே விழாக்கோலாம் பூண்டுள்ளது.
பஞ்சாங்கம்
பஞ்சாங்கம் ஏப்ரல் 30 – வியாழன்| இன்றைய ராசி பலன்கள்!
இன்றைய பஞ்சாங்கம், பன்னிரண்டு ராசிகளுக்கும் உள்ள இன்றைய ராசிபலன்கள், திருக்குறள், சிந்தனைகள்....
நெல்லை
நாளை, விடுமுறை கால சிறப்பு ரயில்கள்! தவற விட்டுடாதீங்க!
பள்ளி மாணவர்கள் கோடைகால விடுமுறை மற்றும் மே தினம் தொடர் விடுமுறை முன்னிட்டு சிறப்பு ரயில்கள் இயக்கப்படுவதாக தென்னக ரயில்வே அறிவித்துள்ளது
சற்றுமுன்
ஆண்டாள் சூடிய மாலை கள்ளழகருக்குச் சாற்ற, புறப்பாடு!
இன்று மதியம் ஸ்ரீ வில்லிபுத்தூர் ஸ்ரீ ஆண்டாள் நாச்சியார் சூடிய மாலை கள்ளழகர்க்குச் சாற்ற புறப்பாடு கண்டருளியது.
சற்றுமுன்
10, ப்ளஸ் 2 தேர்வு முடிவுகள் எப்போ வருது தெரியுமா?
தமிழ்நாட்டில், 12-ம் வகுப்பு அரசு பொதுத்தேர்வு முடிவுகள் வரும் மே மாதம் 8-ம் தேதி காலை 9:30 மணியளவில் வெளியிட முடிவு செய்யப்பட்டுள்ளது.
கட்டுரைகள்
பிறரிடம் இருக்கும் அர்ப்பணிப்பு நம்மிடம் ஏன் இல்லை?
பிற மதத்தவரோடு ஒப்பிட்டால் இளைய தலைமுறையைச் சேர்ந்த ஹிந்துக்களிடம் ஹிந்து மதம் பற்றிய ஞானமும், அவற்றைக் கடைப்பிடிப்பதில் ஆர்வமும் குறைந்து காணப்படுகிறது.
சற்றுமுன்
மதுரை சித்திரை திருவிழா தேரோட்டம் கோலாகலம்:
மதுரை சித்திரை திருவிழா தேரோட்டம் கோலாகலமாக இன்று புதன்கிழமை நடைபெற்றது.மாசி வீதிகளில்...

