அரசு ஊழியர்கள், ஆசிரியர்களுக்கு இந்த முறை ஏப்.6ஆம் தேதிதான் சம்பளம்!

சென்னை: வங்கிகளுக்கு தொடர் விடுமுறை வருவதால், அரசு ஊழியர்களுக்கான சம்பளப் பட்டுவாடா நடைபெறுவதில் தாமதம் ஏற்படும் என்று தெரிகிறது. அரசு ஊழியர்கள், ஆசிரியர்கள், ஓய்வூதியதாரர்கள், குடும்ப ஓய்வூதியதாரர்கள் ஆகியோருக்கு, சம்பளம், ஓய்வூதியங்கள் வழக்கமாக மாத இறுதியான 30 அல்லது 31ஆம் தேதிகளில் அவரவர் வங்கிக் கணக்கில் சேர்க்கப்படும். ஆனால் இந்த முறை மாத இறுதிநாளான 31ஆம் தேதி, வங்கிகளுக்கு தொடர் விடுமுறை காரணமாக, அவர்களின் வங்கிக் கணக்கில் பணம் வரவு வைக்கப்படாது என தெரிவிக்கப்பட்டுள்ளது. 1ஆம் தேதிக்குப் பதிலாக ஏப்ரல் 6ஆம் தேதிதான் வரவு வைக்கப்படும் என்று கருவூலக் கணக்குத்துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். வரும் 31ம் தேதி நடப்பு நிதியாண்டு வங்கிக் கணக்குகளை முடிக்க வேண்டும். இதனால் அனைத்து வங்கிகளும் வாடிக்கையாளர்களின் வரவு, செலவுக் கணக்கு விவரங்களை இறுதி செய்யும் பணியில் ஈடுபடும். ஏப்ரல் 1ஆம் தேதி அடுத்த நிதியாண்டு கணக்குகள் தொடங்கும். அன்று அனைத்து வங்கிகளுக்கும் வழக்கம்போல் விடுமுறை. இதை அடுத்து 2ஆம் தேதி மகாவீர் ஜெயந்தி, 3ஆம் தேதி புனித வெள்ளி அரசு விடுமுறைகள் தினம் என்பதாலும், தொடர்ந்து 4ம் தேதி சனிக்கிழமை வங்கிகள் அரைநாள் மட்டுமே செயல்படுவதாலும், 5ம் தேதி வழக்கமான ஞாயிற்றுகிழமை விடுமுறை என்பதாலும் ஏப்ரல் 6ஆம் தேதி திங்கட்கிழமைதான் அரசு ஊழியர்கள், ஆசிரியர்கள் மற்றும் ஓய்வூதியதாரர்கள் குடும்ப ஓய்வூதியதாரர்கள் அனைவருக்கும் சம்பளப் பணம் வங்கியில் செலுத்தப்படும் என்று அதிகாரிகள் கூறியுள்ளனர்.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

பஞ்சாங்கம் மே 1 – வெள்ளி | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய பலன்கள், திருக்குறள், நற்சிந்தனை

மதுரையில் கள்ளழகர் தங்கக் குதிரையில் எழுந்தருளல்!

இதை தொடர்ந்து ராமராயர் மண்டகப்படியில் கள்ளழகரை மனம் குளிர்விக்கும் தீர்த்தவாரி நிகழ்வும் நடைபெறவுள்ளது. இதனை முன்னிட்டு மதுரை மாநகரே விழாக்கோலாம் பூண்டுள்ளது.

பஞ்சாங்கம் ஏப்ரல் 30 – வியாழன்| இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரண்டு ராசிகளுக்கும் உள்ள இன்றைய ராசிபலன்கள், திருக்குறள், சிந்தனைகள்....

நாளை, விடுமுறை கால சிறப்பு ரயில்கள்! தவற விட்டுடாதீங்க!

பள்ளி மாணவர்கள் கோடைகால விடுமுறை மற்றும் மே தினம் தொடர் விடுமுறை முன்னிட்டு சிறப்பு ரயில்கள் இயக்கப்படுவதாக தென்னக ரயில்வே அறிவித்துள்ளது

ஆண்டாள் சூடிய மாலை கள்ளழகருக்குச் சாற்ற, புறப்பாடு!

இன்று மதியம் ஸ்ரீ வில்லிபுத்தூர் ஸ்ரீ ஆண்டாள் நாச்சியார் சூடிய மாலை கள்ளழகர்க்குச் சாற்ற புறப்பாடு கண்டருளியது.

Topics

பஞ்சாங்கம் மே 1 – வெள்ளி | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய பலன்கள், திருக்குறள், நற்சிந்தனை

மதுரையில் கள்ளழகர் தங்கக் குதிரையில் எழுந்தருளல்!

இதை தொடர்ந்து ராமராயர் மண்டகப்படியில் கள்ளழகரை மனம் குளிர்விக்கும் தீர்த்தவாரி நிகழ்வும் நடைபெறவுள்ளது. இதனை முன்னிட்டு மதுரை மாநகரே விழாக்கோலாம் பூண்டுள்ளது.

பஞ்சாங்கம் ஏப்ரல் 30 – வியாழன்| இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரண்டு ராசிகளுக்கும் உள்ள இன்றைய ராசிபலன்கள், திருக்குறள், சிந்தனைகள்....

நாளை, விடுமுறை கால சிறப்பு ரயில்கள்! தவற விட்டுடாதீங்க!

பள்ளி மாணவர்கள் கோடைகால விடுமுறை மற்றும் மே தினம் தொடர் விடுமுறை முன்னிட்டு சிறப்பு ரயில்கள் இயக்கப்படுவதாக தென்னக ரயில்வே அறிவித்துள்ளது

ஆண்டாள் சூடிய மாலை கள்ளழகருக்குச் சாற்ற, புறப்பாடு!

இன்று மதியம் ஸ்ரீ வில்லிபுத்தூர் ஸ்ரீ ஆண்டாள் நாச்சியார் சூடிய மாலை கள்ளழகர்க்குச் சாற்ற புறப்பாடு கண்டருளியது.

10, ப்ளஸ் 2 தேர்வு முடிவுகள் எப்போ வருது தெரியுமா?

தமிழ்நாட்டில், 12-ம் வகுப்பு அரசு பொதுத்தேர்வு முடிவுகள் வரும் மே மாதம் 8-ம் தேதி காலை 9:30 மணியளவில் வெளியிட முடிவு செய்யப்பட்டுள்ளது.

பிறரிடம் இருக்கும் அர்ப்பணிப்பு நம்மிடம் ஏன் இல்லை?

பிற மதத்தவரோடு ஒப்பிட்டால் இளைய தலைமுறையைச் சேர்ந்த ஹிந்துக்களிடம் ஹிந்து மதம் பற்றிய ஞானமும், அவற்றைக் கடைப்பிடிப்பதில் ஆர்வமும் குறைந்து காணப்படுகிறது.

மதுரை சித்திரை திருவிழா தேரோட்டம் கோலாகலம்:

மதுரை சித்திரை திருவிழா தேரோட்டம் கோலாகலமாக இன்று புதன்கிழமை நடைபெற்றது.மாசி வீதிகளில்...

Entertainment News

Popular Categories