சென்னை: வங்கிகளுக்கு தொடர் விடுமுறை வருவதால், அரசு ஊழியர்களுக்கான சம்பளப் பட்டுவாடா நடைபெறுவதில் தாமதம் ஏற்படும் என்று தெரிகிறது. அரசு ஊழியர்கள், ஆசிரியர்கள், ஓய்வூதியதாரர்கள், குடும்ப ஓய்வூதியதாரர்கள் ஆகியோருக்கு, சம்பளம், ஓய்வூதியங்கள் வழக்கமாக மாத இறுதியான 30 அல்லது 31ஆம் தேதிகளில் அவரவர் வங்கிக் கணக்கில் சேர்க்கப்படும். ஆனால் இந்த முறை மாத இறுதிநாளான 31ஆம் தேதி, வங்கிகளுக்கு தொடர் விடுமுறை காரணமாக, அவர்களின் வங்கிக் கணக்கில் பணம் வரவு வைக்கப்படாது என தெரிவிக்கப்பட்டுள்ளது. 1ஆம் தேதிக்குப் பதிலாக ஏப்ரல் 6ஆம் தேதிதான் வரவு வைக்கப்படும் என்று கருவூலக் கணக்குத்துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். வரும் 31ம் தேதி நடப்பு நிதியாண்டு வங்கிக் கணக்குகளை முடிக்க வேண்டும். இதனால் அனைத்து வங்கிகளும் வாடிக்கையாளர்களின் வரவு, செலவுக் கணக்கு விவரங்களை இறுதி செய்யும் பணியில் ஈடுபடும். ஏப்ரல் 1ஆம் தேதி அடுத்த நிதியாண்டு கணக்குகள் தொடங்கும். அன்று அனைத்து வங்கிகளுக்கும் வழக்கம்போல் விடுமுறை. இதை அடுத்து 2ஆம் தேதி மகாவீர் ஜெயந்தி, 3ஆம் தேதி புனித வெள்ளி அரசு விடுமுறைகள் தினம் என்பதாலும், தொடர்ந்து 4ம் தேதி சனிக்கிழமை வங்கிகள் அரைநாள் மட்டுமே செயல்படுவதாலும், 5ம் தேதி வழக்கமான ஞாயிற்றுகிழமை விடுமுறை என்பதாலும் ஏப்ரல் 6ஆம் தேதி திங்கட்கிழமைதான் அரசு ஊழியர்கள், ஆசிரியர்கள் மற்றும் ஓய்வூதியதாரர்கள் குடும்ப ஓய்வூதியதாரர்கள் அனைவருக்கும் சம்பளப் பணம் வங்கியில் செலுத்தப்படும் என்று அதிகாரிகள் கூறியுள்ளனர்.
அரசு ஊழியர்கள், ஆசிரியர்களுக்கு இந்த முறை ஏப்.6ஆம் தேதிதான் சம்பளம்!
செங்கோட்டை ஸ்ரீராம்https://www.dhinasari.com
பத்திரிகையாளர், எழுத்தாளர். |
தமிழ் தினசரி இணைய நிறுவுனர், ஆசிரியர் |விஜயபாரதம் இதழில் உதவி ஆசிரியர், மஞ்சரி டைஜஸ்ட், விகடன் பிரசுரம், சக்தி விகடன், கல்கியின் தீபம் இதழ்களில் பொறுப்பாசிரியராகப் பணி புரிந்தவர். |தினமணி இணையம் (dinamani.com), Asianet News Tamil ஆகியவற்றில் செய்தி ஆசிரியராக பணியாற்றியவர். |சென்னை அகில இந்திய வானொலிக்காக, தேசியத் தலைவர்கள், சுதந்திரப் போராட்ட வீரர்கள், காஞ்சி மகா பெரியவர் தொடர்பான பல்வேறு செய்திக் கட்டுரைகளை எழுதியுள்ளார். |* வானொலி ஆர்.ஜே., பொதிகை தொலைக்காட்சியில் செய்தி அலசல் நேரலை நிகழ்ச்சி என ஊடகத் துறையின் பல்வேறு தளங்களிலும் பணியாற்றியவர். |விகடன் பிரசுரத்தின் மூலம் இவரது ஆறு நூல்கள் வெளியாகியுள்ளன. |இவரது இதழியல் பணிக்காக, கோல்கத்தா பாரதிய பாஷா பரிஷத் அமைப்பு ‘யுவ புரஸ்கார்-08 தேசிய இலக்கிய விருது’ வழங்கியுள்ளது. |

