ராஜபாளையம் அருகே ஓடையில் குளித்த இரு மாணவர்கள் நீரில் மூழ்கி மரணம்..

988168 1 - 2026
#image_title

 விருதுநகர் மாவட்டம் ராஜபாளையம் அருகே எஸ். ராமலிங்கபுரத்தில் ஓடையில் குளித்த போது இரு மாணவர்கள் நீரில் மூழ்கி பலியான சம்பவம் அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

தென்காசி மாவட்டம் பால்வண்ணநாதபுரம் பகுதியைச் சேர்ந்தவர் ராமராஜ். ஆட்டோ ஓட்டுனர். இவரது மனைவி சாந்தி. இவர்களது மகன் சரண்(13), 5-ம் வகுப்பு படித்து வந்தார். பள்ளி விடுமுறை என்பதால் சரண், ராஜபாளையம் அருகே எஸ்.ராமலிங்காபுரத்தில் உள்ள தனது பாட்டி வீட்டிற்கு வந்தார்.

அங்கு அதே பகுதியை சேர்ந்த டெய்லர் சிங்கராஜ் என்பவரது மகன் 4-ம் வகுப்பு படிக்கும் சிவபிரசாத் (10) மற்றும் மேலும் சில சிறுவர்களுடன் சேர்ந்து சரண் விளையாடி வந்துள்ளார்.

ராஜபாளையம் சுற்றுவட்டார பகுதிகளில் கடந்த சில நாட்களாக பெய்த தொடர் மழை காரணமாக எஸ்.ராமலிங்காபுரம் அருகே சிவகாமியாபுரம் அரசு பள்ளி பின்புறம் உள்ள ஓடையில் நீர் வரத்து ஏற்பட்டுள்ளது. இந்த ஓடை நீர் கருங்குளம் கண்மாயில் இருந்து கீழராஜகுலராமன் வழியாக வெம்பக்கோட்டை அணைக்கு செல்கிறது.

இந்நிலையில் ஓடையில் குளிப்பதற்காக சரண், சிவபிரசாத் உள்ளிட்ட 5 சிறுவர்கள் சேர்ந்து சிவகாமியாபுரம் பள்ளி பின்புறம் உள்ள ஓடைக்கு சென்றனர். ஓடையில் நீர்வரத்து அதிகமாக இருந்ததால் ஆழமான பகுதிக்கு இழுத்துச்செல்லப்பட்ட சரண், சிவபிரசாத் ஆகிய இருவரும் நீரில் மூழ்கி பரிதாபமாக உயிரிழந்தனர்.

சிறுவர்களின் அலறல் சத்தம் கேட்டு வந்த பகுதி மக்கள் ஓடையில் மூழ்கி உயிரிழந்த சிறுவர்களின் உடலை மீட்டனர். இதுகுறித்து ராஜபாளையம் தெற்கு போலீஸார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

பஞ்சாங்கம் மார்ச் 14 – சனிக் கிழமை | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய தினம் நல்ல நாளாக அமைய எமது வாழ்த்துகள்.

கொல்லங்கோடு பத்ரகாளி கோவில் தூக்கத்திருவிழா துவக்கம்..

தமிழகம் கேரளா மாநிலத்தில் பிரசித்தி பெற்ற கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள கொல்லங்கோடு...

ஈரான் விவகாரத்தில்… காங்கிரஸின் ‘யு டர்ன்’!

ஐக்கிய முற்போக்கு கூட்டணி ஆட்சியில் மூன்று முறை, 2005, 2006, 2009 ஆண்டுகளில், சர்வதேச அணுசக்தி முகாமையில் ஈரானின் அணு ஆயுத தயாரிப்பை எதிர்த்து

எர்ணாகுளம் – வேளாங்கண்ணி- செங்கோட்டை ,மதுரை வழி புதிய ரயில்..

எர்ணாகுளம் - வேளாங்கண்ணி-எர்ணாகுளம் இடையே கொல்லம் செங்கோட்டை மதுரை வழி...

பங்குனி மாத பூஜைகளுக்காக சபரிமலை கோயில் நாளை நடை திறப்பு

பங்குனி மாத பூஜைகளுக்காக கேரளாவில் பிரசித்தி பெற்ற சபரிமலை சுவாமி ஐயப்பன்...

Topics

பஞ்சாங்கம் மார்ச் 14 – சனிக் கிழமை | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய தினம் நல்ல நாளாக அமைய எமது வாழ்த்துகள்.

கொல்லங்கோடு பத்ரகாளி கோவில் தூக்கத்திருவிழா துவக்கம்..

தமிழகம் கேரளா மாநிலத்தில் பிரசித்தி பெற்ற கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள கொல்லங்கோடு...

ஈரான் விவகாரத்தில்… காங்கிரஸின் ‘யு டர்ன்’!

ஐக்கிய முற்போக்கு கூட்டணி ஆட்சியில் மூன்று முறை, 2005, 2006, 2009 ஆண்டுகளில், சர்வதேச அணுசக்தி முகாமையில் ஈரானின் அணு ஆயுத தயாரிப்பை எதிர்த்து

எர்ணாகுளம் – வேளாங்கண்ணி- செங்கோட்டை ,மதுரை வழி புதிய ரயில்..

எர்ணாகுளம் - வேளாங்கண்ணி-எர்ணாகுளம் இடையே கொல்லம் செங்கோட்டை மதுரை வழி...

பங்குனி மாத பூஜைகளுக்காக சபரிமலை கோயில் நாளை நடை திறப்பு

பங்குனி மாத பூஜைகளுக்காக கேரளாவில் பிரசித்தி பெற்ற சபரிமலை சுவாமி ஐயப்பன்...

அரசியல்வாதிகள் போல் செயல்படும் அரசு அதிகாரிகள்: இந்து முன்னணி கண்டனம்!

எனவே அரசியல் சாசன சட்டத்தை மதித்து மக்கள் நலனை கருத்தில் கொண்டு அரசு அதிகாரிகள் செயல்பட வேண்டும் என்று இந்துமுன்னணி சார்பில் கேட்டுக் கொள்கிறோம்.

தமிழகத்தில் பெட்ரோல் டீசலுக்கு தட்டுப்பாடா? உண்மை என்ன?

தமிழ்நாடு முழுவதும் பெட்ரோல் மற்றும் டீசல் தடையின்றி தொடர்ந்து கிடைக்கும் என்பதை மீண்டும் உறுதி செய்கிறது.

Entertainment News

Popular Categories