சக்தியிடம் சித்தியடைந்தார் மேல்மருவத்தூர் அடிகளார்!

melmaruvathur bangaru adigalar - 2026
#image_title

‘மேல் மருவத்தூர் அம்மா’ என்று பக்தர்களால் போற்றப்படும் பங்காரு அடிகளாருக்கு திடீர் மாரடைப்பு ஏற்பட்டு, தமது 82ஆவது வயதில் இன்று சக்தியிடம் சித்தியடைந்தார்.

தமிழகத்தில் பெண்கள் பலருக்கு ஆன்மிக உணர்வை ஊட்டி, ‘ஓம் சக்தி பராசக்தி’ எனும் மந்திரச் சொல்லை அளித்து, ஆன்மிகத்தின் பால் ஈடுபடச் செய்தவர் மேல்மருவத்தூர் பங்காரு அடிகளார். மேல்மருவத்தூரில் ஆதிபராசக்திக்கு கோயில் அமைத்து, சித்தர் பீடத்தின் மூலம் ஆன்மிகத் தொண்டாற்றியவர். ஆதிபராசக்தி தொண்டு மருத்துவக் கல்வி மற்றும் கலாச்சார அறக்கட்டளையின் தலைவராக இருந்து நற்பணிகள் பல புரிந்தவர்.

அவர் அமைத்த ஆதிபராசக்தி கோயிலில், அன்னை சுயம்பு வடிவில் காட்சிதருகிறாள். ஆன்மிக ரீதியாக பெண்கள் தங்கள் பூஜை முறைகளில் ஒடுங்கி விடக் கூடாது என்பதற்காக, பெண்களே பெண் தெய்வமான ஆதிபராசக்திக்கு கருவறைக்குள் சென்று அர்ச்சனை செய்வதை ஊக்குவித்தார். இந்தக் காட்சி இங்கே சிறப்பானதாக அமைந்தது. அதனால் தமிழகத்தின் பெண் பக்தர்கள் பலர் அவரது ஆன்மிக ஆற்றலால் இழுக்கப்பட்டனர். அவரை மேல்மருவத்தூர் சித்தர் என்றே அழைத்தனர். அவரது வழியைப் பின்பற்றி, தங்கள் பகுதிகளில், கிராமங்கள்தோறும் ஆதிபராசக்தி சித்தர் பீடங்களை நிறுவி தொடர்ச்சியான வழிபாடுகளை நடத்தி வருகின்றனர்.

சக்தி வழிபாட்டுக்கு சிறப்பான நவராத்திரியில், தங்கள் பகுதிகளில் சிறப்பு நவராத்திரி வழிபாடுகளை, பக்தர்கள் மேற்கொண்டு வருகின்றனர். இந்நிலையில், நவராத்திரியின் நடுநாளில், பங்காரு அடிகளார் சித்தியடைந்த செய்தி, ஓம் சக்தி பக்தர்களுக்கு சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.

பங்காரு அடிகளாருக்கு லட்சுமி அம்பாள் என்ற மனைவியும் ஜி.பி அன்பழகன், ஜி.பி செந்தில் குமார் என்ற இரு மகன்களும் உள்ளனர்.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

சாத்தூர் அருகே பட்டாசு ஆலையில் தீவிபத்து..

விருதுநகர் மாவட்டம் சாத்தூர் அருகே மடத்துப் பட்டியில் இன்று 13 ஏப்ரல்...

ரமாபாய், சவிதா அம்பேத்கர்: இந்திய வரலாற்றில் மறைந்த உருவங்கள்!

ரமாபாயின் வாழ்க்கை வறுமை மற்றும் தனிமை படுத்தப்பட்டதான சூழ்நிலையில் இருந்தது. 1898 இல் மகாராஷ்டிராவில் ஒரு கடலோர கிராமத்தில் அவர் பிறந்தார்

ஆப்கன், பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீர் எல்லையில் புதிய மாவட்டத்தை உருவாக்கும் சீனா!

பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீர் (PoK), ஆப்கானிஸ்தான் எல்லைக்கு அருகில் சீனா புதிய மாவட்டத்தை அமைக்கிறது; இது இந்தியாவிற்கு கவலை அளிக்கும் அம்சம்.

தேசம் தீர்வுகளைத் தேடும்போது, திமுக சர்ச்சைகளை உருவாக்குகிறது: நிர்மலா சீதாராமன்

தேசம் தீர்வுகளைத் தேடும்போது, திமுக சர்ச்சைகளை உருவாக்குகிறது. மத்திய அரசு ஆக்கப்பூர்வமான ஒத்துழைப்பை நல்கும்போது, திமுக அதைத் தேர்தல் அரசியலுக்காகச் சுரண்டப் பார்க்கிறது.

பஞ்சாங்கம் ஏப்ரல் 13 – திங்கள் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான பலன்கள், நட்சத்திர பலன்கள், அதிர்ஷ்ட எண்கள், அதிர்ஷ்ட நிறம், திருக்குறள், சிந்தனைகள்...

Topics

சாத்தூர் அருகே பட்டாசு ஆலையில் தீவிபத்து..

விருதுநகர் மாவட்டம் சாத்தூர் அருகே மடத்துப் பட்டியில் இன்று 13 ஏப்ரல்...

ரமாபாய், சவிதா அம்பேத்கர்: இந்திய வரலாற்றில் மறைந்த உருவங்கள்!

ரமாபாயின் வாழ்க்கை வறுமை மற்றும் தனிமை படுத்தப்பட்டதான சூழ்நிலையில் இருந்தது. 1898 இல் மகாராஷ்டிராவில் ஒரு கடலோர கிராமத்தில் அவர் பிறந்தார்

ஆப்கன், பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீர் எல்லையில் புதிய மாவட்டத்தை உருவாக்கும் சீனா!

பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீர் (PoK), ஆப்கானிஸ்தான் எல்லைக்கு அருகில் சீனா புதிய மாவட்டத்தை அமைக்கிறது; இது இந்தியாவிற்கு கவலை அளிக்கும் அம்சம்.

தேசம் தீர்வுகளைத் தேடும்போது, திமுக சர்ச்சைகளை உருவாக்குகிறது: நிர்மலா சீதாராமன்

தேசம் தீர்வுகளைத் தேடும்போது, திமுக சர்ச்சைகளை உருவாக்குகிறது. மத்திய அரசு ஆக்கப்பூர்வமான ஒத்துழைப்பை நல்கும்போது, திமுக அதைத் தேர்தல் அரசியலுக்காகச் சுரண்டப் பார்க்கிறது.

பஞ்சாங்கம் ஏப்ரல் 13 – திங்கள் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான பலன்கள், நட்சத்திர பலன்கள், அதிர்ஷ்ட எண்கள், அதிர்ஷ்ட நிறம், திருக்குறள், சிந்தனைகள்...

ஈரான் விஷயத்தில் பாரதம் ஏன் தலையிடவில்லை?!

தமிழில் ஒரு பழமொழி சொல்வார்கள். தெரியாத இருவர் அல்லது நமக்கு தொடர்பில்லாத யாரோ இருவர் தெருவில் சண்டை போட்டுக் கொண்டிருக்கும் போது,

பஞ்சாங்கம் ஏப்ரல் 12 – ஞாயிறு | இன்றைய ராசி பலன்கள்!

பஞ்சாங்கம், தினசரி திதி நட்சத்திரம் நல்ல நேரம் ராகு காலம் எமகண்டம் பன்னிரு ராசிகளின் ராசிபலன்கள் தினம் ஒரு திருக்குறள்

ஜனநாயகன் – விளக்கம் கொடுத்த சென்சார் போர்ட்; யார் பார்த்த வேலை இது?

தணிக்கை சான்றிதழ் வேண்டி சமர்ப்பிக்கப்படும் அனைத்து திரைப்படங்களுக்கும் KDM எனப்படும் ஒரு பாதுகாப்பான முறையை திரைப்பட தணிக்கை வாரியம் பின்பற்றுகிறது.

Entertainment News

Popular Categories