பிரதமர் மோடி வரும் 21ம் தேதி வரவுள்ள நிலையில், இன்று தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவி ராமேஸ்வரத்தில் ஆய்வு செய்து சுவாமி தரிசனம் செய்தார்.
இன்று அவருடைய முதல் நிகழ்ச்சியாக, காவி நாயகன் வள்ளுவருக்கு மரியாதை செய்தார். அதன் பின் திருப்புல்லாணியில் தர்ப்பசயன ராமர், ஆதிஜகந்நாதப் பெருமாள் தரிசனம் செய்தார். அதையடுத்து ராமேஸ்வரம் சென்று, ஸ்ரீ ராமநாதசுவாமி தரிசனம் செய்தார்,
பிரதமர் மோதி சொன்னதையடுத்து, ஸ்ரீ ராமநாதசுவாமி கோயில் பிராகாரத்தைச் சுற்றி தூய்மைப்பணியில் ஆளுநரும் அவரது துணைவியாரும் தங்களை ஈடுபடுத்திக் கொண்டார்கள். அதை அடுத்து, ஸ்வரத்தில் உள்ள மனவள சவால்களை எதிர்கொள்வோருக்கான மனோலயா இல்லத்தில் இருப்போருக்கு உணவு பரிமாறினார்! இந்நிகழ்ச்சிகள் குறித்து ஆளுநர் மாளிகையின் அதிகாரபூர்வ டிவிட்டர் பக்கத்தில் வெளியிடப்பட்ட செய்திகள்…
ஆளுநர் திரு. ஆர்.என். ரவி, திருமதி. லக்ஷ்மி ரவி அவர்கள், திருவள்ளுவர் தினத்தில் தெய்வப்புலவர் திருவள்ளுவருக்கு ராமநாதபுரம் மாவட்டத்தில் உள்ள அரசு சுற்றுலா மாளிகையில் மலர் தூவி மரியாதை செலுத்தினார்.
ராமேஸ்வரம் அருள்மிகு ஸ்ரீ ராமநாதசுவாமி கோயிலில் ஆளுநர் மற்றும் லேடி கவர்னர் தரிசனம் மற்றும் பூஜை செய்து, தமிழக சகோதர சகோதரிகளின் நலனுக்காகவும் பாரத மாதாவின் மேன்மைக்காகவும் வேண்டிக் கொண்டனர்.
ஆளுநர் திரு. ரவி மற்றும் லேடி கவர்னர் திருமதி. லக்ஷ்மி ரவி அவர்கள், ராமேஸ்வரம் அருள்மிகு ஸ்ரீ ராமநாதசுவாமி கோயில் பிரகாரத்தைச் சுற்றி தூய்மைப்பணியில் ஈடுபட்டனர். இங்குள்ள புனித சிவலிங்கத்தை பிரபு ஸ்ரீ ராமர் நிறுவி வழிபட்டார். ஆலய தூய்மைப் பணியில் தாமாக முன்வந்து பங்கேற்ற உள்ளூர் மக்களின் உற்சாகத்தைக் கண்டு நெஞ்சம் நெகிழ்கிறது. #ஒரேபாரதம்உன்னதபாரதம் என்ற நோக்கத்துடன் நாம் குதூகலிப்போம்!
“ராமேஸ்வரம் அருகே உள்ள திருப்புல்லாணியில் தசரத மன்னர் புத்திர காமேஷ்டி பூஜை மற்றும் தர்பசயனத்தில் பிரபு ஸ்ரீ ராமர் இருக்கும் ஸ்ரீ ஆதிஜெகநாத பெருமாள் திருக்கோயிலில் தரிசனம் செய்யும் பாக்கியம் பெற்றேன். இங்கு தர்பையில் சயன கோலத்தில் ஓய்வெடுத்தபோதுதான் பிரபு ஸ்ரீ ராமர், இலங்கைக்கு பாலத்தை கட்ட முடிவெடுத்தார். இப்பகுதி முழுவதும் ஸ்ரீ ராமரின் புராண கதைகளால் நிரம்பியுள்ளது. அயோத்தியில் பிரமாண்டமான பிரபு ஸ்ரீராமர் கோயிலின் திறப்பு விழா ஜனவரி 22-ஆம் தேதி நடைபெறவிருக்கும் நிலையில் உள்ளூர் மக்களிடையே முழு அளவிலான உற்சாகம் நிலவுகிறது. நமது பன்முக மக்கள் மற்றும் இடங்களுக்கு மத்தியில் ஒரே குடும்பம் என்ற தீவிர உணர்ச்சிப் பிணைப்பு, பாரதத்தின் எண்ணத்தையும் அடையாளத்தையும் உருவாக்கி நிலைநிறுத்துகிறது.” – ஆளுநர் ரவி
ஆளுநர் திரு. ரவி மற்றும் லேடி கவர்னர் திருமதி. லக்ஷ்மி ரவி அவர்கள், ராமேஸ்வரம் அருள்மிகு ஸ்ரீ ராமநாதசுவாமி கோயில் பிரகாரத்தைச் சுற்றி தூய்மைப்பணியில் ஈடுபட்டனர். இங்குள்ள புனித சிவலிங்கத்தை பிரபு ஸ்ரீ ராமர் நிறுவி வழிபட்டார். ஆலய தூய்மைப் பணியில் தாமாக முன்வந்து பங்கேற்ற உள்ளூர் மக்களின் உற்சாகத்தைக் கண்டு நெஞ்சம் நெகிழ்கிறது. #ஒரேபாரதம்உன்னதபாரதம் என்ற நோக்கத்துடன் நாம் குதூகலிப்போம்!
ஆளுநர் ரவி அவர்கள், ராமேஸ்வரத்தில் உள்ள மனவள சவால்களை எதிர்கொள்வோருக்கான மனோலயா இல்லத்தை பார்வையிட்டார். இங்கிருப்பவர்கள் நாடு முழுவதிலும் இருந்து வந்தவர்கள். மனநல சவால்களை எதிர்கொள்வோருக்கு தங்களிடம் உள்ள சொற்ப வளங்களைக் கொண்டு ‘மனோலயா’ அனைத்து நெருங்கிய பராமரிப்பை வழங்கி வருவது, நமது கலாசாரத்தில் இயற்கையாக உள்ள சேவை மனோபாவத்தை பிரதிபலிக்கிறது. இதன் அங்கத்தினர் அனைவருக்கும் நமது வணக்கங்களும் நல்வாழ்த்துகளும்.