IPL 2025: மீண்டும் மும்பைக்கு எதிராக வென்ற பெங்களூர்

ipl 2025 games - 2026

முனைவர் கு.வை. பாலசுப்பிரமணியன்

ஐ.பி.எல் 2025 – பெங்களூரு vs மும்பை – வான்கடே, மும்பை – 07.04.2025

ராயல் சேலஞ்சர்ஸ் அணி (221/5, விராட் கோலி 67, ரஜத் படிதர் 64, ஜிதேஷ் ஷர்மா ஆட்டமிழக்காமல் 40, தேவதத் படிக்கல் 37, ட்ரண்ட் போல்ட் 2/57, ஹார்திக் பாண்ட்யா 2/45, விக்னேஷ் புதூர் 1/10) மும்பை இந்தியன்ஸ் அணியை (209/9, திலக் வர்மா 56, ஹார்திக பாண்ட்யா 42, சூர்யகுமார் யாதவ் 28, வில் ஜேக்ஸ் 22, ரியன் ரிக்கிள்டன் 17, ரோஹித் ஷர்மா 17, க்ருணால் பாண்ட்யா 4/45, ஹேசல்வுட் 2/37, யஷ் தயாள் 2/46, புவனேஷ் குமார் 1/48) 12 ரன்கள் வித்தியாசத்தில் வென்றது.

          பூவாதலையா வென்ற மும்பை அணி முதலில் பந்துவீசத் தீர்மானித்தது. எனவே முதலில் மட்டையாட வந்த பெங்களூரு அணியின் தொடக்க வீரர் பில் சால்ட் (4 ரன்) முதல் ஓவரிலேயே ஆட்டமிழந்தார்.

மற்றொரு தொடக்க வீரரான விராட் கொலி (42 பந்துகளில் 67 ரன், 8 ஃபோர், 2 சிக்சர்), தேவதத் படிக்கல் (22 பந்துகளில் 37 ரன், 2 ஃபோர், 3 சிக்சர்) மற்றும் ரஜத் படிதர் (32 பந்துகளில் 64 ரன், 5 ஃபோர், 4 சிக்சர்) ஆகிய மூவரும் சிறப்பாக ஆடினர். கடைசிக் கட்டத்தில் ஜிதேஷ் சர்மா 4 சிக்ஸ் 2 ஃபோர் அடித்து, 19 பந்தில் 40 ரன் எடுத்து அதிரடி காட்ட,  பெங்களூர் அணி சிறப்பான ஸ்கோர் பெற்றது. 20 ஓவர் முடிவில் 5 விக்கெட் இழப்புக்கு 221 ரன் எடுத்தது.

ALSO READ:  மக்கள் தீர்ப்பு 2026: ஐந்து மாநிலங்களில் என்ன நிலைமை?

222 ரன் என்ற கடின வெற்றி இலக்குடன் களத்தில் இறங்கிய மும்பை அணியில், தொடக்க வீரர்களான ரோஹித் சர்மா மற்றும் ரயன் ரிக்கல்டன் இருவரும் சொற்ப ரன்னில் ஆட்டமிழந்து அதிர்ச்சி கொடுத்தனர். 9 பந்தில் 1 சிக்ஸ் 2 ஃபோர் உடன் 17 ரன் அடித்து ஆட்டமிழந்தார் ரோஹித் சர்மா. ரிக்கல்டன் 17 ரன்னுடனும், வில் ஜோக்ஸ் 22 ரன்னுடனும் நடையைக் கட்டினார்கள். அதிரடி காட்டுவார் என்று பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட சூரிய குமார் யாதவ், பந்துக்கு ஒரு ரன் என்ற நிலையில் 26 பந்தில் 28 ரன்களே எடுத்தார். இதில் 5 ஃபோர்கள். மீதமுள்ள பந்துகளை வீணடித்தார்.

திலக் வர்மாவும் பாண்டியாவும் அதிரடி காட்டி ரசிகர்களை மகிழ்வித்தார்கள். வர்மா 29 பந்துகளில் தலா 4 ஃபோர், சிக்ஸ்களுடன் 56 ரன்களை குவித்தார். அதிரடி காட்டிய பாண்டியா 15 பந்தில் 4 சிக்ஸ் 3 ஃபோர்களுடன் 42 ரன் குவித்தார். எனினும் பின்னர் வந்தவர்கள் சொற்ப ரன்களில் ஆட்டம் இழக்க மும்பை அணி 20 ஓவர்களில் 9 விக்கெட் இழந்து 209 ரன்களே எடுக்க முடிந்தது.

ALSO READ:  போர்ச் சூழலிலும், இந்தியாவின் பொருளாதார வளர்ச்சி நிலையாக இருக்கும்!

இதனால் பெங்களூர் அணி 12 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

பஞ்சாங்கம் ஜூன் 2 – செவ்வாய் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம் தகவல்கள், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய ராசி பலன்கள், திருக்குறள், சிந்தனைகள்...

அண்ணாமலையில் அரசியல் பயணம் இனி…!

அண்ணாமலை தனிக்கட்சியா என்ற கேள்வி தான் உள்ளூர் மீடியா முதல் நேஷனல் மீடியா வரை விவாதிக்கப்படுகிறது. அண்ணாமலை தனிக்கட்சி ஆரம்பிக்கப்போகிறார் என்று வதந்தி கிளம்புவது இது ஒன்றும் முதல் முறை கிடையாது.

பழங்குடியினர் சலுகைகள் – யாருக்கு?

பழங்குடியினரின் இந்த உணர்வுபூர்வமான கோரிக்கை கடந்த 60 ஆண்டுகளுக்கும் மேலாக கவனிக்கப்படாமல் உள்ளது. இப்போது ஜார்கண்ட் எனப்படும் பகுதியில் இருந்து 1960 இல் கார்த்திக் ஓரான் என்ற பழங்குடியின நாடாளுமன்ற உறுப்பினர் காங்கிரஸ் கட்சி சார்பில் தேர்ந்தெடுக்கப்பட்டார். அவர்தான் மதம் மாறியவர்களுக்கு சலுகை கூடாது என்ற விஷயத்தை முதன் முதலில் எழுப்பினார்.

வங்கத் தீர்ப்பு: இந்திய அரசியலில் நிலநடுக்கம்!

நேற்று எனக்கு ஒரு தகவல் கூறப்பட்டது. 'இண்டி' கூட்டணியில் உள்ள எந்தக் கட்சித் தலைவர்களும் மம்தா பானர்ஜியின் தொலைபேசி அழைப்புகளை எடுக்கவில்லை என்று கூறப்பட்டது. சில மாதங்களுக்கு முன்பு இதை நினைத்துக்கூட பார்க்க முடியாது. ஆனால் அது இனி வெளிப்படவிருக்கும் நிகழ்வுகளுக்கான ஒரு முன்னோட்டம் மட்டுமே.

முப்பெரும் ஊழல்களில் முதற் பெரும் ஊழல் துறை!

அற நிலையத்துறையைப் போன்ற சட்ட விரோதமான, சாசன விரோதமான, சமூக விரோதமான, சனாதன விரோதமான ஒரு அமைப்பு இந்த உலகில் எங்குமே இருக்கமுடியாது. உலகிலேயே சனாதன வாழ்வியல் ஆதி காலம் தொட்டு உன்னத நிலையில் இருந்துவந்த தமிழகத்தில்தான் இந்த நிலைமை என்பது மிகப் பெரிய, மிக வேதனையான நகைமுரண் தான்.

Topics

பஞ்சாங்கம் ஜூன் 2 – செவ்வாய் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம் தகவல்கள், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய ராசி பலன்கள், திருக்குறள், சிந்தனைகள்...

அண்ணாமலையில் அரசியல் பயணம் இனி…!

அண்ணாமலை தனிக்கட்சியா என்ற கேள்வி தான் உள்ளூர் மீடியா முதல் நேஷனல் மீடியா வரை விவாதிக்கப்படுகிறது. அண்ணாமலை தனிக்கட்சி ஆரம்பிக்கப்போகிறார் என்று வதந்தி கிளம்புவது இது ஒன்றும் முதல் முறை கிடையாது.

பழங்குடியினர் சலுகைகள் – யாருக்கு?

பழங்குடியினரின் இந்த உணர்வுபூர்வமான கோரிக்கை கடந்த 60 ஆண்டுகளுக்கும் மேலாக கவனிக்கப்படாமல் உள்ளது. இப்போது ஜார்கண்ட் எனப்படும் பகுதியில் இருந்து 1960 இல் கார்த்திக் ஓரான் என்ற பழங்குடியின நாடாளுமன்ற உறுப்பினர் காங்கிரஸ் கட்சி சார்பில் தேர்ந்தெடுக்கப்பட்டார். அவர்தான் மதம் மாறியவர்களுக்கு சலுகை கூடாது என்ற விஷயத்தை முதன் முதலில் எழுப்பினார்.

வங்கத் தீர்ப்பு: இந்திய அரசியலில் நிலநடுக்கம்!

நேற்று எனக்கு ஒரு தகவல் கூறப்பட்டது. 'இண்டி' கூட்டணியில் உள்ள எந்தக் கட்சித் தலைவர்களும் மம்தா பானர்ஜியின் தொலைபேசி அழைப்புகளை எடுக்கவில்லை என்று கூறப்பட்டது. சில மாதங்களுக்கு முன்பு இதை நினைத்துக்கூட பார்க்க முடியாது. ஆனால் அது இனி வெளிப்படவிருக்கும் நிகழ்வுகளுக்கான ஒரு முன்னோட்டம் மட்டுமே.

முப்பெரும் ஊழல்களில் முதற் பெரும் ஊழல் துறை!

அற நிலையத்துறையைப் போன்ற சட்ட விரோதமான, சாசன விரோதமான, சமூக விரோதமான, சனாதன விரோதமான ஒரு அமைப்பு இந்த உலகில் எங்குமே இருக்கமுடியாது. உலகிலேயே சனாதன வாழ்வியல் ஆதி காலம் தொட்டு உன்னத நிலையில் இருந்துவந்த தமிழகத்தில்தான் இந்த நிலைமை என்பது மிகப் பெரிய, மிக வேதனையான நகைமுரண் தான்.

பஞ்சாங்கம் ஜூன் 1 – திங்கள் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான பலன்கள், நட்சத்திர பலன்கள், அதிர்ஷ்ட எண்கள், அதிர்ஷ்ட நிறம், திருக்குறள், சிந்தனைகள்...

ராஜபாளையம் வழியே திருவனந்தபுரம் – கோவை சிறப்பு ரயில் அறிவிப்பு

கோடைகால சிறப்பு ரயிலாக திருவனந்தபுரம் வடக்கு - போத்தனூர் மற்றும் போத்தனூர் - திருவனந்தபுரம் சென்ட்ரல் இடையே தென்னக ரயில்வே அறிவித்துள்ளது.

Entertainment News

Popular Categories