IPL 2025: மீண்டும் மும்பைக்கு எதிராக வென்ற பெங்களூர்

ipl 2025 games - 2026

முனைவர் கு.வை. பாலசுப்பிரமணியன்

ஐ.பி.எல் 2025 – பெங்களூரு vs மும்பை – வான்கடே, மும்பை – 07.04.2025

ராயல் சேலஞ்சர்ஸ் அணி (221/5, விராட் கோலி 67, ரஜத் படிதர் 64, ஜிதேஷ் ஷர்மா ஆட்டமிழக்காமல் 40, தேவதத் படிக்கல் 37, ட்ரண்ட் போல்ட் 2/57, ஹார்திக் பாண்ட்யா 2/45, விக்னேஷ் புதூர் 1/10) மும்பை இந்தியன்ஸ் அணியை (209/9, திலக் வர்மா 56, ஹார்திக பாண்ட்யா 42, சூர்யகுமார் யாதவ் 28, வில் ஜேக்ஸ் 22, ரியன் ரிக்கிள்டன் 17, ரோஹித் ஷர்மா 17, க்ருணால் பாண்ட்யா 4/45, ஹேசல்வுட் 2/37, யஷ் தயாள் 2/46, புவனேஷ் குமார் 1/48) 12 ரன்கள் வித்தியாசத்தில் வென்றது.

          பூவாதலையா வென்ற மும்பை அணி முதலில் பந்துவீசத் தீர்மானித்தது. எனவே முதலில் மட்டையாட வந்த பெங்களூரு அணியின் தொடக்க வீரர் பில் சால்ட் (4 ரன்) முதல் ஓவரிலேயே ஆட்டமிழந்தார்.

மற்றொரு தொடக்க வீரரான விராட் கொலி (42 பந்துகளில் 67 ரன், 8 ஃபோர், 2 சிக்சர்), தேவதத் படிக்கல் (22 பந்துகளில் 37 ரன், 2 ஃபோர், 3 சிக்சர்) மற்றும் ரஜத் படிதர் (32 பந்துகளில் 64 ரன், 5 ஃபோர், 4 சிக்சர்) ஆகிய மூவரும் சிறப்பாக ஆடினர். கடைசிக் கட்டத்தில் ஜிதேஷ் சர்மா 4 சிக்ஸ் 2 ஃபோர் அடித்து, 19 பந்தில் 40 ரன் எடுத்து அதிரடி காட்ட,  பெங்களூர் அணி சிறப்பான ஸ்கோர் பெற்றது. 20 ஓவர் முடிவில் 5 விக்கெட் இழப்புக்கு 221 ரன் எடுத்தது.

ALSO READ:  டெட் மறு ஆய்வு மனு மீதான தீர்ப்பில் உடனடி சட்ட நிவாரணம் தேவை!

222 ரன் என்ற கடின வெற்றி இலக்குடன் களத்தில் இறங்கிய மும்பை அணியில், தொடக்க வீரர்களான ரோஹித் சர்மா மற்றும் ரயன் ரிக்கல்டன் இருவரும் சொற்ப ரன்னில் ஆட்டமிழந்து அதிர்ச்சி கொடுத்தனர். 9 பந்தில் 1 சிக்ஸ் 2 ஃபோர் உடன் 17 ரன் அடித்து ஆட்டமிழந்தார் ரோஹித் சர்மா. ரிக்கல்டன் 17 ரன்னுடனும், வில் ஜோக்ஸ் 22 ரன்னுடனும் நடையைக் கட்டினார்கள். அதிரடி காட்டுவார் என்று பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட சூரிய குமார் யாதவ், பந்துக்கு ஒரு ரன் என்ற நிலையில் 26 பந்தில் 28 ரன்களே எடுத்தார். இதில் 5 ஃபோர்கள். மீதமுள்ள பந்துகளை வீணடித்தார்.

திலக் வர்மாவும் பாண்டியாவும் அதிரடி காட்டி ரசிகர்களை மகிழ்வித்தார்கள். வர்மா 29 பந்துகளில் தலா 4 ஃபோர், சிக்ஸ்களுடன் 56 ரன்களை குவித்தார். அதிரடி காட்டிய பாண்டியா 15 பந்தில் 4 சிக்ஸ் 3 ஃபோர்களுடன் 42 ரன் குவித்தார். எனினும் பின்னர் வந்தவர்கள் சொற்ப ரன்களில் ஆட்டம் இழக்க மும்பை அணி 20 ஓவர்களில் 9 விக்கெட் இழந்து 209 ரன்களே எடுக்க முடிந்தது.

ALSO READ:  சாத்தூர் அருகே பட்டாசு ஆலையில் தீவிபத்து..

இதனால் பெங்களூர் அணி 12 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

பஞ்சாங்கம் ஜூலை 12 – ஞாயிறு | இன்றைய ராசி பலன்கள்!

பஞ்சாங்கம், தினசரி திதி நட்சத்திரம் நல்ல நேரம் ராகு காலம் எமகண்டம் பன்னிரு ராசிகளின் ராசிபலன்கள் தினம் ஒரு திருக்குறள்

விதிமீறல் பட்டாசு ஆலைகளின் உரிமங்களை ரத்து செய்து போலீஸார் நடவடிக்கை!

மேலும் இது போன்ற தொடர் ஆய்வுகள் நடத்தப்படும் எனவும் விதிமீறல்கள் கண்டறியப்பட்டால் உரிமைத்தை தற்காலிகமாக ரத்து செய்யும் நடவடிக்கை தொடரும் எனவும் அதிகாரிகள் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.

சிவகாசி அச்சக அதிபர் வீட்டில் கொள்ளை; கொள்ளையர்களுக்கு அடைக்கலம் கொடுத்த 4 பேர் கைது!

விருதுநகர் மாவட்டம், சிவகாசியில் அச்சக அதிபர் வீட்டில் 75 பவுன் நகையை கொள்ளையடித்த கொள்ளையர்களுக்கு அடைக்கலம் கொடுத்து கொள்ளைக்கு உதவியதாக 4 பேரை போலீசார் கைது செய்தனர்!

பிரபல பின்னணி பாடகி எஸ்.ஜானகி மைசூரில் காலமானார்!

பல ஆயிரக்கணக்கான பாடல்களால் ரசிகர்களைக் கவர்ந்து இழுத்த பிரபல பின்னணிப் பாடகி எஸ். ஜானகி தமது 88வது வயதில் மைசூரில் இன்று காலமானார்.

முக்கிய அரசு விழாக்களில் ‘வந்தே மாதரம்’ பாடலே முதலில் : உள்துறை அமைச்சகம்!

இந்தியாவின் தேசியப் பாடலான 'வந்தே மாதரம்'-பாடலை இசைப்பது அல்லது பாடுவது குறித்த விரிவான வழிகாட்டுதல்களை அரசு வெளியிட்டுள்ளது.

Topics

பஞ்சாங்கம் ஜூலை 12 – ஞாயிறு | இன்றைய ராசி பலன்கள்!

பஞ்சாங்கம், தினசரி திதி நட்சத்திரம் நல்ல நேரம் ராகு காலம் எமகண்டம் பன்னிரு ராசிகளின் ராசிபலன்கள் தினம் ஒரு திருக்குறள்

விதிமீறல் பட்டாசு ஆலைகளின் உரிமங்களை ரத்து செய்து போலீஸார் நடவடிக்கை!

மேலும் இது போன்ற தொடர் ஆய்வுகள் நடத்தப்படும் எனவும் விதிமீறல்கள் கண்டறியப்பட்டால் உரிமைத்தை தற்காலிகமாக ரத்து செய்யும் நடவடிக்கை தொடரும் எனவும் அதிகாரிகள் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.

சிவகாசி அச்சக அதிபர் வீட்டில் கொள்ளை; கொள்ளையர்களுக்கு அடைக்கலம் கொடுத்த 4 பேர் கைது!

விருதுநகர் மாவட்டம், சிவகாசியில் அச்சக அதிபர் வீட்டில் 75 பவுன் நகையை கொள்ளையடித்த கொள்ளையர்களுக்கு அடைக்கலம் கொடுத்து கொள்ளைக்கு உதவியதாக 4 பேரை போலீசார் கைது செய்தனர்!

பிரபல பின்னணி பாடகி எஸ்.ஜானகி மைசூரில் காலமானார்!

பல ஆயிரக்கணக்கான பாடல்களால் ரசிகர்களைக் கவர்ந்து இழுத்த பிரபல பின்னணிப் பாடகி எஸ். ஜானகி தமது 88வது வயதில் மைசூரில் இன்று காலமானார்.

முக்கிய அரசு விழாக்களில் ‘வந்தே மாதரம்’ பாடலே முதலில் : உள்துறை அமைச்சகம்!

இந்தியாவின் தேசியப் பாடலான 'வந்தே மாதரம்'-பாடலை இசைப்பது அல்லது பாடுவது குறித்த விரிவான வழிகாட்டுதல்களை அரசு வெளியிட்டுள்ளது.

ஆக்கிரமிப்பாளர்களுக்கே கோயில் சொத்துகளை பட்டா போடுவதா? தவெக., அரசுக்கு வலுக்கும் கண்டனங்கள்!

அரசு நிலத்தை ஆக்கிரமிப்பது சட்டவிரோதம் என்றால் கோவில் நிலத்தை ஆக்கிரமித்து அபகரிப்பதை தமிழக அரசு அனுமதிக்கலாமா?

அருந்தமிழ் 50: திறனாய்வு!

கவிஞர் ஜெயஸ்ரீ எம்.சாரி அவர்கள் அருந்தமிழ் என்னும் தலைப்பில் அருமையான புதுக்கவிதைகள் 50 வகையான தலைப்புகளில் கவிதைகளைத் தந்துள்ளார்.

பாகிஸ்தானுடன் கொல்லைப்புற வழியில் பேச்சுவார்த்தையா?

அதன் உண்மை நிறத்தை உள்ளபடியே தெரிந்ததால் 'பயங்கரவாதமும் பேச்சுவார்த்தையும் ஒன்றாக பயணிக்காது' என்ற கொள்கையில் இந்தியா உறுதியாக உள்ளது. இதைத்தான் கொழும்பு உட்பட எல்லா மேடைகளிலும் இந்தியா தொடர்ந்து சொல்லி வருகிறது.

Entertainment News

Popular Categories