இணையத்தில் தொழிற் பயிற்சிக்கு அழைப்புக் கடிதம்

Published:

சென்னை: தென் மாநிலங்களில் உள்ள மாணவர்கள், பட்டதாரிகள் தொழிற்பயிற்சி பெறுவதற்கான அழைப்புக் கடிதத்தை தற்போது இணையத்தில் இருந்தே பதிவிறக்கம் செய்துகொள்ளலாம். இதற்கான வசதியை தென் மண்டல தொழில் பயிற்சி வாரியம் செய்துள்ளது. இணைய ஆட்சி முறையின் முயற்சிகளில் ஒன்றாக இந்த புதிய முயற்சி செய்யப்பட்டுள்ளதாக தொழில் பயிற்சி வாரிய இயக்குநர் ஏ. ஐய்யாகண்ணு தெரிவித்துள்ளார். இந்த வாரியத்தின் இணைய ஆட்சி முறை முயற்சிகள் பற்றி செய்தியாளர்களிடம் தெரிவித்துள்ளார். அவர் மேலும் கூறுகையில், தமிழ்நாடு உற்பத்தி மற்றும் விநியோகக் கழகம், தமிழ்நாடு ஒலிபரப்பு கழகம் ஆகியவற்றின் தொழில் பயிற்சிக்கான தேர்வுகளில் இந்த முயற்சி தொடங்கப்பட்டுள்ளது என்று குறிப்பிட்டார். இந்த தேர்வு நான்கு கட்டமாக நடைப்பெற உள்ளது. முதல் கட்ட தேர்வு வேலூரில் வரும் 2ம் தேதி முதல் 6ம் தேதி வரை நடைப்பெற உள்ளது. இந்த தேர்வுக்கு தேர்ச்சி பெற்ற மாணவர்கள் தங்களுக்கான அழைப்புக் கடிதத்தை இன்று முதல் இணையத்தின் வாயிலாக எளிய முறையில் பதிவிறக்கம் செய்து கொள்ளலாம். மற்ற மாவட்டங்களுக்கான தேர்வு அட்டவணையை இந்த வாரியத்தின் இணைய தளத்தின் மூலம் தெரிந்துக் கொள்ளலாம். கிராமப்புற மாணவ மாணவியர்கள் எந்தவித தடையும் இன்றி தொழில் பயிற்சி பெற்றிட தென் மண்டல தொழில் பயிற்சி வாரியம் ஒருங்கிணைந்த நேர்காணல் நிகழ்ச்சியினை பல்வேறு இடங்கிளில் நடத்தி வருகிறது. அவ்வகையில் 31.01.2015 அன்று லதா மாதவன் பொறியியல் கல்லூரி, கிடாரிப்பட்டி, அழகர்கோவில், மதுரையில் அதனை தொடர்ந்து பிப்ரவரி 2015ல் திருவண்ணாமலை மற்றும் ஆத்தூர் பகுதிகளிலும் நேர்காணல் நிகழ்ச்சியினை நடத்த திட்டமிட்டுள்ளது.

ALSO READ:  அயோத்தி ராமர் கோவில் நிதி முறைகேடு விவகாரத்தில் கடும் நடவடிக்கை தேவை: ஆர்எஸ்எஸ்.,

Related articles

Recent articles

spot_img