ஒரு மாத கோடை விடுமுறைக்குப்பின் உயர் நீதிமன்றம் இன்று திறப்பு : முதல் வாரத்திலேயே முக்கிய வழக்குகளில் தீர்ப்பு?

16 June03 high court - 2026கோடை விடுமுறைக்குப் பிறகு இன்று உயர் நீதிமன்றம் மற்றும் உயர் நீதிமன்ற மதுரைக் கிளை வழக்கம்போல் மீண்டும் செயல்படத் தொடங்குகிறது.

முதல் வாரத்தில் 18 எம்எல்ஏக்கள் நீக்கத்தை எதிர்த்து தொடரப்பட்ட வழக்கு உள்ளிட்ட முக்கிய வழக்குகளில் தீர்ப்பு வரலாம் என்று எதிர்பார்கப்படுகிறது.

சென்னை உயர் நீதிமன்றம் மற்றும் உயர் நீதிமன்ற மதுரைக் கிளைக்கு மே 1ம் தேதி முதல் ஜூன் 3ம் தேதி வரை கோடை விடுமுறை விடப்பட்டது. இதையடுத்து, விடுமுறை காலத்தில் ஒவ்வொரு வாரமும் விடுமுறை கால நீதிமன்றங்கள் இயங்கின. இதில் ஒரு டிவிஷன் பெஞ்ச் மற்றும் 3 தனி நீதிபதிகள் வழக்குகளை விசாரித்து வந்தனர்.

இந்த விடுமுறைகால நீதிமன்றங்களில் பிஇ மாணவர் சேர்க்கை விண்ணப்பம் தொடர்பான வழக்கு, நிர்மலாதேவி மீதான வழக்கு சிபிஐ விசாரிக்க கோரி வழக்கு, எஸ்வி சேகர் முன்ஜாமீன் வழக்கு, கார்த்தி சிதம்பரம் மீதான கருப்பு பண மோசடி வழக்கு, சிபிஎஸ்இ பாடத்திட்டம் தொடர்பான வழக்கு, தூத்துக்குடி துப்பாக்கி சூடு சம்பவம் தொடர்பான வழக்கு உள்ளிட்ட பல முக்கிய வழக்குகள் விசாரிக்கப்பட்டு உத்தரவுகள் பிறப்பிக்கப்பட்டன. விடுமுறைகால நீதிமன்றங்கள் வழக்கம்போல நடைபெறும் நீதிமன்றங்களைப்போல் வாரம் முழுவதும் பரபரப்பாக செயல்பட்டது குறிப்பிடத்தக்கது.
இந்நிலையில், கோடை விடுமுறைக்குப் பிறகு வழக்கம்போல் உயர் நீதிமன்றம் தனது பணிகளை இன்று தொடங்குகிறது.

உயர் நீதிமன்றத்தில் 18 எம்எல்ஏக்கள் தகுதி நீக்கம் செய்யப்பட்டதை எதிர்த்து தொடரப்பட்ட வழக்கு, போலீஸ் ஆர்டலிகள் நியமனம் வழக்கு உள்ளிட்ட பல முக்கிய வழக்குகளில் தீர்ப்புகள் தேதி குறிப்பிடப்படாமல் ஒத்துவைக்கப்பட்டுள்ளன. இந்நிலையில், உயர் நீதிமன்றம் இன்று வழக்கம்போல் செயல்படத் தொடங்குவதால் இந்த முக்கிய வழக்குகளில் தீர்ப்புகள் முதல் வாரத்திலேயே வெளிவரலாம் என்று வக்கீல்கள் மத்தியிலும், அரசியல் கட்சிகள் மத்தியிலும் எதிர்பார்க்கப்படுகிறது.

மேலும், தூத்துக்குடி துப்பாக்கிச் சூடு சம்பவம் தொடர்பான வழக்கை சிபிஐ விசாரணை நடத்துமாறு உத்தரவிடக் கோரிய வழக்கு தலைமை நீதிபதி அடங்கிய முதல் டிவிஷன் பெஞ்சில் விசாரணைக்கு வரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

இதுபோன்ற பல்வேறு எதிர்பார்ப்புக்கள் உள்ளதால் இந்த வாரம் மிகவும் காரசாரமாக இருக்கும் என்று கூறப்படுகிறது.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

பஞ்சாங்கம் ஏப்ரல் 24 – வெள்ளி | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய பலன்கள், திருக்குறள், நற்சிந்தனை

பஞ்சாங்கம் ஏப்ரல் 23 – வியாழன்| இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரண்டு ராசிகளுக்கும் உள்ள இன்றைய ராசிபலன்கள், திருக்குறள், சிந்தனைகள்....

மின்னணு வாக்குப் பதிவு இயந்திரம் இந்தியாவுக்குப் பெருமை! : டி.எஸ்.கிருஷ்ணமூர்த்தி

டி.எஸ்.கிருஷ்ணமூர்த்தி என்கிற தருவை சுப்பைய கிருஷ்ணமூர்த்தி திருநெல்வேலிக்காரர். பட்டப்படிப்பு பெங்களூரில். மைசூர் பல்கலைக் கழகத்தில் தங்கப்பதக்கம் பெற்றவர். இங்கிலாந்தில் பட்டமேற்படிப்பு படித்தவர்.

ஞானமும் பக்தியும் கலந்த கொள்கை!

வெளிப்பார்வைக்கு எந்த மதத்தைச் சேர்ந்தவர்களாயிருந்தாலும். ஸாதாரணப் புத்திசாலிகள் தெரிந்தோ, தெரியாமலோ இந்த விசிஷ்டாத்வைத மதத்தையே பின்பற்றி, இம்மதக் கொள்கைகளையே அனுசரிக்கின்றார்கள்.

பஞ்சாங்கம் – ஏப்ரல் 22 – புதன் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், ராசிபலன்கள், ஜோதிடம், பொன்மொழிகள், திருக்குறள்,

Topics

பஞ்சாங்கம் ஏப்ரல் 24 – வெள்ளி | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய பலன்கள், திருக்குறள், நற்சிந்தனை

பஞ்சாங்கம் ஏப்ரல் 23 – வியாழன்| இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரண்டு ராசிகளுக்கும் உள்ள இன்றைய ராசிபலன்கள், திருக்குறள், சிந்தனைகள்....

மின்னணு வாக்குப் பதிவு இயந்திரம் இந்தியாவுக்குப் பெருமை! : டி.எஸ்.கிருஷ்ணமூர்த்தி

டி.எஸ்.கிருஷ்ணமூர்த்தி என்கிற தருவை சுப்பைய கிருஷ்ணமூர்த்தி திருநெல்வேலிக்காரர். பட்டப்படிப்பு பெங்களூரில். மைசூர் பல்கலைக் கழகத்தில் தங்கப்பதக்கம் பெற்றவர். இங்கிலாந்தில் பட்டமேற்படிப்பு படித்தவர்.

ஞானமும் பக்தியும் கலந்த கொள்கை!

வெளிப்பார்வைக்கு எந்த மதத்தைச் சேர்ந்தவர்களாயிருந்தாலும். ஸாதாரணப் புத்திசாலிகள் தெரிந்தோ, தெரியாமலோ இந்த விசிஷ்டாத்வைத மதத்தையே பின்பற்றி, இம்மதக் கொள்கைகளையே அனுசரிக்கின்றார்கள்.

பஞ்சாங்கம் – ஏப்ரல் 22 – புதன் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், ராசிபலன்கள், ஜோதிடம், பொன்மொழிகள், திருக்குறள்,

ராஜபாளையம் பெரிய மாரியம்மன் கோயில் சித்திரை திருவிழா துவக்கம்

ராஜபாளையம் தென்காசி சாலையில் உள்ள புதுப்பாளையம் பெரிய மாரியம்மன் கோயிலில் ஆண்டுதோறும்...

ஹிந்து விரோதிகளைத் தோற்கடிக்க… நமக்கான ஆளுமைகளைத் தேர்ந்தெடுப்போம்!

ஜனநாயக கடமையை ஆற்றுவோம்.. 100% வாக்களிப்போம். தமிழகத்தில் நமக்கான ஆளுமையை நாம்...

ஆதிசங்கரரின் சதச்லோகி – எளிய விளக்கம்!

காசியில் ஸ்ரீ பகவத்பாதர் தம் 9 - 12 வயதுக்குள் ப்ரஸ்தானத்ரய பாஷ்யங்களை இயற்றினார். அவற்றில் சொல்லப்பட்ட விஷயங்களை மக்கள் எளிதில் புரிந்து கொள்ள 100 சுலோகங்களில் ஆன சதச்லோகியை இயற்றினார்.

Entertainment News

Popular Categories