ஒரு மாத கோடை விடுமுறைக்குப்பின் உயர் நீதிமன்றம் இன்று திறப்பு : முதல் வாரத்திலேயே முக்கிய வழக்குகளில் தீர்ப்பு?

16 June03 high court - 2026கோடை விடுமுறைக்குப் பிறகு இன்று உயர் நீதிமன்றம் மற்றும் உயர் நீதிமன்ற மதுரைக் கிளை வழக்கம்போல் மீண்டும் செயல்படத் தொடங்குகிறது.

முதல் வாரத்தில் 18 எம்எல்ஏக்கள் நீக்கத்தை எதிர்த்து தொடரப்பட்ட வழக்கு உள்ளிட்ட முக்கிய வழக்குகளில் தீர்ப்பு வரலாம் என்று எதிர்பார்கப்படுகிறது.

சென்னை உயர் நீதிமன்றம் மற்றும் உயர் நீதிமன்ற மதுரைக் கிளைக்கு மே 1ம் தேதி முதல் ஜூன் 3ம் தேதி வரை கோடை விடுமுறை விடப்பட்டது. இதையடுத்து, விடுமுறை காலத்தில் ஒவ்வொரு வாரமும் விடுமுறை கால நீதிமன்றங்கள் இயங்கின. இதில் ஒரு டிவிஷன் பெஞ்ச் மற்றும் 3 தனி நீதிபதிகள் வழக்குகளை விசாரித்து வந்தனர்.

இந்த விடுமுறைகால நீதிமன்றங்களில் பிஇ மாணவர் சேர்க்கை விண்ணப்பம் தொடர்பான வழக்கு, நிர்மலாதேவி மீதான வழக்கு சிபிஐ விசாரிக்க கோரி வழக்கு, எஸ்வி சேகர் முன்ஜாமீன் வழக்கு, கார்த்தி சிதம்பரம் மீதான கருப்பு பண மோசடி வழக்கு, சிபிஎஸ்இ பாடத்திட்டம் தொடர்பான வழக்கு, தூத்துக்குடி துப்பாக்கி சூடு சம்பவம் தொடர்பான வழக்கு உள்ளிட்ட பல முக்கிய வழக்குகள் விசாரிக்கப்பட்டு உத்தரவுகள் பிறப்பிக்கப்பட்டன. விடுமுறைகால நீதிமன்றங்கள் வழக்கம்போல நடைபெறும் நீதிமன்றங்களைப்போல் வாரம் முழுவதும் பரபரப்பாக செயல்பட்டது குறிப்பிடத்தக்கது.
இந்நிலையில், கோடை விடுமுறைக்குப் பிறகு வழக்கம்போல் உயர் நீதிமன்றம் தனது பணிகளை இன்று தொடங்குகிறது.

உயர் நீதிமன்றத்தில் 18 எம்எல்ஏக்கள் தகுதி நீக்கம் செய்யப்பட்டதை எதிர்த்து தொடரப்பட்ட வழக்கு, போலீஸ் ஆர்டலிகள் நியமனம் வழக்கு உள்ளிட்ட பல முக்கிய வழக்குகளில் தீர்ப்புகள் தேதி குறிப்பிடப்படாமல் ஒத்துவைக்கப்பட்டுள்ளன. இந்நிலையில், உயர் நீதிமன்றம் இன்று வழக்கம்போல் செயல்படத் தொடங்குவதால் இந்த முக்கிய வழக்குகளில் தீர்ப்புகள் முதல் வாரத்திலேயே வெளிவரலாம் என்று வக்கீல்கள் மத்தியிலும், அரசியல் கட்சிகள் மத்தியிலும் எதிர்பார்க்கப்படுகிறது.

ALSO READ:  ‘அடிச்சி விடு’ புகழ், இப்போ ‘செல்லத் தட்டல்’ சேகர்பாபு ஆகிவிட்டார்: அண்ணாமலை கிண்டல்!

மேலும், தூத்துக்குடி துப்பாக்கிச் சூடு சம்பவம் தொடர்பான வழக்கை சிபிஐ விசாரணை நடத்துமாறு உத்தரவிடக் கோரிய வழக்கு தலைமை நீதிபதி அடங்கிய முதல் டிவிஷன் பெஞ்சில் விசாரணைக்கு வரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

இதுபோன்ற பல்வேறு எதிர்பார்ப்புக்கள் உள்ளதால் இந்த வாரம் மிகவும் காரசாரமாக இருக்கும் என்று கூறப்படுகிறது.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

பஞ்சாங்கம் – ஜூன் 3 – புதன் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், ராசிபலன்கள், ஜோதிடம், பொன்மொழிகள், திருக்குறள்,

தாமிரபரணிக் கரை ஆலயத்தில்… வழிபாட்டில் திருவள்ளுவர்!

தெய்வத் தமிழ் வளர்த்த நம் நெல்லையம்பதியில் தாமிரபரணிக் கரை சிவாலயம் ஒன்று திருவள்ளுவரை தெய்வத்தின் வரிசையில் தன்னுள் தாங்கியுள்ளது...

சோழவந்தான் ஜெனகை மாரியம்மன் வைகாசி தேரோட்டம் கோலாகலம்!

ஜெனகை மாரியம்மன் கோவில் அர்ச்சகர் சண்முகவேல் தலைமையில் அர்ச்சகர்கள் பூஜைகள் செய்தனர் வழிநெடுகிலும் பொதுமக்கள் தேங்காய் உடைத்து ஜெனகை மாரியம்மனுக்கு நேர்த்திக்கடன் செலுத்தினர்

பஞ்சாங்கம் ஜூன் 2 – செவ்வாய் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம் தகவல்கள், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய ராசி பலன்கள், திருக்குறள், சிந்தனைகள்...

அண்ணாமலையில் அரசியல் பயணம் இனி…!

அண்ணாமலை தனிக்கட்சியா என்ற கேள்வி தான் உள்ளூர் மீடியா முதல் நேஷனல் மீடியா வரை விவாதிக்கப்படுகிறது. அண்ணாமலை தனிக்கட்சி ஆரம்பிக்கப்போகிறார் என்று வதந்தி கிளம்புவது இது ஒன்றும் முதல் முறை கிடையாது.

Topics

பஞ்சாங்கம் – ஜூன் 3 – புதன் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், ராசிபலன்கள், ஜோதிடம், பொன்மொழிகள், திருக்குறள்,

தாமிரபரணிக் கரை ஆலயத்தில்… வழிபாட்டில் திருவள்ளுவர்!

தெய்வத் தமிழ் வளர்த்த நம் நெல்லையம்பதியில் தாமிரபரணிக் கரை சிவாலயம் ஒன்று திருவள்ளுவரை தெய்வத்தின் வரிசையில் தன்னுள் தாங்கியுள்ளது...

சோழவந்தான் ஜெனகை மாரியம்மன் வைகாசி தேரோட்டம் கோலாகலம்!

ஜெனகை மாரியம்மன் கோவில் அர்ச்சகர் சண்முகவேல் தலைமையில் அர்ச்சகர்கள் பூஜைகள் செய்தனர் வழிநெடுகிலும் பொதுமக்கள் தேங்காய் உடைத்து ஜெனகை மாரியம்மனுக்கு நேர்த்திக்கடன் செலுத்தினர்

பஞ்சாங்கம் ஜூன் 2 – செவ்வாய் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம் தகவல்கள், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய ராசி பலன்கள், திருக்குறள், சிந்தனைகள்...

அண்ணாமலையில் அரசியல் பயணம் இனி…!

அண்ணாமலை தனிக்கட்சியா என்ற கேள்வி தான் உள்ளூர் மீடியா முதல் நேஷனல் மீடியா வரை விவாதிக்கப்படுகிறது. அண்ணாமலை தனிக்கட்சி ஆரம்பிக்கப்போகிறார் என்று வதந்தி கிளம்புவது இது ஒன்றும் முதல் முறை கிடையாது.

பழங்குடியினர் சலுகைகள் – யாருக்கு?

பழங்குடியினரின் இந்த உணர்வுபூர்வமான கோரிக்கை கடந்த 60 ஆண்டுகளுக்கும் மேலாக கவனிக்கப்படாமல் உள்ளது. இப்போது ஜார்கண்ட் எனப்படும் பகுதியில் இருந்து 1960 இல் கார்த்திக் ஓரான் என்ற பழங்குடியின நாடாளுமன்ற உறுப்பினர் காங்கிரஸ் கட்சி சார்பில் தேர்ந்தெடுக்கப்பட்டார். அவர்தான் மதம் மாறியவர்களுக்கு சலுகை கூடாது என்ற விஷயத்தை முதன் முதலில் எழுப்பினார்.

வங்கத் தீர்ப்பு: இந்திய அரசியலில் நிலநடுக்கம்!

நேற்று எனக்கு ஒரு தகவல் கூறப்பட்டது. 'இண்டி' கூட்டணியில் உள்ள எந்தக் கட்சித் தலைவர்களும் மம்தா பானர்ஜியின் தொலைபேசி அழைப்புகளை எடுக்கவில்லை என்று கூறப்பட்டது. சில மாதங்களுக்கு முன்பு இதை நினைத்துக்கூட பார்க்க முடியாது. ஆனால் அது இனி வெளிப்படவிருக்கும் நிகழ்வுகளுக்கான ஒரு முன்னோட்டம் மட்டுமே.

முப்பெரும் ஊழல்களில் முதற் பெரும் ஊழல் துறை!

அற நிலையத்துறையைப் போன்ற சட்ட விரோதமான, சாசன விரோதமான, சமூக விரோதமான, சனாதன விரோதமான ஒரு அமைப்பு இந்த உலகில் எங்குமே இருக்கமுடியாது. உலகிலேயே சனாதன வாழ்வியல் ஆதி காலம் தொட்டு உன்னத நிலையில் இருந்துவந்த தமிழகத்தில்தான் இந்த நிலைமை என்பது மிகப் பெரிய, மிக வேதனையான நகைமுரண் தான்.

Entertainment News

Popular Categories