December 5, 2025, 6:50 PM
26.7 C
Chennai

ஒரு மாத கோடை விடுமுறைக்குப்பின் உயர் நீதிமன்றம் இன்று திறப்பு : முதல் வாரத்திலேயே முக்கிய வழக்குகளில் தீர்ப்பு?

16 June03 high court - 2025கோடை விடுமுறைக்குப் பிறகு இன்று உயர் நீதிமன்றம் மற்றும் உயர் நீதிமன்ற மதுரைக் கிளை வழக்கம்போல் மீண்டும் செயல்படத் தொடங்குகிறது.

முதல் வாரத்தில் 18 எம்எல்ஏக்கள் நீக்கத்தை எதிர்த்து தொடரப்பட்ட வழக்கு உள்ளிட்ட முக்கிய வழக்குகளில் தீர்ப்பு வரலாம் என்று எதிர்பார்கப்படுகிறது.

சென்னை உயர் நீதிமன்றம் மற்றும் உயர் நீதிமன்ற மதுரைக் கிளைக்கு மே 1ம் தேதி முதல் ஜூன் 3ம் தேதி வரை கோடை விடுமுறை விடப்பட்டது. இதையடுத்து, விடுமுறை காலத்தில் ஒவ்வொரு வாரமும் விடுமுறை கால நீதிமன்றங்கள் இயங்கின. இதில் ஒரு டிவிஷன் பெஞ்ச் மற்றும் 3 தனி நீதிபதிகள் வழக்குகளை விசாரித்து வந்தனர்.

இந்த விடுமுறைகால நீதிமன்றங்களில் பிஇ மாணவர் சேர்க்கை விண்ணப்பம் தொடர்பான வழக்கு, நிர்மலாதேவி மீதான வழக்கு சிபிஐ விசாரிக்க கோரி வழக்கு, எஸ்வி சேகர் முன்ஜாமீன் வழக்கு, கார்த்தி சிதம்பரம் மீதான கருப்பு பண மோசடி வழக்கு, சிபிஎஸ்இ பாடத்திட்டம் தொடர்பான வழக்கு, தூத்துக்குடி துப்பாக்கி சூடு சம்பவம் தொடர்பான வழக்கு உள்ளிட்ட பல முக்கிய வழக்குகள் விசாரிக்கப்பட்டு உத்தரவுகள் பிறப்பிக்கப்பட்டன. விடுமுறைகால நீதிமன்றங்கள் வழக்கம்போல நடைபெறும் நீதிமன்றங்களைப்போல் வாரம் முழுவதும் பரபரப்பாக செயல்பட்டது குறிப்பிடத்தக்கது.
இந்நிலையில், கோடை விடுமுறைக்குப் பிறகு வழக்கம்போல் உயர் நீதிமன்றம் தனது பணிகளை இன்று தொடங்குகிறது.

உயர் நீதிமன்றத்தில் 18 எம்எல்ஏக்கள் தகுதி நீக்கம் செய்யப்பட்டதை எதிர்த்து தொடரப்பட்ட வழக்கு, போலீஸ் ஆர்டலிகள் நியமனம் வழக்கு உள்ளிட்ட பல முக்கிய வழக்குகளில் தீர்ப்புகள் தேதி குறிப்பிடப்படாமல் ஒத்துவைக்கப்பட்டுள்ளன. இந்நிலையில், உயர் நீதிமன்றம் இன்று வழக்கம்போல் செயல்படத் தொடங்குவதால் இந்த முக்கிய வழக்குகளில் தீர்ப்புகள் முதல் வாரத்திலேயே வெளிவரலாம் என்று வக்கீல்கள் மத்தியிலும், அரசியல் கட்சிகள் மத்தியிலும் எதிர்பார்க்கப்படுகிறது.

மேலும், தூத்துக்குடி துப்பாக்கிச் சூடு சம்பவம் தொடர்பான வழக்கை சிபிஐ விசாரணை நடத்துமாறு உத்தரவிடக் கோரிய வழக்கு தலைமை நீதிபதி அடங்கிய முதல் டிவிஷன் பெஞ்சில் விசாரணைக்கு வரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

இதுபோன்ற பல்வேறு எதிர்பார்ப்புக்கள் உள்ளதால் இந்த வாரம் மிகவும் காரசாரமாக இருக்கும் என்று கூறப்படுகிறது.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

பஞ்சாங்கம் டிச.05 – வெள்ளி | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய பலன்கள், திருக்குறள், நற்சிந்தனை

ராஜபாளையம் அய்யனார்கோயில் ஆற்றில் நீர்வரத்து அதிகரிப்பு; சிக்கிய பக்தர்கள் மீட்பு!

ராஜபாளையம் மேற்கு தொடர்ச்சி மலைப் பகுதியில் வியாழக்கிழமை பெய்த திடிர் மழை...

மீண்டும் இன்று… பரன்குன்று மலை உச்சி தீபத் தூணில் தீபம் ஏற்ற உத்தரவு!

திருப்பரங்குன்றத்தில் 144 தடை உத்தரவு ரத்து செய்யப்பட்டதுடன், உடனடியாக மலை உச்சியில் தீபத்தூணில் தீபம் ஏற்ற நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு பிறப்பித்திருக்கிறார்.

திருப்பரங்குன்றம் விவகாரத்த்ல் திமுக., அரசின் மேல்முறையீட்டு மனு தள்ளுபடி!

திருப்பரங்குன்றம் வழக்கு விவகாரத்தில் தமிழக அரசின் மேல்முறையீட்டு மனு தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது.

சட்டத்தை மதிக்காத தமிழக அரசு, அதிகாரிகள்; இந்து விரோத இந்து சமய அறநிலையத் துறை; திமுக.,!

நீதிமன்றத் தீர்ப்புக்கு எதிராக, இந்துக்களுக்கு எதிராக 144 தடை உத்தரவு பிறப்பித்து, அடக்குமுறையை கையாண்டு கலவரத்தை தூண்டியது காவல்துறை.

Topics

பஞ்சாங்கம் டிச.05 – வெள்ளி | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய பலன்கள், திருக்குறள், நற்சிந்தனை

ராஜபாளையம் அய்யனார்கோயில் ஆற்றில் நீர்வரத்து அதிகரிப்பு; சிக்கிய பக்தர்கள் மீட்பு!

ராஜபாளையம் மேற்கு தொடர்ச்சி மலைப் பகுதியில் வியாழக்கிழமை பெய்த திடிர் மழை...

மீண்டும் இன்று… பரன்குன்று மலை உச்சி தீபத் தூணில் தீபம் ஏற்ற உத்தரவு!

திருப்பரங்குன்றத்தில் 144 தடை உத்தரவு ரத்து செய்யப்பட்டதுடன், உடனடியாக மலை உச்சியில் தீபத்தூணில் தீபம் ஏற்ற நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு பிறப்பித்திருக்கிறார்.

திருப்பரங்குன்றம் விவகாரத்த்ல் திமுக., அரசின் மேல்முறையீட்டு மனு தள்ளுபடி!

திருப்பரங்குன்றம் வழக்கு விவகாரத்தில் தமிழக அரசின் மேல்முறையீட்டு மனு தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது.

சட்டத்தை மதிக்காத தமிழக அரசு, அதிகாரிகள்; இந்து விரோத இந்து சமய அறநிலையத் துறை; திமுக.,!

நீதிமன்றத் தீர்ப்புக்கு எதிராக, இந்துக்களுக்கு எதிராக 144 தடை உத்தரவு பிறப்பித்து, அடக்குமுறையை கையாண்டு கலவரத்தை தூண்டியது காவல்துறை.

பஞ்சாங்கம் டிச.04 – வியாழன்| இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரண்டு ராசிகளுக்கும் உள்ள இன்றைய ராசிபலன்கள், திருக்குறள், சிந்தனைகள்....

ராஜபாளையம்-கொலை வழக்கில் கைதான இருவர் குண்டர் சட்டத்தில் கைது…

ராஜபாளையம் அருகில் தேவதானம் நச்சாடை தவிர்த்தருளிய சுவாமி கோயில் காவலர்கள் இருவர்...

நீதிமன்றத் தீர்ப்பை அவமதித்த திமுக., அரசு! திருப்பரங்குன்றத்தில் பக்தர்கள் கொந்தளிப்பு!

சென்னை உயர் நீதிமன்ற மதுரை கிளை உத்தரவிட்டும் திருப்பரங்குன்றம் மலை மேலுள்ள...

Entertainment News

Popular Categories