லோக் ஆயுக்தா மசோதா இன்று தாக்கல்

05 June24 tamil nadu - 2026தமிழகத்தில் லோக் ஆயுக்தாவை ஏற்படுத்துவதற்கான சட்ட மசோதா இன்று சட்டசபையில் தாக்கல் செய்யப்படுகிறது. இந்த கூட்டத்தொடரிலேயே விவாதித்து நிறைவேற்றப்படுகிறது.

மாநிலங்களில் வரும் 10-ம் தேதிக்குள் லோக்ஆயுக்தா அமைப்பை உருவாக்க வேண்டும் என்று உச்சநீதிமன்றம் கெடு விதித்துள்ளது.

உச்சநீதிமன்றத்தில் பாரதீய ஜனதா தலைவர் அஸ்வினி குமார் உபாத்யாய் தாக்கல் செய்த பொது நல மனுவில் அனைத்து மாநிலங்களிலும் லோக் ஆயுக்தா அமைப்பை உருவாக்க வேண்டும் என்று கேட்டுக்கொண்டு இருந்தார்.

குறிப்பாக தமிழகம், பாண்டிச்சேரி உள்ளிட்ட 11 மாநிலங்களில் இதனை நிறைவேற்ற வேண்டும் என்று அந்த மனுவில் கூறப்பட்டு இருந்தது. தமிழகத்தை பொறுத்தவரை லஞ்ச ஒழிப்புத்துறை இயக்குனரகம் செயல்படுவதால் லோக் ஆயுக்தா அமைப்பு தேவையில்லை என்று உச்சநீதிமன்றத்தில் எடுத்துரைக்கப்பட்டது.

லோக்பால் அமைப்பை மத்திய அரசு ஏற்படுத்துவதற்காக தமிழக அரசு காத்துக்கொண்டு இருப்பதாக உச்சநீதிமன்றத்தில் எடுத்துரைக்கப்பட்டது. ஆனால் இதனை உச்சநீதிமன்றம் நிராகரித்துவிட்டது.

2014-ம் ஆண்டு ஜெயலலிதா முதலமைச்சராக இருந்தபோது லோக் ஆயுக்தா சட்ட பிரிவுகளை ஆய்வு செய்வதற்காக 7 உறுப்பினர்களை கொண்ட குழு அமைக்கப்பட்டது.

ALSO READ:  மாநில ஆளுநரின் அதிகாரங்களும், ஆட்சிப் பொறுப்பு ஒப்படைப்பும்!

2015-ம் ஆண்டு சென்னை உயர் நீதிமன்றமும் லோக் ஆயுக்தா அமைப்பை ஏற்படுத்தாதது ஏன் என்று தமிழக அரசுக்கு கேள்வி எழுப்பி இருந்தது. இறுதியாக வருகிற 10-ந் தேதிக்குள் லோக் ஆயுக்தா அமைப்பை ஏற்படுத்த வேண்டும் என்று உச்சநீதிமன்றம் கெடு விதித்தது.

இதனைத் தொடர்ந்து தமிழக அரசு சார்பில் லோக் ஆயுக்தா சட்ட மசோதா நாளை தமிழக சட்டசபையில் தாக்கல் செய்யப்படும் என்று எதிர்பார்க்கப் படுகிறது. 9-ந் தேதி வரை தமிழக சட்டசபை கூட்டம் நடைபெறுகிறது. அதற்குள் இந்த மசோதா மீது விவாதம் நடத்தி நிறைவேற்றப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

லோக் ஆயுக்தா என்பது லஞ்ச ஒழிப்பு புகாரை விசாரிப்பதற்கு அதிகாரம் படைத்த அமைப்பாகும். பொது மக்களிடமிருந்து இந்த அமைப்பு புகார்களை பெற்று விசாரணை நடத்தும். இந்த புகார்களின் அடிப்படையில் ஊழல் அதிகாரிகளின் வீடுகள் மற்றும் அலுவலகங்களில் சோதனை நடத்துவதற்கு இந்த அமைப்புக்கு அதிகாரம் உண்டு.

லோக் ஆயுக்தாவின் தலைவராக நியமிக்கப்படுவர் 5 ஆண்டு காலம் பதவி வகிப்பார் அல்லது 70 வயது வரை பதவியில் இருப்பார். அவருக்கு இந்திய தலைமை நீதிபதிக்கு இணையான சம்பளம் வழங்கப்படும். இதன் உறுப்பினர்களுக்கு உச்சநீதி மன்ற நீதிபதிகளுக்கு இணையான சம்பளம் வழங்கப்படும்.

ALSO READ:  இருதரப்பு மோதலில் எஸ்பி., சமரசம்; அமைதியாக நடைபெற்ற ஸ்வாமி ஊர்வலம்!

ஊழல் அதிகாரிகளை கைது செய்ய உத்தரவிடுவதற்கு இவர்களுக்கு அதிகாரம் உண்டு. லோக் ஆயுக்தா அமைக்கப்பட்ட பிறகு அதன் தலைவரை டிஸ்மிஸ் செய்யவோ, மாற்றவோ அரசுக்கு அதிகாரம் இல்லை. சட்டசபையில் கண்டன தீர்மானம் கொண்டு வந்துதான் அவரை பதவி நீக்கம் செய்ய முடியும்.
ஏற்கனவே பல்வேறு அரசியல் கட்சிகளும் லோக் ஆயுக்தா மசோதாவை கொண்டு வர வேண்டும் என்று வலியுறுத்தி வருகின்றன. அமைச்சர் கள் உள்பட அனைவர் மீதும் விசாரணை நடத்தும் வகையில் அதிகாரம் வழங்கப்பட வேண்டும் என்றும் எதிர்க்கட்சிகள் வலியுறுத்தி இருப்பது குறிப்பிடத்தக்கது.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

FIFA 2026: காலிறுதி ஆட்டங்கள்

அரையிறுதி ஆட்டங்களில் முதல் ஆட்டம் இன்று (14.07.2026) ஆர்லிங்க்டனில் ஃபிரான்சு, ஸ்பெயின் அணிகளுக்கிடையே நடைபெறுகிறது. இரண்டாவது ஆட்டம் நாளை (15.07.2026) அர்ஜெண்டைனா, இங்கிலாந்து அணிகளுக்கிடையே அட்லாண்டாவில் நடைபெறுகிறது.    

கலப்புத் திருமணம் ஜாதியை ஒழிக்குமா?

கலப்புத் திருமணம் ஜாதியை ஒழிக்குமா? ஒழிக்காது. இரு தரப்பின் ஜாதிகளில் ஏதோவொன்றையே பலப்படுத்தும்.

பஞ்சாங்கம் ஜூலை 14 – செவ்வாய் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம் தகவல்கள், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய ராசி பலன்கள், திருக்குறள், சிந்தனைகள்...

IND Vs ENG T20: தொடர் வெற்றி பெற்ற இங்கிலாந்து அணி!

இதன் மூலம் இங்கிலாந்து அணி தொடரை 4-0 என்ற கணக்கில் வென்றது.

அன்புத் தம்பி அண்ணா மலைக்கு…

உயர்திரு. அண்ணாமலை அவர்களுக்கு, மனமுவந்த ஆசிகள். எனக்கு வயது 81. அந்த வயதின் உரிமையிலும் தைரியத்திலும் உங்களை வாழ்த்தி ஆசீர்வதிக்கிறேன்!

Topics

FIFA 2026: காலிறுதி ஆட்டங்கள்

அரையிறுதி ஆட்டங்களில் முதல் ஆட்டம் இன்று (14.07.2026) ஆர்லிங்க்டனில் ஃபிரான்சு, ஸ்பெயின் அணிகளுக்கிடையே நடைபெறுகிறது. இரண்டாவது ஆட்டம் நாளை (15.07.2026) அர்ஜெண்டைனா, இங்கிலாந்து அணிகளுக்கிடையே அட்லாண்டாவில் நடைபெறுகிறது.    

கலப்புத் திருமணம் ஜாதியை ஒழிக்குமா?

கலப்புத் திருமணம் ஜாதியை ஒழிக்குமா? ஒழிக்காது. இரு தரப்பின் ஜாதிகளில் ஏதோவொன்றையே பலப்படுத்தும்.

பஞ்சாங்கம் ஜூலை 14 – செவ்வாய் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம் தகவல்கள், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய ராசி பலன்கள், திருக்குறள், சிந்தனைகள்...

IND Vs ENG T20: தொடர் வெற்றி பெற்ற இங்கிலாந்து அணி!

இதன் மூலம் இங்கிலாந்து அணி தொடரை 4-0 என்ற கணக்கில் வென்றது.

அன்புத் தம்பி அண்ணா மலைக்கு…

உயர்திரு. அண்ணாமலை அவர்களுக்கு, மனமுவந்த ஆசிகள். எனக்கு வயது 81. அந்த வயதின் உரிமையிலும் தைரியத்திலும் உங்களை வாழ்த்தி ஆசீர்வதிக்கிறேன்!

ஒருவர், தன் இந்து மதத்தை வீட்டுக்குள் வைத்து எதற்குப் பூட்ட வேண்டும்?

ஒரு விஷயத்தை வெளியில் காட்டிக் கொள்ளமாட்டேன் என்று சொன்னால் அதை வெளியில் காட்டத் தகுந்ததாக மதிக்கவில்லை என்றுதான் அர்த்தம்.

பஞ்சாங்கம் ஜூலை 13 – திங்கள் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான பலன்கள், நட்சத்திர பலன்கள், அதிர்ஷ்ட எண்கள், அதிர்ஷ்ட நிறம், திருக்குறள், சிந்தனைகள்...

பஞ்சாங்கம் ஜூலை 12 – ஞாயிறு | இன்றைய ராசி பலன்கள்!

பஞ்சாங்கம், தினசரி திதி நட்சத்திரம் நல்ல நேரம் ராகு காலம் எமகண்டம் பன்னிரு ராசிகளின் ராசிபலன்கள் தினம் ஒரு திருக்குறள்

Entertainment News

Popular Categories