குல்தீப் 6 விக்கெட், ரோஹித் சதம்: முதல்போட்டியில் இந்தியா வெற்றி!

rohit sharma england - 2026

நாட்டிங்காம்: இங்கிலாந்து அணிக்கு எதிரான முதல் ஒரு நாள் போட்டியில் குல்தீப் யாதவ் 6 விக்கெட் எடுக்க, ரோஹித் சர்மா சதம் அடிக்க, இந்தியா 8 விக்கெட் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது.

இங்கிலாந்து சென்றுள்ள இந்திய அணி, மூன்று ஒரு நாள் போட்டிகள் கொண்ட தொடரில் விளையாடி வருகிறது. தொடரின் முதல் ஒரு நாள் போட்டி நாட்டிங்காம் நகரில் நேற்று நடைபெற்றது. டாஸ் வென்ற இந்திய கேப்டன் விராட் கோலி பந்து வீசத் தீர்மானித்தார். அதன்படி, முதலில் பேட்டிங் செய்த இங்கிலாந்து இந்திய அணியின் பந்துவீச்சை சமாளிக்க முடியாமல் திணறியது. 49.5 ஓவர்களில் அனைத்து விக்கெட்களையும் இழந்து 268 ரன் எடுத்து ஆட்டமிழந்தது.

இங்கிலாந்து அணியில் அதிகபட்சமாக ஜோஸ் பட்லர் 53, பென் ஸ்டோக்ஸ் 50, ஜாசன் ராய், ஜானி பிரிஸ்டோ இருவரும் தலா 38 ரன் எடுத்தனர். இந்தப் போட்டியிலும் எதிர்பார்த்ததைப் போலவே குல்தீப் யாதவ் அபாரமாக பந்து வீசினார். 10 ஓவர் வீசி 25 ரன் கொடுத்து 6 விக்கெட் வீழ்த்தினார் குல்தீப்.

269 ரன் என்ற வெற்றி இலக்குடன் களமிறங்கிய இந்திய அணிக்கு ரோஹித் சர்மா, ஷிகார் தவன் வழக்கமான நல்ல துவக்கம் அளித்தனர். தவான் 27 பந்துகளில் 8 பவுண்டரிகளுடன் 40 ரன்கள் எடுத்து ஆட்டம் இழந்தார். கோலி 82 பந்துகளில் 75 ரன் எடுத்தார். ரோஹித் சர்மா அதிரடியாக விளையாடி தனது 18வது சதத்தை அடித்தார். அவர் 114 பந்துகளில் 15 பவுண்டரி, 4 சிக்ஸர் அடித்து 137 ரன் எடுத்தார்.

இந்திய அணி 40.1 ஓவரில் 2 விக்கெட் இழப்புக்கு 269 ரன்கள் எடுத்து 8 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. இதை அடுத்து 3 போட்டிகள் கொண்ட தொடரில் 1-0 என இந்தியா முன்னிலை பெற்றது.

முன்னதாக, டி-20 போட்டித் தொடரில் 2-1 என இந்தியா வென்றது குறிப்பிடத் தக்கது

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

பஞ்சாங்கம் மார்ச் 14 – சனிக் கிழமை | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய தினம் நல்ல நாளாக அமைய எமது வாழ்த்துகள்.

கொல்லங்கோடு பத்ரகாளி கோவில் தூக்கத்திருவிழா துவக்கம்..

தமிழகம் கேரளா மாநிலத்தில் பிரசித்தி பெற்ற கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள கொல்லங்கோடு...

ஈரான் விவகாரத்தில்… காங்கிரஸின் ‘யு டர்ன்’!

ஐக்கிய முற்போக்கு கூட்டணி ஆட்சியில் மூன்று முறை, 2005, 2006, 2009 ஆண்டுகளில், சர்வதேச அணுசக்தி முகாமையில் ஈரானின் அணு ஆயுத தயாரிப்பை எதிர்த்து

எர்ணாகுளம் – வேளாங்கண்ணி- செங்கோட்டை ,மதுரை வழி புதிய ரயில்..

எர்ணாகுளம் - வேளாங்கண்ணி-எர்ணாகுளம் இடையே கொல்லம் செங்கோட்டை மதுரை வழி...

பங்குனி மாத பூஜைகளுக்காக சபரிமலை கோயில் நாளை நடை திறப்பு

பங்குனி மாத பூஜைகளுக்காக கேரளாவில் பிரசித்தி பெற்ற சபரிமலை சுவாமி ஐயப்பன்...

Topics

பஞ்சாங்கம் மார்ச் 14 – சனிக் கிழமை | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய தினம் நல்ல நாளாக அமைய எமது வாழ்த்துகள்.

கொல்லங்கோடு பத்ரகாளி கோவில் தூக்கத்திருவிழா துவக்கம்..

தமிழகம் கேரளா மாநிலத்தில் பிரசித்தி பெற்ற கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள கொல்லங்கோடு...

ஈரான் விவகாரத்தில்… காங்கிரஸின் ‘யு டர்ன்’!

ஐக்கிய முற்போக்கு கூட்டணி ஆட்சியில் மூன்று முறை, 2005, 2006, 2009 ஆண்டுகளில், சர்வதேச அணுசக்தி முகாமையில் ஈரானின் அணு ஆயுத தயாரிப்பை எதிர்த்து

எர்ணாகுளம் – வேளாங்கண்ணி- செங்கோட்டை ,மதுரை வழி புதிய ரயில்..

எர்ணாகுளம் - வேளாங்கண்ணி-எர்ணாகுளம் இடையே கொல்லம் செங்கோட்டை மதுரை வழி...

பங்குனி மாத பூஜைகளுக்காக சபரிமலை கோயில் நாளை நடை திறப்பு

பங்குனி மாத பூஜைகளுக்காக கேரளாவில் பிரசித்தி பெற்ற சபரிமலை சுவாமி ஐயப்பன்...

அரசியல்வாதிகள் போல் செயல்படும் அரசு அதிகாரிகள்: இந்து முன்னணி கண்டனம்!

எனவே அரசியல் சாசன சட்டத்தை மதித்து மக்கள் நலனை கருத்தில் கொண்டு அரசு அதிகாரிகள் செயல்பட வேண்டும் என்று இந்துமுன்னணி சார்பில் கேட்டுக் கொள்கிறோம்.

தமிழகத்தில் பெட்ரோல் டீசலுக்கு தட்டுப்பாடா? உண்மை என்ன?

தமிழ்நாடு முழுவதும் பெட்ரோல் மற்றும் டீசல் தடையின்றி தொடர்ந்து கிடைக்கும் என்பதை மீண்டும் உறுதி செய்கிறது.

Entertainment News

Popular Categories