இன்று விசாரணைக்கு வருகிறது நிர்மலாதேவி, முருகன் ஜாமீன் மனு

04 July15 Nirmla devi - 2026பாலியல் பேர வழக்கில் கைது செய்யப்பட்டு சிறையில் உள்ள உதவிப் பேராசிரியர்கள் நிர்மலாதேவி, முருகன் ஆகியோரது ஜாமீன் மனு மீதான விசாரணையை இன்று ஒத்திவைத்து, ஸ்ரீவில்லிபுத்தூர் மாவட்ட முதன்மை அமர்வு நீதிமன்றம் உத்தரவிட்டது.

விருதுநகர் மாவட்டம், அருப்புக்கோட்டை அரசு உதவிபெறும் கலை கல்லூரியில் கணிதத் துறை உதவிப் பேராசிரியராகப் பணிபுரிந்த நிர்மலாதேவி, தன்னிடம் படித்த மாணவிகள் சிலரிடம் பாலியல் பேரத்தில் ஈடுபட்டதாக கைது செய்யப்பட்டார். இந்த வழக்கு தொடர்பாக, மதுரை காமராஜர் பல்கலைக்கழக நிர்வாக மேலாண்மைத் துறை உதவிப் பேராசிரியர் முருகன் மற்றும் முன்னாள் ஆராய்ச்சி மாணவர் கருப்பசாமி ஆகியோர் கைது செய்யப்பட்டனர்.

இந்நிலையில், நிர்மலாதேவி, முருகன் ஆகியோர் தனித்தனியாக தங்களது வழக்குரைஞர்கள் மூலம் ஜாமீன் கோரி, ஸ்ரீவில்லிபுத்தூர் மாவட்ட முதன்மை அமர்வு நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்திருந்தனர். இந்த மனுக்கள் தொடர்பாக கடந்த வியாழக்கிழமை விசாரணை நடத்திய நீதிபதி முத்துசாரதா, வழக்கை இன்றைக்கு ஒத்திவைத்து உத்தரவிட்டார். நிர்மலாதேவி ஜாமீன் கோரி ஏழாவது முறையாக விண்ணப்பித்துள்ளது குறிப்பிடத்தக்கது.

முன்னாள் ஆராய்ச்சி மாணவர் கருப்பசாமி ஜாமீன் மனு தள்ளுபடி: இந்நிலையில், மதுரை மத்தியச் சிறையில் அடைக்கப்பட்டுள்ள கருப்பசாமி தனக்கு ஜாமீன் வழங்கக் கோரி உயர்நீதிமன்ற மதுரைக் கிளையில் இரண்டாவது முறையாக மனுத்தாக்கல் செய்திருந்தார். இம்மனு வியாழக்கிழமை நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் முன்னிலையில் விசாரணைக்கு வந்தது. அப்போது இவரது ஜாமீன் மனுவைத் தள்ளுபடி செய்து உத்தரவிட்ட நீதிபதி, இவ்வழக்கில் கைதாகியுள்ள மூவரும் செய்தது சாதாரண குற்றம் கிடையாது.

இது சமுதாயத்தை சீரழிக்கும் செயல். மூவருக்கும் ஜாமீன் வழங்கினால் மாணவிகளுக்கு பாதுகாப்பு இருக்காது. ஆகவே, 3 பேரும் ஜாமீன் கோரி நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்யக்கூடாது என்றும், 3 பேரிடமும் சிறையில் வைத்தே விசாரணை நடத்த வேண்டும் என்றும் உத்தரவிட்டார்.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

பஞ்சாங்கம் மார்ச் 14 – சனிக் கிழமை | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய தினம் நல்ல நாளாக அமைய எமது வாழ்த்துகள்.

கொல்லங்கோடு பத்ரகாளி கோவில் தூக்கத்திருவிழா துவக்கம்..

தமிழகம் கேரளா மாநிலத்தில் பிரசித்தி பெற்ற கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள கொல்லங்கோடு...

ஈரான் விவகாரத்தில்… காங்கிரஸின் ‘யு டர்ன்’!

ஐக்கிய முற்போக்கு கூட்டணி ஆட்சியில் மூன்று முறை, 2005, 2006, 2009 ஆண்டுகளில், சர்வதேச அணுசக்தி முகாமையில் ஈரானின் அணு ஆயுத தயாரிப்பை எதிர்த்து

எர்ணாகுளம் – வேளாங்கண்ணி- செங்கோட்டை ,மதுரை வழி புதிய ரயில்..

எர்ணாகுளம் - வேளாங்கண்ணி-எர்ணாகுளம் இடையே கொல்லம் செங்கோட்டை மதுரை வழி...

பங்குனி மாத பூஜைகளுக்காக சபரிமலை கோயில் நாளை நடை திறப்பு

பங்குனி மாத பூஜைகளுக்காக கேரளாவில் பிரசித்தி பெற்ற சபரிமலை சுவாமி ஐயப்பன்...

Topics

பஞ்சாங்கம் மார்ச் 14 – சனிக் கிழமை | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய தினம் நல்ல நாளாக அமைய எமது வாழ்த்துகள்.

கொல்லங்கோடு பத்ரகாளி கோவில் தூக்கத்திருவிழா துவக்கம்..

தமிழகம் கேரளா மாநிலத்தில் பிரசித்தி பெற்ற கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள கொல்லங்கோடு...

ஈரான் விவகாரத்தில்… காங்கிரஸின் ‘யு டர்ன்’!

ஐக்கிய முற்போக்கு கூட்டணி ஆட்சியில் மூன்று முறை, 2005, 2006, 2009 ஆண்டுகளில், சர்வதேச அணுசக்தி முகாமையில் ஈரானின் அணு ஆயுத தயாரிப்பை எதிர்த்து

எர்ணாகுளம் – வேளாங்கண்ணி- செங்கோட்டை ,மதுரை வழி புதிய ரயில்..

எர்ணாகுளம் - வேளாங்கண்ணி-எர்ணாகுளம் இடையே கொல்லம் செங்கோட்டை மதுரை வழி...

பங்குனி மாத பூஜைகளுக்காக சபரிமலை கோயில் நாளை நடை திறப்பு

பங்குனி மாத பூஜைகளுக்காக கேரளாவில் பிரசித்தி பெற்ற சபரிமலை சுவாமி ஐயப்பன்...

அரசியல்வாதிகள் போல் செயல்படும் அரசு அதிகாரிகள்: இந்து முன்னணி கண்டனம்!

எனவே அரசியல் சாசன சட்டத்தை மதித்து மக்கள் நலனை கருத்தில் கொண்டு அரசு அதிகாரிகள் செயல்பட வேண்டும் என்று இந்துமுன்னணி சார்பில் கேட்டுக் கொள்கிறோம்.

தமிழகத்தில் பெட்ரோல் டீசலுக்கு தட்டுப்பாடா? உண்மை என்ன?

தமிழ்நாடு முழுவதும் பெட்ரோல் மற்றும் டீசல் தடையின்றி தொடர்ந்து கிடைக்கும் என்பதை மீண்டும் உறுதி செய்கிறது.

Entertainment News

Popular Categories