அரசியல் குழப்பத்தை ஏற்படுத்த ‘தீயசக்தி’ தினகரன் கண்டபடி பேசிவருகிறார்: கே.பி.முனுசாமி காட்டம்!

07 May29 KP munisamy - 2026

டிடிவி தினகரனை ஓ.பன்னீர்செல்வம் நிச்சயமாக சந்தித்திருக்கமாட்டார்; அரசியலில் குழப்பத்தை ஏற்படுத்துவதற்காக தினகரன் இவ்வாறு பேசி வருகிறார் என்று கூறியுள்ளார் கிருஷ்ணகிரியில் செய்தியாளர்களிடம் பேசிய கே.பி.முனுசாமி!

ஓபிஎஸ்., டிடிவி தினகரன் என்று இருவரையும் சுற்றி அரசியல் நிலவரம் கலவரம் ஆகி வரும் சூழலில், ஓபிஎஸ்.,ஸுக்கு நெருக்கமான கே.பி.முனுசாமி கிருஷ்ணகிரியில் செய்தியாளர்களைச் சந்தித்துப் பேசியபோது கூறியவை…

இரண்டு தொகுதி இடைத் தேர்தலிலும் அதிமுக வெற்றி பெற்று விடும் என்ற செய்தி வந்து கொண்டிருக்கிறது. இரண்டு தொகுதிகளிலும் நாங்கள் வெற்றி பெற்று விட்டால் அரசியல் வாழ்வு இனி தனக்கு இருக்காது என தினகரன் முடிவு செய்திருக்கிறார்.

அந்த முடிவின் வெளிப்பாடுதான் கட்சித் தொண்டர்களை குழப்ப வேண்டும் என்ற நோக்கில், இதுபோன்ற கருத்துக்களை தெரிவிக்கிறார். நிச்சயமாக இந்தக் கருத்தை அதிமுக தொண்டர்கள் நம்ப மாட்டார்கள்; செவி சாய்க்க மாட்டார்கள்!

எம்ஜிஆர்., அவர்கள் கருணாநிதியைப் பார்த்து தீய சக்தி என்று கூறினார். அந்தக் கருத்தை லட்சக்கணக்கான தொண்டர்கள் ஏற்றுக்கொண்டு இன்றுவரை அவரை தீய சக்தியாகவே பார்க்கின்றனர்.

அதேபோல் இந்த இரண்டாவது கட்டப் போராட்டத்தில் எங்களுக்கு தீயசக்தியாக சசிகலாவும் தினகரனும் தெரிந்து கொண்டிருக்கிறார்கள். எக்காரணம் கொண்டும் சசிகலாவையும் தினகரனையும் கட்சியில் சேர்க்க மாட்டோம்!

துணை முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் தன்னை சந்தித்ததாகவும் அதற்கான வீடியோ உள்ளதாகவும் தினகரன் தெரிவித்த கருத்துக்கு கடந்த காலத்தில் எடுக்கப் பட்ட வீடியோவை தற்போது கிராபிக்ஸ் செய்து வெளியிடுவார்கள்… என்று பேசினார் கே.பி.முனுசாமி!

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

தாம்பரம் – தென்காசி ஈஸ்டர் சிறப்பு ரயில்; இன்று முன்பதிவு தொடக்கம்!

திருச்சி மதுரை திருநெல்வேலி தென்காசி வழியாக தாம்பரம் தென்காசி/செங்கோட்டை புனித வெள்ளி...

பஞ்சாங்கம் ஏப்ரல் 2 – வியாழன்| இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரண்டு ராசிகளுக்கும் உள்ள இன்றைய ராசிபலன்கள், திருக்குறள், சிந்தனைகள்....

மண்ணின் மணத்தை மலர வைத்த ஒடிஷா!

இன்று ஏப்ரல் - 1, ஒடிஷா மாநிலம் தோன்றிய நாள் என்று சமூக வலைத்தளத்தில் செய்தி வந்ததும் நான் நான்கு ஆண்டுகளுக்கு முன் மூன்று நாட்கள் ஒடிஷாவில் உள்ள தாமன்ஜோடி

IPL 2026: வெற்றிகரமான தொடக்கம்!

ஐபிஎல் 2026 மார்ச்சு 28ஆம் தேதி பெங்களூருவில் ஹைதரபாத், பெங்களூரு அணிகளுக்கிடையேயான ஆட்டத்துடன் தொடங்கியது.

கமலாலயத்துக்கும் சத்தியமூர்த்தி பவனுக்கும் வேறுபாடில்லை!

முரளி சீதாராமன்1) காலையில் நயினார் நாகேந்திரன் செய்தியாளர் சந்திப்பில்:- "ஏப்ரல் 4...

Topics

தாம்பரம் – தென்காசி ஈஸ்டர் சிறப்பு ரயில்; இன்று முன்பதிவு தொடக்கம்!

திருச்சி மதுரை திருநெல்வேலி தென்காசி வழியாக தாம்பரம் தென்காசி/செங்கோட்டை புனித வெள்ளி...

பஞ்சாங்கம் ஏப்ரல் 2 – வியாழன்| இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரண்டு ராசிகளுக்கும் உள்ள இன்றைய ராசிபலன்கள், திருக்குறள், சிந்தனைகள்....

மண்ணின் மணத்தை மலர வைத்த ஒடிஷா!

இன்று ஏப்ரல் - 1, ஒடிஷா மாநிலம் தோன்றிய நாள் என்று சமூக வலைத்தளத்தில் செய்தி வந்ததும் நான் நான்கு ஆண்டுகளுக்கு முன் மூன்று நாட்கள் ஒடிஷாவில் உள்ள தாமன்ஜோடி

IPL 2026: வெற்றிகரமான தொடக்கம்!

ஐபிஎல் 2026 மார்ச்சு 28ஆம் தேதி பெங்களூருவில் ஹைதரபாத், பெங்களூரு அணிகளுக்கிடையேயான ஆட்டத்துடன் தொடங்கியது.

கமலாலயத்துக்கும் சத்தியமூர்த்தி பவனுக்கும் வேறுபாடில்லை!

முரளி சீதாராமன்1) காலையில் நயினார் நாகேந்திரன் செய்தியாளர் சந்திப்பில்:- "ஏப்ரல் 4...

அதிகாரத்தில் இல்லாததற்காக, இவர்களுக்கு நன்றிக்கடன் பட்டுள்ளேன்!

இந்த இக்கட்டான சூழ்நிலையில் ஏதாவது ஒரு விஷயத்திற்கு நாம் நன்றிக்கடன் பட்டுள்ளோம் என்றால் அது, இப்போது காங்கிரஸ் கட்சி அதிகாரத்தில் இல்லாததற்கே!

பஞ்சாங்கம் – ஏப்ரல் 1 – புதன் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், ராசிபலன்கள், ஜோதிடம், பொன்மொழிகள், திருக்குறள்,

‘தனி’ தொகுதிகளில் தனியா கவனித்து மனுவை தள்ளுபடி செய்யுங்க: இந்து முன்னணி வலியுறுத்தல்!

போலிச் சான்றிதழ் குறித்து உடனடியாக நடவடிக்கை எடுத்து அதனை ரத்து செய்து இந்து பட்டியலின மக்கள் உரிமைகளை பாதுகாக்க வேண்டும் என இந்துமுன்னணி வலியுறுத்துகிறது!

Entertainment News

Popular Categories