அரசியல் குழப்பத்தை ஏற்படுத்த ‘தீயசக்தி’ தினகரன் கண்டபடி பேசிவருகிறார்: கே.பி.முனுசாமி காட்டம்!

07 May29 KP munisamy - 2026

டிடிவி தினகரனை ஓ.பன்னீர்செல்வம் நிச்சயமாக சந்தித்திருக்கமாட்டார்; அரசியலில் குழப்பத்தை ஏற்படுத்துவதற்காக தினகரன் இவ்வாறு பேசி வருகிறார் என்று கூறியுள்ளார் கிருஷ்ணகிரியில் செய்தியாளர்களிடம் பேசிய கே.பி.முனுசாமி!

ஓபிஎஸ்., டிடிவி தினகரன் என்று இருவரையும் சுற்றி அரசியல் நிலவரம் கலவரம் ஆகி வரும் சூழலில், ஓபிஎஸ்.,ஸுக்கு நெருக்கமான கே.பி.முனுசாமி கிருஷ்ணகிரியில் செய்தியாளர்களைச் சந்தித்துப் பேசியபோது கூறியவை…

இரண்டு தொகுதி இடைத் தேர்தலிலும் அதிமுக வெற்றி பெற்று விடும் என்ற செய்தி வந்து கொண்டிருக்கிறது. இரண்டு தொகுதிகளிலும் நாங்கள் வெற்றி பெற்று விட்டால் அரசியல் வாழ்வு இனி தனக்கு இருக்காது என தினகரன் முடிவு செய்திருக்கிறார்.

அந்த முடிவின் வெளிப்பாடுதான் கட்சித் தொண்டர்களை குழப்ப வேண்டும் என்ற நோக்கில், இதுபோன்ற கருத்துக்களை தெரிவிக்கிறார். நிச்சயமாக இந்தக் கருத்தை அதிமுக தொண்டர்கள் நம்ப மாட்டார்கள்; செவி சாய்க்க மாட்டார்கள்!

எம்ஜிஆர்., அவர்கள் கருணாநிதியைப் பார்த்து தீய சக்தி என்று கூறினார். அந்தக் கருத்தை லட்சக்கணக்கான தொண்டர்கள் ஏற்றுக்கொண்டு இன்றுவரை அவரை தீய சக்தியாகவே பார்க்கின்றனர்.

அதேபோல் இந்த இரண்டாவது கட்டப் போராட்டத்தில் எங்களுக்கு தீயசக்தியாக சசிகலாவும் தினகரனும் தெரிந்து கொண்டிருக்கிறார்கள். எக்காரணம் கொண்டும் சசிகலாவையும் தினகரனையும் கட்சியில் சேர்க்க மாட்டோம்!

துணை முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் தன்னை சந்தித்ததாகவும் அதற்கான வீடியோ உள்ளதாகவும் தினகரன் தெரிவித்த கருத்துக்கு கடந்த காலத்தில் எடுக்கப் பட்ட வீடியோவை தற்போது கிராபிக்ஸ் செய்து வெளியிடுவார்கள்… என்று பேசினார் கே.பி.முனுசாமி!

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

பஞ்சாங்கம் மார்ச் 14 – சனிக் கிழமை | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய தினம் நல்ல நாளாக அமைய எமது வாழ்த்துகள்.

கொல்லங்கோடு பத்ரகாளி கோவில் தூக்கத்திருவிழா துவக்கம்..

தமிழகம் கேரளா மாநிலத்தில் பிரசித்தி பெற்ற கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள கொல்லங்கோடு...

ஈரான் விவகாரத்தில்… காங்கிரஸின் ‘யு டர்ன்’!

ஐக்கிய முற்போக்கு கூட்டணி ஆட்சியில் மூன்று முறை, 2005, 2006, 2009 ஆண்டுகளில், சர்வதேச அணுசக்தி முகாமையில் ஈரானின் அணு ஆயுத தயாரிப்பை எதிர்த்து

எர்ணாகுளம் – வேளாங்கண்ணி- செங்கோட்டை ,மதுரை வழி புதிய ரயில்..

எர்ணாகுளம் - வேளாங்கண்ணி-எர்ணாகுளம் இடையே கொல்லம் செங்கோட்டை மதுரை வழி...

பங்குனி மாத பூஜைகளுக்காக சபரிமலை கோயில் நாளை நடை திறப்பு

பங்குனி மாத பூஜைகளுக்காக கேரளாவில் பிரசித்தி பெற்ற சபரிமலை சுவாமி ஐயப்பன்...

Topics

பஞ்சாங்கம் மார்ச் 14 – சனிக் கிழமை | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய தினம் நல்ல நாளாக அமைய எமது வாழ்த்துகள்.

கொல்லங்கோடு பத்ரகாளி கோவில் தூக்கத்திருவிழா துவக்கம்..

தமிழகம் கேரளா மாநிலத்தில் பிரசித்தி பெற்ற கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள கொல்லங்கோடு...

ஈரான் விவகாரத்தில்… காங்கிரஸின் ‘யு டர்ன்’!

ஐக்கிய முற்போக்கு கூட்டணி ஆட்சியில் மூன்று முறை, 2005, 2006, 2009 ஆண்டுகளில், சர்வதேச அணுசக்தி முகாமையில் ஈரானின் அணு ஆயுத தயாரிப்பை எதிர்த்து

எர்ணாகுளம் – வேளாங்கண்ணி- செங்கோட்டை ,மதுரை வழி புதிய ரயில்..

எர்ணாகுளம் - வேளாங்கண்ணி-எர்ணாகுளம் இடையே கொல்லம் செங்கோட்டை மதுரை வழி...

பங்குனி மாத பூஜைகளுக்காக சபரிமலை கோயில் நாளை நடை திறப்பு

பங்குனி மாத பூஜைகளுக்காக கேரளாவில் பிரசித்தி பெற்ற சபரிமலை சுவாமி ஐயப்பன்...

அரசியல்வாதிகள் போல் செயல்படும் அரசு அதிகாரிகள்: இந்து முன்னணி கண்டனம்!

எனவே அரசியல் சாசன சட்டத்தை மதித்து மக்கள் நலனை கருத்தில் கொண்டு அரசு அதிகாரிகள் செயல்பட வேண்டும் என்று இந்துமுன்னணி சார்பில் கேட்டுக் கொள்கிறோம்.

தமிழகத்தில் பெட்ரோல் டீசலுக்கு தட்டுப்பாடா? உண்மை என்ன?

தமிழ்நாடு முழுவதும் பெட்ரோல் மற்றும் டீசல் தடையின்றி தொடர்ந்து கிடைக்கும் என்பதை மீண்டும் உறுதி செய்கிறது.

Entertainment News

Popular Categories