சென்னை: நடிகை கஸ்தூரி தன்னிடம் தவறாக நடக்க முயன்ற, நடந்த பத்திரிகையாளர்கள் குறித்துப் பேசவா என்று டிவிட்டரில் கூறியிருக்கிறார்.
இது குறித்து அவரின் டிவிட்டர் பதிவில்…
கடந்த சில நாட்களாக, ஒவ்வொரு ஊடகத்திலும் இருந்து எனக்கு அழைப்பு வருகிறது. நேர்காணலுக்கு நேரம் கேட்டு!! நான் அவர்களிடம் பத்திரிகையாளர்களின் முறைகேடுகள் குறித்து பேசுவதற்கு நான் காத்துக் கொண்டிருக்கிறேன். மேலும், ஊடகப் புள்ளிகள் எவரெல்லாம் என்னிடம் தவறாக நடந்தனர் என்பது குறித்தும் பேசலாம் என்று இருக்கிறேன் எனச் சொன்னேன். ஆனால் ஒருவர் கூட என்னிடம் பேசவில்லை! ஏன் என்று ஆச்சரியப்பட்டேன்! என்று கூறியுள்ளார்.


