April 26, 2025, 11:16 PM
30.2 C
Chennai

சின்மயியைத் தொடர்ந்து சிந்துஜா… காமப் பேரரசு வைரமுத்துவின் ‘ஏ’ வரிகள் கவிதைகளா?!

பாடகி சின்மயியைத் தொடர்ந்து இன்னொரு புகைப்படக்கலைஞரும் பாடகியும் இசையமைப்பாளராகவும் திகழ்ந்த சிந்துஜா ராஜாராம் புகார்களைப் புட்டுப் புட்டு வைக்கிறார். கவிஞர் காதலராக மாறி தனக்குக் கொடுத்த செக்ஸ் டார்ச்சர்களை விலாவாரியாகக் கொட்டித் தீர்த்திருக்கிறார். #MeToo புரட்சியில் வைரமுத்து புயல் புரட்டிப் போடப் பட்டுள்ளது கண்கூடாகத் தெரிகிறது.  இந்தப் புயலைக் கிளப்பிய சிந்துஜா ராஜாராம்,  கலிஃபோரினியாவில் வசித்து வரும் தமிழர்.

சிந்துஜா ராஜாராம் கூறிய குற்றச்சாட்டுகள் குறித்து தகவல் வெளியானதும்,  வைரமுத்துவின் காதல் லீலைகள் குறித்து ஆங்கில செய்தி இணையதளம் ஒன்று, அவரிடம் மின்னஞ்சல் மூலம் கேள்வி கேட்டு பதில்களைப் பெற்றது.

அந்தக் கட்டுரையில் சிந்துஜா குறிப்பிட்ட போது, முதலில் சின்மயிக்கு ஆதரவாகக் குரல் கொடுக்க மட்டுமே எனது பெயரைச் சொல்லாமல் வைரமுத்து மூலம் எனக்கு நேர்ந்த கசப்பான அனுபவங்களைப் பதிவிட்டேன். பின்னர் அவரால் பாதிக்கப்பட்ட நிறைய பெண்கள் ஓப்பனாகப் பேசு என்றதால் சொல்கிறேன். அவரால் பாலியல் தொல்லை கொடுக்கப்பட்ட பெண்களின் பெரிய பட்டியல் இன்றும் என்னிடம் உள்ளது.

அப்போது எனக்கு 18 வயது இருக்கும்! தமிழ் சினிமாவில் பாடவும் நடிக்கவும், வாய்ப்பு கிடைத்தால் இசையமைக்கவும் முயற்சி செய்து  கொண்டிருந்தேன். என் தாய் தந்தையர் பெங்களூருவில் இருந்ததால் சென்னையில் தங்குவதற்கு சரியான லேடீஸ் ஹாஸ்டல் கிடைக்காமல் அலைந்து கொண்டிருந்தேன். அப்போது செய்தித்தாளில் வந்த விளம்பரத்தைப் பார்த்து விட்டு, வைரமுத்து நடத்தும் ஹாஸ்டலுக்கு வந்தேன்.

ALSO READ:  உசிலம்பட்டி ஆண்டிச்சாமி கோயில், கருப்பட்டி கருப்பண்ண சாமி கோயில்களில் கும்பாபிஷேகம்!

அவரை சந்திக்கும் வாய்ப்பு கிடைத்தது. அப்போது அவர், உங்கள் பேச்சில் மிக நாள் நட்பு தெரிந்தது என்று கூறிய வைரமுத்து, என் தாயாருடனான தொலைபேசி வழி உரையாடல் குறித்துக் கூறினார். அப்போது நான் கம்போஸ் செய்திருந்த ஆல்பம் சிடி., நிகழ்ச்சிகள் தொகுப்பு இவற்றைக் கொண்டு சென்றிருந்தேன். அவற்றைப் பெற்றுக் கொண்ட அவர், இவற்றால் தாம் மிகவும் இம்ப்ரஸ் ஆனதாக கூறினார். தொடர்ந்து, என்னை ஏ.ஆர்.ரஹ்மானிடம் அறிமுகம் செய்துவைப்பதாகவும் கூறினார். எங்கள் சந்திப்பு சுமார் 20லிருந்து 30 நிமிடங்கள் நீடித்தது.

அங்கு சேர்த்த பின்னர்,  என் தாய் தந்தையர் பெங்களூரு திரும்பிவிட்டதை அறிந்து கொண்ட வைரமுத்து, தனது கவிதை லீலைகளைக் காட்டத் தொடங்கினார்.

’வா… உன்னை ஏ.ஆர்.ரஹ்மானிடம் அறிமுகப்படுத்தி வைக்கிறேன் என்பார். உன்னை நினைத்து காதல் கவிதை எழுதியிருக்கிறேன். பெசன்ட் நகர் வீட்டுக்கு தனியே வா என்பார். ஒரு கட்டத்தில் என் தலையே சுக்குநூறாகும் அளவுக்கு செக்ஸ் டார்ச்சர் கொடுக்கத் தொடங்கி விட்டார்.

ALSO READ:  மகா சிவராத்திரி; இன்று நிறைவு பெறும் மகா கும்பமேளா! 63 கோடி பேருக்கு மேல் புனித நீராடல்!

அதன் பிறகு மெதுமெதுவாக அவரது தொலைபேசி அழைப்புகளை தவிர்க்கத்  தொடங்கினேன். என்னிடம் இவ்வாறு அவர் டார்ச்சர் கொடுத்து தவறாக நடந்து கொள்ளவில்லை என்று மறுப்பு தெரிவிப்பார் என்றால் என்னால் அவரது ஆபாச நடவடிக்கை குறித்து நிறைய ஆதாரங்களை வெளியிடமுடியும்’ என்று குறிப்பிட்டுள்ளார் சிந்துஜா ராஜாராம்!

இது குறித்து தனது டிவிட்டர் பதிவில் மீண்டும் குறிப்பிட்டுள்ள சிந்துஜா, யாரையும் தண்டிப்பதோ குற்றம்சாட்டுவதோ எனது நோக்கமல்ல! ஆனால் உண்மை வெளிவரவேண்டும். ஒவ்வொருவரும் அந்த பாலியல் வக்கிர நபர் குறித்துத் தெரிந்து கொள்ள வேண்டும் என்பதற்காகவே இவ்வாறு வெளியிட்டதாக அவர் குறிப்பிடுகிறார்.

ALSO READ:  அங்கீகாரம் பெறாமல் போலி ஹால் டிக்கெட்? : மாணவிகள் தர்ணா!

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

மாணவர்கள் படித்தால் திமுக.,வின் எதிர்காலம் கேள்விக்குறியாகும் என ஸ்டாலின் அச்சப்படுகிறாரா?

இது தனது அரசியல் எதிர்காலத்துக்கு அச்சுறுத்தலாகலாம் என முதல்வர் ஸ்டாலின் அச்சப்படுகிறாரா?" என்று ஆளுநர் ரவி கேள்வி எழுப்பியதாக

பஞ்சாங்கம் ஏப்.26 – சனிக் கிழமை | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய தினம் நல்ல நாளாக அமைய எமது வாழ்த்துகள்.

IPL 2025: கடைசி இடத்தில் தொடரும் தோனியின் சிஎஸ்கே

ஐ.பி.எல் 2025 – சென்னை vs ஹைதராபாத் – எம்.ஏ. சிதம்பரம்...

காஞ்சி சங்கர மடத்தின் 71வது பீடாதிபதி தேர்வு!

காஞ்சி காமகோடி பீடாதிபதியின் ஆசீர்வாதத்துடன், கணேச சர்மா யஜுர்வேதம், சாமவேதம், ஷடங்காக்கள், தசோபநிஷத் மற்றும் சாஸ்திர படிப்புகளைத் தொடர்ந்து வருகிறார்.

‘இஸ்ரோ’ முன்னாள் தலைவர் கஸ்தூரி ரங்கன் காலமானார்!

'இஸ்ரோ' முன்னாள் தலைவர் கி.கஸ்தூரி ரங்கன் தம் 84ம் வயதில், வயது மூப்பு காரணமாக உடல் நலக்குறைவால் பாதிக்கப்பட்டு, பெங்களூருவில் ஏப்.25 இன்று காலமானார்.

Topics

மாணவர்கள் படித்தால் திமுக.,வின் எதிர்காலம் கேள்விக்குறியாகும் என ஸ்டாலின் அச்சப்படுகிறாரா?

இது தனது அரசியல் எதிர்காலத்துக்கு அச்சுறுத்தலாகலாம் என முதல்வர் ஸ்டாலின் அச்சப்படுகிறாரா?" என்று ஆளுநர் ரவி கேள்வி எழுப்பியதாக

பஞ்சாங்கம் ஏப்.26 – சனிக் கிழமை | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய தினம் நல்ல நாளாக அமைய எமது வாழ்த்துகள்.

IPL 2025: கடைசி இடத்தில் தொடரும் தோனியின் சிஎஸ்கே

ஐ.பி.எல் 2025 – சென்னை vs ஹைதராபாத் – எம்.ஏ. சிதம்பரம்...

காஞ்சி சங்கர மடத்தின் 71வது பீடாதிபதி தேர்வு!

காஞ்சி காமகோடி பீடாதிபதியின் ஆசீர்வாதத்துடன், கணேச சர்மா யஜுர்வேதம், சாமவேதம், ஷடங்காக்கள், தசோபநிஷத் மற்றும் சாஸ்திர படிப்புகளைத் தொடர்ந்து வருகிறார்.

‘இஸ்ரோ’ முன்னாள் தலைவர் கஸ்தூரி ரங்கன் காலமானார்!

'இஸ்ரோ' முன்னாள் தலைவர் கி.கஸ்தூரி ரங்கன் தம் 84ம் வயதில், வயது மூப்பு காரணமாக உடல் நலக்குறைவால் பாதிக்கப்பட்டு, பெங்களூருவில் ஏப்.25 இன்று காலமானார்.

பயங்கரவாதிகளின் முதுகெலும்பை முறிக்கத் தேவையான சக்தி..!

இந்நிலையில், நேற்று பீகார் மாநிலத்துக்குச் சென்றிருந்த பிரதமர் மோடி, அங்கே நடைபெற்ற பொதுக்கூட்டத்தில், காஷ்மீர் படுகொலைச் சம்பவத்தில்

IPL 2025: கோலி அதிரடி; பெங்களூருக்கு சிறப்பான வெற்றி!

பெங்களூரு அணியின் பந்துவீச்சாளர் ஹேசல்வுட் ஆட்டநாயகனாக அறிவிக்கப்பட்டார். இன்றைய ஆட்டத்தில் இரண்டு

பஞ்சாங்கம் ஏப்ரல் 25 – வெள்ளி | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய பலன்கள், திருக்குறள், நற்சிந்தனை

Entertainment News

Popular Categories