தி.மு.க பட்டமரம் : இனி துளிர் விடாது : ராமதாஸ்

 
 
தி.மு.க பட்டமரம் : இனி துளிர் விடாது : என்று பாட்டாளி மக்கள் கட்சியின் நிறுவனர் மருத்துவர் ராமதாஸ் கூறியுள்ளார்.
 
 திருச்சியில் நேற்று ராமதாஸ் செய்தியாளர்களிடம் தெரிவித்துள்ளதாவது : –
 
சென்னை மழை வெள்ளம், ஒரு பாடத்தை நமக்கு கற்றுத்தந்தது. எனவே, திருச்சியை துணை தலைநகராக அறிவிக்க வேண்டும். திருச்சியில், ஆயிரம் ஏக்கர் அரசு புறம்போக்கு நிலங்கள் உள்ளன. தவிர, ஏழு வழித்தடத்தில் ரயில் சேவையும், சர்வதேச விமான நிலையமும் உள்ளன. வேளாண், இயற்கை வளம் சார்ந்த துறைகள் சிலவற்றை, திருச்சிக்கு இடமாற்றம் செய்யும் போது, புதிய தொழில் வேலை வாய்ப்பு ஏற்படும். ஏன், ஒரு சில கூட்டத் தொடரைக் கூட, திருச்சியில் நடத்தலாம். ‘2013ம் ஆண்டுக்குள், 5,000 மெ.வா., மின் உற்பத்தி, 3,000 மெ.வா., சூரிய ஒளி மின் உற்பத்தி செய்யப்படும்’ என, முதல்வர் அறிவித்தார்.
 
நான்கு ஆண்டு முடிந்தும், ஒரு யூனிட் மின்சாரம் கூட உற்பத்தி செய்ய வில்லை. சர்க்கரை ஆலைகள், 1,050 கோடி ரூபாய் கரும்புக்கான நிலுவை தொகையை இழுத்தடிப்பு செய்கின்றன. தமிழகத்தின், வேளாண் வளர்ச்சி விகிதம் மைனஸ், 12.1 சதவீதமாக குறைந்து, விவசாயிகள் தற்கொலை செய்து கொள்ளும் நிலைக்கு தள்ளப்பட்டு உள்ளனர். ‘உலக முதலீட்டாளர் மாநாடு நடத்தி, 2.42 லட்சம் கோடி முதலீடு வாங்கியதாக அறிவித்து, ஒரு மாதத்தில் தொழில் துவங்க அனுமதி வழங்கப்படும் என முதலமைச்சர் அறிவித்தார்.
 
ஆனால், 100 நாட்கள் ஆகியு,ம் இன்று வரை ஒரு தொழிற்சாலைக்கு கூட அனுமதி வழங்கவில்லை. இது, முதல்வரின் ஏமாற்று வேலை. பார்லி கூட்டத்தொடரில், ஆறு மசோதாக்கள் நிறைவேற்ற எதிர்கட்சிகள் அனுமதிப்பதாக அறிவித்தன. இதில் ஜல்லிக்கட்டு நடத்துவதற்கான சட்டத்திருத்த மசோதா இடம்பெறவில்லை. ஏற்கனவே கூட்டத் தொடரில் ஜல்லிக்கட்டு குறித்து விவாதித்து இருந்தால், தற்போது மசோதாவில் இடம் பெற்று இருக்கும். அவசர சட்டத்தை இயற்றி, ஜல்லிக்கட்டு நடத்த மத்திய அரசு அனுமதிக்க வேண்டும். தமிழகத்தில், தற்போது உள்ள சூழலில், ஐந்து, ஆறு கூட்டணி கட்சிகள் உருவானாலும், சட்டசபை தேர்தலில் ஆளும், அ.தி.மு.க.,வுக்கு சாதகமாக வெற்றி கிடைக்காது. அதுபோல தி.மு.க பட்டமரம் :இனி துளிர் விடாது.
 
முதலமைச்சர் ஜெயலலிதா சிறைக்கு போவது உறுதி. சரியான கணக்கு போட உச்சநீதிமன்றத்தில் நிறைய நீதிபதிகள் உள்ளனர். சென்னை வெள்ள பாதிப்புக்கு முன், பின் என்ற கருத்து கணிப்புகள் பொய்யானவை. ஒரு வாரப் பத்திரிக்கை, 5,000 கோடி பணத்தை வாங்கிக்கொண்டு கருத்து கணிப்பை தொடர்ந்து அவர்களுக்கு சாதகமாக வெளியிட்டு வருகிறது. ராஜ்ஜியத்தை இழந்தவர், ராஜநடை போட்டு நடந்து வருகிறார். நான் யாரை சொல்கிறேன் என்று உங்களுக்கு தெரிந்திருக்கும் என்று பாட்டாளி மக்கள் கட்சியின் நிறுவனர் மருத்துவர் ராமதாஸ் கூறியுள்ளார்.

 

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

வேண்டுமென்றே விஜய்யை வம்புக்கு இழுக்கும் உதயநிதி!

ஆனந்த் வெங்கட் -சனாதனம் ஒழிக்கப்படவேண்டும் என்று மீண்டும் மீண்டும் கூறுகிறார் உதயநிதி....

சனாதனம் ஒழிக்கப்பட வேண்டும்: சட்டசபையில் உதயநிதி பேச்சு!

உதயநிதியின் பேச்சுக்கு அரசியல் மட்டத்தில் கடும் எதிர்ப்புகளை பாஜக., மற்றும் இந்து இயக்கங்கள் பதிவு செய்து வருகின்றன.

தமிழக பாஜக.,வுக்கான பஞ்ச சீலக் கொள்கைகள் இவையாக இருக்கட்டும்!

பி.ஆர். மகாதேவன்அதிமுக 2006-ல் வாங்கிய வாக்குகள் : சுமார் ஒரு கோடியே...

கோயில்கள் வருமானம், சீரமைப்பு குறித்தும் வெள்ளை அறிக்கை வெளியிட வேண்டும்!

புதிய அரசு இந்து சமய அறநிலையத் துறையில் நடைபெற்ற அனைத்து வித நடவடிக்கைகள் குறித்தும் முழுமையான வெள்ளை அறிக்கை வெளியிட்டு, உரிய நடவடிக்கை

717 டாஸ்மாக் கடைகளை மூட உத்தரவு!

வழிபாட்டுத் தலங்கள் அருகிலுள்ள 276 கடைகள், கல்வி நிறுவனங்கள் அருகிலுள்ள 186 கடைகள், பேருந்து நிலையங்கள் அருகிலுள்ள 255 கடைகள் இரு வாரத்திற்குள்

Topics

வேண்டுமென்றே விஜய்யை வம்புக்கு இழுக்கும் உதயநிதி!

ஆனந்த் வெங்கட் -சனாதனம் ஒழிக்கப்படவேண்டும் என்று மீண்டும் மீண்டும் கூறுகிறார் உதயநிதி....

சனாதனம் ஒழிக்கப்பட வேண்டும்: சட்டசபையில் உதயநிதி பேச்சு!

உதயநிதியின் பேச்சுக்கு அரசியல் மட்டத்தில் கடும் எதிர்ப்புகளை பாஜக., மற்றும் இந்து இயக்கங்கள் பதிவு செய்து வருகின்றன.

தமிழக பாஜக.,வுக்கான பஞ்ச சீலக் கொள்கைகள் இவையாக இருக்கட்டும்!

பி.ஆர். மகாதேவன்அதிமுக 2006-ல் வாங்கிய வாக்குகள் : சுமார் ஒரு கோடியே...

கோயில்கள் வருமானம், சீரமைப்பு குறித்தும் வெள்ளை அறிக்கை வெளியிட வேண்டும்!

புதிய அரசு இந்து சமய அறநிலையத் துறையில் நடைபெற்ற அனைத்து வித நடவடிக்கைகள் குறித்தும் முழுமையான வெள்ளை அறிக்கை வெளியிட்டு, உரிய நடவடிக்கை

717 டாஸ்மாக் கடைகளை மூட உத்தரவு!

வழிபாட்டுத் தலங்கள் அருகிலுள்ள 276 கடைகள், கல்வி நிறுவனங்கள் அருகிலுள்ள 186 கடைகள், பேருந்து நிலையங்கள் அருகிலுள்ள 255 கடைகள் இரு வாரத்திற்குள்

பஞ்சாங்கம் மே 12 – செவ்வாய் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம் தகவல்கள், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய ராசி பலன்கள், திருக்குறள், சிந்தனைகள்...

“We are all one”, this realization of oneness is attained in the Varg : Atul Limaye

"We are all one", this realization of oneness is attained in the Varg – Atul LimayeJi - Karyakarta Vikas Varg-Dwitiya inaugurated in Nagpur

வெள்ளை அறிக்கை வெளியிடும் முன்… தேர்தல் அறிக்கையைப் பார்க்கவும்!

தமிழ் மக்கள் யாரை மன்னிக்கவில்லை என்றாலும் ஒரு நடிகனை கண்டிப்பாக மன்னிப்பார்கள்.. வாழ்த்துகள்!

Entertainment News

Popular Categories