சிலை கடத்தல் தடுப்பு போலீஸ் ஏடிஜிபியாக மூத்த ஐபிஎஸ் அதிகாரி, அபய் குமார் சிங் நியமிக்கப்பட்டுள்ளார். இவரை தமிழக அரசு நியமனம் செய்து அறிவிப்பு வெளியிட்டது. தமிழ்நாடு காகித நிறுவன தலைமை கண்காணிப்பு அதிகாரியாக பணியாற்றியவர் அபய் குமார் சிங்.
முன்னதாக, சிலைக் கடத்தல் தடுப்புப் பிரிவுக்கு பொறுப்பில் இருந்த ஐஜி., பொன்மாணிக்கவேல் இன்றுடன் பணி ஓய்வு பெறுகிறார். ரயில்வே ஐஜி.,யாக இருந்த பொன்.மாணிக்கவேலுக்கு கூடுதல் பொறுப்பாக, சிலைக்கடத்தல் தடுப்புப் பிரிவு வழங்கப் பட்டிருந்தது.
பொன்.மாணிக்கவேலின் சிறப்பான செயல்பாடுகளால் ஈர்க்கப் பட்டிருந்த பொதுமக்கள் பலர், அவர் பெயரில் இன்று கோயில்களில் சிறப்பு வழிபாடு, அர்ச்சனை செய்து, வாழ்த்தி வருகின்றனர்.