வெஸ்ட்இண்டீஸ் தொடர்- இந்திய அணி இன்று தேர்வு

09 Aug09 BCCI - 2026

இந்திய கிரிக்கெட் அணி வெஸ்ட் இண்டீசில் சுற்றுப்பயணம் செய்து 3 ஒரு நாள் போட்டி, மூன்று 20 ஓவர் ஆட்டம் மற்றும் 2 டெஸ்டில் விளையாடுகிறது.

ஆகஸ்டு 3-ந்தேதி முதல் செப்டம்பர் 3-ந்தேதி வரை இந்திய அணி வெஸ்ட் இண்டீசுடன் விளையாடுகிறது.

வெஸ்ட்இண்டீஸ் தொடருக்கான இந்திய அணி தேர்வு இன்று நடக்கிறது. எம்.எஸ்.கே.பிரசாத் தலைமையிலான தேர்வு குழு மும்பையில் கூடி வீரர்களை அறிவிக்கிறார்கள்.

முன்னதாக வீரர்கள் தேர்வு வீரர்கள் உடல் தகுதி குறித்த நிலை வருவதில் தாமதம் ஏற்பட்டதால் தேர்வு தள்ளி வைக்கப்பட்டது.

இந்திய அணியின் முன்னாள் கேப்டன் தோனி உலக கோப்பையுடன் ஓய்வு பெறுவார் என்று எதிர் பார்க்கப்பட்டது. ஆனால், அவர் ஓய்வு முடிவை காலம் தாழ்த்தி வருகிறார். அடுத்த ஆண்டு நடைபெறும் 20 ஓவர் உலக கோப்பையுடன் அவர் ஓய்வை அறிவிக்கலாம் என்று திட்டமிட்டு இருக்கிறார்.

ஆனாலும் கிரிக்கெட் வாரியம் அவராக ஓய்வு பெற வேண்டும் என்று விரும்புகிறது. இதுதொடர்பாக தேர்வு குழுவினர் அவரிடம் பேசி வருகிறார்கள். ஆனால் அவர் இதுகுறித்து வெளிப்படையாக எதுவும் தெரிவிக்கவில்லை.

வெஸ்ட்இண்டீஸ் தொடருக்கான அணியில் தோனி ஆட மாட்டார் என்று தெரிகிறது. ஒருவேளை அவர் அணியில் இடம் பெற்றாலும் 11 பேர் கொண்ட அணியில் இருக்கமாட்டார். அணியின் விக்கெட் கீப்பராக ரிசப் பண்ட் தேர்வு செய்யப்படுவார். ஏற்கனவே தோனியை 20 ஓவர் அணியில் இருந்து தேர்வு குழு நீக்கி இருந்தது. இதனால் அவர் நீக்கப்பட்டாலும் ஆச்சரியப்படுவதற்கு இல்லை.

முன்னாள் வீரர்களான காம்பீர், ஷேவாக் ஆகியோர் தோனி ஓய்வு பெற இதுவே சரியான தருணம் என்று கருத்து தெரிவித்துள்ளனர்.

வெஸ்ட்இண்டீஸ் டெஸ்ட் தொடருக்கு புதிய தொடக்க வீரர் தேர்வு செய்யப்படலாம். தவான் காயம் அடைந்திருப்பதால் புதிய தொடக்க வீரருக்கு வாய்ப்பு இருப்பதாக கருதப்படுகிறது.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

பஞ்சாங்கம் மார்ச் 12 – வியாழன்| இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரண்டு ராசிகளுக்கும் உள்ள இன்றைய ராசிபலன்கள், திருக்குறள், சிந்தனைகள்....

எரிவாயு சிலிண்டர், பெட்ரோல்; மக்கள் அச்சம் கொள்ள வேண்டாம்: பிரதமர் மோடி பேச்சு!

திருச்சியில் நடைபெற்ற தேஜகூட்டணி பொதுக்கூட்டத்தில், கூட்டணி தலைவர்கள் பேசியபோது,

தமிழருக்கான ரூ.5,650 கோடி திட்டங்கள் தொடங்க… இன்று திருச்சி வருகிறார் பிரதமர் மோடி!

தமிழகத்துக்கான ரூ.5,650 கோடி ரூபாய் மதிப்புள்ள திட்டங்களைத் தொடங்கி வைக்க, பிரதமர் நரேந்திர மோடி  திருச்சிக்கு வருகிறார். 

பஞ்சாங்கம் – மார்ச் 11 – புதன் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், ராசிபலன்கள், ஜோதிடம், பொன்மொழிகள், திருக்குறள்,

‘அடிச்சி விடு’ புகழ், இப்போ ‘செல்லத் தட்டல்’ சேகர்பாபு ஆகிவிட்டார்: அண்ணாமலை கிண்டல்!

அது என்ன, திமுக தலைவர்கள் மட்டும் சாதாரண பொதுமக்களை அன்பாகத் தட்டிக் கொடுக்கும்போதெல்லாம், முகத்தை அப்படி கோபமாக வைத்துக் கொள்கிறீர்கள்?

Topics

பஞ்சாங்கம் மார்ச் 12 – வியாழன்| இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரண்டு ராசிகளுக்கும் உள்ள இன்றைய ராசிபலன்கள், திருக்குறள், சிந்தனைகள்....

எரிவாயு சிலிண்டர், பெட்ரோல்; மக்கள் அச்சம் கொள்ள வேண்டாம்: பிரதமர் மோடி பேச்சு!

திருச்சியில் நடைபெற்ற தேஜகூட்டணி பொதுக்கூட்டத்தில், கூட்டணி தலைவர்கள் பேசியபோது,

தமிழருக்கான ரூ.5,650 கோடி திட்டங்கள் தொடங்க… இன்று திருச்சி வருகிறார் பிரதமர் மோடி!

தமிழகத்துக்கான ரூ.5,650 கோடி ரூபாய் மதிப்புள்ள திட்டங்களைத் தொடங்கி வைக்க, பிரதமர் நரேந்திர மோடி  திருச்சிக்கு வருகிறார். 

பஞ்சாங்கம் – மார்ச் 11 – புதன் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், ராசிபலன்கள், ஜோதிடம், பொன்மொழிகள், திருக்குறள்,

‘அடிச்சி விடு’ புகழ், இப்போ ‘செல்லத் தட்டல்’ சேகர்பாபு ஆகிவிட்டார்: அண்ணாமலை கிண்டல்!

அது என்ன, திமுக தலைவர்கள் மட்டும் சாதாரண பொதுமக்களை அன்பாகத் தட்டிக் கொடுக்கும்போதெல்லாம், முகத்தை அப்படி கோபமாக வைத்துக் கொள்கிறீர்கள்?

தமிழகத்தில் இருந்த நாட்கள் பொற்கால நாட்கள்: ஆளுநர் ஆர்.என். ரவி உருக்கம்!

தமிழக மக்களுடன் கலந்து பழகிய 54 மாதங்கள் தம் வாழ்வின் பொற்கால நாட்கள் என்று தமிழக ஆளுநர் ஆர்என். ரவி உருக்கத்துடன் தெரிவித்துள்ளார்.

இக்கணம் – தேவை சிக்கனம்!

மத்திய கிழக்கில் போர் ஏற்பட்டதில் இருந்தே உலகின் பல நாடுகளிலும் பெட்ரோல் மற்றும் எரிவாயு தட்டுப்பாடு ஏற்பட தொடங்கியது…

பஞ்சாங்கம் மார்ச் 10 – செவ்வாய் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம் தகவல்கள், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய ராசி பலன்கள், திருக்குறள், சிந்தனைகள்...

Entertainment News

Popular Categories