வடப்பி
தேவையானவை:
சோள மாவு, கோதுமை மாவு, அரிசி மாவு, கேழ்வரகு மாவு – தலா கால் கப், பொட்டுக்கடலை மாவு – 2 டேபிள்ஸ்பூன், துருவிய வெள்ளரிப்பிஞ்சு – ஒரு கப், வெள்ளை எள் – ஒரு டேபிள்ஸ்பூன், சர்க்கரை – சிறிது,
இஞ்சித் துருவல் – ஒரு டீஸ்பூன், புளிக்காத தயிர் – ஒரு டேபிள்ஸ்பூன், வறுத்த வேர்க்கடலைப் பொடி – ஒரு டேபிள்ஸ்பூன்,
உப்பு, எண்ணெய் – தேவையான அளவு.
செய்முறை:
கொடுத்துள்ள பொருட்களில் எண்ணெய் தவிர்த்து, மீதி உள்ள எல்லாப் பொருட்களையும் ஒன்றாகச் சேர்த்து, சிறிது தண்ணீர் தெளித்து கெட்டியாக பிசையவும். பிறகு, உருண்டைகளாக உருட்டி சூடான எண்ணெயில் பொரித்தெடுத்து பரிமாறவும்.
குறிப்பு: வெள்ளரியில் நீர் அதிகம் சுரக்கும் என்பதால் மாவு பிசையும்போது குறைவான அளவு மட்டும் தண்ணீர் சேர்த்துக்கொள்ளுங்கள்.