திருந்தாத #தமிழன்! #சர்கார் ஹீரோயினைக் காண குவிந்து #தடியடி பெற்று தறிகெட்டு ஓடிய கூட்டம்!

maxresdefault 38 - 2026

நடிகை கீர்த்தி சுரேஷ் நடித்துள்ள சர்கார் படம் தீபாவளிக்கு திரைக்கு வர இருக்கிறது. இந்தப் படத்தின் மூலம் அவர் விஜய்க்கு இரண்டாவது முறையாக ஜோடியாகி இருக்கிறார். இதுதவிர இவர் நடித்திருந்த சண்டக்கோழி படமும் சமீபத்தில் திரைக்கு வந்தது. முன்னணி நடிகர்களுடன் நடித்து வரும் கீர்த்தி சுரேஷ் தனக்கான தனி ரசிகர் பட்டாளத்தையே வைத்துள்ளார்.

வேலூர் மாவட்டம், திருப்பத்தூரில் நகைக் கடை திறப்பு விழா ஒன்றில் நடிகை கீர்த்தி சுரேஷ் பங்கேற்றார். கீர்த்தி சுரேஷை காண்பதற்காக அப்பகுதியில் ஏராளமான இளைஞர்கள் குவிந்தனர். அவரது காரை ரசிகர்கள் சூழ்ந்ததால் அவரால் வெளியே வர முடியவில்லை. அதனைத்தொடர்ந்து காரை சூழ்ந்திருந்தோர் மீது போலீசார் லேசான தடியடி நடத்தினர். அதன்பின் காரில் இருந்து வெளியே வந்த கீர்த்தி சுரேஷ், நகைக்கடை திறப்பு விழாவில் பங்கேற்றார். நடிகை கீர்த்தி சுரேசைப் பார்க்க வந்த கூட்டத்தால் சுமார் ஒரு மணி நேரம், 2 கிலோ மீட்டர் தூரத்திற்கு போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது.

வேலூர் மாவட்டம் திருப்பத்தூரில் நகைக்கடை திறப்பு விழாவில் கலந்து கொள்ள வந்த நடிகை கீர்த்தி சுரேஷைக் காண ஆயிரக்கணக்கான ரசிகர்கள் திரண்டனர். இது தமிழகத்தின் சாபக்கேடு என்றனர் அந்தக் கூட்டத்தை வேடிக்கை பார்த்தவர்கள்.

எத்தனையோ பிரச்னைகளில் தமிழகம் தள்ளாடும் போது, அதைக் கண்டுகொள்ளாமல் அவரவர் வேலையைப் பார்த்துக் கொண்டு போகும் தமிழக இளைஞர்கள் பட்டாளம், இன்னமும் நடிகையைப் பார்ப்பதற்கு முண்டியடித்து கூட்டமாய்க் கூடி, செல்பி மோகத்தில் சாலையில் விழுந்து உருண்டு புரண்டு, போலீஸில் தடியடி பெற்று பெரும் அவதியை சந்தித்ததும், அவமானத்தையும் அடைந்ததுள்ளனர்.

வேலூர் மாவட்டம் திருப்பத்தூரில் தனியார் நகைக்கடையின் புதிய கிளை அமைக்கப்பட்டது. இக்கடையின் திறப்பு விழா இன்று நடைபெறும் என்றும், இதில் நடிகை கீர்த்தி சுரேஷ் கலந்து கொள்வர் என்றும் விளம்பரப்படுத்தப்பட்டது. இதையடுத்து அங்கு காலை முதலே ஏராளமான ரசிகர்கள் திரளத் தொடங்கினர். நேரம் செல்லச் செல்ல ரசிகர்கள் கூட்டம் அதிகரித்து, சாலை முழுவதும் கூட்டமாகக் காணப்பட்டது.

ரசிகர்கள் கூட்டத்தின் காரணமாகவும், சாலையை ஆக்கிரமித்து மேடை அமைக்கப்பட்டிருந்ததாலும், அங்கு போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது. இதனால் அச்சாலையில் போக்குவரத்தை போலீசார் முற்றாக தடை செய்தனர். இதனிடையே ரசிகர்களின் உறசாக முழக்கத்திற்கிடையே காரில் வந்த கீர்த்தி சுரேஷ், நகைக்கடையை திறந்து வைத்து முதல் விற்பனையை தொடங்கி வைத்தார்.. பின்னர் சாலை மறித்து அமைக்கப்பட்டிருந்த மேடையில் தோன்றி கையசைத்ததோடு, சிறிது நேரம் பேசி நடமாடினார்.

நிகழ்ச்சி முடிந்ததும் ரசிகர்களுடன் செல்ஃபி எடுத்துக் கொண்ட கீர்த்தி சுரேஷ், காரில் ஏறி புறப்பட்டார். ஆனால் ரசிகர்களின் கும்பலுக்கிடையே கார் மாட்டிக் கொண்டதோடு, நகர முடியாமல் நின்றது. காருக்கு வழிவிடாத ரசிகர்களால் மீண்டும் நெரிசல் உருவானதையடுத்து அங்கு வந்த போலீசார், ரசிகர்களை அடித்து விரட்டினார். பலர் கீழே விழுந்து காயமடைந்த நிலையில், அடிதாங்க முடியாமல் பலர் அலறியடித்து ஓட்டம் பிடித்தனர்.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

இந்த ரயில்கள் எல்லாம் எழும்பூர் வராது; தாம்பரத்தோடு சரி

சென்னை எழும்பூரில் நடைபெற்று வரும் மறு சீரமைப்பு பணிகள் காரணமாக இந்த மாற்றங்கள் தற்போது நீட்டிக்கப்பட்டுள்ளதாக‌

தாம்பரம் – தென்காசி ஈஸ்டர் சிறப்பு ரயில்; இன்று முன்பதிவு தொடக்கம்!

திருச்சி மதுரை திருநெல்வேலி தென்காசி வழியாக தாம்பரம் தென்காசி/செங்கோட்டை புனித வெள்ளி...

பஞ்சாங்கம் ஏப்ரல் 2 – வியாழன்| இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரண்டு ராசிகளுக்கும் உள்ள இன்றைய ராசிபலன்கள், திருக்குறள், சிந்தனைகள்....

மண்ணின் மணத்தை மலர வைத்த ஒடிஷா!

இன்று ஏப்ரல் - 1, ஒடிஷா மாநிலம் தோன்றிய நாள் என்று சமூக வலைத்தளத்தில் செய்தி வந்ததும் நான் நான்கு ஆண்டுகளுக்கு முன் மூன்று நாட்கள் ஒடிஷாவில் உள்ள தாமன்ஜோடி

IPL 2026: வெற்றிகரமான தொடக்கம்!

ஐபிஎல் 2026 மார்ச்சு 28ஆம் தேதி பெங்களூருவில் ஹைதரபாத், பெங்களூரு அணிகளுக்கிடையேயான ஆட்டத்துடன் தொடங்கியது.

Topics

இந்த ரயில்கள் எல்லாம் எழும்பூர் வராது; தாம்பரத்தோடு சரி

சென்னை எழும்பூரில் நடைபெற்று வரும் மறு சீரமைப்பு பணிகள் காரணமாக இந்த மாற்றங்கள் தற்போது நீட்டிக்கப்பட்டுள்ளதாக‌

தாம்பரம் – தென்காசி ஈஸ்டர் சிறப்பு ரயில்; இன்று முன்பதிவு தொடக்கம்!

திருச்சி மதுரை திருநெல்வேலி தென்காசி வழியாக தாம்பரம் தென்காசி/செங்கோட்டை புனித வெள்ளி...

பஞ்சாங்கம் ஏப்ரல் 2 – வியாழன்| இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரண்டு ராசிகளுக்கும் உள்ள இன்றைய ராசிபலன்கள், திருக்குறள், சிந்தனைகள்....

மண்ணின் மணத்தை மலர வைத்த ஒடிஷா!

இன்று ஏப்ரல் - 1, ஒடிஷா மாநிலம் தோன்றிய நாள் என்று சமூக வலைத்தளத்தில் செய்தி வந்ததும் நான் நான்கு ஆண்டுகளுக்கு முன் மூன்று நாட்கள் ஒடிஷாவில் உள்ள தாமன்ஜோடி

IPL 2026: வெற்றிகரமான தொடக்கம்!

ஐபிஎல் 2026 மார்ச்சு 28ஆம் தேதி பெங்களூருவில் ஹைதரபாத், பெங்களூரு அணிகளுக்கிடையேயான ஆட்டத்துடன் தொடங்கியது.

கமலாலயத்துக்கும் சத்தியமூர்த்தி பவனுக்கும் வேறுபாடில்லை!

முரளி சீதாராமன்1) காலையில் நயினார் நாகேந்திரன் செய்தியாளர் சந்திப்பில்:- "ஏப்ரல் 4...

அதிகாரத்தில் இல்லாததற்காக, இவர்களுக்கு நன்றிக்கடன் பட்டுள்ளேன்!

இந்த இக்கட்டான சூழ்நிலையில் ஏதாவது ஒரு விஷயத்திற்கு நாம் நன்றிக்கடன் பட்டுள்ளோம் என்றால் அது, இப்போது காங்கிரஸ் கட்சி அதிகாரத்தில் இல்லாததற்கே!

பஞ்சாங்கம் – ஏப்ரல் 1 – புதன் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், ராசிபலன்கள், ஜோதிடம், பொன்மொழிகள், திருக்குறள்,

Entertainment News

Popular Categories