‘ஜெயலலிதா மகள்’ என்ற குறிப்புடன் சுற்றும் படத்தில் இருப்பவர் யார்?: பாடகி சின்மயி விளக்கம்

ஜெயலலிதாவின் மகள் என்ற பெயரில் ஒரு படம் கடந்த சில நாட்களாக வாட்ஸப்பில் பல எம்.பிக்களை சென்று ஷேர் ஆகிக்கொண்டிருக்கிறது. அதில், இவர்தான் மறைந்த முதல்வர் ஜெயலலிதாவின் உண்மையான மகள் என்ற தகவலுடன் சுற்றிக்கொண்டிருக்கிறது இந்தப் படம். இந்நிலையில், ‘இவரை எனக்கு தெரியும். கேரளாவை சேர்ந்தவர்” என தனது0 ஃபேஸ்புக்கில் ஸ்டேட்டஸ் போட்டிருந்தார் பாடகி சின்மயி. அவரிடம் இது குறித்துக் கேட்டபோது,

“இந்த உலகத்துல ஒரே மாதிரி 7 பேர் இருப்பாங்கன்னு கேள்விப்பட்டிருக்கோம் இல்லையா? அப்படித்தான் இவங்களும். இந்தப் படத்துல உள்ளவங்களுக்கும் தமிழ்நாட்டு அரசியலுக்கும் சம்பந்தமே கிடையாது. அவங்க தமிழ்நாட்டுலயே இல்லை. பல வருஷங்களா வெளிநாட்டுல வாழற இசைக்குடும்பத்தைச் சேர்ந்தவங்க. படத்துல அந்தப் பெண்கூட இருக்கிறவர் அவங்களோட கணவர் ராமநாதன். எங்கம்மா வயித்துல பிறக்காத பிள்ளை மாதிரி. எனக்கு அண்ணா மாதிரி. அதிர்ந்து பேச மாட்டார். பிரபல மிருதங்க வித்வான் திருவனந்தபுரம் பாலாஜி, அவரோட சகோதரர். அமைதியான, அடக்கமான குடும்பம் அவங்களுடையது. எங்களுக்கு ரொம்ப வருஷங்களா நெருக்கமானவங்க. யாரோ பண்ணின குசும்பு வேலை இது. அசப்புல அவங்களை மாதிரி இருக்காங்கன்னு இப்படியொரு புரளியைக் கிளப்பி விட்ருக்காங்க. அந்தப் பெண்ணோட பெயரையோ, அவங்க இருக்கிற இடத்தையோகூட நான் சொல்ல விரும்பலை. அப்படிச் சொன்னா அவங்களோட நிம்மதி கெட்டுப் போயிடும். குழந்தைங்களோட சந்தோஷமா, அமைதியா வாழ்ந்திட்டிருக்காங்க. அப்படியே இருக்கட்டும். எங்கயோ, ஏதோ ஒரு கல்யாணத்துல எடுத்த படம் இப்படித் தப்பா பரவி இவ்வளவு தூரம் வந்திருக்கு. முதல் முறை இந்தப் படம் சோஷியல் நெட்வொர்க்ல பரவினதைக் கேள்விப்பட்டே அவங்க குடும்பம் அதிர்ச்சியாயிட்டாங்க. இப்ப மறுபடி யாரோ அதைக் கிளறிவிட்டிருக்காங்க. ரொம்பப் வெறுத்துப் போய், இந்தச் செய்திக்கு ஒரு முற்றுப்புள்ளி வச்சாகணும்னுதான் அவங்க சம்மதத்தோட இந்தப் படத்தை ஷேர் பண்ணினேன்.

ALSO READ:  தேர்தல் தேதி அறிவிச்சாச்சு… இனி இதெல்லாம் செய்யாதீங்க!

சேவை மனப்பான்மையிலாகட்டும், சங்கீதத்துலயாகட்டும்… பெரிய பாரம்பரியம் உள்ள குடும்பம். ஆனா கொஞ்சம்கூட ஆரவாரம் இல்லாத குடும்பம். அவங்களைப் போய் இப்படி வம்புக்கிழுக்கிறது என்ன அட்டூழியம்னு தெரியலை. அவங்க கணவருக்கு நல்ல மனைவியா, குழந்தைகளுக்கு அன்பான அம்மாவா அமைதியா எங்கேயோ ஒரு மூலையில வாழ்ந்திட்டிருக்காங்க. அவங்களை நிம்மதியா வாழ விடுவோமே… ப்ளீஸ்..” என்று கூறினார் சின்மயி!

அவரது பேஸ்புக் பதிவு :

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

பஞ்சாங்கம் ஜூன் 2 – செவ்வாய் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம் தகவல்கள், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய ராசி பலன்கள், திருக்குறள், சிந்தனைகள்...

அண்ணாமலையில் அரசியல் பயணம் இனி…!

அண்ணாமலை தனிக்கட்சியா என்ற கேள்வி தான் உள்ளூர் மீடியா முதல் நேஷனல் மீடியா வரை விவாதிக்கப்படுகிறது. அண்ணாமலை தனிக்கட்சி ஆரம்பிக்கப்போகிறார் என்று வதந்தி கிளம்புவது இது ஒன்றும் முதல் முறை கிடையாது.

பழங்குடியினர் சலுகைகள் – யாருக்கு?

பழங்குடியினரின் இந்த உணர்வுபூர்வமான கோரிக்கை கடந்த 60 ஆண்டுகளுக்கும் மேலாக கவனிக்கப்படாமல் உள்ளது. இப்போது ஜார்கண்ட் எனப்படும் பகுதியில் இருந்து 1960 இல் கார்த்திக் ஓரான் என்ற பழங்குடியின நாடாளுமன்ற உறுப்பினர் காங்கிரஸ் கட்சி சார்பில் தேர்ந்தெடுக்கப்பட்டார். அவர்தான் மதம் மாறியவர்களுக்கு சலுகை கூடாது என்ற விஷயத்தை முதன் முதலில் எழுப்பினார்.

வங்கத் தீர்ப்பு: இந்திய அரசியலில் நிலநடுக்கம்!

நேற்று எனக்கு ஒரு தகவல் கூறப்பட்டது. 'இண்டி' கூட்டணியில் உள்ள எந்தக் கட்சித் தலைவர்களும் மம்தா பானர்ஜியின் தொலைபேசி அழைப்புகளை எடுக்கவில்லை என்று கூறப்பட்டது. சில மாதங்களுக்கு முன்பு இதை நினைத்துக்கூட பார்க்க முடியாது. ஆனால் அது இனி வெளிப்படவிருக்கும் நிகழ்வுகளுக்கான ஒரு முன்னோட்டம் மட்டுமே.

முப்பெரும் ஊழல்களில் முதற் பெரும் ஊழல் துறை!

அற நிலையத்துறையைப் போன்ற சட்ட விரோதமான, சாசன விரோதமான, சமூக விரோதமான, சனாதன விரோதமான ஒரு அமைப்பு இந்த உலகில் எங்குமே இருக்கமுடியாது. உலகிலேயே சனாதன வாழ்வியல் ஆதி காலம் தொட்டு உன்னத நிலையில் இருந்துவந்த தமிழகத்தில்தான் இந்த நிலைமை என்பது மிகப் பெரிய, மிக வேதனையான நகைமுரண் தான்.

Topics

பஞ்சாங்கம் ஜூன் 2 – செவ்வாய் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம் தகவல்கள், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய ராசி பலன்கள், திருக்குறள், சிந்தனைகள்...

அண்ணாமலையில் அரசியல் பயணம் இனி…!

அண்ணாமலை தனிக்கட்சியா என்ற கேள்வி தான் உள்ளூர் மீடியா முதல் நேஷனல் மீடியா வரை விவாதிக்கப்படுகிறது. அண்ணாமலை தனிக்கட்சி ஆரம்பிக்கப்போகிறார் என்று வதந்தி கிளம்புவது இது ஒன்றும் முதல் முறை கிடையாது.

பழங்குடியினர் சலுகைகள் – யாருக்கு?

பழங்குடியினரின் இந்த உணர்வுபூர்வமான கோரிக்கை கடந்த 60 ஆண்டுகளுக்கும் மேலாக கவனிக்கப்படாமல் உள்ளது. இப்போது ஜார்கண்ட் எனப்படும் பகுதியில் இருந்து 1960 இல் கார்த்திக் ஓரான் என்ற பழங்குடியின நாடாளுமன்ற உறுப்பினர் காங்கிரஸ் கட்சி சார்பில் தேர்ந்தெடுக்கப்பட்டார். அவர்தான் மதம் மாறியவர்களுக்கு சலுகை கூடாது என்ற விஷயத்தை முதன் முதலில் எழுப்பினார்.

வங்கத் தீர்ப்பு: இந்திய அரசியலில் நிலநடுக்கம்!

நேற்று எனக்கு ஒரு தகவல் கூறப்பட்டது. 'இண்டி' கூட்டணியில் உள்ள எந்தக் கட்சித் தலைவர்களும் மம்தா பானர்ஜியின் தொலைபேசி அழைப்புகளை எடுக்கவில்லை என்று கூறப்பட்டது. சில மாதங்களுக்கு முன்பு இதை நினைத்துக்கூட பார்க்க முடியாது. ஆனால் அது இனி வெளிப்படவிருக்கும் நிகழ்வுகளுக்கான ஒரு முன்னோட்டம் மட்டுமே.

முப்பெரும் ஊழல்களில் முதற் பெரும் ஊழல் துறை!

அற நிலையத்துறையைப் போன்ற சட்ட விரோதமான, சாசன விரோதமான, சமூக விரோதமான, சனாதன விரோதமான ஒரு அமைப்பு இந்த உலகில் எங்குமே இருக்கமுடியாது. உலகிலேயே சனாதன வாழ்வியல் ஆதி காலம் தொட்டு உன்னத நிலையில் இருந்துவந்த தமிழகத்தில்தான் இந்த நிலைமை என்பது மிகப் பெரிய, மிக வேதனையான நகைமுரண் தான்.

பஞ்சாங்கம் ஜூன் 1 – திங்கள் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான பலன்கள், நட்சத்திர பலன்கள், அதிர்ஷ்ட எண்கள், அதிர்ஷ்ட நிறம், திருக்குறள், சிந்தனைகள்...

ராஜபாளையம் வழியே திருவனந்தபுரம் – கோவை சிறப்பு ரயில் அறிவிப்பு

கோடைகால சிறப்பு ரயிலாக திருவனந்தபுரம் வடக்கு - போத்தனூர் மற்றும் போத்தனூர் - திருவனந்தபுரம் சென்ட்ரல் இடையே தென்னக ரயில்வே அறிவித்துள்ளது.

Entertainment News

Popular Categories