‘ஜெயலலிதா மகள்’ என்ற குறிப்புடன் சுற்றும் படத்தில் இருப்பவர் யார்?: பாடகி சின்மயி விளக்கம்

ஜெயலலிதாவின் மகள் என்ற பெயரில் ஒரு படம் கடந்த சில நாட்களாக வாட்ஸப்பில் பல எம்.பிக்களை சென்று ஷேர் ஆகிக்கொண்டிருக்கிறது. அதில், இவர்தான் மறைந்த முதல்வர் ஜெயலலிதாவின் உண்மையான மகள் என்ற தகவலுடன் சுற்றிக்கொண்டிருக்கிறது இந்தப் படம். இந்நிலையில், ‘இவரை எனக்கு தெரியும். கேரளாவை சேர்ந்தவர்” என தனது0 ஃபேஸ்புக்கில் ஸ்டேட்டஸ் போட்டிருந்தார் பாடகி சின்மயி. அவரிடம் இது குறித்துக் கேட்டபோது,

“இந்த உலகத்துல ஒரே மாதிரி 7 பேர் இருப்பாங்கன்னு கேள்விப்பட்டிருக்கோம் இல்லையா? அப்படித்தான் இவங்களும். இந்தப் படத்துல உள்ளவங்களுக்கும் தமிழ்நாட்டு அரசியலுக்கும் சம்பந்தமே கிடையாது. அவங்க தமிழ்நாட்டுலயே இல்லை. பல வருஷங்களா வெளிநாட்டுல வாழற இசைக்குடும்பத்தைச் சேர்ந்தவங்க. படத்துல அந்தப் பெண்கூட இருக்கிறவர் அவங்களோட கணவர் ராமநாதன். எங்கம்மா வயித்துல பிறக்காத பிள்ளை மாதிரி. எனக்கு அண்ணா மாதிரி. அதிர்ந்து பேச மாட்டார். பிரபல மிருதங்க வித்வான் திருவனந்தபுரம் பாலாஜி, அவரோட சகோதரர். அமைதியான, அடக்கமான குடும்பம் அவங்களுடையது. எங்களுக்கு ரொம்ப வருஷங்களா நெருக்கமானவங்க. யாரோ பண்ணின குசும்பு வேலை இது. அசப்புல அவங்களை மாதிரி இருக்காங்கன்னு இப்படியொரு புரளியைக் கிளப்பி விட்ருக்காங்க. அந்தப் பெண்ணோட பெயரையோ, அவங்க இருக்கிற இடத்தையோகூட நான் சொல்ல விரும்பலை. அப்படிச் சொன்னா அவங்களோட நிம்மதி கெட்டுப் போயிடும். குழந்தைங்களோட சந்தோஷமா, அமைதியா வாழ்ந்திட்டிருக்காங்க. அப்படியே இருக்கட்டும். எங்கயோ, ஏதோ ஒரு கல்யாணத்துல எடுத்த படம் இப்படித் தப்பா பரவி இவ்வளவு தூரம் வந்திருக்கு. முதல் முறை இந்தப் படம் சோஷியல் நெட்வொர்க்ல பரவினதைக் கேள்விப்பட்டே அவங்க குடும்பம் அதிர்ச்சியாயிட்டாங்க. இப்ப மறுபடி யாரோ அதைக் கிளறிவிட்டிருக்காங்க. ரொம்பப் வெறுத்துப் போய், இந்தச் செய்திக்கு ஒரு முற்றுப்புள்ளி வச்சாகணும்னுதான் அவங்க சம்மதத்தோட இந்தப் படத்தை ஷேர் பண்ணினேன்.

சேவை மனப்பான்மையிலாகட்டும், சங்கீதத்துலயாகட்டும்… பெரிய பாரம்பரியம் உள்ள குடும்பம். ஆனா கொஞ்சம்கூட ஆரவாரம் இல்லாத குடும்பம். அவங்களைப் போய் இப்படி வம்புக்கிழுக்கிறது என்ன அட்டூழியம்னு தெரியலை. அவங்க கணவருக்கு நல்ல மனைவியா, குழந்தைகளுக்கு அன்பான அம்மாவா அமைதியா எங்கேயோ ஒரு மூலையில வாழ்ந்திட்டிருக்காங்க. அவங்களை நிம்மதியா வாழ விடுவோமே… ப்ளீஸ்..” என்று கூறினார் சின்மயி!

அவரது பேஸ்புக் பதிவு :

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

பஞ்சாங்கம் ஏப்ரல் 23 – வியாழன்| இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரண்டு ராசிகளுக்கும் உள்ள இன்றைய ராசிபலன்கள், திருக்குறள், சிந்தனைகள்....

மின்னணு வாக்குப் பதிவு இயந்திரம் இந்தியாவுக்குப் பெருமை! : டி.எஸ்.கிருஷ்ணமூர்த்தி

டி.எஸ்.கிருஷ்ணமூர்த்தி என்கிற தருவை சுப்பைய கிருஷ்ணமூர்த்தி திருநெல்வேலிக்காரர். பட்டப்படிப்பு பெங்களூரில். மைசூர் பல்கலைக் கழகத்தில் தங்கப்பதக்கம் பெற்றவர். இங்கிலாந்தில் பட்டமேற்படிப்பு படித்தவர்.

ஞானமும் பக்தியும் கலந்த கொள்கை!

வெளிப்பார்வைக்கு எந்த மதத்தைச் சேர்ந்தவர்களாயிருந்தாலும். ஸாதாரணப் புத்திசாலிகள் தெரிந்தோ, தெரியாமலோ இந்த விசிஷ்டாத்வைத மதத்தையே பின்பற்றி, இம்மதக் கொள்கைகளையே அனுசரிக்கின்றார்கள்.

பஞ்சாங்கம் – ஏப்ரல் 22 – புதன் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், ராசிபலன்கள், ஜோதிடம், பொன்மொழிகள், திருக்குறள்,

ராஜபாளையம் பெரிய மாரியம்மன் கோயில் சித்திரை திருவிழா துவக்கம்

ராஜபாளையம் தென்காசி சாலையில் உள்ள புதுப்பாளையம் பெரிய மாரியம்மன் கோயிலில் ஆண்டுதோறும்...

Topics

பஞ்சாங்கம் ஏப்ரல் 23 – வியாழன்| இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரண்டு ராசிகளுக்கும் உள்ள இன்றைய ராசிபலன்கள், திருக்குறள், சிந்தனைகள்....

மின்னணு வாக்குப் பதிவு இயந்திரம் இந்தியாவுக்குப் பெருமை! : டி.எஸ்.கிருஷ்ணமூர்த்தி

டி.எஸ்.கிருஷ்ணமூர்த்தி என்கிற தருவை சுப்பைய கிருஷ்ணமூர்த்தி திருநெல்வேலிக்காரர். பட்டப்படிப்பு பெங்களூரில். மைசூர் பல்கலைக் கழகத்தில் தங்கப்பதக்கம் பெற்றவர். இங்கிலாந்தில் பட்டமேற்படிப்பு படித்தவர்.

ஞானமும் பக்தியும் கலந்த கொள்கை!

வெளிப்பார்வைக்கு எந்த மதத்தைச் சேர்ந்தவர்களாயிருந்தாலும். ஸாதாரணப் புத்திசாலிகள் தெரிந்தோ, தெரியாமலோ இந்த விசிஷ்டாத்வைத மதத்தையே பின்பற்றி, இம்மதக் கொள்கைகளையே அனுசரிக்கின்றார்கள்.

பஞ்சாங்கம் – ஏப்ரல் 22 – புதன் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், ராசிபலன்கள், ஜோதிடம், பொன்மொழிகள், திருக்குறள்,

ராஜபாளையம் பெரிய மாரியம்மன் கோயில் சித்திரை திருவிழா துவக்கம்

ராஜபாளையம் தென்காசி சாலையில் உள்ள புதுப்பாளையம் பெரிய மாரியம்மன் கோயிலில் ஆண்டுதோறும்...

ஹிந்து விரோதிகளைத் தோற்கடிக்க… நமக்கான ஆளுமைகளைத் தேர்ந்தெடுப்போம்!

ஜனநாயக கடமையை ஆற்றுவோம்.. 100% வாக்களிப்போம். தமிழகத்தில் நமக்கான ஆளுமையை நாம்...

ஆதிசங்கரரின் சதச்லோகி – எளிய விளக்கம்!

காசியில் ஸ்ரீ பகவத்பாதர் தம் 9 - 12 வயதுக்குள் ப்ரஸ்தானத்ரய பாஷ்யங்களை இயற்றினார். அவற்றில் சொல்லப்பட்ட விஷயங்களை மக்கள் எளிதில் புரிந்து கொள்ள 100 சுலோகங்களில் ஆன சதச்லோகியை இயற்றினார்.

ஆதிசங்கர பகவத்பாதரின் ‘நிர்வாண ஷட்கம்’!

ஆதி சங்கர பகவத் பாதர் இயற்றிய நிர்வாண ஷடகம் மிகவும் பிரபலமான ஒன்று. நிர்வாண எனில் உருவமற்ற. ஷட் எனில் ஆறு என்ற எண்ணிக்கை.

Entertainment News

Popular Categories