‘ஜெயலலிதா மகள்’ என்ற குறிப்புடன் சுற்றும் படத்தில் இருப்பவர் யார்?: பாடகி சின்மயி விளக்கம்

ஜெயலலிதாவின் மகள் என்ற பெயரில் ஒரு படம் கடந்த சில நாட்களாக வாட்ஸப்பில் பல எம்.பிக்களை சென்று ஷேர் ஆகிக்கொண்டிருக்கிறது. அதில், இவர்தான் மறைந்த முதல்வர் ஜெயலலிதாவின் உண்மையான மகள் என்ற தகவலுடன் சுற்றிக்கொண்டிருக்கிறது இந்தப் படம். இந்நிலையில், ‘இவரை எனக்கு தெரியும். கேரளாவை சேர்ந்தவர்” என தனது0 ஃபேஸ்புக்கில் ஸ்டேட்டஸ் போட்டிருந்தார் பாடகி சின்மயி. அவரிடம் இது குறித்துக் கேட்டபோது,

“இந்த உலகத்துல ஒரே மாதிரி 7 பேர் இருப்பாங்கன்னு கேள்விப்பட்டிருக்கோம் இல்லையா? அப்படித்தான் இவங்களும். இந்தப் படத்துல உள்ளவங்களுக்கும் தமிழ்நாட்டு அரசியலுக்கும் சம்பந்தமே கிடையாது. அவங்க தமிழ்நாட்டுலயே இல்லை. பல வருஷங்களா வெளிநாட்டுல வாழற இசைக்குடும்பத்தைச் சேர்ந்தவங்க. படத்துல அந்தப் பெண்கூட இருக்கிறவர் அவங்களோட கணவர் ராமநாதன். எங்கம்மா வயித்துல பிறக்காத பிள்ளை மாதிரி. எனக்கு அண்ணா மாதிரி. அதிர்ந்து பேச மாட்டார். பிரபல மிருதங்க வித்வான் திருவனந்தபுரம் பாலாஜி, அவரோட சகோதரர். அமைதியான, அடக்கமான குடும்பம் அவங்களுடையது. எங்களுக்கு ரொம்ப வருஷங்களா நெருக்கமானவங்க. யாரோ பண்ணின குசும்பு வேலை இது. அசப்புல அவங்களை மாதிரி இருக்காங்கன்னு இப்படியொரு புரளியைக் கிளப்பி விட்ருக்காங்க. அந்தப் பெண்ணோட பெயரையோ, அவங்க இருக்கிற இடத்தையோகூட நான் சொல்ல விரும்பலை. அப்படிச் சொன்னா அவங்களோட நிம்மதி கெட்டுப் போயிடும். குழந்தைங்களோட சந்தோஷமா, அமைதியா வாழ்ந்திட்டிருக்காங்க. அப்படியே இருக்கட்டும். எங்கயோ, ஏதோ ஒரு கல்யாணத்துல எடுத்த படம் இப்படித் தப்பா பரவி இவ்வளவு தூரம் வந்திருக்கு. முதல் முறை இந்தப் படம் சோஷியல் நெட்வொர்க்ல பரவினதைக் கேள்விப்பட்டே அவங்க குடும்பம் அதிர்ச்சியாயிட்டாங்க. இப்ப மறுபடி யாரோ அதைக் கிளறிவிட்டிருக்காங்க. ரொம்பப் வெறுத்துப் போய், இந்தச் செய்திக்கு ஒரு முற்றுப்புள்ளி வச்சாகணும்னுதான் அவங்க சம்மதத்தோட இந்தப் படத்தை ஷேர் பண்ணினேன்.

சேவை மனப்பான்மையிலாகட்டும், சங்கீதத்துலயாகட்டும்… பெரிய பாரம்பரியம் உள்ள குடும்பம். ஆனா கொஞ்சம்கூட ஆரவாரம் இல்லாத குடும்பம். அவங்களைப் போய் இப்படி வம்புக்கிழுக்கிறது என்ன அட்டூழியம்னு தெரியலை. அவங்க கணவருக்கு நல்ல மனைவியா, குழந்தைகளுக்கு அன்பான அம்மாவா அமைதியா எங்கேயோ ஒரு மூலையில வாழ்ந்திட்டிருக்காங்க. அவங்களை நிம்மதியா வாழ விடுவோமே… ப்ளீஸ்..” என்று கூறினார் சின்மயி!

அவரது பேஸ்புக் பதிவு :

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

பஞ்சாங்கம் மார்ச் 13 – வெள்ளி | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய பலன்கள், திருக்குறள், நற்சிந்தனை

177ல் தொடங்கி 1 சீட்டில் வந்து நிக்குது… 30 வருட பரிணாம வளர்ச்சி!

177ல் தொடங்கி 1 சீட்டில் வந்து நிக்குது... 30 வருட பரிணாம வளர்ச்சி!

பஞ்சாங்கம் மார்ச் 12 – வியாழன்| இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரண்டு ராசிகளுக்கும் உள்ள இன்றைய ராசிபலன்கள், திருக்குறள், சிந்தனைகள்....

எரிவாயு சிலிண்டர், பெட்ரோல்; மக்கள் அச்சம் கொள்ள வேண்டாம்: பிரதமர் மோடி பேச்சு!

திருச்சியில் நடைபெற்ற தேஜகூட்டணி பொதுக்கூட்டத்தில், கூட்டணி தலைவர்கள் பேசியபோது,

தமிழருக்கான ரூ.5,650 கோடி திட்டங்கள் தொடங்க… இன்று திருச்சி வருகிறார் பிரதமர் மோடி!

தமிழகத்துக்கான ரூ.5,650 கோடி ரூபாய் மதிப்புள்ள திட்டங்களைத் தொடங்கி வைக்க, பிரதமர் நரேந்திர மோடி  திருச்சிக்கு வருகிறார். 

Topics

பஞ்சாங்கம் மார்ச் 13 – வெள்ளி | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய பலன்கள், திருக்குறள், நற்சிந்தனை

177ல் தொடங்கி 1 சீட்டில் வந்து நிக்குது… 30 வருட பரிணாம வளர்ச்சி!

177ல் தொடங்கி 1 சீட்டில் வந்து நிக்குது... 30 வருட பரிணாம வளர்ச்சி!

பஞ்சாங்கம் மார்ச் 12 – வியாழன்| இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரண்டு ராசிகளுக்கும் உள்ள இன்றைய ராசிபலன்கள், திருக்குறள், சிந்தனைகள்....

எரிவாயு சிலிண்டர், பெட்ரோல்; மக்கள் அச்சம் கொள்ள வேண்டாம்: பிரதமர் மோடி பேச்சு!

திருச்சியில் நடைபெற்ற தேஜகூட்டணி பொதுக்கூட்டத்தில், கூட்டணி தலைவர்கள் பேசியபோது,

தமிழருக்கான ரூ.5,650 கோடி திட்டங்கள் தொடங்க… இன்று திருச்சி வருகிறார் பிரதமர் மோடி!

தமிழகத்துக்கான ரூ.5,650 கோடி ரூபாய் மதிப்புள்ள திட்டங்களைத் தொடங்கி வைக்க, பிரதமர் நரேந்திர மோடி  திருச்சிக்கு வருகிறார். 

பஞ்சாங்கம் – மார்ச் 11 – புதன் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், ராசிபலன்கள், ஜோதிடம், பொன்மொழிகள், திருக்குறள்,

‘அடிச்சி விடு’ புகழ், இப்போ ‘செல்லத் தட்டல்’ சேகர்பாபு ஆகிவிட்டார்: அண்ணாமலை கிண்டல்!

அது என்ன, திமுக தலைவர்கள் மட்டும் சாதாரண பொதுமக்களை அன்பாகத் தட்டிக் கொடுக்கும்போதெல்லாம், முகத்தை அப்படி கோபமாக வைத்துக் கொள்கிறீர்கள்?

தமிழகத்தில் இருந்த நாட்கள் பொற்கால நாட்கள்: ஆளுநர் ஆர்.என். ரவி உருக்கம்!

தமிழக மக்களுடன் கலந்து பழகிய 54 மாதங்கள் தம் வாழ்வின் பொற்கால நாட்கள் என்று தமிழக ஆளுநர் ஆர்என். ரவி உருக்கத்துடன் தெரிவித்துள்ளார்.

Entertainment News

Popular Categories