ஹிந்து அல்லாதோர் நுழையத் தடை: கோயிலில் அறிவிப்புப் பலகையை வைக்க நீதிமன்றம் உத்தரவு!

Published:

palani temple annoucement - 2026

ஹிந்துக்கள் அல்லாதோர் பழநி கோயிலில் நுழைய தடை என்ற அறிவிப்பு பலகையை கோயில் முன்பாக நிறுவ வேண்டும் என சென்னை உயர் நீதிமன்ற மதுரைக் கிளை உத்தரவிட்டுள்ளது.

திண்டுக்கல் மாவட்டத்தைச் சேர்ந்த செந்தில்குமார் என்பவர் தாக்கல் செய்த வழக்கை விசாரித்த நீதிபதி ஸ்ரீமதி, ஏற்கெனவே இருந்த அறிவிப்புப் பலகை நீக்கப்பட்டது ஏன்? என்று அறநிலையத்துறைக்கு கேள்வி எழுப்பியதுடன், தேவையற்ற சர்ச்சைகளை உருவாக்க வேண்டாம் என்றும் அறிவுறுத்தினார். மேலும், ஹிந்து அல்லாதோர் கோயிலில் நுழைய தடை என்ற அறிவிப்பு பலகையை மீண்டும் அங்கே நிறுவ வேண்டும் என்றும் உத்தரவு பிறப்பித்தார்.

இது கூறித்து விஸ்வ ஹிந்து பரிஷத் அமைப்பினர் தெரிவித்த போது, பழனி ஞானதண்டாயுதபானி திருக்கோவிலில், ஹிந்து அல்லாதோர் நுழைய தடை விதிக்கும் பதாகையை அகற்றிய அறங்கெட்ட அறநிலையத்துறையின் செயலை எதிர்த்து, விஸ்வ ஹிந்து பரிஷத் – திருக்கோவில், அர்ச்சகர், புரோகித் தென் தமிழக மாநில அமைப்பாளர் செந்தில் உயர் நீதிமன்ற மதுரை கிளையில் வழக்கு தொடர்ந்தார்.

ALSO READ:  ஆக்கிரமிப்பாளர்களுக்கே கோயில் சொத்துகளை பட்டா போடுவதா? தவெக., அரசுக்கு வலுக்கும் கண்டனங்கள்!

அதன் அடிப்படையில் இந்த வழக்கு இன்று நீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்தது. எங்கள் சார்பாக வழக்கறிஞர் அருண் சுவாமிநாதன் வாதாடினார். இந்த வழக்கை விசாரித்த நீதியரசர், பழனி கோவிலுக்குள் ஹிந்துக்கள்‌ அல்லாதோர் நுழைய தடை விதித்ததோடு மட்டுமன்றி உடனடியாக அந்த பதாகையை வைக்கவும் உத்தரவிட்டார்.

மேலும் எதன் அடிப்படையில் பதாகையை இந்து சமய‌ அறநிலையத்துறை அகற்றியது, அகற்ற‌ உத்தரவிட்டது யார்‌ என்ற கேள்வியும் எழுப்பினார்? இதன் மூலம், இந்து சமய அறநிலையத்துறையின் கருப்பு ஆடுகளுக்கு சம்மட்டி அடி கொடுக்கப்பட்டுள்ளது. மேலும், இது விசுவ ஹிந்து பரிஷத் – திருக்கோவில், அர்ச்சக், புரோகித் பேரமைப்பிற்கு கிடைத்த மாபெரும் வெற்றி என்று குறிப்பிட்டனர்.

Senkottai Sriram
Senkottai Sriramhttps://dhinasari.com
பத்திரிகையாளர், எழுத்தாளர். | தமிழ் தினசரி இணைய நிறுவுனர், ஆசிரியர் |விஜயபாரதம் இதழில் உதவி ஆசிரியர், மஞ்சரி டைஜஸ்ட், விகடன் பிரசுரம், சக்தி விகடன், கல்கியின் தீபம் இதழ்களில் பொறுப்பாசிரியராகப் பணி புரிந்தவர். |தினமணி இணையம் (dinamani.com), Asianet News Tamil ஆகியவற்றில் செய்தி ஆசிரியராக பணியாற்றியவர். |சென்னை அகில இந்திய வானொலிக்காக, தேசியத் தலைவர்கள், சுதந்திரப் போராட்ட வீரர்கள், காஞ்சி மகா பெரியவர் தொடர்பான பல்வேறு செய்திக் கட்டுரைகளை எழுதியுள்ளார். |* வானொலி ஆர்.ஜே., பொதிகை தொலைக்காட்சியில் செய்தி அலசல் நேரலை நிகழ்ச்சி என ஊடகத் துறையின் பல்வேறு தளங்களிலும் பணியாற்றியவர். |விகடன் பிரசுரத்தின் மூலம் இவரது ஆறு நூல்கள் வெளியாகியுள்ளன. |இவரது இதழியல் பணிக்காக, கோல்கத்தா பாரதிய பாஷா பரிஷத் அமைப்பு ‘யுவ புரஸ்கார்-08 தேசிய இலக்கிய விருது’ வழங்கியுள்ளது. |

Related articles

Recent articles

spot_img