பழைய குற்றாலம் மலைப்பகுதியில் செவ்வாய்க்கிழமை இரவு ஏற்பட்ட காட்டுத்தீயால் பரபரப்பு ஏற்பட்டது.
நெல்லை மாவட்டம் குற்றாலம் வனப்பகுதியில் தற்போது கோடை வெயில் சுட்டெரித்து வருகிறது. பகல் நேரத்தில் அனல் காற்று வீசுவதுடன், இரவு வேளையில் கடும் புழுக்கமும் காணப்படுகிறது. வெயில் காரணமாக மரங்கள், செடி, கொடிகள் வாடி சருகாக மாறியுள்ளன. இந்நிலையில், நேற்று இரவு 8 மணியளவில் பழைய குற்றாலம் வனப்பகுதியில் திடீரென தீப்பற்றி எரியத் துவங்கியது.
வெயில் காரணமாக வாடியிருந்த மரங்கள் மற்றும் சருகுகளில் தீ மளமளவென பரவியது. பல ஏக்கர் நிலப்பரப்பில் தீபற்றியதை அடுத்து வனத்துறையினர் மற்றும் தீத்தடுப்பு காவலர்கள் விரைந்து சென்று தீயை அணைக்கும் பணியில் ஈடுபட்டுள்ளனர்.


