பொய்ச் செய்திகளை நம்பி திசை திரும்பிவிடக் கூடாதே!: சமூக வலைதளங்களை நம்பும் மாணவர் குறித்து எடப்பாடி கவலை!

 

edapadi - 2026சமூக வலைதளங்களில் பரப்பப் படும் பொய்யான செய்திகளை நம்பி மாணவர்கள் திசை மாறிவிடக்கூடாதே என்று கவலைப்பட்டு கேட்டுக் கொண்டுள்ளார் தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி.

சமூக வலைதளங்களில்தான் மிக வேகமாக பொய்ச் செய்திகள் வேண்டுமென்றே பலரால் பரப்பப் படுகின்றன. சிலர், அது பொய்ச் செய்திதான் என்பதை உணரக் கூடிய தன்மை இல்லாத வகையில் இருப்பதால், பொய்ச் செய்திகளை விரைவாகப் பரப்பி விடுகின்றனர். மாணவ சமுதாயமோ இப்போது சமூக வலைத்தளங்களில் அடிமையாகிக் கிடக்கிறது. இப்படி, அவர்களைக் குறிவைத்து நடத்தப் படும் பொய்ச் செய்திகளை நம்பி மாணவர்கள் திசை மாறி விடக்கூடாது என்று முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி கேட்டுக்கொண்டுள்ளார்.

சென்னை பச்சையப்பன் கல்லூரியின் 175வது ஆண்டு விழாவில் பேசிய முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி, மாணவர்களின் கல்வியை பாதிக்கச் செய்ய பல சக்திகள் முயற்சிப்பதாகத் தெரிவித்தார். மாணவர்கள் வாட்ஸ் அப்பில் நேரத்தை வீணடிக்க வேண்டாம் என்று அவர் கேட்டுக்கொண்டார்.

விழாவில் பேசிய துணை முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம், 175-வது ஆண்டிலும் பச்சையப்பன் கல்லூரி மாறாத தரத்துடன் இருக்கிறது என்று பெருமை பொங்கத் தெரிவித்தார். பச்சையப்பன் கல்லூரியில் படிப்பதும் பணி புரிவதும் பெருமை என்றார் அவர்.

இந்த விழாவில், முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி, துணை முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம், அமைச்சர்கள் ஜெயக்குமார், கே.பி அன்பழகன் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

அரசியல்வாதிகள் போல் செயல்படும் அரசு அதிகாரிகள்: இந்து முன்னணி கண்டனம்!

எனவே அரசியல் சாசன சட்டத்தை மதித்து மக்கள் நலனை கருத்தில் கொண்டு அரசு அதிகாரிகள் செயல்பட வேண்டும் என்று இந்துமுன்னணி சார்பில் கேட்டுக் கொள்கிறோம்.

தமிழகத்தில் பெட்ரோல் டீசலுக்கு தட்டுப்பாடா? உண்மை என்ன?

தமிழ்நாடு முழுவதும் பெட்ரோல் மற்றும் டீசல் தடையின்றி தொடர்ந்து கிடைக்கும் என்பதை மீண்டும் உறுதி செய்கிறது.

அமெரிக்காவில் 1.7 பில்லியன் ஆண்டுகள் பழமையான விஷ்ணு பாறைகள்

இந்த விஷ்ணு கோவில் அல்லது விஷ்ணுப் பாறைகளுக்கு அருகே மேலு இரண்டு பாறைத் தொடர்களுக்கு ப்ரும்மா பாறை, ராம் பாறை என்றும் பெயரிடப்பட்டிருக்கிறது.

பஞ்சாங்கம் மார்ச் 13 – வெள்ளி | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய பலன்கள், திருக்குறள், நற்சிந்தனை

Topics

அரசியல்வாதிகள் போல் செயல்படும் அரசு அதிகாரிகள்: இந்து முன்னணி கண்டனம்!

எனவே அரசியல் சாசன சட்டத்தை மதித்து மக்கள் நலனை கருத்தில் கொண்டு அரசு அதிகாரிகள் செயல்பட வேண்டும் என்று இந்துமுன்னணி சார்பில் கேட்டுக் கொள்கிறோம்.

தமிழகத்தில் பெட்ரோல் டீசலுக்கு தட்டுப்பாடா? உண்மை என்ன?

தமிழ்நாடு முழுவதும் பெட்ரோல் மற்றும் டீசல் தடையின்றி தொடர்ந்து கிடைக்கும் என்பதை மீண்டும் உறுதி செய்கிறது.

அமெரிக்காவில் 1.7 பில்லியன் ஆண்டுகள் பழமையான விஷ்ணு பாறைகள்

இந்த விஷ்ணு கோவில் அல்லது விஷ்ணுப் பாறைகளுக்கு அருகே மேலு இரண்டு பாறைத் தொடர்களுக்கு ப்ரும்மா பாறை, ராம் பாறை என்றும் பெயரிடப்பட்டிருக்கிறது.

பஞ்சாங்கம் மார்ச் 13 – வெள்ளி | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய பலன்கள், திருக்குறள், நற்சிந்தனை

177ல் தொடங்கி 1 சீட்டில் வந்து நிக்குது… 30 வருட பரிணாம வளர்ச்சி!

177ல் தொடங்கி 1 சீட்டில் வந்து நிக்குது... 30 வருட பரிணாம வளர்ச்சி!

பஞ்சாங்கம் மார்ச் 12 – வியாழன்| இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரண்டு ராசிகளுக்கும் உள்ள இன்றைய ராசிபலன்கள், திருக்குறள், சிந்தனைகள்....

எரிவாயு சிலிண்டர், பெட்ரோல்; மக்கள் அச்சம் கொள்ள வேண்டாம்: பிரதமர் மோடி பேச்சு!

திருச்சியில் நடைபெற்ற தேஜகூட்டணி பொதுக்கூட்டத்தில், கூட்டணி தலைவர்கள் பேசியபோது,

Entertainment News

Popular Categories