நான் பழைய ராமதாஸாக இருந்திருந்தால்… சர்க்கார் படம் எந்த தியேட்டர்லயும் ஓடாது!

Published:

07 June18 Ramadoss - 2026

சென்னை: நடிகர் விஜய் நடிக்கும் சர்கார் திரைப்படத்தைத் தயாரிக்கும் சன் பிக்சர்ஸும் நடிகர் விஜயும் சிகரெட் உற்பத்தி நிறுவனங்களிடம் கோடி கோடியாக பணம் வாங்கியுள்ளனர் என்று குற்றம் சாட்டிய பாமக., நிறுவனர் ராமதாஸ், தான் மட்டும் பழைய ராமதாஸாக இருந்திருந்தால், சர்க்கார் படம் எந்த திரையரங்கிலும் ஓடாது என்று கூறினார்.

கடலூர் மாவட்டம் குறிஞ்சிப்பாடியில் பாமக.,வின் பொதுக்கூட்டம் நடைபெற்றது. அதில் பங்கேற்றுப் பேசினார் பாமக., நிறுவுனர் ராமதாஸ்.

அப்போது அவர், சர்கார் திரைப்பட விளம்பரத்தில் நடிகர் விஜய் புகை பிடிப்பது போன்ற போஸ்டரைப் பார்த்ததும் எனக்கு கடும் கோபம் வந்தது. நான் பழைய ராமதாஸாக இருந்திருந்தால் சர்க்கார் திரைப்படம் எந்த திரையரங்கிலும் ஓட முடியாதபடி தொண்டர்களுக்கு உத்தரவிட்டிருப்பேன் என்று கூறிய ராமதாஸ், ஆனால் தற்போது சர்க்கார் படத்தில் புகைபிடிக்கும் காட்சி இடம் பெறக் கூடாது என்று விஜய், சன் பிக்சர்ஸுக்கு வேண்டுகோள் விடுத்திருப்பதாகக் குறிப்பிட்டார்.

sarkar vijay cry - 2026

மேலும், சிகரெட் தயாரிப்பு நிறுவனங்களிடம் இருந்து நடிகர் விஜயும் அந்தப் படத்தின் தயாரிப்பாளர்களான சன் பிக்சர்ஸும் கோடி கோடியாக வாங்கிக் கொண்டுதான், இப்படி புகை பிடிக்கும் காட்சியை சர்கார் படத்தில் வைத்திருப்பதாக குற்றம் சாட்டினார். நடிகர்கள் புகைபிடிக்கும் காட்சிகளுடன் எந்தப் படத்தையும் இனி அனுமதிக்க முடியாது என்று எச்சரித்தார் டாக்டர் ராமதாஸ்.

ALSO READ:  டெட் மறு ஆய்வு மனு மீதான தீர்ப்பில் உடனடி சட்ட நிவாரணம் தேவை!
Senkottai Sriram
Senkottai Sriramhttps://dhinasari.com
பத்திரிகையாளர், எழுத்தாளர். | தமிழ் தினசரி இணைய நிறுவுனர், ஆசிரியர் |விஜயபாரதம் இதழில் உதவி ஆசிரியர், மஞ்சரி டைஜஸ்ட், விகடன் பிரசுரம், சக்தி விகடன், கல்கியின் தீபம் இதழ்களில் பொறுப்பாசிரியராகப் பணி புரிந்தவர். |தினமணி இணையம் (dinamani.com), Asianet News Tamil ஆகியவற்றில் செய்தி ஆசிரியராக பணியாற்றியவர். |சென்னை அகில இந்திய வானொலிக்காக, தேசியத் தலைவர்கள், சுதந்திரப் போராட்ட வீரர்கள், காஞ்சி மகா பெரியவர் தொடர்பான பல்வேறு செய்திக் கட்டுரைகளை எழுதியுள்ளார். |* வானொலி ஆர்.ஜே., பொதிகை தொலைக்காட்சியில் செய்தி அலசல் நேரலை நிகழ்ச்சி என ஊடகத் துறையின் பல்வேறு தளங்களிலும் பணியாற்றியவர். |விகடன் பிரசுரத்தின் மூலம் இவரது ஆறு நூல்கள் வெளியாகியுள்ளன. |இவரது இதழியல் பணிக்காக, கோல்கத்தா பாரதிய பாஷா பரிஷத் அமைப்பு ‘யுவ புரஸ்கார்-08 தேசிய இலக்கிய விருது’ வழங்கியுள்ளது. |

Related articles

Recent articles

spot_img