― Advertisement ―

To Read this news article in other Bharathiya Languages

Homeஉள்ளூர் செய்திகள்கருணாநிதி இறுதி அஞ்சலி: நெரிசலில் சிக்கி உயிரிழந்தோர் 4 ஆக உயர்வு!

கருணாநிதி இறுதி அஞ்சலி: நெரிசலில் சிக்கி உயிரிழந்தோர் 4 ஆக உயர்வு!

karunanithi square6

சென்னை: தி.மு.க. தலைவர் கருணாநிதி இறுதி அஞ்சலி நிகழ்ச்சியின் போது கூட்ட நெரிசலில் சிக்கி உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 4-ஆக உயர்ந்துள்ளது.

ராஜாஜி அரங்கில் லட்சக் கணக்கானோர் அஞ்சலி செலுத்திய போது போலீசாரின் பாதுகாப்பையும் மீறி திடீரென ஏற்பட்ட நெரிசலில் சிக்கி 3 பேர் உயிரிழந்தனர்.

50க்கும் மேற்பட்டோர் படுகாயம் அடைந்தனர். அவர்களில் பலர் சிகிச்சை முடிந்து வீடு திரும்பிய நிலையில் தீவிர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்டிருந்த மோகன் என்பவர் இன்று உயிரிழந்தார். மேலும் 7 பேர் தொடர்ந்து சிகிச்சை பெற்று வரும் நிலையில், அவர்களை சென்னை காவல்துறை ஆணையர் ஏ.கே.விஸ்வநாதன் நேரில் சந்தித்து ஆறுதல் கூறினார்.

இதனிடையே இறுதி அஞ்சலி செலுத்த பிரதமர் மோடி வந்துவிட்டுச் சென்ற பின்னர் ஏற்பட்ட திடீர் பாதுகாப்பு குறைபாடுகளே கூட்ட நெரிசலுக்குக் காரணம் என புகார் எழுந்துள்ளது. இந்நிலையில் இந்தப் புகார் குறித்த விசாரணைக்கு உத்தரவிடப் பட்டுள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

உடனுக்குடன் தினசரி தமிழ்ச் செய்திகளை உங்களது டெலிகிராம் ஆப்.,பில் பார்க்கலாம்!
தினசரி செய்திகள் சேனலில் இணையுங்கள்!

https://t.me/s/dhinasari
Whatsapp - தினசரி செய்திகள் சேனலில் இணையுங்கள்!
https://www.whatsapp.com/channel/dhinasari

Exit mobile version