எதிர்பாராத அளவுக்கு சேதம்: வெளி மாநிலங்களில் இருந்து மின்கம்பங்கள் வாங்க திட்டம்!

pudukkottai machuvadi - 2026

சென்னை: தமிழகத்தின் காவிரி பாசன மாவட்டங்களை புரட்டிப் போட்டுள்ள கஜா புயல், மரங்களையும் மின் கம்பங்களையுமே அதிகம் சாய்த்துள்ளது. மரங்கள் பல சாலைகளில் வேரோடு சாய்ந்துள்ளன. மின் கம்பங்கள் சரிந்துள்ளன.

மரங்கள் மின் கம்பிகளில் சரிந்து அவற்றின் பாரம் தாங்காமல் மின் கம்பங்கள் ஒடிந்து விழுந்து பல இடங்களில் சேதமுற்றுள்ளன. இது எதிர்பாராத ஒன்று என்று கூறுகின்றனர் அதிகாரிகள்.

இந்நிலையில், தங்கள் பகுதிகளுக்கு மின்சாரம் இன்னும் வரவில்லை என்று புகார் கூறுகின்றனர் பொது மக்கள். ஆனால், மின் கம்பங்கள் அதிக அளவு சேதம் அடைந்துள்ளதால், வெளி மாநிலங்களில் இருந்து மின் கம்பங்களை வாங்க வேண்டியுள்ளது என்று கூறுகிறது அரசுத் தரப்பு.

இது குறித்து மின்வாரியம் வெளியிட்டுள்ள அறிவிப்பில், கஜா புயலால் பாதிக்கப்பட்ட மாவட்டங்களில் ஒரு லட்சம் மின்கம்பங்கள் சேதமடைந்துள்ளன. புயல் பாதித்த மாவட்டங்களில் மின் சீரமைப்பு பணிகளில் 21,000 ஊழியர்கள் ஈடுபடுத்தப் பட்டுள்ளனர்.

மின் சீரமைப்பு பணிகளுக்கு வெளிமாநிலங்களில் இருந்து 1000 பணியாளர்கள் வந்துள்ளனர். ஆந்திரா, கேரளாவைச் சேர்ந்த மின் பணியாளர்களுக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. அதிக அளவு சேதம் ஏற்பட்டுள்ளதால் வெளி மாநிலங்களில் இருந்து மின்கம்பங்கள் வாங்க திட்டமிடப்பட்டுள்ளது என தெரிவிக்கப்பட்டுள்ளது.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

அமெரிக்காவில் 1.7 பில்லியன் ஆண்டுகள் பழமையான விஷ்ணு பாறைகள்

இந்த விஷ்ணு கோவில் அல்லது விஷ்ணுப் பாறைகளுக்கு அருகே மேலு இரண்டு பாறைத் தொடர்களுக்கு ப்ரும்மா பாறை, ராம் பாறை என்றும் பெயரிடப்பட்டிருக்கிறது.

பஞ்சாங்கம் மார்ச் 13 – வெள்ளி | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய பலன்கள், திருக்குறள், நற்சிந்தனை

177ல் தொடங்கி 1 சீட்டில் வந்து நிக்குது… 30 வருட பரிணாம வளர்ச்சி!

177ல் தொடங்கி 1 சீட்டில் வந்து நிக்குது... 30 வருட பரிணாம வளர்ச்சி!

பஞ்சாங்கம் மார்ச் 12 – வியாழன்| இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரண்டு ராசிகளுக்கும் உள்ள இன்றைய ராசிபலன்கள், திருக்குறள், சிந்தனைகள்....

எரிவாயு சிலிண்டர், பெட்ரோல்; மக்கள் அச்சம் கொள்ள வேண்டாம்: பிரதமர் மோடி பேச்சு!

திருச்சியில் நடைபெற்ற தேஜகூட்டணி பொதுக்கூட்டத்தில், கூட்டணி தலைவர்கள் பேசியபோது,

Topics

அமெரிக்காவில் 1.7 பில்லியன் ஆண்டுகள் பழமையான விஷ்ணு பாறைகள்

இந்த விஷ்ணு கோவில் அல்லது விஷ்ணுப் பாறைகளுக்கு அருகே மேலு இரண்டு பாறைத் தொடர்களுக்கு ப்ரும்மா பாறை, ராம் பாறை என்றும் பெயரிடப்பட்டிருக்கிறது.

பஞ்சாங்கம் மார்ச் 13 – வெள்ளி | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய பலன்கள், திருக்குறள், நற்சிந்தனை

177ல் தொடங்கி 1 சீட்டில் வந்து நிக்குது… 30 வருட பரிணாம வளர்ச்சி!

177ல் தொடங்கி 1 சீட்டில் வந்து நிக்குது... 30 வருட பரிணாம வளர்ச்சி!

பஞ்சாங்கம் மார்ச் 12 – வியாழன்| இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரண்டு ராசிகளுக்கும் உள்ள இன்றைய ராசிபலன்கள், திருக்குறள், சிந்தனைகள்....

எரிவாயு சிலிண்டர், பெட்ரோல்; மக்கள் அச்சம் கொள்ள வேண்டாம்: பிரதமர் மோடி பேச்சு!

திருச்சியில் நடைபெற்ற தேஜகூட்டணி பொதுக்கூட்டத்தில், கூட்டணி தலைவர்கள் பேசியபோது,

தமிழருக்கான ரூ.5,650 கோடி திட்டங்கள் தொடங்க… இன்று திருச்சி வருகிறார் பிரதமர் மோடி!

தமிழகத்துக்கான ரூ.5,650 கோடி ரூபாய் மதிப்புள்ள திட்டங்களைத் தொடங்கி வைக்க, பிரதமர் நரேந்திர மோடி  திருச்சிக்கு வருகிறார். 

பஞ்சாங்கம் – மார்ச் 11 – புதன் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், ராசிபலன்கள், ஜோதிடம், பொன்மொழிகள், திருக்குறள்,

‘அடிச்சி விடு’ புகழ், இப்போ ‘செல்லத் தட்டல்’ சேகர்பாபு ஆகிவிட்டார்: அண்ணாமலை கிண்டல்!

அது என்ன, திமுக தலைவர்கள் மட்டும் சாதாரண பொதுமக்களை அன்பாகத் தட்டிக் கொடுக்கும்போதெல்லாம், முகத்தை அப்படி கோபமாக வைத்துக் கொள்கிறீர்கள்?

Entertainment News

Popular Categories