சிறுமி கண் அறுவை சிகிச்சைக்கு உதவிய கிருஷ்ணராயபுரம் எம்.எல்.ஏ., காமராஜ்

03-04-15 Karur MLA News Photo 02 கரூர்: தன் தொகுதியில் உள்ள சிறுமியின் கண் அறுவை சிகிச்சைக்கு நிதி அளித்து உதவியுள்ளார் கிருஷ்ணராயபுரம் எம்.எல்.ஏ., காமராஜ். கரூர் மாவட்டம், கிருஷ்ணராயபுரம் சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட தாந்தோன்றி ஒன்றியம், கே.பிச்சம்பட்டி ஊராட்சியில் வசிக்கும் கணேசன் – குணா தம்பதியரின் மகள் நேத்ரா. இவர் இங்குள்ள குள்ளம்பட்டி ஊராட்சி ஒன்றிய துவக்கப் பள்ளியில் இரண்டாம் வகுப்பு படித்து வருகிறார். இவருக்கு கண் பார்வை மங்கிவந்த நிலையில் உடனடி அறுவை சிகிச்சை செய்ய வேண்டுமென்று மருத்துவர் கூறியுள்ளார். இந்தத் தகவலைக் கேள்விபட்ட கிருஷ்ணராயபுரம் சட்டமன்ற உறுப்பினர் எஸ்.காமராஜ் தனது 47 வது மாத சம்பளத்தில் இருந்து ரூ 35 ஆயிரத்தை கண் அறுவை சிகிச்சை செய்ய கொடுத்து உதவினார். இதே போல் கே.பிச்சம்பட்டி துறையூர் ஸ்ரீ காளியம்மன் கோயில் திருப்பணிக்காக ரூ 5 ஆயிரமும், அதே பகுதியைச் சார்ந்த அருந்ததியினர் காலனியில் உள்ள ஸ்ரீ விநாயகர் கோயில் திருப்பணிக்காக ரூ 5 ஆயிரமும், கரூர் மகாத்மா காந்தி ரோட்டில் வசிக்கும் அ.தி.மு.க தொண்டர் முருகேசன் சிறு தொழில் செய்ய ரூ 10 ஆயிரமும் என ரூ 55 ஆயிரத்தை தனது சம்பளத் தொகையிலிருந்து ஜெயலலிதா பெயரில் கொடுத்தார். ஜெயலலிதா பெயரில் மாதந்தோறும் தனது சம்பளத்தை கரூர் மாவட்டம் கிருஷ்ணராயபுரம் சட்டமன்ற (தனி) தொகுதி உறுப்பினர் எஸ்.காமராஜ் சமூக நலப் பணிகளுக்கு கொடுத்து வருகிறார். அவ்வகையில் தற்போது, தனது 47 வது மாத சம்பளத் தொகையை பள்ளி மாணவி கண் அறுவை சிகிச்சைக்காகவும், கோயில் திருப்பணிக்காகவும், அ.தி.மு.க தொண்டர் சுய தொழில் தொடங்கவும் கொடுத்துள்ளார். ஆதரவற்ற குழந்தைகள், எச்.ஐ.வி யால் பாதிக்கப்பட்டவர்கள், நரிக்குறவர்கள், திருநங்கைகள், பம்பை வாசிப்பவர்கள், விவசாயத்தில் பாதிக்கப்பட்டவர்கள் என தனது 46 மாத சம்பளத் தொகையைக் கொடுத்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.  

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

பஞ்சாங்கம் மே 4 – திங்கள் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான பலன்கள், நட்சத்திர பலன்கள், அதிர்ஷ்ட எண்கள், அதிர்ஷ்ட நிறம், திருக்குறள், சிந்தனைகள்...

பஞ்சாங்கம் மே 3 – ஞாயிறு | இன்றைய ராசி பலன்கள்!

பஞ்சாங்கம், தினசரி திதி நட்சத்திரம் நல்ல நேரம் ராகு காலம் எமகண்டம் பன்னிரு ராசிகளின் ராசிபலன்கள் தினம் ஒரு திருக்குறள்

குருவித்துறை; வறண்ட வைகையில் இறங்கிய கள்ளழகர்! பக்தர்கள் வேதனை!

குருவித்துறையில் தண்ணீர் இன்றி வறண்ட வைகையில் இறங்கிய கள்ளழகர் அதிகாரிகளின் திட்டமிடாத செயலே காரணம் என பக்தர்கள் வேதனை!

தேர்தலைக் காரணம் காட்டி கொள்முதல் தாமதம்! வெயில் மழையில் சேதமாகும் நெல் மூட்டைகள்!

வாடிப்பட்டி அருகே, போடிநாயக்கன்பட்டி பகுதியில் 20 நாட்களுக்கு மேலாக கொள்முதல் செய்யாததால் 10 ஆயிரத்திற்கும் மேற்பட்ட நெல் மூட்டைகள் மழையில் நனைந்தும் வெயிலில் காய்ந்தும் சேதம்; விவசாயிகள் வேதனை!

இருதரப்பு மோதலில் எஸ்பி., சமரசம்; அமைதியாக நடைபெற்ற ஸ்வாமி ஊர்வலம்!

உசிலம்பட்டி அருகே எழுமலை அடுத்துள்ள ஆத்தங்கரைப்பட்டியில் சுமார் 400 ஆண்டுகள் பழமையான இந்து அறநிலையத்துறைக்கு

Topics

பஞ்சாங்கம் மே 4 – திங்கள் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான பலன்கள், நட்சத்திர பலன்கள், அதிர்ஷ்ட எண்கள், அதிர்ஷ்ட நிறம், திருக்குறள், சிந்தனைகள்...

பஞ்சாங்கம் மே 3 – ஞாயிறு | இன்றைய ராசி பலன்கள்!

பஞ்சாங்கம், தினசரி திதி நட்சத்திரம் நல்ல நேரம் ராகு காலம் எமகண்டம் பன்னிரு ராசிகளின் ராசிபலன்கள் தினம் ஒரு திருக்குறள்

குருவித்துறை; வறண்ட வைகையில் இறங்கிய கள்ளழகர்! பக்தர்கள் வேதனை!

குருவித்துறையில் தண்ணீர் இன்றி வறண்ட வைகையில் இறங்கிய கள்ளழகர் அதிகாரிகளின் திட்டமிடாத செயலே காரணம் என பக்தர்கள் வேதனை!

தேர்தலைக் காரணம் காட்டி கொள்முதல் தாமதம்! வெயில் மழையில் சேதமாகும் நெல் மூட்டைகள்!

வாடிப்பட்டி அருகே, போடிநாயக்கன்பட்டி பகுதியில் 20 நாட்களுக்கு மேலாக கொள்முதல் செய்யாததால் 10 ஆயிரத்திற்கும் மேற்பட்ட நெல் மூட்டைகள் மழையில் நனைந்தும் வெயிலில் காய்ந்தும் சேதம்; விவசாயிகள் வேதனை!

இருதரப்பு மோதலில் எஸ்பி., சமரசம்; அமைதியாக நடைபெற்ற ஸ்வாமி ஊர்வலம்!

உசிலம்பட்டி அருகே எழுமலை அடுத்துள்ள ஆத்தங்கரைப்பட்டியில் சுமார் 400 ஆண்டுகள் பழமையான இந்து அறநிலையத்துறைக்கு

சிவசைலநாதர் பரமகல்யாணி எழுந்தருள, மீன்பிடி திருவிழா!

ஸ்ரீ சிவசைலநாதரும் ஸ்ரீ பரமகல்யாணி அம்பாளும் மீன்பிடிக்கக் கிளம்பும் திருவிழா!

பஞ்சாங்கம் மே 2 – சனிக் கிழமை | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய தினம் நல்ல நாளாக அமைய எமது வாழ்த்துகள்.

பக்தர்கள் திரளில் மதுரை – வைகை நதியில் இறங்கிய கள்ளழகர்!

மதுரையில் வைகை நதியில் கள்ளழகர் வைகை ஆற்றில் இறங்கி பக்தர்களுக்கு காட்சி அளித்தார்.

Entertainment News

Popular Categories