சென்னையில் செய்தியாளர்களை சந்தித்த ஈ.வி.கே.எஸ்.இளங்கோவன் கூறியபோது…
இலங்கையில் நடந்த போர்க் குற்றம் தொடர்பாக சர்வதேச விசாரணை நடத்த வேண்டும் என்று சட்டசபையில் முதல்வர் ஜெயலலிதா நிறைவேற்றியுள்ள தீர்மானத்தை காங்கிரஸ் கட்சி வரவேற்கிறது. மத்திய அரசுக்கு எதிராக காங்கிரஸ் கட்சி நடத்த உள்ள ஆர்ப்பாட்டத்துக்கு மாநில அரசு அனுமதி அளிக்கும் என்று நம்புகிறோம்.. அனுமதி கிடைக்காவிடினும் ஆர்ப்பாட்டம் திட்டமிட்டபடி நடைபெறும் என்று கூறினார்.


