கீழ்ப்பாக்கம் மருத்துவமனையில் பட்டாசு தீக்காய சிறப்பு வார்டு அமைப்பு

சென்னை:
சென்னை கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனையில் தீபாவளி பண்டிகையை ஒட்டி, பட்டாசு தீக்காயத்துக்கு சிகிச்சை அளிக்கும் வகையில் சிறப்பு வார்டு அமைக்கப்பட்டுள்ளது.

இது குறித்து டீன் டாக்டர் நாராயண பாபு கூறுகையில்,

தீபாவளி பண்டிகை காலங்களில் பட்டாசு வெடிக்கும் போது ஏற்படும் தீக்காயங்களுக்கு சிகிச்சை அளிக்க சிறப்பு வார்டு அமைக்கப்படும். அதேபோல், இந்த ஆண்டும் அமைக்கப்பட்டுள்ளது.

ஏற்கனவே தீக்காயப்பிரிவில் 50 படுக்கை வசதிகள் கொண்ட வார்டு உள்ளது. தற்போது கூடுதலாக பெரியவர்களுக்கு 10 படுக்கை வசதிகளும், சிறியவர்களுக்கு 5 படுக்கை வசதிகளும் கொண்ட சிறப்பு வார்டு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

இதில் பட்டாசினால் ஏற்படும் தீக்காயங்களுக்கு தேவையான களிம்பு, ஊசிகள், மருந்துகள், கட்டுப்போடுவதற்கு பயன்படுத்தப்படும் துணிகள் அனைத்தும் வைக்கப்பட்டுள்ளன.

24 மணி நேரமும் இந்த சிறப்பு வார்டு செயல்படும். இந்த வார்டில் பொறுப்பு டாக்டர், முதுநிலை டாக்டர் மற்றும் 8 செவிலியர்கள் பணியில் இருப்பார்கள்.

அதுமட்டுமில்லாமல், தீக்காயம் ஏற்பட்டு வரும் நபருக்கு முதல் சிகிச்சை செய்வதற்காக அவசர சிகிச்சை பிரிவில் ஆண் மற்றும் பெண்களுக்கு என தலா 10 படுக்கை வசதிகள் உள்ளன.

இதில் பொறுப்பு டாக்டர்கள், முதுநிலை டாக்டர்கள், பயிற்சி டாக்டர்கள் என 10 பேர் பணியில் இருப்பார்கள்.

பட்டாசினால் தீக்காயம் ஏற்பட்டதும், முதலில் அந்த காயத்தை வீட்டில் உள்ள குழாய் நீரில் கழுவ வேண்டும். பின்னர், துவைத்த துணியால் அந்த காயத்தை மூடி, அருகில் இருக்கும் மருத்துவமனைக்கு செல்ல வேண்டும்.

மை, மஞ்சள், காபிதூள், தேங்காய் எண்ணெய் போன்றவற்றை உபயோகப்படுத்த வேண்டாம். அப்படி உபயோகப்படுத்தினால், காயத்தின் தன்மை தெரியாமல் போய்விடும்.

கடந்த ஆண்டு இதே போல் அமைக்கப்பட்டிருந்த சிறப்பு வார்டில் 10 பேர் சிகிச்சை பெற்று சென்றனர் – என்றார்.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

பஞ்சாங்கம் – ஏப்ரல் 29 – புதன் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், ராசிபலன்கள், ஜோதிடம், பொன்மொழிகள், திருக்குறள்,

தென்காசி மாவட்ட U-16 கூடைபந்தாட்ட வீரர்கள் மற்றும் வீராங்கணைகள் தேர்வு!

தென்காசி மாவட்ட U-16 கூடைபந்தாட்ட வீரர்கள் மற்றும் வீராங்கணைகள் தேர்வு!

மதுரை மீனாட்சி சுந்தரேசுவரர் திருக்கல்யாணம் கோலாகலம்..

உலகப் பிரசித்தி பெற்ற மதுரை மீனாட்சி சுந்தரேசுவரர் கோயில் சித்திரை திருவிழா...

திமுக வேட்பாளர் வீட்டில் நகை கொள்ளை – வேட்பாளரின் மருமகள் உள்ளிட்ட 3 பேர் கைது…

விருதுநகர் மாவட்டம் சாத்தூரில் திமுக வேட்பாளர் வீட்டில் 122 சவரன் கொள்ளையடிக்கப்பட்ட...

பஞ்சாங்கம் ஏப்ரல் 28 – செவ்வாய் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம் தகவல்கள், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய ராசி பலன்கள், திருக்குறள், சிந்தனைகள்...

Topics

பஞ்சாங்கம் – ஏப்ரல் 29 – புதன் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், ராசிபலன்கள், ஜோதிடம், பொன்மொழிகள், திருக்குறள்,

தென்காசி மாவட்ட U-16 கூடைபந்தாட்ட வீரர்கள் மற்றும் வீராங்கணைகள் தேர்வு!

தென்காசி மாவட்ட U-16 கூடைபந்தாட்ட வீரர்கள் மற்றும் வீராங்கணைகள் தேர்வு!

மதுரை மீனாட்சி சுந்தரேசுவரர் திருக்கல்யாணம் கோலாகலம்..

உலகப் பிரசித்தி பெற்ற மதுரை மீனாட்சி சுந்தரேசுவரர் கோயில் சித்திரை திருவிழா...

திமுக வேட்பாளர் வீட்டில் நகை கொள்ளை – வேட்பாளரின் மருமகள் உள்ளிட்ட 3 பேர் கைது…

விருதுநகர் மாவட்டம் சாத்தூரில் திமுக வேட்பாளர் வீட்டில் 122 சவரன் கொள்ளையடிக்கப்பட்ட...

பஞ்சாங்கம் ஏப்ரல் 28 – செவ்வாய் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம் தகவல்கள், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய ராசி பலன்கள், திருக்குறள், சிந்தனைகள்...

யானைகள் அணிவகுப்புடன், திருச்சூர் பூரம் விழா கொண்டாட்டம்!

யானைகளின் அணிவகுப்பு.. இலஞ்சித்தார மேளம்.. திருச்சூர் பூரம் விழா கோலாகலமாக கொண்டாடப்பட்டு வருகிறது.

நாடு திரும்புங்க; அமெரிக்க வாழ் இந்தியர்களுக்கு ஸோஹோ ஸ்ரீதர் வேம்புவின் மடல்!

37 ஆண்டுகளுக்கு முன்பு நான் வந்தது போலவே, நீங்களும் பணமின்றி, ஆனால் பாரதத்தின் நல்ல கல்வி மற்றும் கலாச்சாரப் பாரம்பரியத்துடன் அமெரிக்காவிற்கு வந்தீர்கள்.

ஆண் நாடாளுமன்ற உறுப்பினர்களின் கோர முகம்!

பெண்கள் தங்களுக்காக போராட முடியாதவர்கள் என்றல்ல. அவர்கள் கடந்த மூன்று தசாப்தங்களாக போராடிக் கொண்டுதான் இருக்கிறார்கள். ஆனால் அவையில் 85 சதவீதத்தினர் ஆண்களாக இருப்பதால் அவர்களின் யாராவது கதவைத் திறந்து வழிவிட வேண்டும்.

Entertainment News

Popular Categories