பாஜக., அரசு இன்னும் எவ்வளவு தூரம் துன்புறுத்துமோ?: ப.சிதம்பரம்

Published:

சென்னை:
கார்த்தி சிதம்பரம் அலுவலகத்தில் வருமான வரித் துறையினர் மற்றும் அமலாக்கத்துறையினர் புதன்கிழமை சோதனை நடத்திய நிலையில், இது குறித்து கருத்து தெரிவித்துள்ள ப.சிதம்பரம், பாஜக அரசு இன்னும் எவ்வளவு தூரம்தான் கார்த்தியை துன்புறுத்துமோ என்று கூறியுள்ளார்.
அமலாக்கத்துறையினரும், வருமான வரித் துறையினரும் நடத்திய சோதனை தொடர்பாக ப.சிதம்பரம் புதன்கிழமை வெளியிட்ட அறிக்கை:
அமலாக்கத்துறையினரும், வருமான வரித் துறையினரும் நடத்திய சோதனையில் நாங்கள் எதிர்பார்த்தபடியே எந்த ஆதாரமும் கிடைக்கவில்லை. பாஜக அரசு இன்னும் எவ்வளவு தூரம்தான் கார்த்தியைத் துன்புறுத்தும் என்பதைப் பார்க்க விரும்புகிறேன் என்று அவர் கூறியுள்ளார்.

செங்கோட்டை ஸ்ரீராம்
செங்கோட்டை ஸ்ரீராம்https://www.dhinasari.com
பத்திரிகையாளர், எழுத்தாளர். | தமிழ் தினசரி இணைய நிறுவுனர், ஆசிரியர் |விஜயபாரதம் இதழில் உதவி ஆசிரியர், மஞ்சரி டைஜஸ்ட், விகடன் பிரசுரம், சக்தி விகடன், கல்கியின் தீபம் இதழ்களில் பொறுப்பாசிரியராகப் பணி புரிந்தவர். |தினமணி இணையம் (dinamani.com), Asianet News Tamil ஆகியவற்றில் செய்தி ஆசிரியராக பணியாற்றியவர். |சென்னை அகில இந்திய வானொலிக்காக, தேசியத் தலைவர்கள், சுதந்திரப் போராட்ட வீரர்கள், காஞ்சி மகா பெரியவர் தொடர்பான பல்வேறு செய்திக் கட்டுரைகளை எழுதியுள்ளார். |* வானொலி ஆர்.ஜே., பொதிகை தொலைக்காட்சியில் செய்தி அலசல் நேரலை நிகழ்ச்சி என ஊடகத் துறையின் பல்வேறு தளங்களிலும் பணியாற்றியவர். |விகடன் பிரசுரத்தின் மூலம் இவரது ஆறு நூல்கள் வெளியாகியுள்ளன. |இவரது இதழியல் பணிக்காக, கோல்கத்தா பாரதிய பாஷா பரிஷத் அமைப்பு ‘யுவ புரஸ்கார்-08 தேசிய இலக்கிய விருது’ வழங்கியுள்ளது. |

Related articles

Recent articles

spot_img