சென்னை:
கார்த்தி சிதம்பரம் அலுவலகத்தில் வருமான வரித் துறையினர் மற்றும் அமலாக்கத்துறையினர் புதன்கிழமை சோதனை நடத்திய நிலையில், இது குறித்து கருத்து தெரிவித்துள்ள ப.சிதம்பரம், பாஜக அரசு இன்னும் எவ்வளவு தூரம்தான் கார்த்தியை துன்புறுத்துமோ என்று கூறியுள்ளார்.
அமலாக்கத்துறையினரும், வருமான வரித் துறையினரும் நடத்திய சோதனை தொடர்பாக ப.சிதம்பரம் புதன்கிழமை வெளியிட்ட அறிக்கை:
அமலாக்கத்துறையினரும், வருமான வரித் துறையினரும் நடத்திய சோதனையில் நாங்கள் எதிர்பார்த்தபடியே எந்த ஆதாரமும் கிடைக்கவில்லை. பாஜக அரசு இன்னும் எவ்வளவு தூரம்தான் கார்த்தியைத் துன்புறுத்தும் என்பதைப் பார்க்க விரும்புகிறேன் என்று அவர் கூறியுள்ளார்.
பாஜக., அரசு இன்னும் எவ்வளவு தூரம் துன்புறுத்துமோ?: ப.சிதம்பரம்
Popular Categories


