சென்னையில் கடத்தப்பட்ட எஸ்.ஐ. மகள் மீட்பு: 3 பேர் கைது

Published:

சென்னை:
சென்னையில் கடத்தப்பட்ட எஸ்.ஐ.யின் மகளை போலீஸார் மீட்டனர். இதுதொடர்பாக மருந்துக் கடை உரிமையாளர் உள்பட 3 பேர் கைது செய்யப்பட்டனர்.

சென்னை பழைய பெருங்களத்தூரைச் சேர்ந்த ராமலிங்கம், தாம்பரம் காவல் நிலையத்தில் உதவி ஆய்வாளராகப் பணியாற்றி வருகிறார். இவரது மகள் கலையரசி (23). பி.பார்ம் முடித்துள்ள இவர், சேலையூரில் உள்ள மருந்து கடையில் வேலை பார்த்து வந்தார்.

வியாழக்கிழமை பணிக்குச் சென்ற இவர், பின்னர் வீடு திரும்பவில்லை. அவரது செல்பேசியும் அணைத்து வைக்கப்பட்டிருந்தது. மருந்துக் கடையும்க்கூட பூட்டப்பட்டிருப்பதும், கடைக்கு முன் கலையரசியின் இரு சக்கர வாகனம் நிறுத்தி வைக்கப்பட்டிருந்ததும் தெரியவந்தது. இது குறித்த புகாரின் பேரில் சேலையூர் போலீஸார் வழக்குப் பதிந்து விசாரித்து வந்தனர்.
இந்நிலையில் எஸ்.ஐ. ராமலிங்கத்தின் செல்பேசிக்கு வந்த அழைப்பில் பேசிய கலையரசி, தன்னை சிலர் வலுக்கட்டாயமாகக் கடத்தி வந்ததாகவும், மதுராந்தகம் அருகே இருப்பதாகவும் கூறியுள்ளார். அதே எண்ணுக்கு ராமலிங்கம் தொடர்பு கொண்டபோது, அது அணைத்து வைக்கப்பட்டிருந்தது.
இதைத் தொடர்ந்து, செல்போன் எண்ணை வைத்து கலையரசி இருக்கும் இடத்தை போலீஸார் கண்டறிந்தனர். உடனே செயலில் இறங்கி, அவரை மீட்டனர்.
கலையரசியைக் கடத்திச் சென்றதாக மருந்துக் கடை உரிமையாளர் சேகர், அவரது உறவினர்கள் டேவிட், கார்த்திக் ஆகிய 3 பேரை போலீஸார் கைது செய்தனர். கடத்தலுக்கு பயன்படுத்தப்பட்ட காரும் பறிமுதல் செய்யப்பட்டது. கலையரசியின் மருந்தாளுனர் உரிமத்தைப் பயன்படுத்தி மருந்துக் கடை தொடங்கப் பட்டதாகவும், வருவாயைப் பிரித்துக் கொள்வதில் ஏற்பட்ட பிரச்னையால் அவர் கடத்தப்பட்டிருக்கலாம் என்றும் கூறப்படுகிறது.

ALSO READ:  முதலமைச்சர் கனவில் முந்திய விஜய்; வெளியில் இருந்து ஆதரிக்கும் திமுக., கூட்டணிக் கட்சிகள்!
செங்கோட்டை ஸ்ரீராம்
செங்கோட்டை ஸ்ரீராம்https://www.dhinasari.com
பத்திரிகையாளர், எழுத்தாளர். | தமிழ் தினசரி இணைய நிறுவுனர், ஆசிரியர் |விஜயபாரதம் இதழில் உதவி ஆசிரியர், மஞ்சரி டைஜஸ்ட், விகடன் பிரசுரம், சக்தி விகடன், கல்கியின் தீபம் இதழ்களில் பொறுப்பாசிரியராகப் பணி புரிந்தவர். |தினமணி இணையம் (dinamani.com), Asianet News Tamil ஆகியவற்றில் செய்தி ஆசிரியராக பணியாற்றியவர். |சென்னை அகில இந்திய வானொலிக்காக, தேசியத் தலைவர்கள், சுதந்திரப் போராட்ட வீரர்கள், காஞ்சி மகா பெரியவர் தொடர்பான பல்வேறு செய்திக் கட்டுரைகளை எழுதியுள்ளார். |* வானொலி ஆர்.ஜே., பொதிகை தொலைக்காட்சியில் செய்தி அலசல் நேரலை நிகழ்ச்சி என ஊடகத் துறையின் பல்வேறு தளங்களிலும் பணியாற்றியவர். |விகடன் பிரசுரத்தின் மூலம் இவரது ஆறு நூல்கள் வெளியாகியுள்ளன. |இவரது இதழியல் பணிக்காக, கோல்கத்தா பாரதிய பாஷா பரிஷத் அமைப்பு ‘யுவ புரஸ்கார்-08 தேசிய இலக்கிய விருது’ வழங்கியுள்ளது. |

Related articles

Recent articles

spot_img