சென்னையில் கடத்தப்பட்ட எஸ்.ஐ. மகள் மீட்பு: 3 பேர் கைது

சென்னை:
சென்னையில் கடத்தப்பட்ட எஸ்.ஐ.யின் மகளை போலீஸார் மீட்டனர். இதுதொடர்பாக மருந்துக் கடை உரிமையாளர் உள்பட 3 பேர் கைது செய்யப்பட்டனர்.

சென்னை பழைய பெருங்களத்தூரைச் சேர்ந்த ராமலிங்கம், தாம்பரம் காவல் நிலையத்தில் உதவி ஆய்வாளராகப் பணியாற்றி வருகிறார். இவரது மகள் கலையரசி (23). பி.பார்ம் முடித்துள்ள இவர், சேலையூரில் உள்ள மருந்து கடையில் வேலை பார்த்து வந்தார்.

வியாழக்கிழமை பணிக்குச் சென்ற இவர், பின்னர் வீடு திரும்பவில்லை. அவரது செல்பேசியும் அணைத்து வைக்கப்பட்டிருந்தது. மருந்துக் கடையும்க்கூட பூட்டப்பட்டிருப்பதும், கடைக்கு முன் கலையரசியின் இரு சக்கர வாகனம் நிறுத்தி வைக்கப்பட்டிருந்ததும் தெரியவந்தது. இது குறித்த புகாரின் பேரில் சேலையூர் போலீஸார் வழக்குப் பதிந்து விசாரித்து வந்தனர்.
இந்நிலையில் எஸ்.ஐ. ராமலிங்கத்தின் செல்பேசிக்கு வந்த அழைப்பில் பேசிய கலையரசி, தன்னை சிலர் வலுக்கட்டாயமாகக் கடத்தி வந்ததாகவும், மதுராந்தகம் அருகே இருப்பதாகவும் கூறியுள்ளார். அதே எண்ணுக்கு ராமலிங்கம் தொடர்பு கொண்டபோது, அது அணைத்து வைக்கப்பட்டிருந்தது.
இதைத் தொடர்ந்து, செல்போன் எண்ணை வைத்து கலையரசி இருக்கும் இடத்தை போலீஸார் கண்டறிந்தனர். உடனே செயலில் இறங்கி, அவரை மீட்டனர்.
கலையரசியைக் கடத்திச் சென்றதாக மருந்துக் கடை உரிமையாளர் சேகர், அவரது உறவினர்கள் டேவிட், கார்த்திக் ஆகிய 3 பேரை போலீஸார் கைது செய்தனர். கடத்தலுக்கு பயன்படுத்தப்பட்ட காரும் பறிமுதல் செய்யப்பட்டது. கலையரசியின் மருந்தாளுனர் உரிமத்தைப் பயன்படுத்தி மருந்துக் கடை தொடங்கப் பட்டதாகவும், வருவாயைப் பிரித்துக் கொள்வதில் ஏற்பட்ட பிரச்னையால் அவர் கடத்தப்பட்டிருக்கலாம் என்றும் கூறப்படுகிறது.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

தாம்பரம் – தென்காசி ஈஸ்டர் சிறப்பு ரயில்; இன்று முன்பதிவு தொடக்கம்!

திருச்சி மதுரை திருநெல்வேலி தென்காசி வழியாக தாம்பரம் தென்காசி/செங்கோட்டை புனித வெள்ளி...

பஞ்சாங்கம் ஏப்ரல் 2 – வியாழன்| இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரண்டு ராசிகளுக்கும் உள்ள இன்றைய ராசிபலன்கள், திருக்குறள், சிந்தனைகள்....

மண்ணின் மணத்தை மலர வைத்த ஒடிஷா!

இன்று ஏப்ரல் - 1, ஒடிஷா மாநிலம் தோன்றிய நாள் என்று சமூக வலைத்தளத்தில் செய்தி வந்ததும் நான் நான்கு ஆண்டுகளுக்கு முன் மூன்று நாட்கள் ஒடிஷாவில் உள்ள தாமன்ஜோடி

IPL 2026: வெற்றிகரமான தொடக்கம்!

ஐபிஎல் 2026 மார்ச்சு 28ஆம் தேதி பெங்களூருவில் ஹைதரபாத், பெங்களூரு அணிகளுக்கிடையேயான ஆட்டத்துடன் தொடங்கியது.

கமலாலயத்துக்கும் சத்தியமூர்த்தி பவனுக்கும் வேறுபாடில்லை!

முரளி சீதாராமன்1) காலையில் நயினார் நாகேந்திரன் செய்தியாளர் சந்திப்பில்:- "ஏப்ரல் 4...

Topics

தாம்பரம் – தென்காசி ஈஸ்டர் சிறப்பு ரயில்; இன்று முன்பதிவு தொடக்கம்!

திருச்சி மதுரை திருநெல்வேலி தென்காசி வழியாக தாம்பரம் தென்காசி/செங்கோட்டை புனித வெள்ளி...

பஞ்சாங்கம் ஏப்ரல் 2 – வியாழன்| இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரண்டு ராசிகளுக்கும் உள்ள இன்றைய ராசிபலன்கள், திருக்குறள், சிந்தனைகள்....

மண்ணின் மணத்தை மலர வைத்த ஒடிஷா!

இன்று ஏப்ரல் - 1, ஒடிஷா மாநிலம் தோன்றிய நாள் என்று சமூக வலைத்தளத்தில் செய்தி வந்ததும் நான் நான்கு ஆண்டுகளுக்கு முன் மூன்று நாட்கள் ஒடிஷாவில் உள்ள தாமன்ஜோடி

IPL 2026: வெற்றிகரமான தொடக்கம்!

ஐபிஎல் 2026 மார்ச்சு 28ஆம் தேதி பெங்களூருவில் ஹைதரபாத், பெங்களூரு அணிகளுக்கிடையேயான ஆட்டத்துடன் தொடங்கியது.

கமலாலயத்துக்கும் சத்தியமூர்த்தி பவனுக்கும் வேறுபாடில்லை!

முரளி சீதாராமன்1) காலையில் நயினார் நாகேந்திரன் செய்தியாளர் சந்திப்பில்:- "ஏப்ரல் 4...

அதிகாரத்தில் இல்லாததற்காக, இவர்களுக்கு நன்றிக்கடன் பட்டுள்ளேன்!

இந்த இக்கட்டான சூழ்நிலையில் ஏதாவது ஒரு விஷயத்திற்கு நாம் நன்றிக்கடன் பட்டுள்ளோம் என்றால் அது, இப்போது காங்கிரஸ் கட்சி அதிகாரத்தில் இல்லாததற்கே!

பஞ்சாங்கம் – ஏப்ரல் 1 – புதன் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், ராசிபலன்கள், ஜோதிடம், பொன்மொழிகள், திருக்குறள்,

‘தனி’ தொகுதிகளில் தனியா கவனித்து மனுவை தள்ளுபடி செய்யுங்க: இந்து முன்னணி வலியுறுத்தல்!

போலிச் சான்றிதழ் குறித்து உடனடியாக நடவடிக்கை எடுத்து அதனை ரத்து செய்து இந்து பட்டியலின மக்கள் உரிமைகளை பாதுகாக்க வேண்டும் என இந்துமுன்னணி வலியுறுத்துகிறது!

Entertainment News

Popular Categories