திருநீர்மலை… அரசுத் துறை காப்பாற்றாது! நாம்தான் போராட வேண்டும்!

Published:

Thiruneermalai 20 - 2026

திருநீர்மலை திவ்ய தேசம் பெருமாள் கோவில் மலை அடிவாரத்தில் பெருமாளின் சந்நிதி ஒன்றும், மலை மேல் மூன்று சந்நிதிகளும் இருக்கின்றன.

108 திவ்ய தேசங்களில் 61வது இது. இங்கு நான்கு நிலைகளிலும் பெருமாளைத் நின்றான், இருந்தான், கிடந்தான், நடந்தான் எனும் நிலையில் தரிசிக்கலாம். 100 அடி உயர மலையும் மலையடிவார சுற்றுப் பாதை முழுவதும் ஒரே புல எண் கொண்டு
பெருமாள் கோவிலுக்கு மட்டுமே சொந்தமான நிலம்.

இக்கோவில் பல உப கோவிலையும் நன்செய், புன்செய் நிலங்கள் திருமண மண்டபங்கள், வணிக வளாகங்கள் கொண்டது. வருட வருமானமே கோடிகளை தாண்டும். 3 வருடம் முன் வரை பரம்பரை அறங்காவலர் கண்காணிப்பில் திவ்யமாக நிர்வகிக்கபட்டு வந்தது. தற்போது அரசின் இந்து சமய அறநிலையத்துறையின் நேரடிக் கண்காணிப்பில் நிர்வாக அதிகாரி பி.சக்தி கவனித்து (கபளீகரம்) செய்து வருவதாக கோயில் பணியாளர்களே கூறுகின்றனர்.

மலை மற்றும் மலையடிவார சுற்றுப் பாதை முழுவதும் ஒரே புல எண் கொண்டு பெருமாள் கோவில் பெருமாளுக்கு மட்டுமே சொந்தமானது.

நிர்வாக அதிகாரி பி.சக்தி வந்த சில நாட்களிலே மலையிலே கோயில் பின் பக்கம் “இயேசு சபை அல்லேலூயா” ஆரம்பிக்க மறைமுகமாக பணம் பெற்றுக்கொண்டதாகவும், அவரின் ஆசிர்வாதத்தில் கிருத்துவ சபை நடந்து வருவதாகவும் கூறுகிறார்கள்.

ALSO READ:  தாம்பரம் - தென்காசி பகல் நேர ரயிலை தினசரி ரயிலாக அறிவிக்க கோரிக்கை!

ஞாயிற்று கிழமைகளில் அவர்கள் நடத்தும் ஜெபக்கூட்டம் கோவில் மேலேயே பட்டாச்சார்யர்கள் அர்ச்சகர்கள் பக்தர்கள் அரண்டு ஓடும் அளவில் அதிக சத்தத்துடன் ஒலிபெருக்கி உபயோகித்து தொல்லை கொடுக்கின்றனர்.

யாருடைய இடத்தில் யாரு ஆக்கிரமிப்பு செய்து அராஜகம் செய்வது. பெரும்பான்மையாக இருக்கும் போதே இந்த கதி. ஒவ்வொரு கோவிலாக ஆக்கிரமிக்கப்பட்டு வருகிறது. குறிப்பாக மலைக்கோவில்களை குறி வைக்கிறது அந்த கும்பல்.

மலையே கோவில் அதுதான் திருநீர்மலை. அதற்கு சாட்சியாக மலையடிவாரம் சுற்றி நான்கு திசையிலும் பலி பீடக்கல் நடப்பட்டு சிறப்பு தினங்களில் பூசைகள் செய்யப்பட்டு வருகிறது. அவற்றின் எல்லைக்குள்ளே மலையடிவாரத்தின் உட்பகுதியிலேயே இறைச்சி கடை, கோழி கடை நடந்து வருகிறது.

அதனை தடுக்க வேண்டிய நிர்வாக அதிகாரி பி. சக்தி மௌனமாகவே இருக்கிறார் .அதன் காரணம் விசாரித்தால் அந்த கடைகளில் இருந்துதான் அவர் வீட்டுக்கே வார வாரம் கறி அனுப்பபடுகிறதாம் .

இந்து கோவிலில் வேலை செய்பவர்கள் ஊழியர்கள் இந்துக்களாக இருக்க வேண்டும் என்பது கட்டாய விதி அதிலும் நிர்வாக அதிகாரி ஊரில் உள்ள இந்துக்களை வேலைக்கு வைக்காமல் அதே ஊரில் உள்ள மதம் மாறியவர்களை வேலைக்கு நியமித்து உள்ளார், வேலை செய்பவர்கள் பெயரளவில் மட்டுமே இந்து. ஆனால் அவர்கள் திடீர் சபை கிறித்துவ கூட்டத்தினர்.

ALSO READ:  ஸ்ரீ வைணவப் பேரறிஞர் ஏ.வி. ரங்காச்சாரி பரமபதித்தார்!

கோவில் அன்னதான உண்டியல் மாத வருமானம் கடந்த காலங்களில் சராசரி 70 ஆயிரம் முதல் ஒரு லட்சம். தற்போது 20 ஆயிரம் அதிக பட்சம் 25 ஆயிரம் மட்டுமே கணக்கு காட்டப்படுகிறது.

உணர்வுள்ள இந்து இயக்கங்கள் இதனை சட்டப்படி எதிர்கொண்டு திருநீர்மலையை சதிகாரர்களிடமிருந்து மீட்க நடவடிக்கை எடுப்பார்களா?

Senkottai Sriram
Senkottai Sriramhttps://dhinasari.com
பத்திரிகையாளர், எழுத்தாளர். | தமிழ் தினசரி இணைய நிறுவுனர், ஆசிரியர் |விஜயபாரதம் இதழில் உதவி ஆசிரியர், மஞ்சரி டைஜஸ்ட், விகடன் பிரசுரம், சக்தி விகடன், கல்கியின் தீபம் இதழ்களில் பொறுப்பாசிரியராகப் பணி புரிந்தவர். |தினமணி இணையம் (dinamani.com), Asianet News Tamil ஆகியவற்றில் செய்தி ஆசிரியராக பணியாற்றியவர். |சென்னை அகில இந்திய வானொலிக்காக, தேசியத் தலைவர்கள், சுதந்திரப் போராட்ட வீரர்கள், காஞ்சி மகா பெரியவர் தொடர்பான பல்வேறு செய்திக் கட்டுரைகளை எழுதியுள்ளார். |* வானொலி ஆர்.ஜே., பொதிகை தொலைக்காட்சியில் செய்தி அலசல் நேரலை நிகழ்ச்சி என ஊடகத் துறையின் பல்வேறு தளங்களிலும் பணியாற்றியவர். |விகடன் பிரசுரத்தின் மூலம் இவரது ஆறு நூல்கள் வெளியாகியுள்ளன. |இவரது இதழியல் பணிக்காக, கோல்கத்தா பாரதிய பாஷா பரிஷத் அமைப்பு ‘யுவ புரஸ்கார்-08 தேசிய இலக்கிய விருது’ வழங்கியுள்ளது. |

Related articles

Recent articles

spot_img